ஜீவ அப்பமாகிய இயேசுவைப் நோக்கிப் பாருங்கள்,அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையை அனுபவியுங்கள் !

12-04-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் நோக்கிப் பாருங்கள்,அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையை அனுபவியுங்கள் !

இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான்.அப்போஸ்தலர் 22:16 (NKJV)

பவுல் என்று அழைக்கப்பட்ட சவுலுக்கு அனனியா சொன்ன வார்த்தைகள் இவை. பவுலின் உண்மையான மனமாற்றத்தைப் பார்த்த அனனியா,பவுல் உடனடியாக ஞானஸ்நானம் பெறுவதற்குத் தன் அவசரத்தைக் காட்டினார்.

மேலும், கர்த்தராகிய இயேசு ஏற்கனவே உங்கள் பாவங்களைத் தம்மீது ஏற்றுக்கொண்டார் என்பதை நீங்கள் அறிந்தால், நீங்கள் முழுமையாக மன்னிக்கப்பட்டு, என்றென்றும் நீதிமான்களாக்கப்பட்டீர்கள்,ஆகவே இப்போது (NOW )உங்கள் வாழ்க்கையில் கடவுளின் ஒவ்வொரு ஆசீர்வாதத்திற்கும் நீங்கள் தகுதியுடையவர்கள் என்பதை அறிவீர்கள் . வேதத்தில் எழுதப்பட்டுள்ளபடி “ *தேவனுடைய ஆசீர்வாதம் நீதிமான்களின் தலையின்மேல் தங்கியிருக்கும் ” (நீதிமொழிகள் 11:26).

இன்று கடவுளின் ஆசீர்வாதங்களை அனுபவிப்பதிலிருந்து நம்மைத் தடுப்பது “பாவ உணர்வு” ,மற்றும் ” நம் செயல்திறனை நம்பும் மனப்பான்மை” ஆகும், எனவே நாம் “தேவ குமாரன் உணர்வு (son conscious )”ஆக இருக்க வேண்டும்,அவர் ஏற்கனவே நம் வாழ்க்கைக்குத் தேவையான மற்றும் தெய்வீகத்தைப் பற்றிய அனைத்தையும் வழங்கியிருக்கிறார் (2 பேதுரு 1:3). ஆகையால் ,இப்போது (NOW ) ஒவ்வொரு ஆசீர்வாதத்தாலும் நாம் ஆசீர்வதிக்கப்படுவதைத் தடுக்க எதுவும் இல்லை! அல்லேலூயா !

என் பிரியமானவர்களே, இயேசு ஏற்கனவே உங்களுக்காக இதைச் செய்திருக்கிறார் என்று தெரிந்தும் நீங்கள் இன்னும் என்ன நடக்கவேண்டும் என்று காத்திருக்கிறீர்கள்? உங்கள் இயற்கையான கண்கள் அவற்றைப் பார்க்காவிட்டாலும், உங்கள் இயற்கை புலன்கள் உணராவிட்டாலும், இந்த உண்மையை ஆவியானவரின் உதவியுடன் உணர்ந்துகொள்ளும்போது , ஒவ்வொரு ஆசீர்வாதத்திற்காகவும் கர்த்தருக்கு நன்றி செலுத்தும் இதயப்பூர்வமான நன்றியை நிச்சயமாக ஏற்படுத்தும்.

கிறிஸ்து இயேசுவில் நீங்கள் கடவுளின் நீதி என்பதை அறிக்கை செய்யத் தொடங்குங்கள்.இந்த உலகில் கடவுளின் அற்புதத்தை வெளிப்படுத்தும் பரிசுத்த ஆவியின் உயிர்த்தெழுதல் வல்லமையை அனுபவியுங்கள்.ஆமென் 🙏

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் நோக்கிப் பாருங்கள்,அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையை அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

61  −    =  54