Category: Tamil

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவைப் பற்றிய ஞானத்தையும் நமது ஆஸ்தியையும் பெற்றுத்தருகிறது!

30-11-23

இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவைப் பற்றிய ஞானத்தையும் நமது ஆஸ்தியையும் பெற்றுத்தருகிறது!

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். யோவான் 14:6 ‭NKJV‬‬

என் பிரியமானவர்களே, இந்த மாத இறுதிக்கு வரும்வேளையில்,ஆண்டவராகிய இயேசுவை ஒரு நபராக கிருபையுடன் நமக்கு வெளிப்படுத்திய தேவனின் பரிசுத்த ஆவியானவருக்கு நான் நன்றி கூறுகிறேன்.
நாம் ஒரு நபரைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் அல்லது ஒரு நபரை தனிப்பட்ட முறையில் அறிந்து கொள்ளலாம்.
சமூக ஊடகங்கள் மூலம் ஒரு நாட்டின் அதிபதியை அறியலாம் ஆனால் அதே ஜனாதிபதியை தனிப்பட்ட முறையில் அறிவது என்பது வேறு,அது ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும் .

அதுபோலவே,மனித வாழ்வில் இயேசுவைப் பற்றிய அறிவைப் பெறுவதும்,பரிசுத்த ஆவியின் மூலம் இயேசுவை தனிப்பட்ட முறையில் அறிந்துகொள்வதும் இரண்டு உச்சகட்டங்கள்.பிந்தையது மனித எதிர்பார்ப்புகள் மற்றும் பகுத்தறிவுகளுக்கு அப்பாற்பட்ட முடிவுகளைத் தருகிறது.

பரிசுத்த ஆவியானவர் இயேசுவை வெளிப்படுத்தும் போது, ​​நம் வாழ்க்கை ஒருபோதும் அவ்வண்ணமாகவே இருக்காது.நமக்கு உள்ளே உள்ள தேவனுடைய ஆவியால் நாம் நித்தமும் மாற்றப்படுகிறோம் (2 கொரிந்தியர் 3:18).

ரிசுத்த ஆவியானவர் இயேசுவை வெளிப்படுத்தும் போது, ​​நாம் கடவுளை தனிப்பட்ட முறையில் தேவனாக மட்டுமல்ல, நம்முடைய சொந்த அப்பாவாக ,பிதாவாக , அப்பா பிதா என்று பல பரிமாணங்களில் அறிவோம், ஏனென்றால்,தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பியுள்ளார்.( கலாத்தியர் 4:6). அல்லேலூயா!

பிதாவைப் பற்றிய இந்த நெருக்கமான புரிதல்,நமக்கான அவருடைய ஆஸ்தியையும், நமக்கான அவரது எதிர்காலத்தையும்,நம்மீது அவர் வைத்திருக்கும் அன்பையும் பெற நமக்கு வாய்ப்பளிக்கிறது.

_“நாம் கடவுளின் பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதற்கு, பிதா நம்மேல் எவ்வளவு அன்பு கூர்ந்திருக்கிறார் என்று பாருங்கள்!_I John 3:1 NKJV

என் பிரியமானவர்களே, இந்த அனுபவங்கள் இயேசுவின் நாமத்தில் இன்று உங்கள் பங்காக மாற பிரார்த்திக்கிறேன்! ஆமென் 🙏
இந்த மாதம் என்னுடன் இணைந்ததற்கு நன்றி! வரவிருக்கும் மாதத்தில் தேவன் நமக்கு இன்னும் அற்புதமான ஆசீர்வாதங்களை வைத்திருக்கிறார்! தேவன் உங்களை ஆசிர்வதிப்பாராக!!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவைப் பற்றிய ஞானத்தையும் நமது ஆஸ்தியையும் பெற்றுத்தருகிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவின் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் உங்களை நோக்கி ஈர்க்கிறது!

29-11-23

இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவின் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் உங்களை நோக்கி ஈர்க்கிறது!

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். யோவான் 14:6 ‭NKJV‬‬

கர்த்தராகிய இயேசுவுக்குள் பிரியமானவர்களே,இந்த மாத இறுதிக்கு வரும் வேளையில், இந்த மாதத்திற்கான வாக்குறுதி வசனத்தை இன்று சிந்திப்போம்.

1)ஒவ்வொரு ஆசீர்வாதத்திற்கும், வேதத்தில் அதை சொந்தமாக்குவதற்கான வழியை தேவன் வரையறுத்துள்ளார்.
2) பழைய ஏற்பாட்டில் நாம் காண்கிறபடி, அவர் ஒருமுறை ஆசீர்வதித்தால், அதை அவரால் ஒருபோதும் மாற்ற முடியாது.ஆனால் மனிதன் தனது முட்டாள்தனத்தின் மூலம் ஆசீர்வாதத்தை இழக்கலாம் அல்லது தனது அறியாமையின் மூலம் அதை பிசாசு திருட அனுமதிக்கலாம்.
3) இறுதியாக, தேவன் எந்த மனிதனையும் ஆசீர்வதிக்கும்போது, ​​அதனோடு எந்த வேதனையையும் கூட்டார் .

இயேசு “நானே வழி” என்று சொன்னபோது, ​​எந்த ஆசீர்வாதத்திற்கும் அவரே வழி என்று அர்த்தம்.
அவரே சத்தியம் என்பது அந்த சத்தியம் நித்தியமானது மற்றும் நிரந்தரமானது, அதே போல் மனிதனுக்கு ஆசீர்வாதங்கள் (இரட்சிப்பு, பரிசுத்த ஆவியானவர்-கடவுளின் பிரசன்னம் போன்றவை ) நித்தியமானது மற்றும் நிரந்தரமானது, ஏனென்றால் கர்த்தராகிய இயேசு தாமே நியாயப்பிரமாணத்தின் தேவையை நமக்காக முற்றிலும் நிறைவேற்றி அதை சம்பாதித்தார் ,காரணம் ஒவ்வொரு ஆசீர்வாதமும் நிபந்தனைக்குட்பட்டது .
அவரே ஜீவன் என்பது அவருடைய வாழ்க்கை துக்கமில்லாதது மற்றும் விவரிக்க முடியாத மகிழ்ச்சி மற்றும் மகிமை நிறைந்தது, அவருடைய ஆசீர்வாதங்களும் அப்படியே மகிமை நிறைந்தது!

என் பிரியமானவர்களே, பழைய ஏற்பாட்டு விசுவாசிகள் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு கடினமாகப் பிரயாசப்பட்டார்கள், அவற்றைப் பெற்ற பிறகும், யோபு பயந்ததைப் போலவே அவர்கள் ஆசீர்வாதத்தை இழக்க நேரிடும் என்ற பயத்தில் வாழ்ந்தார்கள் (யோபு 3:25).
ஆனால் புதிய ஏற்பாட்டில் உள்ள விசுவாசி ஆசீர்வாதத்தைப் பெற முயற்சி செய்ய வேண்டியதில்லை அல்லது ஆசீர்வாதத்தை இழக்க நேரிடும் என்ற பயத்தில் வாழ வேண்டியதும் இல்லை. நாம் செய்ய வேண்டியதெல்லாம், இயேசுவைப் பார்த்து,நம் வாழ்வில் இயேசுவின் மீது கவனம் செலுத்துவதுதான் அப்படி செய்தால் எல்லா ஆசீர்வாதங்களும் உங்களைத் தேடி வரும், அவை எப்போதும் உங்களுடன் இருக்கும். ஏனென்றால், நீங்கள் பரலோகப் பிதாவின் பிள்ளைகள் என்ற தகுதி பெற்று இருக்குறீர்கள்.உங்களின் இந்தப் புதிய அடையாளம், பிதாவின் வாரிசான உங்களை நோக்கி ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் ஈர்க்கும் ஒரு காந்தமாகச் செயல்படுகிறது.இந்த ஆசீர்வாதங்களைப் பெற நீங்கள் உழைக்கத்தேவையில்லை, தகுதிபெறத்தேவையில்லை ஆம், அவை கிருபையும் நித்தியமுமானவை ! அல்லேலூயா! ஆமென் 🙏.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவின் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் உங்களை நோக்கி ஈர்க்கிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,அவருடைய ஆஸ்தியை பெறுவதற்கு உத்திரவாதம் அளிக்கிறது!

28-11-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,அவருடைய ஆஸ்தியை பெறுவதற்கு உத்திரவாதம் அளிக்கிறது!

16. நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்.
17. நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.ரோமர் 8:15-17 NKJV

பிள்ளைகளுக்கு மட்டுமே தந்தையிடமிருந்து ஆஸ்தி பெற தகுதி உள்ளது,அதுபோல பிதாவிடமிருந்து பிறந்த தேவபிள்ளைகளும் தங்கள் தந்தையாகிய கடவுளிடமிருந்து தங்கள் ஆஸ்தியைப் பெறுகிறார்கள்.
பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய இருதயத்தில் இருந்து ஆழமான விஷயங்களை எடுத்து,தேவனுடைய ஒவ்வொரு குழந்தைக்கும் அதை வெளிப்படுத்துகிறார்.

ஆம் என் பிரியமானவர்களே, இயேசு உங்களுக்காக மரித்தார் என்பதையும், தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்பதையும் நீங்கள் உங்கள் இருதயத்தில் விசுவாசித்து ஏற்றுக்கொள்ளும்போது, ​​நீங்கள் தேவனால் பிறக்கின்றீர்கள்.
பரிசுத்த ஆவியானவர் இயேசுவை தனிப்பட்ட முறையில் அனைவருக்கும் வெளிப்படுத்துகிறார். நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள். (எபேசியர் 1:13). அல்லேலூயா!

அதன்பிறகு,தேவன் பரிசுத்த ஆவியானவரை பரிசாக உங்களுக்குத் தருகிறார்,அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய ஆஸ்தியின் அச்சாரமாயிருக்கிறார்.(எபேசியர் 1:14).
இதன் பொருள், நமது பிதாவாகிய தேவன்,தம்முடைய ஆஸ்தி என்றென்றும் உங்களுடையது என்பதை உறுதிப்படுத்துவதற்காக,பரிசுத்த ஆவியின் மூலம் காப்பீடு செய்திருக்கிறார். அல்லேலூயா!

என் அன்பான நண்பர்களே,உங்கள் ஆஸ்தியை யாராலும் திருட முடியாது.அது என்றென்றும் பாதுகாக்கப்படுகிறது.தேவனுக்கு நன்றி சொல்லத் தொடங்குங்கள்.சூழ்நிலைகள் என்னவாக இருந்தாலும், கடந்த காலத்தில் நீங்கள் எதை இழந்திருந்தாலும்,உங்களுக்காக பிரத்தியேகமான உங்கள் ஆஸ்திக்கான உத்தரவாதமாக உங்கள் தந்தை பரிசுத்த ஆவியால் உங்களை முத்திரையிட்டார்.

நீங்களே தள்ளிவிட்டாலொழிய,உங்கள் ஆஸ்தி என்றென்றும் உங்களுடையது! ஆமென் 🙏.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,அவருடைய ஆஸ்தியை பெறுவதற்கு உத்திரவாதம் அளிக்கிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,அவருடைய ஆஸ்தியை நீங்கள் பெறச் செய்கிறது!

27-11-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,அவருடைய ஆஸ்தியை நீங்கள் பெறச் செய்கிறது!

15. அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்.
16. நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்.
17. நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.ரோமர் 8:15-17 NKJV

தேவன் அனைவருக்கும் கடவுள் ஆனால் உங்களுக்கு அவர் தந்தையாகிய கடவுள்.
ஒவ்வொரு முறையும் நீங்கள் அவரை “அப்பா”,”பிதா”,”தகப்பனே”,”அப்பா பிதா” என்று அழைக்கும் போது அளவிலா ஆனந்தம் அடைகிறார்.அவர் உங்களிடமிருந்து இதைக் கேட்க விரும்புகிறார் மற்றும் ஏங்குகிறார்.

என் அன்பானவர்களே,இது எவ்வளவு உண்மை என்று நீங்கள் கேட்கலாம்? இந்த சத்தியத்தையே உங்கள் ஆவியில் உங்களுக்குச் சாட்சிகொடுக்க அவருடைய குமாரனின் ஆவியை அனுப்பினார்.அவர் தனது குமாரனாகிய இயேசுவை அனுப்பியதன் முதன்மையான நோக்கமே, உங்களை அவருடைய சொந்தப் பிள்ளையாக்குவதாகும்.அதனால்தான் அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எழுதினார்,”நாம் தேவனின் மகன்கள் என்று அழைக்கப்படுவது எவ்வளவு பெரிதான அன்பு!

அவர் உங்களைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்வதில் ஏதேனும் அவரைத் தடுக்க முடியுமா?
நம்முடைய பாவங்கள் அவரைத் தடுக்க முடியுமா? வாய்ப்பு இல்லை! ஏனென்றால் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எல்லா பாவங்களிலிருந்தும் நம்மை சுத்தப்படுத்துகிறது* .
நோய்கள் தடுக்க முடியுமா? – இல்லவே இல்லை! நம்முடைய எல்லா நோய்களையும்,அவர் தானே சுமந்தார். நமது பாவத்திற்கான தண்டனை இயேசுவின் மீது விழுந்தது, அவருடைய தழும்புகளால் நாம் குணமடைந்தோம்.
*இறப்பு தடுக்க முடியுமா? – வழி இல்லை! மரணமே உன் கூர் எங்கே?இயேசு கிறிஸ்து மரணத்தை முற்றிலுமாய் ஒழித்தார், ஏனென்றால் அவர் அனைவருக்காகவும் மரணத்தை ஏற்றுக்கொண்டார். ஆகையால் ,
அவருடைய மிகவும் பிரியமான குழந்தையாக உங்களை நேசிப்பதை எதுவும் தடுக்க முடியாது. அவர் உங்கள் அப்பா பிதாவாக இருக்கிறார்*!

நாம் நமது பிதாவாகிய தேவனின் பிள்ளைகள் மற்றும் பிறப்பால் புத்திர சுவிகாரத்தின் ஆவியைப்பெற்று நாம் தேவனின் வாரிசாகவும் மற்றும் இயேசுவோடு கூட்டு வாரிசுகளாகவும் இருக்கிறோம்.அல்லேலூயா ! ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,அவருடைய ஆஸ்தியை நீங்கள் பெறச் செய்கிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

im

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்களை இயற்கையிலிருந்து இயற்கைக்கு அப்பாற்பட்டதாக மாற்றுகிறது!

24-11-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்களை இயற்கையிலிருந்து இயற்கைக்கு அப்பாற்பட்டதாக மாற்றுகிறது!

48.அப்பொழுது காற்று அவர்களுக்கு எதிராயிருந்தபடியினால்,அவர்கள் தண்டு வலிக்கிறதில் வருத்தப்படுகிறதை அவர் கண்டு, இராத்திரியில் நாலாம் ஜாமத்தில் கடலின்மேல் நடந்து, அவர்களிடத்தில் வந்து, அவர்களைக் கடந்து போகிறவர்போல் காணப்பட்டார்..மார்க் 6:48 NKJV.

சீஷர்களை முன்பாக போக சொல்லிவிட்டு கர்த்தராகிய இயேசு மலை உச்சிக்கு சென்று ஜெபித்தார்.9 மணி நேரம் அயராது படகோட்டிப் பயணித்த பின்னரும் சீஷர்கள் வெறும் 6-8 மைல் அகலமுள்ள கடலின் நடுப்பகுதியை தான் அடைந்தனர்,அவர்கள் எதிர் காற்றின் சீற்றத்தால் எதிர்த்துப் போராடி வந்ததை இயேசு கண்டார்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்,இயேசு அவர்களை அந்த தூரத்திலிருந்து பார்க்க முடிந்தது. மற்றொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்,அவர் மலையிலிருந்து நீர் விளிம்பிற்கு வந்து, கொந்தளிப்பான கடலில் சுமார் 3-4 மைல்கள் புயலின் மத்தியில் வேகமாகவும் ,இலகுவாகவும் நடந்து, சீஷர்களுக்கு பின்னால் இருந்து முன்பாக கடந்து சென்றார்.இது எல்லாம் சிறிது நேரத்தில் நடந்தது. இது மனிதனால் சாத்தியமற்றது!

என் அன்பானவர்களே,இது ஆவி மண்டலத்தில்-புயலின் மத்தியில்,கலங்கிய நீருக்கு மேலே,புவியீர்ப்பு விசைக்கு அப்பால்,ரதங்களை விட வேகமாக நகர்கிறது என்பதற்கு இது ஒரு சரியான நிரூபணம்,எலியா தீர்க்கதரிசி கால் நடையாக ஆகாப் ராஜாவின் ரதத்தையும்,குதிரைகளையும் விட விரைந்து யெஸ்ரயேலின் வாசலில் போய் நின்றான் – கர்த்தருடைய ஆவி அவன்மேல் வந்ததால் இது சாத்தியமானது. (குறிப்பு 1ராஜா 18:45) NKJV).

யோனா தீர்க்கதரிசியும் நினிவேக்கு செல்லும் 3 நாள் பயணத்தை ஒரு நாளுக்குள் கடந்து சென்றார். (குறிப்பு யோனா 3:3,4 NKJV).

இதில் முக்கிய விஷயம் என்னவென்றால்,இயேசு செயல்படுவதற்கு முன்பு பிதாவுக்கு நன்றி செலுத்தி ஜெபித்து தொடங்கினார்.மறுபுறம்,சீஷர்கள் நேரடியாக வேலை செய்யத் தொடங்கினார்கள்.
இயேசு முழு மனிதராக இருந்தபோதிலும்,பிதாவுடன் வழக்கமான உரையாடல் இருந்ததால்,இயற்கை விதிகளை மீறும் செயல்களை நிரூபிக்கும் வகையில் அவரின் ஆவிக்குரிய வாழ்க்கை உயர்ந்திருந்தது. ஆனால், சீஷர்கள் தங்கள் சொந்த பலத்தால் தடையை கடக்க முயன்றனர் ஆனால்,பலன் பெறமுடியவில்லை- இது பிரார்த்தனை இல்லாமல் ஒரு காரியத்தை செயல்படுவதன் விளைவு!

பிரார்த்தனை நம்மை ஆவிக்குரிய நிலைக்கு உயர்த்துகிறது, அதனால் செயல்திறன் சிரமமில்லாமல் இருக்கும்.

இன்று காலை,இந்தப் புதிய பரிமாணத்தில் நடக்க தேவனைத் தேடுவோம்,அவருடைய விருப்பத்தை (தேவனின் விருப்பமான விதியை) பரலோகதில் செய்யப்படுவது போல் பூமியில் நிறைவேற்றுவதற்காக, எல்லாப் பகுதிகளிலும் அவருடன் இணைவதற்கு நம் வாழ்க்கையை மறுபரிசீலனை செய்வோம்.நமது (KAIROS MOMENTS) தேவதருணங்களில் ,நமது எதிர்காலத்தை தாமதப்படுத்த முயற்சிக்கும் புயல்களிலிருந்து உடனடியாக இயேசுவின் நாமத்தில் விடுபடுவோம்!! ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்களை இயற்கையிலிருந்து இயற்கைக்கு அப்பாற்பட்டதாக மாற்றுகிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் வாழ்க்கையை மாற்றும் கடவுளின் தருணத்தை பெற்றுத்தருகிறது!

23-11-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் வாழ்க்கையை மாற்றும் கடவுளின் தருணத்தை பெற்றுத்தருகிறது!

48. அப்பொழுது காற்று அவர்களுக்கு எதிராயிருந்தபடியினால், அவர்கள் தண்டு வலிக்கிறதில் வருத்தப்படுகிறதை அவர் கண்டு, இராத்திரியில் நாலாம் ஜாமத்தில் கடலின்மேல் நடந்து, அவர்களிடத்தில் வந்து, அவர்களைக் கடந்து போகிறவர்போல் காணப்பட்டார்.
49. அவர் கடலின்மேல் நடக்கிறதை அவர்கள் கண்டு, ஆவேசம் என்று எண்ணி, சத்தமிட்டு அலறினார்கள்.மார்க் 6:48-49 NKJV.

அன்பானவர்களே இன்று,சீஷர்கள் தேவனின் வார்த்தையில் புரிந்துகொள்ளத் தவறிய இரண்டாவது பகுதியை பார்ப்போம்.
2). அவர்களின் போராட்டத்தின் போது புயலின் மத்தியில் இயேசு கடலின் மீது நடந்து வந்ததை அவர்கள் கண்டு அவரை பேய் என்று எண்ணி அவரால் உண்டாகும் தெய்வீக உதவியை அவர்கள் அங்கீகரிக்கத் தவறிவிட்டனர்.எனது வாழ்விலும் இன்று தேவன் அளிக்கும் உதவி அல்லது – தெய்விக சந்திப்பு ( KAIROS MOMENT) மற்றும் அதிசயத்தை எப்படி அனுபவிப்பது ?இவை எல்லாவற்றிற்கும் ஒரே பதில்,போராட்டத்தின் மத்தியில் விடுபட இயேசுவை மட்டும் பார்க்க வேண்டும்.

இன்றைய தியானப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளபடி கர்த்தரும்,சீஷர்களும் ஒருவரையொருவர் பார்த்தனர். ஆனால், அவர்களின் எதிர்வினை வித்தியாசமாக இருந்தது.கர்த்தர் அவர்கள் சிரமப்படுவதைக் கண்டு இரக்கப்பட்டு அவர்களுக்கு உதவ கை நீட்டினார்,சீஷர்களும் கர்த்தரைக் கண்டனர்,ஆனால் ஒரு பேயை கண்டது போல் பயந்து நடுங்கினர்!இதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது!!

புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. saw என்ற ஆங்கில வார்த்தைக்கு கிரேக்க மொழியில் மூன்று வெவ்வேறு வார்த்தைகள் உள்ளன.

23ஆம் தேதி -பிப்ரவரி 2023 அன்று நான் பகிர்ந்த (GFYT -யிலிருந்து மேற்கோள் காட்ட விரும்புகிறேன் :
கிறிஸ்துவுக்குள் அன்பான அன்பர்களே,உலகம் பெரும்பாலும் ஒரு காரியத்தை இயற்கையான கண்களால் காண்பது கிரேக்கத்தில் -Blepo எனப்படும். ஒரு காரியத்தை பார்த்து அதை மனதில் ஆராய்ச்சி செய்வது கிரேக்கத்தில் – Theoreo எனப்படும். ஆனால், இவை இரண்டும் அல்லாமல் நாம் ஆவியின் கண்களால் காண்பது கிரேக்கத்தில் -Horao எனப்படும்.

இப்போது இயேசு மற்றும் சீஷர்கள் இருவருக்கும் (Horao) பார்வை இருந்தது ஆனால் எதிர்வினைகள் வேறுபட்டன. (*ஹோராவ் என்பது ஆன்மீக தரிசனமாகும், இதன் மூலம் ஒருவர் ஆவிகளின் மண்டலத்தில் செயல்பட முடியும்.)
நான் இங்கே வலியுறுத்த விரும்பும் விஷயம் என்னவென்றால்,தேவனுடைய வார்த்தையின் அறிவின் வெளிச்சத்தில் நம் மனம் புதுப்பிக்கப்படாவிட்டால், ஆன்மீகக் கண்களால் நாம் சரியாகப் பார்த்தாலும் (ஹோரோ) பார்வையை நாம் தவறாகப் புரிந்து கொள்ளலாம்.

சீஷர்கள் அதைச் சரியாகப் பார்த்தார்கள்,ஆனால் மனம் புதுப்பிக்கப்படாததால் அதைத் தவறாகக் கருதினர் (தங்கள் பகுப்பாய்வுக் கோட்பாட்டைப் பயன்படுத்தினர்). பல விசுவாசிகள் இந்த வகைக்குள் வருவார்கள் மற்றும் சில சமயங்களில் துரதிர்ஷ்டவசமாக தங்கள் தேவதருணத்தை (KAIROS – GOD MOMENT ஐ ) இழக்கிறார்கள்.சரியான நேரம் வரும்போது, அவர்கள் தங்கள் மனிதப் பகுத்தறிவைப் பயன்படுத்துகிறார்கள்.ஆகையால் மனம் மாறுதல் இல்லாமல் தேவதருணத்தை தவற விடுகிறார்கள்.

சீஷர்கள் மகிழ்ச்சியுடன் இயேசுவைத் தங்கள் படகில் ஏற்றியபோது,அவர்கள் போராட்டம் நின்றது,அவர்கள் விரும்பிய புகலிடத்தை உடனடியாக அடைந்தனர் (மாற்கு 6:51 மற்றும் யோவான் 6:21). இன்று இயேசுவின் நாமத்தில் இது உங்கள் பங்காக இருக்கட்டும்! ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் வாழ்க்கையை மாற்றும் கடவுளின் தருணத்தை பெற்றுத்தருகிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் வாழ்வின் போராட்டங்களை ஓயச்செய்கிறது!

22-11-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் வாழ்வின் போராட்டங்களை ஓயச்செய்கிறது!

45. அவர் ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, அக்கரையில் பெத்சாயிதாவுக்கு எதிராக, தமக்கு முன்னே போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.

48. அப்பொழுது காற்று அவர்களுக்கு எதிராயிருந்தபடியினால், அவர்கள் தண்டு வலிக்கிறதில் வருத்தப்படுகிறதை அவர் கண்டு, இராத்திரியில் நாலாம் ஜாமத்தில் கடலின்மேல் நடந்து, அவர்களிடத்தில் வந்து, அவர்களைக் கடந்து போகிறவர்போல் காணப்பட்டார்.
49. அவர் கடலின்மேல் நடக்கிறதை அவர்கள் கண்டு, ஆவேசம் என்று எண்ணி, சத்தமிட்டு அலறினார்கள்.
மார்க் 6:45, 48-49 NKJV.

இந்தச் சந்தர்ப்பத்தில் சீஷர்களுக்குத் தந்தை அளித்த வழிகாட்டுதல்,இன்றும் நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் அல்லது கடந்து செல்லும் நமது தற்போதைய போராட்டங்களுக்குத் தீர்வுகளைத் தருகிறது.

சீஷர்கள் தேவனின் வார்த்தையில் புரிந்துகொள்ளத் தவறிய இரண்டு பகுதிகள் உள்ளன.

1.தீவிரப் போராட்டத்தை ஏற்படுத்திய எதிர்க் காற்றின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொள்ளத் தவறிவிட்டனர்.(இன்றும் என்னுடைய தற்போதைய போராட்டத்தில் தேவன் என்ன சொல்கிறார்?)

2. அவர்களின் போராட்டத்தின் போது புயலின் மத்தியில் இயேசு கடலின் மீது நடந்து வந்ததை அவர்கள் கண்டு அவரை பேய் என்று எண்ணி அவர் கொண்டு வந்த தெய்வீக உதவியை அவர்கள் அங்கீகரிக்கத் தவறிவிட்டனர்.எனது வாழ்விலும் இன்று தேவன் அளிக்கும் உதவி அல்லது – தெய்விக சந்திப்பு ( KAIROS MOMENT) மற்றும் அதிசயத்தை எப்படி அனுபவிப்பது ?இவை எல்லாவற்றிற்கும் ஒரே பதில்,போராட்டத்தின் மத்தியில் விடுபட இயேசுவை மட்டும் பார்க்க வேண்டும்.

என் அன்பு நண்பர்களே,இன்றைக்கு நான் உங்களுக்கு முதலாவது பகுதியை விளக்க உதவுகிறேன், இரண்டாவது பகுதியை கர்த்தருக்கு சித்தமானால் நாளை விளக்குகிறேன்.
நீங்கள் போராட்டங்களைச் சந்திக்கும் போதெல்லாம்,உலகதின் ஞானமும் உடல் வலிமையும் உங்களைத் தோல்வியடையச் செய்யும்.மாறாக,போராட்டத்தில் இயேசுவைப் பற்றிய புதிய வெளிப்பாடு உங்களை தப்புவித்து,அதிசயமாக கரை சேர்க்கும்.

இயேசுவிடம் சரணடைந்து அவரது உதவியை நாட வேண்டிய நேரம் இது.போராட்டத்தில் மற்றவர்களை குறை கூறுவதை நிறுத்தி நமக்கு விடுதலை அளிக்கும் வழியை ஆராய்ந்து கண்டுபிடிப்பது தான் புத்திசாலித்தனமான காரியமாகும்.

நீங்கள் எதை இழந்தாலும் பரவாயில்லை ஆனால் உங்கள் நேர்மையை இழக்காதீர்கள்.உனக்கு நீ நேர்மையாக இருப்பதே விடுதலையின்ஆரம்ப புள்ளி.ஊதாரி மகனுக்கு நடந்தது போல புத்தி தெளிவது தான் விடுதலையை கொண்டுவரும் தீர்வாக விளங்கும்.

சுய பரிசோதனை மிகவும் சங்கடமானது, ஆனால் இது உங்கள் விடுதலைக்கான வசந்தகாலத்தின் துளிர் விடுவது போலாகும்.
மனித பலத்தின் முடிவு தெய்வீக கிருபையின் ஆரம்பம்.

நினைவில் கொள்ளுங்கள்,நான் என் பிரச்சனைக்கான பொறுப்பை ஏற்கும்போது அதிசயம் நடக்கிறது. ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் வாழ்வின் போராட்டங்களை ஓயச்செய்கிறது.!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்களை அக்கரைக்கு வழிநடத்துகிறது!

21-11-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்களை அக்கரைக்கு வழிநடத்துகிறது!

“உடனே இயேசு தம்முடைய சீஷர்களைப் படகில் ஏறி, தமக்கு முன்பாக அக்கரைக்குப் போகச் செய்தார்; ஆனால் படகு இப்போது நடுக்கடலில் இருந்தது, அலைகளால் அலைக்கழிக்கப்பட்டது, ஏனென்றால் காற்று எதிர்மாறாக இருந்தது. மத்தேயு 14:22, 24 NKJV

நேற்றைய தியானத்திலிருந்து நாம் பார்த்தது,அவர் நமக்காக ஏற்படுத்திய எதிர்காலத்தை நினைத்து பார்த்தால் அது மனித பார்வைக்கு அப்பாற்பட்டதாயிருக்கிறது.ஆகவே, அவர் விரும்பிய புகலிடத்தை நாம் அடைவதற்கு அவருடைய வழிகாட்டுதல் அல்லது வழிநடத்துதல் மிகவும் அவசியமானதாயிருக்கிறது,ஆனால் பெரும்பாலான நேரங்களில் அது தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.

மறுபுறம் செல்வது சீஷர்களின் விருப்பமாக இருக்கவில்லை, மேலும் தங்கள் அன்பான இரட்சகராகிய கர்த்தராகிய இயேசுவும் அவர்களுடன் வரவில்லை. இருப்பினும், தேவன் அவர்களை மறுகரைக்குச் செல்லும்படி வற்புறுத்தினார். உண்மையில்,சீஷர்களில் ஒருவராவது தங்களுக்கு முன்னால் இருக்கும் பிரச்சனையை முன்கூட்டியே அறிந்திருக்கக்கூடும் என்று நான் நினைக்கிறேன்,அவர்கள் எதிர்க் காற்றை எதிர்கொண்டபோது அது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த காரணத்திற்காக அவர்கள் தேவன் இல்லாமல் கடக்க தயங்கினார்கள்.

ஆனால், அவர்கள் ஆவிகளின் மண்டலத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று இயேசு விரும்பினார், ஏனென்றால் பூமியில் உள்ள மனித விவகாரங்களைக் கட்டுப்படுத்தும் அல்லது தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த உயர்ந்த பரிமாணத்தைப் பற்றிய புரிதல் இன்னும் சீஷர்களுக்கு இல்லை என்பதால் அதை அனுமதித்தார்..

என் அன்பானவர்களே,எந்தவொரு பயிற்சியும் அதன் போக்கில் எளிமையானதாகவோ அல்லது ஆறுதலளிப்பதாகவோ இருக்காது,ஏனென்றால் நாம் அனைவரும் நம்முடைய சுவாத்தியமான சூழ்நிலையில் இருக்க விரும்புகிறோம் மற்றும் புதிய அனுபவத்தில் ஈடுபட நாம் தயங்குகிறோம்.ஆனால் நாம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்,மேலும் ஒரு தந்தையாக, தம் பிள்ளைகள் முழுப் பயிற்சியளிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்.ஏனென்றால் நாம் தேவனால் முன்குறிக்கப்பட்ட சந்ததி மற்றும் இந்த வாழ்வில் ஆட்சி செய்ய விதிக்கப்பட்டவர்கள்! அல்லேலூயா!

வேதம் கூறுகிறது, அன்றியும்,அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது. .(ரோமர் 8:28).

வாழ்வில் எல்லாமே நல்லதாகத் தொடங்காமல் இருக்கலாம்,ஆனால் எல்லாமே ஒன்றாகச் சேர்ந்து நன்மையினால் முடியும். இது நிச்சயம்!

எனவே,எனது நண்பர்களே,நீங்கள் வாழ்க்கையில் புயலின் சீற்றத்தால் அவதிப்படுவதை உங்கள் கண்கள் கண்டதால் சோர்வடைய வேண்டாம்.மகிழ்ச்சியாக இருங்கள்! கர்த்தருடைய கண்கள் உங்கள் மேல் இருப்பதால் இதை எல்லாம் மேற்கொண்டு உங்களை இயேசுவின் நாமத்தில் ஆட்சி செய்ய வைப்பார்! ஆமென் 🙏.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்களை அக்கரைக்கு வழிநடத்துகிறது.

கிருபை நற்செய்தி தேவாலயம்.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவால் வடிவமைக்கப்பட்ட எதிர்காலத்திற்க்கு உங்களை வழிநடத்துகிறது!

20-11-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவால் வடிவமைக்கப்பட்ட எதிர்காலத்திற்க்கு உங்களை வழிநடத்துகிறது!

45. அவர் ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, அக்கரையில் பெத்சாயிதாவுக்கு எதிராக, தமக்கு முன்னே போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.
47. சாயங்காலமானபோது படவு நடுக்கடலிலிருந்தது; அவரோ கரையிலே தனிமையாயிருந்தார்.
48. அப்பொழுது காற்று அவர்களுக்கு எதிராயிருந்தபடியினால், அவர்கள் தண்டு வலிக்கிறதில் வருத்தப்படுகிறதை அவர் கண்டு, இராத்திரியில் நாலாம் ஜாமத்தில் கடலின்மேல் நடந்து, அவர்களிடத்தில் வந்து, அவர்களைக் கடந்து போகிறவர்போல் காணப்பட்டார். (மார்க் 6:45, 47-48) NKJV.

என் அன்பான நண்பர்களே,தந்தையின் இதயம் உங்கள் இதயத்தின் விருப்பங்களை செய்ய தயாராக இருக்கிறது.அவர் நாம் கேட்பதற்கும், நினைப்பதற்கும் அதிகமாக செய்ய வல்லவராக இருக்கிறார்.அவர்
நமக்காக ஏற்படுத்திய எதிர்காலத்தை நினைத்து பார்த்தால் அது மனித பார்வைக்கு அப்பாற்பட்டதாயிருக்கிறது.ஆகவே, அவர் விரும்பிய புகலிடத்தை நாம் அடைவதற்கு அவருடைய வழிகாட்டுதல் அல்லது வழிநடத்துதல் மிகவும் அவசியமானதாயிருக்கிறது,ஆனால் பெரும்பாலான நேரங்களில் அது தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.

இதைப் புரிந்து கொள்ளாததால் தம்முடைய சீஷர்களின் வாழ்வில் தேவன் அடிக்கடி இதை சுட்டிக்காட்டி வெளிப்படுத்தினார்.நமது தியானத்திற்கான இன்றைய வேதப் பகுதியில் அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு அழகாக விளக்கப்பட்டுள்ளது.

கர்த்தராகிய இயேசு தம்முடைய சீஷர்களை பெத்சாய்தா என்று அழைக்கப்படும் கரையின் மறுபக்கத்திற்குச் செல்லும்படி வற்புறுத்தினார்.அவர்களுடன் அவர் செல்லவில்லை.சீஷர்களுடைய இந்த எளிய பயணம் கடினமானதாகவும் அச்சுறுத்தலாகவும் காணப்பட்டது,அவர்கள் பயிற்சி பெற்ற மீனவர்களாக இருந்தாலும், காற்று எதிர்மாறாக இருந்ததால் அவர்களால் கடலில் படகோட்ட முடியவில்லை.அவர்கள் 9 மணி நேரத்திற்கும் மேலாக போராடி, பாதி தூரத்தை மட்டுமே கடந்தனர் (மொத்தம் 21 கிமீ தூரம்).

என் பிரியமானவர்களே, வாழ்க்கையில் நாம் சந்திக்கும் போராட்டங்கள் அல்லது நம் கனவுகளை அடைவதற்காக எடுக்கும் முயற்சிகள் நம்மை சோர்வடையச் செய்கிறது,சில சமயங்களில் நாம் அதை கைவிடுகிறோம்.இருப்பினும்,இந்த வாரம் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்காக பிதாவுக்கு விருப்பமானதும் ,அவர் நியமித்த புகலிடத்திற்கு இயேசுவின் நாமத்தில் உங்களை அழைத்துச் செல்லத் தொடங்குவார்! இயேசுவின் நாமத்தில் இந்த அனுபவத்தை பெறுவீர்கள்.ஆமென் 🙏.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,தேவனால் வடிவமைக்கப்பட்ட எதிர்காலத்திற்க்கு உங்களை வழிநடத்துகிறது.

கிருபை நற்செய்தி தேவாலயம்.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவிடம் நம்மை திரும்ப மீட்கச்செய்கிறது!

17-11-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவிடம் நம்மை திரும்ப மீட்கச்செய்கிறது!

22. அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.
23. கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம்.
24. என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள். லூக்கா 15:22-24 NKJV.

அந்நாட்களில் கொழுத்த கன்று ஒரு விசேஷ சந்தர்ப்பத்திற்காக பரிமாரப்படும் ஒரு சிறப்பு உணவாக இருந்தது,பிறந்த நாள்,ஆண்டுவிழா,ஒரு பெரிய கொண்டாட்டம்,அல்லது கிறிஸ்துமஸ் போன்ற ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்திற்காக ஒரு குறிப்பிட்ட பொருளைப் பாதுகாத்து வைப்பது போல் ஆகும்.

சிறந்த அங்கியும்,விலையுயர்ந்த மோதிரமும்,ஒரு பெரிய ஜோடி செருப்பும் அணிந்து கொண்டாட்டம் தொடங்கினாலும்,விலைமதிப்பற்ற கொழுத்தக் கன்றை அடித்து சாப்பிடுவதுதான் கொண்டாட்டத்தின் உச்சம் என்று சொல்வேன்.அதுதான் அப்பாவின் அன்பின் உதாரணம்.

கொழுத்த கன்று ஒரு நாள் கொல்லப்பட வேண்டும்,ஆனால் அத்தகைய ஆடம்பரமான கொண்டாட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சமயம் மூத்த மகனின் பார்வையில் சர்ச்சைக்குரியதாக மாறியது.
மூத்தவனைப் பொறுத்தவரை, தனது ஊதாரித்தனமான வாழ்க்கையின் மூலம் நேரத்தையும்,ளங்களையும் வீணடித்த அவனது இளைய சகோதரன் திரும்பி வருவது அனைவரின் நேரத்தையும் வீணடிக்கும் வீணான முயற்சியாகக் காணப்பட்டது.

ஆனால், தந்தைக்கு, இளைய மகன் அக்கிரமங்களிலும் பாவங்களிலும் இறந்துவிட்டான், இப்போது அவன் உயிர்த்தெழுந்தான் (எபேசியர் 2:1). அவன் மீட்க முடியாத அளவுக்கு தொலைந்து போனான், ஆனால் இப்போது அதிசயமாக கண்டுபிடிக்கப்பட்டான்.ஆகவே கொழுத்த கன்று தான் தியாகம் செய்யப்பட்ட தந்தையின் மிக நேர்த்தியான மற்றும் விலைமதிப்பற்ற பொருளாகும்.தந்தையின் தியாகத்தின் விளைவாக இளைய மகன் மீண்டும் சாவிலிருந்து மீட்கப்பட்டான்,தொலைந்து போய் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டான். .

ஆம் என் பிரியமானவர்களே,பிதாவாகிய தேவன் தம்முடைய குமாரனை நமக்காக பலியிட்டார்,அதனால் நாம் ஒருபோதும் இறக்க மாட்டோம் மாறாக நித்திய ஜீவனைப் பெறுவோம்.நாம் இழந்தவற்றை மீண்டும் பெறுவோம் . நம் தந்தையான தேவனுடன் என்றென்றும் நீதியுள்ளவர்களாக இருப்போம்! அல்லேலூயா 🙏

தேவன் உங்களுக்கு தேவைப்பட்டதை கொடுக்க அவர் எதையும் செய்ய காத்திருக்கிறார்.அவர் உங்கள் ஆத்துமா மீது ஆர்வம் காட்டுகிறாரே தவிர உங்களுடைய பொருட்கள் மீது அல்ல.நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே அவர் உங்களை ஏற்றுக்கொள்கிறார்.நீங்கள் இருப்பது போல் அவரிடம் வாருங்கள்! ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவிடம் நம்மை திரும்ப மீட்கச்செய்கிறது.

கிருபை நற்செய்தி தேவாலயம்.