மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் தடைகள் தகர்க்கப்பட்டு ஆட்சி செய்யுங்கள்!

03-09-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் தடைகள் தகர்க்கப்பட்டு ஆட்சி செய்யுங்கள்!

9. தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,
10.எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்.வெளிப்படுத்துதல் 5:9,10 NKJV

தேவன் நம்மை ராஜக்களாகவும்,ஆசாரியர்களாகவும் ஆக்கியுள்ளார். ஆனால், இதை நாம் அனுபவிக்கத் தொடங்கும் முன், பாவம், அடிமைத்தனம், நோய், சாபம் மற்றும் மரணம் ஆகியவற்றிலிருந்து தேவன் நம்மை மீட்டுவிட்டார் என்பதை நாம் அவசியம் அனுபவிக்க வேண்டும். இயேசுவின் இரத்தம் மட்டுமே நம்மை முழுமையாக மீட்டு ஆட்சி செய்யும் இடத்திற்கு மாற்றியுள்ளது என்பதை புரிந்து கொள்ள அழைக்கப்படுகிறோம்!

ஆம், “பாவம் செய்கிறவன் பாவத்திற்கு அடிமை” என்று இயேசுவே சொன்னார். அடிமை மனநிலையுடன் ஒருவன் ஆட்சி செய்யவோ அல்லது ஆளுகை செய்யவோ முடியாது, ஏனெனில் அவன் பாவத்தால் ஆளப்படுகிறான்.

எனவே, இயேசு கெத்செமனே தோட்டத்திலிருந்து கல்வாரி சிலுவை வரை தனது இரத்தத்தை சிந்தினார், அங்கு அவர் முழு உலகத்தின் பாவத்தின் தண்டனையைத் தாங்கி நிர்வாணமாக தொங்கினார், பாவத்தின் சக்தியை உடைத்ததுமட்டுமன்றி,விரைவில் நம்மை பாவத்தின் பிடியிலிருந்து இருந்து முற்றிலுமாக விடுவிப்பார்.
இயேசு தம் இரத்தத்தைச் சிந்தியபோது,அவருடைய சதை கிழிந்தபோது, மிகப்பெரிய தடையானது தகர்ந்தது: தேவனையும் மனிதனையும் பிரிக்கும் ஆலயத்தின் திரை இரண்டாகக் கிழிந்தது (மத்தேயு 27:51). தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள பிரிவின் நடுச் சுவர் உடைக்கப்பட்டது (எபேசியர் 2:14). திரைக்குப் பின்னால் இருந்த தேவன் இப்போது மனிதனுக்குள் வசிக்கிறார். இது மிகப்பெரிய திருப்புமுனை! அல்லேலூயா !!

என் அன்பு நண்பரே,இந்த முன்னேற்றத்தை ஏற்படுத்தியது இயேசுவின் இரத்தம் என்பதை நீங்கள் உணர் கிறீர்களா?
இயேசுவின் இரத்தத்தில் அன்பு செலுத்தத் தொடங்குங்கள்.இதை உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய தடைகளை தகர்த்தெரிவதை காண்பீர்கள்: தொலைந்த நான் கண்டுபிடிக்கப்பட்டேன்.இறந்த நான் இப்போது உயிர்ப்பிக்கப்பட்டேன்.பரிசுத்த ஆவியானவர் இப்போது என்னுடைய தனிப்பட்ட மற்றும் நெருங்கிய நண்பராகிவிட்டார். அவர் தடைகளை திடீரென்று தீர்க்கும் தேவன்! இயேசுவின் இரத்தத்தையும் பரிசுத்த ஆவியையும் துதித்து உரக்கப் பாடுங்கள்,மேலும் உடல்நலம், செல்வம், பாதுகாப்பு மற்றும் மற்ற எல்லா துறைகளிலும் முன்னேற்றங்களை நீங்கள் காண்பீர்கள். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் தடைகள் தகர்க்கப்பட்டு ஆட்சி செய்யுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை( பு) நற்செய்தி பேராலயம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  −  8  =  2