06-09-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து அவருடைய இரக்கத்தையும் கிருபையையும் அனுபவியுங்கள்!
24.புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்துசேர்ந்தீர்கள்.எபிரெயர் 12:24 NKJV.
கர்த்தராகிய இயேசு மற்றும் ஆபேல் இருவரும் கொடூரமாக கொல்லப்பட்டனர் மற்றும் அவர்களின் இரத்தம் தரையில் சிந்தப்பட்டது.யாருடைய இரத்தமும் அநியாயமாக சிந்தப்படும் தருணத்தில்,நீதிக்காக தேவனிடம் சிந்தப்பட்ட இரத்தத்திலிருந்து ஒரு கூக்குரல் வெளிப்படுகிறது.
ஆபேல் அவனது சகோதரன் காயீனால் அநியாயமாகக் கொல்லப்பட்டான், அதேபோல கர்த்தராகிய இயேசுவும் அவருடைய சொந்த நாட்டினரால் (புறஜாதிகள் மூலம்) அநியாயமாகக் கொல்லப்பட்டார்.
இருப்பினும், இந்த இருவரின் இரத்தம் அநியாயமான நபரையும் அவர்களின் கொடூரமான செயலையும் வித்தியாசமாகப் பார்த்தது.:ஆபேலின் இரத்தம் பாவியின் செயலைக் கண்டது, அதேசமயம் கர்த்தராகிய இயேசுவின் இரத்தம் பாவியின் பாவத்தைக் கண்டு அந்த பாவத்தைத் தண்டியாமலிருக்க தேவனிடம் மன்றாடியது. பாவியின் பாவத்தின்நிமித்தம் அவரது சொந்த உயிரை தியாகம் செய்து பிதாவிடம் இரக்கம் மற்றும் மன்னிப்பு கோருவதன் மூலம் பாவியை விடுவித்தார்.
ஆம்! நாம் பாவிகளாய் இருக்கும்போதே கிறிஸ்து தேவபக்தியற்றவர்களுக்காக மரித்தார் என்பது எவ்வளவு பெரிய தேவனின் அன்பு!! மனிதனை நீதிமான்களாக்க இது தேவனின் பார்வையில் சரியாக தோன்றியது!இதுவே தேவ நீதி!
ஆம் என் அன்பானவர்களே, உங்கள் பாவ சுபாவம் இயேசுவின் உடலில் தண்டிக்கப்பட்டது.ஆகையால் பாவ சுபாவத்திலிருந்து வெளிப்படும் உங்கள் செயல்கள் அனைத்தும் தொடர்ந்து மற்றும் என்றென்றும் மன்னிக்கப்படுகின்றன.ஏனென்றால்,இரக்கத்திற்காகவும் கிருபைக்காகவும் இயேசுவின் இரத்தத்தின் கூக்குரல் நித்திய ஆவியின் மூலம் தொடர்ந்து என்றென்றும் உங்களுக்காக மேற்கொள்ளப்படுகிறது.
எனவே, உங்கள் வாழ்வில் குறிப்பாக உடல்நலம், செல்வம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் முன்னேற்றங்கள் என்பது அதிக நிச்சயமாமே! இன்று, இயேசுவின் நாமத்தில் உங்கள் அற்புதம் மற்றும் தடைகள் தகர்க்கப்படும் நாளாக இருக்கும்!! ஆமென் 🙏
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து அவருடைய இரக்கத்தையும் கிருபையையும் அனுபவியுங்கள்.
நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!
கிருபை( பு) நற்செய்தி பேராலயம்!!