26-12-23
இன்றைய நாளுக்கான கிருபை!
இயேசுவை நோக்கிப் பார்ப்பது,ஆண்டவர் எனக்கு முன்குறித்த எதிர்காலத்தை அனுபவிக்க உதவுகிறது!
11. இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.
12. பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். லூக்கா 2:11-12 NKJV
உங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மேசியாவின் வருகையின் நிறைவேற்றத்தை தேவதூதர் அறிவித்தார்! அவர் உண்மை பிறயிலேயே பிறந்தவர்.
பின்னர் தேவதூதன் மேய்ப்பர்களிடம் பேசுகையில்,தெய்வ குழந்தை பிறந்ததற்கு அடையாளமாக தொழுவத்தில் துணியால் சுற்றப்பட்டு முன்னணையிலே கிடத்தியிருக்கும் என்று கூறினார்.
அடையாளம் என்பது இறுதி நோக்கத்தைக் குறிக்கும் அறிகுறியாகும். உதாரணமாக ஒரு அடையாள இடுகை இறுதி இலக்கை நோக்கி செல்லும் வழிகாட்டியாக விளங்குகிறது.
புனித கோவில் ஸ்தலங்களில் பலியிடப்படுவதற்காக முன்குறித்த ஆட்டுக்குட்டிகள் பிறக்கும்போதே தேர்நதெடுத்தது போலவே இயேசுவும் மனிதர்களை பாவத்திலிருந்து மீட்டெடுக்க ஜீவாதார பலியாக வேண்டுமென்று பிதாவானவர் முன்குறித்திருந்தார்.ஸ்வாட்லிங் துணிகளால் ஆட்டுக்குட்டிகள் பிறந்தவுடன் மூடிவைக்கப்படும்.அவை அதை பாதுகாக்கவும்,பாதிக்கப்படாமல் வைக்கும் நோக்கத்துடன் போடப்பட்டது அதேபோல் இயேசுவும் பிறந்தவுடன் சுத்தமான,கைத்தறி துணியால் மூடப்பட்டிருந்தார். .
எனவே, இந்த குழந்தையைப் பற்றிய தேவதூதரின் அறிவிப்பு என்னவென்றால், அவர் உலகின் பாவத்தைத் தன் மீது சுமக்கும் தேவ ஆட்டுக்குட்டி – தியாக ஆட்டுக்குட்டி.
தேவன் என்னை தேவனின் மகனாகவும் மகளாகவும் ஆக்குவதற்காக என் சார்பாகப் பலியிடப்படுவார் என்ற தேவனின் இறுதி நோக்கத்தைச் சுட்டிக்காட்டும் அடையாளமாக, தேவன் தம் மகனை மாட்டுக் கொட்டகையில் ஒரு துணியால் போர்த்தி உலகத்திற்கு அனுப்பினார். அல்லேலூயா!
முதல் கிறிஸ்துமஸில் கொடுக்கப்பட்ட இந்த அடையாளத்தைப் புரிந்துகொள்வது, அர்த்தமுள்ள கிறிஸ்துமஸைக் கொண்டாடவும், இன்று தேவனின் நோக்கத்தை அனுபவிக்கவும் செய்கிறது.
இது தான் உண்மையான கிறிஸ்துமஸ்! 🙏
இயேசுவை நோக்கிப் பார்ப்பது,ஆண்டவர் எனக்கு முன்குறித்த எதிர்காலத்தை அனுபவிக்க உதவுகிறது!
கிருபை நற்செய்தி தேவாலயம்.