11-09-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,உங்கள் தடைகள் தகர்வதன் மூலம் ஆட்சி செய்யுங்கள்!
16. அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.
17. அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.
18. நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்.லூக்கா 15:16-18 NKJV.
ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில்,மனிதர்கள் அழுவதற்கு நான்கு காரணங்கள் உள்ளன என்று அறியப்பட்டது: பசி, வலி, நோய் மற்றும் ஆபத்தின் அழுகை என்பதாகும்.
தந்தையிடமிருந்து பிரிந்த ஊதாரி மகன், கவலையற்ற வாழ்கை நிலையில் இருக்கத் தொடங்கினான், காலப்போக்கில், அவனிடம் எதுவும் மிஞ்சவும் இல்லை, உதவ யாரும் இல்லை. பசியின் கொடுமை விரைவில் தன்னை கல்லறைக்கு கொண்டு செல்லும் என்பதை உணர்ந்தான். அவன் தனது தந்தையின் ஆடம்பரமான மற்றும் நிபந்தனையற்ற அன்பை நினைவு கூர்ந்தான், மேலும் அவன் அழியக்கூடாது என்பதற்காக தனது தந்தையிடம் திரும்ப முடிவு செய்தான். பசியின் அழுகை,வலி மற்றும் ஆபத்தான விளைவுகள் அவனை அவனது தந்தையிடம் திரும்ப அழைத்துச் சென்றன.
இரக்கமுள்ள தந்தை கொழுத்த கன்றுக்குட்டியை வெளியே கொண்டு வந்து கொன்று தன் மகன் திரும்பியதற்காக நண்பர்களோடு கொண்டாடினார். (லூக்கா 15:23,27,30)!
இன்றும் என் அன்பானவர்களே அது உங்கள் வாழ்விலும் சாத்தியமாகும்!எந்த வடிவத்தின் பசியினாலும், எந்த ஒரு வேதனையான காரணத்தினாலும், எந்த விதமான நோயினாலும், எந்த பிரச்சனையினாலும் பயமுறுத்தும் அச்சம் அல்லது அவமானத்தால் உங்கள் வேதனை, பிதாவின் சிம்மாசனத்தை அடைகிறது. ஏனென்றால் கர்த்தராகிய இயேசு, எங்கள் பாஸ்கா ஆட்டுக்குட்டியானவரின் இரத்தம் தேவனின் இரகத்திற்காக கதறிய அழுகை நமது கண்ணீரோடு ஒன்றாகக் கலந்து, தேவனின் செவிகளை எட்டுகிறது. எனவே, உங்கள் பிரார்த்தனைகள் உடனடியாகப் பதிலளிக்கப்படுகின்றன!
இந்த நாளில் ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு திடீரென்று தடைகள் தகர்க்கும் சூழ்நிலையை அனுபவிக்கச் செய்கிறார்!ஆரோக்கியம், செல்வம், பாதுகாப்பு மற்றும் மிகுந்த மன அழுத்தத்தையும் வலியையும் ஏற்படுத்தும் பகுதிகளில் இயேசுவின் நாமத்தில் விடுதலை பெறுகிறீர்கள்! ஆமென் 🙏
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,உங்கள் தடைகள் தகர்வதன் மூலம் ஆட்சி செய்யுங்கள்.
நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!
கிருபை(பு) நற்செய்தி பேராலயம்!!