ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,தெய்வீகப் பரிமாற்றத்தை அனுபவியுங்கள்!

27-04-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,தெய்வீகப் பரிமாற்றத்தை அனுபவியுங்கள்!

அவருடைய மரணத்தின் சாயலில் நாம் ஒன்றுபட்டிருந்தால், நிச்சயமாக நாமும் அவருடைய உயிர்த்தெழுதலின் சாயலில் இருப்போம்.”
ரோமர் 6:5 NKJV

ஆண்டவராகிய இயேசுவின் சிலுவை மரணத்தின் நோக்கத்தை நாம் புரிந்துகொள்ளும்போது அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமை நம் வாழ்வில் அனுபவமாகிறது.

சிலுவையில் ,அவர் அனுபவித்த துன்பங்கள் என்னை நீதிமானாக்கியிருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டு அறிக்கை செய்யும்போது அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமை நம் வாழ்வில் செயல்படுகிறது

நம்முடைய துக்கங்களையும் ,வலிகளையும் ,இழப்புகளையும் ,வேதனைகளையும் இழுத்து சிலுவையில் அவர் பட்ட வேதனைகளோடு இணைக்கும் பொழுது அவருடைய தெய்வீக பரிமாற்றமாகிய ,
அவருடைய நித்திய மகிழ்ச்சியையும் மற்றும் சொல்லிமுடியாத ஆசீர்வாதங்களையும் நிச்சயமாக பெற்றுக்கொள்ளுகிறோம்

அதேபோல், நம்முடைய மன வேதனையை அவருடைய சிரசின் முள் முடியோடு இணைக்கும் பொழுது அவர் நீதியை நாம் பெற்றுக்கொண்டு அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையால் அனைத்து மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வுகளிலிருந்து நாம் முழுமையாக விடுபடுகிறோம்.
.
. அப்படியே நமது பாவம், வியாதி,வறுமை மற்றும் மனச்சோர்வு ஆகிய பாடுகளை சிலுவையின், பாடுகளோடு இணைக்கும் போது தெய்வீக பரிமாற்றமாக ,ஆறுதல் மற்றும் நிரந்தர விடுதலையை
அவருடைய உயிர்த்தெழுந்த வல்லமையால் பரிமாறிக்கொள்ளுகிறோம் .இந்த தெய்வீகப் பரிமாற்றமே சிலுவையின் மூன்றாவது நோக்கமாகும். ஆமென்!🙏

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் பாருங்கள்,தெய்வீகப் பரிமாற்றத்தை அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9  ×    =  9