மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய நித்தியமான நீதியை அனுபவியுங்கள்!

27-03-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய நித்தியமான நீதியை அனுபவியுங்கள்!

39. கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும் இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.மத்தேயு 23:39 NKJV

மனித குலத்தின் மீதான தேவனின் நிபந்தனையற்ற அன்பு,அவரது இயல்பு,மற்றும் அவரது பிரமாணங்களின் தூய நோக்கம் ஆகியவற்றை பரிசுத்த வாரம் விவரிக்கிறது.

கர்த்தராகிய இயேசு மக்களுக்கு, நடக்கவிருக்கும் நிகழ்வுகளை பேரார்வத்துடன் போதித்தார்.அவர் மக்களை தயார்ப்படுத்துவதற்கு வேதவசனங்களைத் துல்லியமாகவும்,தெளிவாகவும் சரியானதாகவும் விளக்கினார்.

அதில் உண்மையான விசுவாசிகளை உலகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தயார்படுத்தினார, தேவனின் நீதியின் காரணமாக இவை அனைத்திலும் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று அவர்களுக்கு உறுதியுமளித்தார்!

மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்கள் அப்பாவிகளை தவறாக வழிநடத்தும் தவறான போதனைகளால் அவர்கள் எதிர்கொள்ளும் மோசமான விளைவுகளை அவர் வேதனையோடும், கடுமையாகவும் எச்சரித்தார் (மத்தேயு – 23).
தேவனின் நித்திய நீதியை நிலைநாட்ட அவரது நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக இல்லாத காரணத்தினால் அத்தி மரத்தையும் அவர் சபித்தார்.அவர் உண்மையிலேயே நீதியின் ராஜா! வஞ்சகர்கள் அவரை குற்றம்சாட்டவும் எந்த விதத்திலும் அவரை சவால் செய்யவும் முடியவில்லை. அவர் தேவனின் நீதியின் மீது பேரார்வம் கொண்டிருந்தார் மற்றும் அதில் சமரசம் செய்யமுடியாதபடி ஒப்பற்றவராக இருந்தார்.

என் அன்பானவர்களே,பரிசுத்த வாரத்தின் இந்த நாளில், உங்களையும் என்னையும் என்றென்றும் நீதிமான்களாக்கிய கிறிஸ்துவின் வைராக்கியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்,அதனால்தான் அவருடைய வாழ்க்கையை தியாகம் செய்து நாம் என்றென்றும் நீதிமான்களாக இருப்பதை அவர் உறுதி செய்தார்! அல்லேலூயா! இதை மட்டும் நம்புங்கள்!

அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே,கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற எங்கள் ராஜாவே, நீர் ஆசீர்வதிக்கப்பட்டவர்! ஆமென்🙏.

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய நித்தியமான நீதியை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *