Category: Tamil

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய மகத்தான வல்லமையை உணரவும் அனுபவிக்கவும் கிருபை பெறுங்கள்!

26-07-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய மகத்தான வல்லமையை உணரவும் அனுபவிக்கவும் கிருபை பெறுங்கள்!

7. ஆதலால் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால், தன் மேற்சட்டையைக் கட்டிக்கொண்டு கடலிலே குதித்தான்.
11. சீமோன்பேதுரு படவில் ஏறி, நூற்றைம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான்; இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.யோவான் 21:7,11 NKJV

இங்கே நாம்,இருவர் ஒன்றாக ஒத்துப்போகும் போது “ஒப்பந்தத்தின் வல்லமையை” பார்க்கிறோம்!அது ஆச்சரியமாக இருக்கிறது!!

உயிர்த்தெழுந்த இயேசுவை(கிறிஸ்து இயேசுவை)பகுத்தறிந்து,அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையை வெளிப்படுத்த 2 சீஷர்கள் இணைந்ததை நாம் உணர்கிறோம்.மேலும் உயிர்த்தெழுந்த தேவன் நம் வாழ்வின் இருண்ட கட்டத்தில் நம்மை மீட்டெடுக்க ஒவ்வொருவருக்கும் தோன்றுகிறார் என்ற இந்த விலைமதிப்பற்ற வெளிப்பாடு நமக்கு கிருபையாக அளிக்கப்படுகிறது .உயிர்த்தெழுப்பப்பட்ட இரட்சகரை “பார்த்தபின்” நாம் மீண்டும் இருந்த வண்ணமாக இருப்பதில்லை!

மேலே உள்ள வேத வசனத்தை நீங்கள் கவனமாக கவனித்தால், பரிசுத்த ஆவியானவர் அன்பான அப்போஸ்தலன் யோவானுக்கு கர்த்தரை பகுத்தறியும் ஞானத்தை கொடுத்தார் என்பதை நீங்கள் காண்பீர்கள். மேலும், யோவான் “இது கர்த்தர்” என்று வெளிப்படுத்தினார், அப்பொழுது பேதுருவுக்கு, தேவனின் ஆவியானவர் அவருடைய வல்லமையை வெளிப்படுத்தும் ஆற்றலைக் கொடுத்தார், அவர் ஒரு மிகப்பெரிய மீன் அறுவடையின் வலையை தனி ஆளாக கரைக்கு இழுத்தார். கர்த்தராகிய இயேசு தம்முடைய சீஷர்களை இரண்டு இரண்டாக அதாவது ஜோடியாக இணைத்தார் என்பதை நினைவில் வையுங்கள் (லூக் 10:1).இப்படிப்பட்ட ஒரு ஜோடி பேதுருவும் யோவானும் அவர்கள், அப்போஸ்தலர் 3:1-8 இன்படி ,தாயின் வயிற்றில் இருந்து முடமாக பிறந்த மனிதனின் வாழ்க்கையில் தேவனின் அற்புதமான உயிர்த்தெழுதல் வல்லமையை வெளிப்படுத்தியதைக் காண்கிறோம்.

ஆம் என் அன்பானவர்களே, தேவன் தன்னையும் அவரது அசாத்திய வல்லமையையும் வெளிப்படுத்துவதற்காகத் தம்முடைய தீர்மானத்தின்படி ஜனத்தை ஜோடி ஜோடியாக இணைத்துள்ளார். திருமணம் ஆனவர்கள் மத்தியில்,கணவனையும் மனைவியையும்பெரிய காரியங்களை கர்த்தருக்காக செய்ய இணைத்துள்ளார். இன்னும் திருமணமாகாதவர்கள் மற்றும் தனிமையில் இருப்பவர்களையும் ஜோடியாக இணைத்துள்ளார் பவுல் மற்றும் பர்னபாஸ் மேலும் பவுல் மற்றும் சீலாஸ் போல தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு தேவ ராஜ்யத்தில் பெரிய காரியத்தை செய்ய ஒன்றுசேர்க்கப்படுபவர்கள்.ஆகவே, இருவர் உடன்படுவதில் மாபெரிய வல்லமை உண்டு!

இந்த தெய்வீகக் கூட்டாண்மையைப் பிடித்துக் கொண்டு இருப்பது குறிப்பாக கணவன்-மனைவி இடையே உடன்படுவது நமது பொறுப்பு,ஏனெனில் அவர்கள் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையின் நற்செய்தியின் இணை வாரிசுகள். இந்த புனிதமான உறவில் யாரையும் இடையிலோ அல்லது தலையிடவோ அனுமதிக்காதீர்கள், ஏனென்றால் ஆதி பெற்றோர்கள்,ஆதாம் மற்றும் ஏவாள் இடையே சர்பத்தை அனுமதித்ததின் விளைவாக ஏற்பட்ட குழப்பம் அதுவே மனிதகுலத்தின் வீழ்ச்சிக்கு காரணம். முழு மனிதகுலமும் இந்த ஏமாற்றம் மற்றும் தந்திரமாக ஊடுருவியதின் விளைவாக இன்றுவரை தத்தளித்துக்கொண்டிருக்கிறது. அதனால் நம்மை மீண்டும் தேவனிடம் திருப்பவும் இழந்த மகிமையை மீண்டும் கொடுக்கவும் தம்முடைய குமாரனாகிய இயேசுவை ஜீவபலியாக அனுப்பிய தேவனுக்கு நன்றி. அல்லேலூயா!

பரிசுத்த ஆவியானவர் உங்களை ஒன்றிணைத்து ஒருவருக்கு பகுத்தறிவையும் (DISCERNMENT) மற்றவருக்கு நிரூபணத்தையும் (DEMONSTRATION) கொடுக்கிறார் என்பதை நினைவில் வையுங்கள்.ஒன்றாக ஏற்று உடன்படுங்கள்! அல்லேலூயா! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய மகத்தான வல்லமையை உணரவும் அனுபவிக்கவும் கிருபை பெறுங்கள்!

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றி!

கிருபை நற்செய்தி பேராலயம் !!

உங்களில் உள்ள மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,இயற்கைக்கு அப்பாற்பட்டதை அனுபவியுங்கள்!

25-07-24
இன்றைய நாளுக்கான கிருபை!

உங்களில் உள்ள மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,இயற்கைக்கு அப்பாற்பட்டதை அனுபவியுங்கள்!

6. அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்.
7. அப்பொழுது மற்றப் படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யும்படிக்குச் சைகைகாட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள்.லூக்கா 5:6-7 NKJV
6. அப்பொழுது அவர்: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால்,அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள்.
11. சீமோன்பேதுரு படவில் ஏறி, நூற்றைம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான்; இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. யோவான் 21:6,11 NKJV

பேதுருவும் மற்ற சீஷர்களும் தன்னிச்சையாக மீன்பிடிக்கச் சென்றபோது பலனளிக்காமல்இருந்ததை வேதத்தில் இருமுறை குறிப்பிடப்பட்டிருப்பதையும்,இரண்டு சந்தர்ப்பங்களிலும் கர்த்தருடைய தலையீடு ஏராளமானதை (கற்பனைக்கு எட்டாத பிடிப்பு) கொண்டுவந்ததைக் காண்கிறோம்: அந்த அற்புதம் இயேசு பூமியில் வாழ்ந்த காலத்தில் ஒருமுறையும்,அவர் மரித்தோரிலிருந்து எழுந்தபின் மற்றொரு முறையும் நடந்தது.

முதல் சந்தர்ப்பத்தில்,மீன் பிடிப்பு அதிகமாக இருந்ததால்,வலை கிழிந்தது,படகு மூழ்கியது,ஆனால் இரண்டாவது நிகழ்வில்,வலை கிழியவில்லை படகும் மூழ்கவில்லை. இந்த இரண்டிற்க்கும்
என்ன வித்தியாசம்?

முதல் நிகழ்வில், பேதுருவின் நண்பர்கள் பேதுருவுக்கு உதவ வந்தனர்,அபரிமிதமான மீன்பிடிப்பை வலை கிழிந்ததால் முழுவதுமாக நழுவவிடாமல் காப்பாற்றினர்,ஆனால் இரண்டாவது நிகழ்வில் பேதுருவைச் சுற்றி இருந்த சீஷர்களிடம் உதவி வரவில்லை,மாறாக பேதுருவுக்குள் இருந்து உதவி வந்தது.
காரணம், முதல் நிகழ்வில், இயேசு கிறிஸ்து அவர்களுடன் இருந்தார், ஆனால் இரண்டாவது நிகழ்வில், கிறிஸ்து,பேதுரு மற்றும் சீஷர்களுடன் இருக்கவில்லை, மாறாக உயிர்த்தெழுந்த இரட்சகர் பேதுருவுக்குள் வாசமாக இருந்தார். இந்த வித்யாசமே வெற்றிக்கு காரணம்!

ஆம் என் அன்பானவர்களே,நீங்கள் இயேசுவை உங்கள் ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொண்டால், கிறிஸ்து உங்களில் வாழ்கிறார். அவரே மகிமையின் நம்பிக்கை! _
பரிசுத்த ஆவியானவர்”உங்களுக்குள் தெய்வீக வாழ்க்கையை”மிகவும் உண்மையானதாக மாற்றினால்,உங்கள் வாழ்க்கை ஒருபோதும் இருந்தவண்ணமாகவே இருக்காது. “சிறு பிள்ளைகளே,நீங்கள் தேவனால் உண்டானவர்கள், அவர்களை ஜெயித்தீர்கள்,ஏனென்றால் உங்களில் இருப்பவர் உலகத்திலுள்ளவர்களைப் பார்க்கிலும் பெரியவர்” என்று எழுதியிருக்கிறபடி நீங்கள் நம்பிக்கையோடும் வெற்றியோடும் நடப்பீர்கள்.I யோவான் 4:4.அல்லேலூயா!

உங்கள் பரலோகத் தகப்பன் இயேசுவின் மகிமையான நாமத்தில்”உங்களில் உள்ள கிறிஸ்து” பற்றிய அறிவில் ஞானம் மற்றும் வெளிப்பாட்டின் ஆவியை உங்களுக்கு வழங்குவாராக! ஆமென் 🙏

உங்களில் உள்ள மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,இயற்கைக்கு அப்பாற்பட்டதை அனுபவியுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றி!

கிருபை நற்செய்தி பேராலயம் !

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துஇயேசுவை சந்தித்து,பூமியில் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையால் ஆளுகை செய்யுங்கள்!

24-07-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துஇயேசுவை சந்தித்து,பூமியில் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையால் ஆளுகை செய்யுங்கள்!

3″சீமோன் பேதுரு சோர்வடைந்து அவர்களிடம், “நான் மீன் பிடிக்கப் போகிறேன்” என்றான். அவர்கள் அவரிடம், “நாங்களும் உன்னுடன் போகிறோம்” என்றார்கள்.அவர்கள் வெளியே சென்று உடனடியாக படகில் ஏறினார்கள், அன்று இரவு அவர்களுக்கு ஒன்றும் பிடிக்கவில்லை.
6. அப்பொழுது அவர்: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள்.
11. சீமோன்பேதுரு படவில் ஏறி, நூற்றைம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான்; இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. யோவான் 21:3,6,11 NKJV

கர்த்தராகிய இயேசுவுக்குள் மிகவும் பிரியமானவர்களே,இன்று நான் யோவான் எழுதிய சுவிசேஷத்தின் படி அதிகாரம் 21 லிருந்து மூன்று முக்கியமான வசனங்களை நமது தியானத்திற்காக தேர்ந்தெடுத்துள்ளேன்:
வசனம் 3:சீஷர்கள் மீன்பிடிக்கச் சென்றார்கள்,ஆனால் ஒரு மீனைக் கூட பிடிக்க முடியவில்லை.
வசனம் 6: அவர்கள் ஏராளமான மீன்களைப் பிடித்தார்கள்,ஆனால் அது அவர்களின் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருந்ததால் அவர்களால் அதை இழுக்க முடியவில்லை.
வசனம் 11: சீமோன் பேதுரு ஒற்றைக் கையால் ஏராளமான மீன்களைக் கரைக்கு இழுத்தார்.அது அற்புதம்!

இயேசு அவர்களுடன் பிரசன்னமாகாமல் தங்கள் சொந்த பலத்தில் செய்ததால் அவர்களால் மீன் பிடிக்க முடியவில்லை. ஏனென்றால் (வசனம் 3ல்) கர்த்தர் அந்த சூழ்நிலைக்குள் அழைக்கப்படவில்லை.அது சீஷர்களுடன் “கிறிஸ்து இல்லாமல்” இருக்கும் அனுபவம்.

அவர்கள் திரளான மீன்களைப் பிடித்தார்கள்,ஏனென்றால் அவர்கள் வலையை எங்கு வீச வேண்டும் என்று இயேசு அவர்களுக்கு துல்லியமாக சொன்னார். அது “கிறிஸ்து அவர்களுடன்” இருக்கும் அனுபவம். இருப்பினும், அவர்களால் அதை கரைக்கு இழுக்க முடியவில்லை,ஏனென்றால் இயேசுதான் அவர்களை வழிநடத்தினார் என்பதை அவர்கள் உணரவில்லை அல்லது இயேசு அந்த சூழ்நிலையில் வெளிப்பட்டதை அவர்கள் அறியவில்லை (வசனம் 4,6).

அவர் இயேசுவாகிய கர்த்தர் என்று யோவானால் சீமோன் பேதுருக்குக் கூறப்பட்டபோது, கிறிஸ்து தன்னில் இருக்கிறார் என்ற விழிப்பு அவருக்கு ஏற்பட்டது. ஆம் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பிய தேவ ஆவியானவர் இப்போது அவரில் வாசமாயிருந்து,சாவுக்கேதுவான அவருடைய சரீரத்திற்கு உயிர் கொடுக்கிறார் (ரோமர் 8:11) என்ற உணர்வு ஏற்பட்டது . ஆவியானவர் தனக்குள் இருக்கிறார் என்ற இந்த உணர்தல் பேதுருவுக்கு ஒரு அசாதாரண மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட வலிமையை உருவாக்கியது,எல்லா சீஷர்களும் ஒன்றிணைந்து இழுக்க முடியாத முழு வலையையும் பேதுரு ஒரு கையால் இழுத்தார். அல்லேலூயா!

இன்று உயிர்த்தெழுந்த இயேசுவைப் பற்றிய அறிவில் ஞானம் மற்றும் வெளிப்பாட்டின் ஆவியின் மூலம் இயேசுவின் நாமத்தில் முடியாததை முடிக்க பரலோக பிதா உங்களுக்கு தயவு பாராட்டுவாராக! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துஇயேசுவை சந்தித்து,பூமியில் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையால் ஆளுகை செய்யுங்கள் .

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றி!

கிருபை நற்செய்தி பேராலயம் !

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துஇயேசுவை சந்தித்து,பூமியில் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையை அனுபவியுங்கள்!

23-07-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துஇயேசுவை சந்தித்து,பூமியில் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையை அனுபவியுங்கள்!

6. அப்பொழுது அவர்: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள்.
7. ஆதலால் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால், தன் மேற்சட்டையைக் கட்டிக்கொண்டு கடலிலே குதித்தான்.
11. சீமோன்பேதுரு படவில் ஏறி, நூற்றைம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான்; இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. யோவான் 21:6-7, 11 NKJV

சோர்வடைந்த சீஷர்கள் மீன்பிடிக்கச் செல்ல முடிவு செய்தனர்,அன்று இரவு அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை.இது மேலும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.ஆனால், காலையில் கர்த்தர் அவர்களுக்கு வேறொரு வடிவில் காட்சியளித்தார்.

என் பிரியமானவர்களே, நீங்கள் மனச்சோர்வடைந்த, திருப்தியற்ற அல்லது ஏமாற்றமடைந்த தருணங்களில்,கர்த்தராகிய இயேசு பரிசுத்த ஆவியானவரின் மூலம் மற்றொரு வடிவத்தில் உங்களுக்குத் தோன்றுவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்,அதற்கு கர்த்தராகிய இயேசுவைப் பகுத்தறிவதற்கு பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவ வேண்டும்.

நீங்கள் அவரைப் பகுத்தறிந்தால், இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பிய பரிசுத்த ஆவியானவரின் நிரூபணத்தை அனுபவிப்பீர்கள்.

யோவான் பகுத்தறிந்து, “இது கர்த்தர்” என்று கூக்குரலிட்டபோது அவர் அவர்களுக்கு வெளிப்பட்டார். பின்னர் பேதுரு கடலில் இறங்கினார்,மேலும் 153 பெரிய மீன்கள் நிறைந்த வலையை ஒரு கையால் கரைக்கு இழுத்து வந்தார். வலை கிழியவில்லை.
அதுதான் உயிர்த்தெழுதலின் வல்லமை. அல்லேலூயா!

ஆகவே, என் நண்பர்களே, உங்கள் கடினமான சூழ்நிலையிலும் கர்த்தராகிய இயேசுவை நீங்கள் பகுத்தறிந்து, பரிசுத்த ஆவியின் மூலம் அவருடைய உயிர்த்தெழுதல் வல்லமையைக் காண்பீர்கள் என்று இன்று காலை நான் உங்களுக்கு தீர்க்கதரிசனமாக உரைக்கிறேன். இது உங்கள் நாள்! அவருடைய கிருபை இன்று உங்களைத் தேடி வருகிறது!! அல்லேலூயா!!! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துஇயேசுவை சந்தித்து,பூமியில் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையை அனுபவியுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றி!

கிருபை நற்செய்தி பேராலயம் !

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துஇயேசுவை சந்தித்து,பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

22-07-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துஇயேசுவை சந்தித்து,பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

3. சீமோன்பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படவேறினார்கள். அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை. யோவான் 21:3 NKJV

இயேசுகிறிஸ்துவின் மரணமானது அவருடைய சீஷர்களின் எல்லா நம்பிக்கைகளையும் தகர்த்தெறிந்தது. இருப்பினும், தேவனின் ஆவி இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினார் (ரோமர் 8:11), அந்த காரியம் இயேசுவின் சீஷர்களின் ஊக்கம் இழந்த இதயங்களை உயிர்ப்பித்தது.

ஆனாலும், கர்த்தராகிய இயேசு விரைவில் உயர்ந்த வானத்திற்கு பரமேறுவார் என்ற எண்ணமே அவர்களை வருத்தமடையச் செய்தது. 3 ஆண்டுகளுக்கும் மேலாக இயேசு கிறிஸ்துவின் சரீர பிரசன்னம் அவர்களை முற்றிலும் கவலையற்ற மற்றும் மன அழுத்தமின்றி வைத்திருந்தது.ஆனால் இப்போது, ​அவர்களின் எஜமானர் பரமேறியதால் அவர்கள் மனமுடைந்து, அவர்கள் தங்கள் பழைய தொழிலுக்கு (மீன்பிடித்தல்) திரும்பலாம் என்று நினைத்தார்கள், மேலும் தங்கள் சொந்த வேலையை மாத்திரம் பார்ப்போம் என்றிருந்தார்கள்.

அதிகப்படியான ஆன்மீகம் தங்களைத் தடுமாறச் செய்யும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம், எனவே அவர்கள் உலகத்தை மாற்றுவதற்கும் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க அழைக்கப்பட்டவர்கள் என்பதை அறியாமல்,தங்கள் சொந்த வழிகளில் தங்களைத் தாங்களே தேற்றிக்கொள்ள நினைத்திருக்கலாம்.

பரிசுத்த ஆவியின் வருகையே இதை உண்டாக்கியது!

என் அன்பானவர்களே, நீங்கள் சோர்வோடு காணப்படுகிறீர்களா? நீங்கள் பல வருடங்களை வீணடித்துவிட்டீர்கள் என்றும் உங்கள் வாழ்க்கை பயனற்றது என்றும் உணர்கிறீர்களா? கவலைப்படாதிருங்கள்,மகிழ்ச்சியாக இருங்கள்! பரிசுத்த ஆவியானவர் எல்லா மாற்றங்களையும் ஏற்படுத்த முடியும். அவர் உங்கள் எல்லா இழப்புகளையும் மீட்டெடுப்பார், மேலும் உங்கள் சமகாலத்தவர்கள் அனைவரையும் விட உங்களை உயர்த்துவார், மேலும் உங்கள் வாழ்க்கையை அழித்த ஒவ்வொரு எதிர்மறை சக்தியின் மீதும் ஆளுகை செய்வார். பரிசுத்த ஆவியானவர் உங்களை இயேசுவின் நாமத்தில் பூமியில் ஆளுகை செய்ய உதவுகிறார்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துஇயேசுவை சந்தித்து,பூமியில் ஆளுகை செய்யுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றி!

கிருபை நற்செய்தி பேராலயம்  !

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துஇயேசுவை சந்தித்து,உங்கள் தோல்வியில் ஆளுகை செய்யும் அனுபவத்தை பெறுங்கள்!

19-07-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துஇயேசுவை சந்தித்து,உங்கள் தோல்வியில் ஆளுகை செய்யும் அனுபவத்தை பெறுங்கள்!

9. அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன். II கொரிந்தியர் 12:9 NKJV

நாம் நமது சொந்த பலம் அல்லது போதுமான ஆசீர்வாதம் நம்மிடம் இருந்தால், அவருடைய கிருபையைப் பெறவோ அல்லது அவருடைய வலிமையை பெறவோ பெறுவதற்கு இடம் எங்கே உள்ளது?

மின்னோட்டம் நேர்மறையிலிருந்து எதிர்மறைக்கு (இயற்பியலின் படி) எப்படிப் பாய்கிறதோ அதே போல கடவுளின் பலமும் அவருடைய பலத்திலிருந்து நமது பலவீனத்தில் (ஆவியின் படி) பாய்கிறது.

அதுபோலவே, உங்கள் பற்றாக்குறையில்தான் அவருடைய மிகுதி . உங்கள் பலவீனத்தில் தான் அவருடைய பலம் பூரணமாகிறது. உங்கள் நோயில் தான் அவருடைய தெய்வீக ஆரோக்கியம் வெளிப்படுகிறது. உங்கள் தோல்வியில் தான் அவரது வெற்றியும் வெளிப்படுகிறது.ஆம் அப்படியே ,மின்னோட்டம் நேர்மறையிலிருந்து இருந்து எதிர்மறைக்கு வருவதுபோல தேவனின் பொழிதலானது (SUPPLY) மேலிருந்து இருந்து கீழ் நோக்கி வருகிறது. .

ஆகையால், கர்த்தருக்குப் பிரியமானவர்களே,வாழ்வில் ஒவ்வொரு முறையும் நீங்கள் தோல்வியடையும் போதும், ஒவ்வொரு முறையும் நீங்கள் ஏமாற்றங்களையோ, மனச்சோர்வையோ அல்லது அவமானத்தையோ சந்திக்கும் போதும் ஒவ்வொரு முறையும் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். அவ்வாறு செய்வதன் மூலம், கிறிஸ்துவின் வல்லமை உங்கள் மீது தங்கி, உங்களுக்குள் பாய்ந்து செல்லும்!
என் நண்பரே,இதில் பிரச்னை என்னவென்றால் நான் செய்த தவறுகள் அல்ல,மாறாக தவறான நம்பிக்கைதான். ஆம்,நமது நம்பிக்கை நாம் என்ன நினைக்கிறோமோ அதை அடிப்படையாகக் கொண்டது மற்றும் நமது உணர்ச்சி அந்த நினைவுகளை வெளிப்படுத்துகிறது.

எனது பலவீனம் மற்றும் குறைபாடுகளைப் பற்றி நான் நினைக்கும் விதத்தை மாற்றியவுடன், அவருடைய பெலன் எனது பெலவீனத்தில் பூரணப்படுத்தப்பட்டு கிறிஸ்துவின் வல்லமையை நான் அனுபவிக்க ஆரம்பிக்கிறேன்.
உங்கள் எல்லா குறைபாடுகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் அவருக்கு நன்றி செலுத்துங்கள், நிச்சயமாக நீங்கள் வெற்றி பெறுவீர்கள்! நீங்கள் ஒரு வெற்றியாளரை விட அதிகமானவராக இருக்கிறீர்கள் !! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துஇயேசுவை சந்தித்து, உங்கள் தோல்வியில் ஆளுகை செய்யும் அனுபவத்தை பெறுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றி!

கிருபை நற்செய்தி பேராலயம்  !

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துஇயேசுவை சந்தித்து,பூமியில் ராஜாக்களாக வெளிப்படுங்கள்!

18-07-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துஇயேசுவை சந்தித்து,பூமியில் ராஜாக்களாக வெளிப்படுங்கள்!

6. அது கிருபையினாலே உண்டாயிருந்தால் கிரியைகளினாலே உண்டாயிராது; அப்படியல்லவென்றால், கிருபையானது கிருபையல்லவே. அன்றியும் அது கிரியைகளினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாயிராது; அப்படியல்லவென்றால், கிரியையானது கிரியையல்லவே. ரோமர் 11:6 NKJV‬‬

பரிசுத்த வேதாகமத்தில் விளக்கப்பட்டுள்ளபடி ‘செயல்கள்’ மற்றும் ‘நல்ல செயல்கள்’ ஆகியவற்றுக்கு இடையே வேறுபாடு உள்ளது. “நல்ல கிரியைகள்”என்பது கிருபையின் வெளிப்பாடு அல்லது விளைச்சல் என்பதாகும். “கிரியைகள் அல்லது செத்த கிரியைகள் என்பது மனித முயற்சியின் விளைச்சல் அல்லது தேவன் அல்லாமல் மனிதனின் செயல்திறன் என்பதாகும்*.

கிருபையின் வெளிப்பாடே ஆவியின் கனி (நற் கிரியைகள் ) என்றும் அழைக்கப்படுகிறது (கலாத்தியர் 5:22,23).மாறாக “கிரியைகள்” என்பது “மாம்சத்தின் கிரியைகள்”என்று அழைக்கப்படுகின்றன (கலாத்தியர் 5:19-21). இவை முற்றிலும் ஒன்றுக்கொன்று முரணானவை மற்றும் ஒன்றுக்கொன்று பிரத்தியேகமானவை.

எனவே,இன்றைய தியான வசனத்தின்படி, அது கிருபையினால் ஆகும் என்றால் கிரியைகளினால் ஒன்றும் பலன் இல்லை என்று பொருள்படுகிறது.மனித பலத்தின் முடிவே தேவ பலத்தின் ஆரம்பம்.
மின்னோட்டம் நேர்மறையிலிருந்து எதிர்மறைக்கு (இயற்பியலின் படி) எப்படிப் பாய்கிறதோ அதே வழியில் தேவனின் பலமும் அவரிடமிருந்து நமது பலவீனத்தில் (ஆவியின் படி) பாய்கிறது.

என் அருமை நண்பர்களே, தேவனின் கிருபை தகுதியற்றவர்களுக்கே.உங்கள் வாழ்க்கையில் எந்தப்பகுதியில் தகுதியற்ற நிலை வந்தாலும் பரவாயில்லை, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை இன்று உங்களிடம் வந்து, உங்களைத் தகுதிப்படுத்தி, உங்கள் சமகாலத்தவர்கள் அனைவரையும் விட உங்களை உயர்த்தி, இந்த நாளில் உங்களை ஒரு வெற்றியாளராக வெளிவரச் செய்யும். இயேசுவின் நாமத்தில் நீங்கள் கிருபையின் மிகுதியையும்,நீதியிலிருந்து வெளிப்படும் ஆளுகையையும் தொடர்ந்து பெறுவீர்கள். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துஇயேசுவை சந்தித்து,பூமியில் ராஜாக்களாக வெளிப்படுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றி!

கிருபை நற்செய்தி பேராலயம்  !

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துஇயேசுவை சந்தித்து,பூமியில் அவருடைய கிருபையால் ஆளுகை செய்யுங்கள்!

16-07-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துஇயேசுவை சந்தித்து,பூமியில் அவருடைய கிருபையால் ஆளுகை செய்யுங்கள்!

20. மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.
21. ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது. ரோமர் 5:16 NKJV‬‬

பாவம் மனிதனைக் கொன்றது, ஆனால் கிருபை மனிதனை மரணத்திலிருந்து எழுப்பியது.
பாவமானது சிறந்த பாவிகளாக திகழ்ந்தவர்களைக் கூட அழித்தது, அதேசமயம் கிருபையானது மிக மோசமான பாவிகளைக் கூட உயிர்ப்பித்தது.

ரோமர் 6:23 கூறுகிறது, “பாவத்தின் சம்பளம் மரணம்,ஆனால் தேவனுடைய வரமோ நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் நித்திய ஜீவன்“. அதாவது பாவம் செய்யும் ஒவ்வொருவருக்கும் அதற்கான கூலி கொடுக்கப்படுகிறது. “கூலி” என்ற வார்த்தை தொழிலாளர்களுக்கு ஊதியம் என்று பொருள்படுகிறது. இருப்பினும், “பரிசு” என்ற வார்த்தை உழைக்காத அல்லது சம்பாதிக்க எதுவும் வழி செய்யாத ஒருவருக்கு பயன்படுத்தப்படுகிறது. அதை அவன் வெறுமனே நன்றியுணர்வுடன் ஏற்றுக்கொள்வதுதான்.

ஆம், என் அன்பானவர்களே! நீங்கள் உழைக்காமல் அவருடைய அன்பைப் பெற வேண்டும் என்று பிதா விரும்புகிறார்.அவருடைய அன்பானது இயேசு கிறிஸ்துவின் நபரில் வெளிப்படுகிறது.
அதேபோல், இயேசு கிறிஸ்து நீங்கள் உழைக்காமல் அல்லது சம்பாதிக்காமல் அவருடைய கிருபையைப் பெற விரும்புகிறார்.இயேசு நமக்காக உழைத்து,சாகும்வரை தேவனுக்குக் கீழ்ப்படிந்ததால், அவருடைய கிருபை உங்களுக்கும் எனக்கும் நிறைவை அளித்தது.அவருடைய கிருபை உங்கள் வாழ்க்கையில் தேவனின் பரிசு – அதாவது பரிசுத்த ஆவி என்னும் நபராக திகழ்கிறார்.

இன்று, உங்களில் உள்ள பரிசுத்த ஆவியானவர் உங்கள் வாழ்க்கையில் நீதியால் ஆளும் அதிகாரமாக உ ள்ளார்.உங்களை வழிநடத்த அவரை அழைக்கவும், அவர் உங்களை வழிநடத்துவது போல் அவரைப் பின்பற்றவும்.அவர் உங்கள் இதயத்தில் வாழும் தேவனின் குரல்.நீங்கள் எப்போதும் ( 24*7)அவரிடம் உதவியை கேட்கலாம். நீங்கள் அவருக்கு செவிகொடுப்பதின் மூலம் இன்று ஆவியானவரின் கிருபை பொழிவானது உங்கள் வாழ்வில் அற்புதங்களைச் செய்கிறது! ( கலா 3:2-5) ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துஇயேசுவை சந்தித்து,பூமியில் அவருடைய கிருபையால் ஆளுகை செய்யுங்கள்!

கிருபை நற்செய்தி பேராலயம்!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துஇயேசுவை சந்தித்து,பூமியில் அவருடைய ஆளுகையை அனுபவியுங்கள்!

15-07-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துஇயேசுவை சந்தித்து,பூமியில் அவருடைய ஆளுகையை அனுபவியுங்கள்!

16. மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது..ரோமர் 5:16 NKJV‬‬

இன்றைய தியானத்திற்குரிய வேத வசனத்தில், “பரிசு” என்பது பரிசுத்த ஆவியாகிய நபர் (DOREAH) என்று பொருள்படுகிறது,அதேசமயம் “இலவச பரிசு” என்பது இந்த நபராகிய பரிசுத்த ஆவியானவரின் வெளியரங்கமான செயல்படுதல் (CHARISMA ) என்று பொருள்படும்.

குற்றவாளியின் வாழ்க்கையில் தண்டனையாகிய தீர்ப்பு வழங்குவது நியாயப்பிரமாணத்தின் தலையாய கடமையாக இருக்கின்றது.மாறாக, பரிசுத்த ஆவியானவர் குற்றவாளியின் மீது தீர்ப்பு வழங்கும்போது அவனை நீதிமானாக அங்கீகரிக்கிறார்(நியாயப்படுத்துதல்). தீர்ப்பின் கீழ் விழுவதற்கு ஒரே ஒரு பாவம் போதுமானது ,ஆனால் குற்றவாளியின் எண்ணற்ற குற்றங்கள்- செய்த பாவங்கள் இருந்தபோதிலும், பரிசுத்த ஆவியானவர் கிருபையை அளித்து,அவனைக் குற்றவாளி அல்ல என்று அறிவிக்கிறார்.ஏனென்றால்,மனித தரத்தால் அல்லது தெய்வீக தரத்தால் பாவம் என்று அங்கீகரிக்கப்பட்ட அனைத்தையும் இயேசு தம்மீது நம்முடைய எல்லா பாவங்களையும் இயேசு சுமந்து தீர்த்து நம்மை என்றென்றும் நீதிமான்களாக அறிவித்தார். அல்லேலூயா!

என் அன்பான நண்பர்களே, உங்கள் கடந்த காலம்,உங்கள் நிகழ்காலத்தையும்,எதிர்காலத்தையும் வரையறுக்க முடியாது.பிதாவாகிய தேவன் தம்முடைய குமாரனென்றும் நினைக்காமல் நம்மீது கொண்ட அன்பின் நிமித்தம் நமக்காக இயேசுவை ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தார். அதாவது நாம் தெரிந்து செய்த பாவங்கள் அல்லது தெரியாமல் செய்த பாவங்கள், கடந்த கால, நிகழ்கால அல்லது எதிர்காலத்தின் பாவங்கள், நம் முன்னோர்களின் பாவங்கள் (ஆதாமுக்கு முந்தையது) அல்லது நம்முடைய சொந்த பாவங்கள் ஆகிய அனைத்தையும் பிதாவாகிய தேவன் தம் மகன் இயேசுமீது சிலுவையில் தீர்த்து முடித்தார்.

ஆகையால், இன்று பரிசுத்த ஆவியானவர் உங்களை நியாயந்தீர்க்கவில்லை,மாறாக அவர் உங்களை நியாயப்படுத்துகிறார்.(நீங்கள் ஒருபோதும் பாவம் செய்யாதது போல் உங்களை நீதிமான்களாக அறிவிக்கிறார்).
தேவன் உங்களுக்கு ஆதரவாக நிற்கும்பொழுது உங்களுக்கு எதிராக யார் இருக்க முடியும்?
யாரும் இல்லை! நீங்கள் ஆளுகை செய்ய விதிக்கப்பட்டிருக்கிறீர்கள்!! நீங்கள் பரிசுத்த ஆவியில் தேவ நீதியாயிருக்கிறீர்கள்!!! ஆமென் !!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துஇயேசுவை சந்தித்து,பூமியில் அவருடைய ஆளுகையை அனுபவியுங்கள்!

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றி!

கிருபை நற்செய்தி பேராலயம்  !

g13

மகிமையின் ராஜாவாகிய இயேசுகிறிஸ்துவை சந்தித்து,அவருடைய மிகுதியான கிருபையை அனுபவியுங்கள்!

12-07-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுகிறிஸ்துவை சந்தித்து,அவருடைய மிகுதியான கிருபையை அனுபவியுங்கள்!

15. ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது. ரோமர் 5:15 NKJV‬‬

ஒரு பயங்கரமான தொற்றுநோயாக இருந்த கோவிட்-19 இன் காலத்தில்,பலர் பாதிக்கப்பட்டனர் மற்றும் சிலர் மரணத்தை சந்தித்தனர்.இந்த தொற்று மிகவும் கொடியதாய் பரவியது மற்றும் சாதி, மதம், நிறம் அல்லது சமூகம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து நாடுகளுக்கும் கட்டுப்பாடற்ற தீயாக பரவியது.
ஆனால் இந்த காற்றில் பரவும் நோயை தனது வலிமைமிக்க கரத்தால் தடுத்து நிறுத்திய தேவனுக்கு நன்றி!

அதுபோலவே பாவமும் மரணமும் தொற்றக்கூடியது.ஆதாம் முதல் எல்லாத் தலைமுறைகளிலும், காலங்களிலும் எல்லா மனிதர்களுக்கும் பரவி,இந்த பாவத்திற்கு பரிகாரமே இல்லை என்ற சூழ்நிலை தோன்றியபோது, தேவன் இந்த உலகத்தின் மேல் கொண்ட அதீத அன்பின் காரணமாக, தம்முடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசுவை பூமிக்கு அனுப்பி கொடூரமாக பரவி வரும் இந்த பாவத்தின் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதற்காகவே தன் மகனை பலியாக ஒப்புக்கொடுத்தார்.
கர்த்தராகிய இயேசு,பூமியில் வாழ்ந்த காலத்தில் எல்லா நேரங்களிலும் எல்லா விஷயங்களிலும் தேவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்ததால், நமக்கு கிருபையானார். தகுதியற்றவர்களாகிய நமக்கு நிபந்தனையற்ற, மற்றும் உழைத்து பெறமுடியாத கிருபையானார்.
பரிசுத்த ஆவியயாகிய (DOREAH),நீதியின் வரமாகிய நபரின் காரணமாக நமக்கு வந்த கிருபை நமக்குள் கிருபையாய் இருக்கிறார்.

என் அன்பு நண்பர்களே,”எண்கணித முன்னேற்றத்தில்”(ARITHMETIC PROGRESSION ) பாவம் பரவினால் (புற்றுநோயைப் போல வேகமாக பரவினால்), தேவகிருபையானது “வடிவியல் முன்னேற்றத்தில்” (GEOMETRIC PROGRESSION)அதை விட அதிகமாக பரவுகிறது,அதனால் மரணமானது வெற்றியில் விழுங்கப்படும் இதன்நிமித்தம் கிறிஸ்துவின் வாழ்க்கை உங்களுக்குள் ஆளுகை செய்கிறது. ஆமென் !!

“நீங்கள் இருக்கும் ஆழமான குழியை விட இயேசு ஆழமானவர்”.

மகிமையின் ராஜாவாகிய இயேசுகிறிஸ்துவை சந்தித்து,அவருடைய மிகுதியான கிருபையை அனுபவியுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றி!

கிருபை நற்செய்தி பேராலயம்  !