மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய நீதியை பூமியில் அனுபவியுங்கள்!

05-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய நீதியை பூமியில் அனுபவியுங்கள்!

இதோ, ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்;பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள். ஏசாயா 32:1 NKJV

கர்த்தராகிய இயேசுவுக்குள் அன்பானவர்களே, உங்கள் நிலைப்பாடு உங்கள் செயல்திறனைத் தீர்மானிக்கிறது மற்றும் உங்கள் நிலையிலிருந்து உங்கள் நன்மைகளைப் பெறுகிறீர்கள்.

ஒரு தேசம் ஒருவரை நாட்டின் ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ தேர்ந்தெடுத்து பதவியில் அமர்த்தினால் மட்டுமே,அவருடைய குழுவினர்கள் (அமைச்சர்கள்) அவர்களுக்கு கீழ் உள்ள மக்களின் நலனுக்காக நீதியையும் நியாயத்தையும் நிறைவேற்ற முடியும்.
எனவே,நீதியில் ஆட்சி செய்யும் எந்தவொரு ஜனாதிபதியும் அல்லது பிரதமரும் தனது மக்களுக்கு நியாயத்தை நிறைவேற்ற நீதியே காரணம். ஏனெனில் உண்மையான நியாயம், நீதியிலிருந்து மட்டுமே வருகிறது.

அப்படியிருந்தும், தனிப்பட்ட கண்ணோட்டத்தில்,தேவன் தம்முடைய நீதியை நம்மிடம் பரிமாற்றம் செய்யும்போது மட்டுமே நமது வாழ்க்கை சரியானதாக இருக்கும். இதை வேறு வார்த்தைகளில் கூறினால் இயேசுவின் மரணத்தின் விளைவாக நாம் நீதிமான்களாக நியாந்தீர்க்கப்பட்டோம், எனவே நம் வாழ்க்கையும் சரியானதாக இருக்க.நமது செயல் நமது நிலைப்பாட்டிலிருந்து வெளிப்படுகிறது. அதுவே நாம் யார் என்பதையும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. பாவத்தில் கருவுற்றிருந்த நாம் இப்போது கிறிஸ்துவுக்குள் தேவனுடைய நீதியாக ஆனதற்கு,காரணம் ஆவியானவரே. பாவமே அறியாத இயேசு தம் பிதாவுக்கு முழுமையாக கீழ்ப்படிந்ததால் பரிசுத்த ஆவியானவரால் மரித்தோரிலிருந்து எழுப்பபட்ட்டு நாம் நீதிமான்களாக மாற்றப்பட்டோம். ஆகையால், கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாக மாற்றப்பட்ட நாம் நீதியைச் செய்கிறோம். அல்லேலூயா!

இன்று, என் அன்பானவர்களே “நீங்கள் என்றென்றும் நீதிமான்கள்” என்ற சர்வவல்லமையுள்ள தேவனின் இந்த வலிமையான செயல்பாட்டை நீங்கள் நம்பும்போது, ​உங்கள் வாழ்க்கை முறை மாறுகிறது,மேலும் நீங்கள் நேர்மறையான முடிவுகளைக் காணத் தொடங்குகிறீர்கள். இந்த மாதம் இயேசுவில் பரிசுத்த ஆவியானவர் நமக்குச் செய்வதாக வாக்குறுதியளித்த நன்மைகளையும் பெறுவீர்கள்.
நீங்கள் அவருடைய நீதியில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறீர்கள், எனவே நீங்கள் இன்று நியாயம் , நன்மைகள் மற்றும் ஆசீர்வாதங்களை மட்டுமே பெற நிலைநிறுத்தப்பட்டிருக்கிறீர்கள்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய நீதியை பூமியில் அனுபவியுங்கள்!

நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாக இருக்கிறீர்கள்!

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை நற்செய்தி பேராலயம் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2  +  1  =