Category: Tamil

இயேசுவை நோக்கிப் பார்த்து,கனத்தினாலும் மகிமையினாலும் முடிசூட்டப்படுங்கள் !

07-06-23

இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவை நோக்கிப் பார்த்து,கனத்தினாலும் மகிமையினாலும் முடிசூட்டப்படுங்கள் !

3. உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,
4. மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.
5. நீர் அவனை தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்.(சங்கீதம் 8:3-5) NKJV.

தாவீது – சங்கீதங்களை எழுதிய பாடலாசிரியர், பாடகர், மேய்ப்பர், கணவர், தந்தை,ராஜா மற்றும் தீர்க்கதரிசியாக வாழ்ந்தவர் . ஆவிக்குரிய மண்டலத்தில்,இரண்டு தேவதூதர்களுக்கு இடையே நடக்கும் உரையாடலைக் கேட்க ஒரு சிறப்பு அபிஷேகம் பெற்றவர்.பிதா மனிதன் மீது கொண்ட அன்பின் நிமித்தமாக அவனை மிகவும் கவனத்தில் கொண்டு, அவனை மகிமை மற்றும் கனத்துடன் முடிசூட்டி மனிதரை ஆசீர்வதிக்க தன் இதயத்தில் பிரியமாயிருந்தார் என்பதை ஆவிக்குரிய மண்டலத்தில் தேவதூதர்கள் அறிந்தனர்.

பரலோகத்தில் உள்ள மற்ற படைப்புகளுடன் ஒப்பிடும் போது, ​​மனிதன் தோற்றத்திலும், வலிமையிலும் மிகவும் அற்பமானவன். இருப்பினும், கடவுள் அவன் மீது நிபந்தனையற்ற அன்பை வைத்துள்ளார். மனிதன் அவருடைய தனித்துவமான படைப்பு. எல்லாவற்றையும் படைத்த பிறகு, கடவுள் தன்னைப் பிரதிபலிப்பதற்காக தன்சாயலில் மனிதனை சிருஷ்டித்தார் மற்றும் அவனை மனிதன் என்று அழைத்தார்.  அல்லேலூயா!

இதில் வியப்பூட்டும் காரியம் என்னவென்றால், கடவுள் நம்மைப் பார்க்கும் விதத்தில் நாம் நம்மைப் பார்க்கவில்லை. ஆனால், தேவ தூதர்கள் கடவுள் நம்மைப் பார்க்கும் விதத்தில் நம்மைப் பார்க்க முடிகிறது. நாம் பாவிகளாக இருக்கும்போதே கிறிஸ்து தேவபக்தியற்றவர்களுக்காக மரித்தார் மற்றும் அதன் மூலம் தேவன் நம்மீது தம்முடைய அன்பை வெளிப்படுத்தினார். கிறிஸ்து நமக்காக மரித்தார்,நாம் மிகச் சிறந்தவர்களாக இருந்தபோது அல்ல,ஆனால் நாம் மோசமான நிலையில் இருக்கும்போது. இந்த காரியம் தேவதூதர்களையும் பெரிதும் வியக்கச்செய்தது .

நம்முடைய மோசமான நிலையில் மிகச் சிறந்ததைக் கொடுத்தவரை நாம் எப்படி மறப்பது?
அவருடைய அசாத்திய அன்பைப் பற்றி நினைப்பது, அவருடைய மகிமையால் மாற்றப்படுவதற்கு நம் முழு உள்ளத்தையும் திறக்கின்றது . . .ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்த்து,கனத்தினாலும் மகிமையினாலும் முடிசூட்டப்படுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்

இயேசுவை நோக்கிப் பார்த்து,கனத்தினாலும் மகிமையினாலும் முடிசூட்டப்படுங்கள் !

06-06-23

இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவை நோக்கிப் பார்த்து,கனத்தினாலும் மகிமையினாலும் முடிசூட்டப்படுங்கள் !

.என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்(.எபிரெயர் 2:9) NKJV.

என் அன்பானவர்களே, ஒவ்வொரு முறையும் நான் மேற்கண்ட வசனத்தைக் காணும்போது, ​​இரண்டு விஷயங்கள் எப்போதும் என் இதயத்தை வெகுவாகக் கவர்ந்தன:

1. உண்மையிலேயே இயேசு எல்லோருக்காகவும் (நீங்களும் நானும் உட்பட) மரணத்தை ருசித்தார்.அவர் அதை நமக்காக செய்திருந்தால்,நீங்களும் நானும் ஏன் மரணத்தைச் ருசிக்க வேண்டும்?
2. உங்கள் மரணத்தையும் என் மரணத்தையும் இயேசு மரித்து, நம்மை மகிமையினாலும்,கனத்தினாலும் முடிசூட்டியிருந்தால் ,உங்களுக்கும் எனக்கும் இன்று அந்த கனமும் ,மகிமையும் எங்கே?

நாம் பெரும்பாலும் உண்மையை பார்க்காமல் நிஜதிற்க்கு ஆளாகிறோம், எப்பொழுதும் நமது இயல்பான உணர்வுகளைப் பார்க்கிறோம் மற்றும் செயல்பட ,புலனுக்கு எட்டும் சூழ்நிலைகளைப் பார்க்கிறோம், மேலே குறிக்கப்பட்ட உண்மையை நாம் இழக்கிறோம்.

நாம் பார்க்கும்அல்லது உணரும் நிஜத்திற்கும் , இயேசுவின் நற்செய்தியிலிருந்து நாம் கேட்கும் உண்மைக்கும் இடையே தொடர்ந்து மோதல் இருக்கலாம். ஆனால், உண்மை முன் நிஜம் தலைகுனியவும்,உண்மை வெற்றிபெறவும் நாம் விடாமுயற்சியுடன் அதைப் பற்றிக்கொள்ள அழைக்கப்படுகிறோம் !

உண்மை என்னவென்றால்,நான் மரிக்காமல் இருக்க இயேசு மரணத்தை ருசித்தார், அதற்கு இணையாக நாம் மகிமை மற்றும் கனத்துடன் முடிசூட்டப்பட வேண்டும் .
நாம் அதை நம்ப வேண்டும். நமக்கு பிதா கொடுத்த பங்கை உறுதிப்படுத்துவதற்கும் அதில் நடப்பதற்கும் நமது தொடர்ச்சியான விசுவாச அறிக்கையே இதை விளைவிக்கும் .

ஆம், நான் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாயிருக்கிறேன், அது என்னை மரணத்திலிருந்து தப்பிக்கச் செய்தது .
*நான் ஒரு புதிய சிருஷ்டி (கிறிஸ்து என்னில் வாழ்கிறார்) மகிமை மற்றும் கனத்துடன் நான் முடிசூட்டப்பட்டவன் – தெய்வீகமான,நித்தியமான, யாராலும் வெல்ல முடியாத, அழிக்க முடியாத மனிதன்! . அல்லேலூயா! .ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்த்து,கனத்தினாலும் மகிமையினாலும் முடிசூட்டப்படுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

இயேசுவை நோக்கிப் பார்த்து,கனத்தினாலும் மகிமையினாலும் முடிசூட்டப்படுங்கள்!

05-06-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவை நோக்கிப் பார்த்து,கனத்தினாலும் மகிமையினாலும் முடிசூட்டப்படுங்கள்!

17. இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது, (II பேதுரு 1:17) NKJV.

மனிதன் தேவதூதர்களை விட சற்று தாழ்ந்தவனாக படைக்கப்பட்டான், ஆனால் கனம் மற்றும் மகிமையால் முடிசூட்டப்பட்டான் (சங்கீதம் 8:5). பின்னர் ,முழுமனித குலமும் பாவம் செய்து, கடவுளின் மகிமையை இழந்தனர்.

கடவுளின் மகிமையானது, கடவுளின் மேன்மை மற்றும் அவரது பிரகாசத்தைப் பற்றி பேசுகிறது. அதுதான் வீழ்ச்சிக்கு முன் மனிதனுக்கு இருந்தது.

இயேசு இந்த மனிதன் இழந்த மகிமையையும், கனத்தையும் பிதாவாகிய தலைசிறந்த மகிமையிலிருந்து பெற்றார் – . உங்களுக்காகவும் எனக்காகவும் அவர் இவற்றைப் பெற்றார்.ஏனென்றால், இயேசு ஒருபோதும் பாவம் செய்யவில்லை, அதனால் மகிமையை இழக்கவில்லை. ஆனால், அவர் வீழ்ந்த மனிதனின் இடத்தைப் பிடித்து, அதற்கு ஈடாகத் தம்முடைய மகிமையையும்,கனத்தையும் தெய்வீக பரிமாற்றமாக நமக்குக் கொடுத்தார். அல்லேலூயா!

என் அன்பானவர்களே, இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் அவருடைய மகிமையையும்,கனத்தையும் ,நீங்கள் காண்பீர்கள் -உங்கள் பணியிடத்தில், உங்கள் வேலையில், உங்கள் கல்வியில், உங்கள் வணிகத்தில், உங்கள் ஆரோக்கியத்தில், உங்கள் குடும்பத்தில், உங்கள் ஊழியத்தில், உங்கள் நிதி மற்றும் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் காண்பீர்கள். இன்று, நீங்கள் இயேசுவைப் பார்க்கும்போது அவருடைய மகிமை உங்களை மாற்றும்! . ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்த்து,கனத்தினாலும் மகிமையினாலும் முடிசூட்டப்படுங்கள்!

.
கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்

பிதாவிற்கு பிரியமான இயேசுவை நோக்கிப் பாருங்கள், அவருடைய நிபந்தனையற்ற அன்பை அனுபவியுங்கள் !

02-06-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

பிதாவிற்கு பிரியமான இயேசுவை நோக்கிப் பாருங்கள், அவருடைய நிபந்தனையற்ற அன்பை அனுபவியுங்கள் !

.இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது,(II பேதுரு 1:17) NKJV.

கடவுள் தம்முடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசுவை எவ்வளவு அன்பாக நேசித்தார் என்பதை நாம் புரிந்துகொண்டால், அவர் நம்மீது வைத்துள்ள அன்பை நாம் உண்மையிலேயே போற்றுவோம்!

கடவுள் நம்மை மிகவும் நேசித்ததால் அவர் தம்முடைய ஒரே பேறான குமாரனை நமக்கு பதிலாக நம் இடத்தில் இறக்கும்படி கொடுத்தார். இயேசு தம்முடைய பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற தம்மையே ஒப்புக்கொடுத்து, நம் அனைவருக்கும் இரட்சிப்பைக் கொண்டுவர அவருக்கு பரிபூரணமாக கீழ்ப்படிந்தார். எனவே,கடவுள் இயேசுவைக் குறித்து மிகவும் மகிந்து அவரில் பிரியமடைந்தார் !

இயேசு தம்மை நமக்காகக் கொடுத்த விதம் பிதாவை மிகவும் பிரியப்படுத்தியது போல, நாமும் இயேசுவை முழு மனதுடன் நம் வாழ்வில் ஏற்றுக்கொள்வது பிதாவுக்கு மிகவும் பிரியம் அளிக்கிறது.

இயேசுவின் பலியை நமக்காக உணர்ந்து பெற்றுக் கொள்ளும்போது, ​​நாமும் பிதாவிடமிருந்து அதே சாட்சியைப் பெறுவோம், “இவர் என் அன்பு மகன்/ மகள், இவரில் நான் மிகவும் பிரியமாயிருக்கிறேன்” .

என் அன்பானவர்களே , இயேசுவை உங்கள் வாழ்வில் பெற்று தந்தையின் நிபந்தனையற்ற அன்பை அனுபவியுங்கள். ஆமென் 🙏

பிதாவிற்கு பிரியமான இயேசுவை நோக்கிப் பாருங்கள், அவருடைய நிபந்தனையற்ற அன்பை அனுபவியுங்கள் !

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,பெந்தெகொஸ்தே அனுபவத்தை இப்பொழுது அனுபவியுங்கள் !

30-05-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,பெந்தெகொஸ்தே அனுபவத்தை இப்பொழுது அனுபவியுங்கள் !

14. அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாய்: யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.
16. தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது . (அப்போஸ்தலர் 2:14, 16) NKJV.

தேவனுடைய வல்லமையின் மிகவும் அசாதாரணமான நிரூபணம் அப்போஸ்தலர் 2-ல் திடீரென்று நிகழ்ந்தது கர்த்தராகிய இயேசுவை நம்பியதால், தங்கள் சொந்த மக்களால் இழிவாகப் பார்க்கப்பட்ட, கேலி செய்யப்பட்ட, துன்புறுத்தப்பட்ட விசுவாசிகள் மீது பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்தார் .யோவேல் தீர்க்கதரிசியால் கூறப்பட்ட தீர்க்க தரிசன நிறைவு இதுவே என்று பேதுரு தைரியமாக எழுந்து நின்று விளக்குகிறார் .

எருசலேமில் வசித்த பலரில் 120 பேர் மட்டுமே மேலறையில் கூடியிருந்தனர் .ஆனால் கடவுள் அவர்கள் பக்கம் இருந்தார். ஆண்டவராகிய இயேசு எப்போதும் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், இகழப்பட்டோர் மற்றும் கொடிய நோயால் மரணப்படுக்கையில் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் பக்கம்தான் எப்போதும் இருக்கிறார் .

கடவுளின் வியத்தகு செயல் அனைத்து மக்களையும் திகைக்க வைத்தது, அதனால் பேதுரு எழுந்து நின்று “அதுதான் இது” என்று பிரகடனப்படுத்தினார், கடந்த காலங்களில் கடவுள் வாக்குறுதியளித்த, தீர்க்கதரிசனமாக கூறிய அனைத்தும் இப்போது நிறைவேறியதாக அவர் அறிவித்தார்! புதிய சகாப்தம் தொடங்கியது ,இன்றும் இப்போதும் கடவுள் ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றுகிறார் , ஏனென்றால் இந்த ஆசீர்வாதத்தை முறையாக நமக்காக தன் உயிரை விலையாக கொடுத்த இயேசுவின் நிமித்தம் பரிசுத்த ஆவியானவர் நிஜப்படுத்த வந்திருக்கிறார். அல்லேலூயா!

ஆம் என் அன்பானவர்களே, இன்று கடவுள் வாக்களித்த அனைத்தும் உங்கள் வாழ்க்கையில் நிறைவேறும் நாள்! இது தான் உண்மையிலேயே பெந்தெகொஸ்தே கொண்டாட்டம் !!ஆமென் 🙏

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,பெந்தெகொஸ்தே அனுபவத்தை இப்பொழுது கொண்டாடுங்கள் !

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய பரிசுத்த ஆவியின் முழுமையை அனுபவியுங்கள் !

29-05-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய பரிசுத்த ஆவியின் முழுமையை அனுபவியுங்கள் !

4. அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.
8. பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.(அப்போஸ்தலர் 1:4, 8) NKJV

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து சீஷர்களுக்குள் தம் ஆவியை ஊதினார்.அன்று, கர்த்தராகிய இயேசுவின் விசுவாசிகள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள்.
அவர் பரலோகத்திற்கு எடுத்துச் செல்லப்படும் நேரம் வந்த போது, ​​அவர்களை “என்றென்றுமுள்ள ஆசீர்வதித்தினால் “ஆசீர்வதித்தார், அவர்களை பிதாவின் வாக்குறுதியான பரிசுத்த ஆவியானவருக்கு காத்திருக்கும்படி கட்டளையிட்டார் –
சபை உருவான ஆரம்பகாலத்தில் நடந்த இந்த நிகழ்வு பிற்காலத்தில் ,விசுவாசிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இவை இரண்டும் ஒரே அனுபவம் என்று சிலர் நினைத்தார்கள்.

என் அன்பானவர்களே , அந்த இரண்டும் ஒன்றல்ல. இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் என்றும், கடவுள் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்றும் நாம் நம்பும்போது, ​​பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வருகிறார் . இவரே நம்மில் உள்ள கிறிஸ்து. நாம் புதிய சிருஷ்டியாக மாறுகிறோம்! இந்த பரிசுத்த ஆவியானவர் விசுவாசிக்குள் என்றென்றும் வசிப்பவர்.
இருப்பினும்,பிதாவின் வாக்குத்தத்தமாக ,விசுவாசிகள் மீது அருளப்பட்ட பரிசுத்த ஆவியானவர் ஒரு வித்தியாசமான அனுபவம் . விசுவாசிகள் மீது வந்த பரிசுத்த ஆவியானவர் இப்பொது அவர்கள் வாழ்க்கைக்கு தலைவராக இருக்கிறார் .

தண்ணீரைக் குடிப்பதும், தண்ணீரில் முற்றிலும் மூழ்குவதும் வேறு ,வேறான காரியம் . பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வருவது நாம் தண்ணீரைக் குடிக்கின்ற அனுபவம் .நம்மீது உள்ள பரிசுத்த ஆவியானவர் நாம் தண்ணீரில் மூழ்கும், நம் வாழ்வின் தலைவராக செயல்படும் அனுபவமாக இருக்கிறர் .  பரிசுத்த ஆவியானவர் நம்மிலும்,நம்மீதும் இருக்கின்ற இவை இரண்டையும் இயேசுவின் நாமத்தில் இன்றே அனுபவிப்போம்- ! ஆமென் 🙏

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய பரிசுத்த ஆவியின் முழுமையை அனுபவியுங்கள் !

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், வாழ்வு தரும் வார்த்தையை அனுபவியுங்கள் !

26-05-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், வாழ்வு தரும் வார்த்தையை அனுபவியுங்கள் !

39. வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.
40. அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை.(யோவான் 5:39-40) NKJV.

இயேசுவோடு ஐக்கியம் கொள்வது எப்படி?
இயேசுவை வெளிப்படுத்தும் வேதாகமத்தின் (பைபிள்) மூலம் நாம் ஐக்கியம் கொள்வோம் .

வேதாகமத்தை வாசிக்கும் மற்றும் தேடும் அனைவருக்கும் நித்திய ஜீவன் கிடைப்பதில்லை, மாறாக நீங்கள் இயேசுவை அறியும் நோக்கத்துடன் வேதவாக்கியங்களைப் படிக்கவோ மற்றும் தேடவோ தொடங்கும் போது நீங்கள் நித்திய ஜீவனை அனுபவிப்பீர்கள்.

பரிசுத்த ஆவியானவர் வேதத்தில் இயேசுவை வெளிப்படுத்துகிறார்.  நீங்கள் வேதத்தில் இயேசுவை அறிய விரும்புகிறீர்கள் என்று பரிசுத்த ஆவியானவரிடம் கேட்டால்,அவர் நித்தியமானவரை வெளிப்படுத்துவார்! அல்லேலூயா!!
இது ஒரு அற்புதமான அனுபவம்- நீங்கள் அவரை அனுபவிப்பீர்கள்.நீங்கள் எல்லாவிதமான கவலைகள், மற்றும் அச்சங்களிலிருந்து விடுபடுவீர்கள். அவர் உங்களுக்காக அக்கறை காட்டுகிறார் என்பதையும், உங்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டார் என்பதையும் நீங்கள் உண்மையிலேயே அனுபவிப்பீர்கள். இயேசு ஒருபோதும் கைவிட மாட்டார்!

அவர் தேவனுடைய வார்த்தை, ஜீவனுள்ள வார்த்தை, நித்திய வார்த்தை, அழியாத வார்த்தை. அவருடைய வார்த்தையே உங்களுக்கு புதிய பிறப்பைக் கொடுத்தது (அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே).I பேதுரு 1:23).எனவே, நீங்கள் இயேசுவைப் பெறும்போது, ​​நீங்கள் மீண்டும் பிறக்கிறீர்கள், நீங்கள் ஒரு புதிய சிருஷ்டி , நீங்கள் அழியாதவர், நீங்கள் நித்தியமானவர் போலவே நித்தியமானவராய் மாறுகிறீர்கள் ! ஆமென் 🙏

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், வாழ்வு தரும் வார்த்தையை அனுபவியுங்கள் !

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,நித்தியத்தை இப்போது அனுபவியுங்கள் !

25-05-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,நித்தியத்தை இப்போது அனுபவியுங்கள் !

தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். I யோவான் 5:11 NKJV
தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.I கொரிந்தியர் 1:9 NKJV

நித்திய ஜீவன் அளவுகோலாக வரையறுக்கப்படவில்லை. இது முடிவற்ற வாழ்க்கை மட்டுமல்ல. இது தரமான அனுபவமும் கொண்டது. நித்திய ஜீவன் என்பது நித்தியமானவருடனான உறவு.
நம் ஒவ்வொருவருக்கும் கடவுளின் அழைப்பு, அவருடைய குமாரனாகிய நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன் நல் உறவையும் மற்றும் ஐக்கியத்தையும் கொள்ள வேண்டும் என்பதாகும். ஏனென்றால், இயேசு நித்தியமானவர் !

அவர் அனைவருடனும் இருக்கிறார் ஆனால் அவரை ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவருக்குள்ளும் அவர் வாசம் செய்கிறார். இயேசு கிறிஸ்துவை உங்கள் இருதயத்தில் வைத்திருப்பது நித்திய ஜீவன். இதன் மூலம் நித்திய ஜீவன் நம் வாழ்வில் ஆரம்பித்து விட்டது என்று அர்த்தமல்ல மாறாக நாம் நித்திய ஜீவனைஅனுபவிக்க ஆரம்பித்துவிட்டோம் என்று அர்த்தம்.

புதிய சிருஷ்டி – எப்பொழுதும் இயேசுவோடு தொடர்ந்து ஐக்கியம் கொள்வது என்று அர்த்தம் .ஏனென்றால்,அவருடைய உயிர்த்தெழுதலின் சுவாசத்தால் நீங்கள் ஒரு புதிய சிருஷ்டியாக இருக்கிறீர்கள்.
அவரைப் போலவே நீங்களும் இப்போது இந்த வாழ்வில் நித்தியமாக இருக்கிறீர்கள் (1 யோவான் 4:17) ஆமென் 🙏

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,நித்தியத்தை இப்போது அனுபவியுங்கள் !

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவரை நெருக்கமாக அனுபவியுங்கள் !

24-05-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவரை நெருக்கமாக அனுபவியுங்கள் !

ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.(யோவான் 17:3 ) NKJV .
நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது . ( I யோவான் 1:3) NKJV.

அன்பான அப்போஸ்தலரான யோவான், கடவுளையும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவது ‘நித்திய ஜீவன்’ என வரையறுக்கிறார் . * *இந்த அறிவு அவரோடு ஒருங்கிணையவும் / நல் நட்ப்பையும் விளைவிக்கிறது , இதை வேறுவிதமாகக் கூறினால், கடவுளை நெருக்கமாக அறிந்துகொள்ள உதவுகிறது.

பிராண நண்பர் இயேசு எனக்கு இருக்கிறார் !” என்று ஒரு அழகான பாடல் உள்ளது, அவரை ஒரு நண்பராக வைத்திருப்பதன் மூலம் நாம் எப்படி தேவையற்ற வலிகளைத் தவிர்க்கலாம், அமைதியுடன் நடக்கலாம், சோதனைகளை வெல்லலாம் என்று அந்த பாடல் சொல்கிறது. _இயேசுவைப் போல் உண்மையுள்ள ஒரு நண்பனை உலகம் முழுவதும் தேடினாலும் அப்படி ஒருவரை நாம் காண முடியாது என்று பாடலாசிரியர் தனது இதயப்பூர்வமான அனுபவத்தைக் கூறுகிறார்.

இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்த, இயேசுவுக்கு மிக நெருக்கமான அப்போஸ்தலன் யோவான்- அவர் இயேசுவைக் காட்டிக் கொடுத்தவரை அறிந்தவர், இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது சிலுவையின் அடிவாரத்தில் நின்ற ஒரே அப்போஸ்தலன், பைபிளின் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்தின விசேஷத்தை எழுதிய அப்போஸ்தலன். இன்று ,அவர் அப்படியான உறவையும் ,நட்ப்பையும் நாமும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடு கொண்டிருக்க நம்மை அழைக்கிறார்.

என் அன்பானவர்களே இயேசுவுடன் பேசத் தொடங்குங்கள், நீங்கள் மெதுவாக ஆனால் நிச்சயமாக அவருடன் ஒரு ஆழமான நெருக்கத்தை வளர்த்துக் கொள்வீர்கள். யோவான் மற்றும் பாடலாசிரியர் இயேசுவை சிறந்த நண்பராகக் கொண்ட அனுபவம் இன்று உங்களுக்கும் இருக்க விசுவாசிக்கிறேன் மற்றும் வேண்டிக்கொள்கிறேன் ! ஆமென் 🙏

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவரை நெருக்கமாக அனுபவியுங்கள் !

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவருடைய நித்திய வாழ்க்கையை அனுபவியுங்கள் !

23-05-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவருடைய நித்திய வாழ்க்கையை அனுபவியுங்கள் !

1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். யோவான் 1:1-2 NKJV

ஆதாம் கடவுளிடமிருந்து பெற்றது ‘ஜீவ சுவாசம்’ அன்றி ‘நித்திய ஜீவன்’ அல்ல. அவர் நித்திய ஜீவனைப் பெற்றிருந்தால், அவர் இறந்திருக்க மாட்டார்.
ஆதாமும்,ஏவாளும், அவருக்குக் கீழ்ப்படிவார்களா என்று கடவுள் பார்க்க விரும்பினார்?
ஆனால் ! அவர்களோ கீழ்ப்படியாமல் பாவம் செய்தனர் . இதன் நிகர விளைவு என்னவென்றால், பாவமும் மரணமும் மனிதர்களைக் கட்டுப்படுத்தியது மற்றும் மனிதன் என்றென்றும் வாழ வேண்டும் என்ற கடவுளின் முதன்மையான நோக்கம் முறியடிக்கப்பட்டது.

சுவாரஸ்யமாக, ஏதேன் தோட்டத்தின் நடுவில் இரண்டு மரங்கள் வைக்கப்பட்டன, இரண்டும் அறிவின் மரங்கள் – நன்மை தீமை பற்றிய அறிவு மற்றும் கடவுளின் அறிவு (ஜீவ விருட்சம் ). ஆதாமும் ஏவாளும் ஜீவ விருட்சமாகிய கடவுளைப் பற்றிய அறிவைத் தேர்ந்தெடுத்திருந்தால், அவர்கள் என்றென்றும் வாழ்ந்திருப்பார்கள்.  ஆனால், அவர்கள் நன்மை தீமை அறியும் மரத்தைத் தேர்ந்தெடுத்து மரணத்தை தங்கள் வாழ்வில் அனுமதித்தனர்.

மனிதனை இறுதிவரை விட்டுக்கொடுக்காத இறைவனுக்கே துதி. முதலாம் ஆதாம் இழந்ததை தம்முடைய குமாரனாகிய இயேசுவை விசுவாசிக்கிறவன் நித்திய ஜீவனைப் பெறுவான் என்று அவரை இரண்டாம் ஆதாமாக அனுப்பினார் . மனிதன் இழந்ததை விட அவன் பெற்றது மிக அதிகம். அல்லேலூயா! கடவுளுக்கே துதி ,கனம் மகிமை !! ஆமென் 🙏

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.