இயேசு,வலது பாரிசத்தில் வீற்றிருப்பதைக் காண்பது,நம்முடைய ஒவ்வொரு எதிரியின் மீதும் வெற்றியை உண்டாக்குகிறது!

28-06-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசு,வலது பாரிசத்தில் வீற்றிருப்பதைக் காண்பது,நம்முடைய ஒவ்வொரு எதிரியின் மீதும் வெற்றியை உண்டாக்குகிறது!

நம்முடைய விசுவாசத்தை தொடங்கியவரும்,முடிப்பவருமாகிய இயேசுவை நோக்கி,
2. அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார் .( எபிரெயர் 12:2) NKJV.

இந்த வாழ்க்கையில் ஆண்டவராகிய இயேசுவை மட்டுமே முன்மாதிரியாகக் கொண்டு முழுமையாக கவனம் செலுத்த நாம் அழைக்கப்பட்டதன் மகத்துவம் என்ன?
ஆளுமை அல்லது ஆதிக்கம் !
பிதாவானவர்,சர்வவல்லமையுள்ளவர். அவரும் ,அவர் குமாரனாகிய இயேசுவும் ஒரே நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார்கள்.அது மனிதன் ஏதேன் தோட்டத்தில் இழந்த ஆதிக்கத்தை மீட்டெடுக்க அவர்கள் தங்கள் முழு மனதோடு செயல்படுவதன் காரணம் .

ஆம் என் பிரியமானவர்களே, நம்முடைய விசுவாசத்தின் தொடக்கமும்,முடிவுமான இயேசுவை நோக்கிப் பார்க்க்கும்போது, அவர் பரலோகத்தில் பிதாவின் வலதுபாரிசத்தில் அவருடைய சிங்காசனத்தில் வீற்றிருப்பது,ஒவ்வொரு எதிரியும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் அவர் காலடியில் விழச்செய்கிறது . கொரோனா வைரஸ் உட்பட அனைத்து நோய்களும் இயேசுவின் பாதப்படியாகின்றன !
கிறிஸ்து அமர்ந்திருக்கும் இடத்தில் உள்ள மேலானவற்றை நீங்கள் நாடும்போது உங்களுக்கு எதிராகப் போரிடும் அனைத்து எதிரிகளும் அவர் பாதப்படியில் இருப்பதைக் கண்டு வெற்றியை அனுபவிப்பீர்கள்.

அவர் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதைக் காண்பது நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களில் உங்கள் வெற்றிகளை அனுபவிக்க வைக்கிறது. இன்று உங்கள் நாள்! உங்களுக்கான கிருபையானது இன்று அவர் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதை நீங்கள் கண்டு வெற்றியை அனுபவிக்க செய்கிறது. அல்லேலூயா! ஆமென் 🙏

கிருபை நற்செய்தி தேவாலயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *