இன்று உங்களுக்குக்கான கிருபை
7 ஆகஸ்ட் 2026
தேவனுடைய நீதியே உங்கள் மேன்மையை நிலைநாட்டுகிறது!
வேதவசனம்:
“நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.”
2 கொரிந்தியர் 5:21
மாதத்தின் வாக்குத்தத்தம்:
“நீர் என் மேன்மையை பெருகப்பண்ணி, என்னைச் சுற்றிலும் தேற்றுவீராக.” சங்கீதம் 71:21
பிரியமானவர்களே,
இந்த வாரம் முழுவதும், தேவன் மனிதகுலத்தை மீட்க செய்த மகத்தான கிரியைகளின் தொடர்ச்சியை நாம் கண்டோம். பரிசுத்த ஆவியானவர் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்புவதன் மூலம் அவரை நீதிமானாக வெளிப்படுத்தினார். பரிசுத்த ஆவியானவரே அவரை கருத்தரிக்கச் செய்தார், அபிஷேகம் செய்தார், மேலும் உயிர்த்தெழுந்த கர்த்தராக அவரை உயர்த்தினார். மனிதகுலம் கிறிஸ்துவுக்குள் ‘தேவனுடைய நீதி’ என்னும் நித்திய அடையாளத்தைப் பெற்றுக்கொள்ளவே இவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டன.
இப்போது இந்த நீதியின் மகிமையான பலனை நாம் அறிந்துகொள்கிறோம்.
நாம் அதை சம்பாதித்ததாலோ அல்லது தகுதியுடையவர்கள் என்பதாலோ தேவன் நம் மேன்மையை பெருகப்பண்ணுவதில்லை; மாறாக, கிறிஸ்துவுக்குள் நாம் நீதிமான்களாக்கப்பட்டிருப்பதாலேயே அவர் நம் மேன்மையை பெருகப்பண்ணுகிறார். சங்கீதம் 71:21-ல் உள்ள வாக்குத்தத்தம், அதே சங்கீதத்தில் மீண்டும் மீண்டும் அறிவிக்கப்படும் “உம்முடைய நீதி” என்ற அஸ்திபாரத்தின் மீது அமைந்துள்ளது. சங்கீதக்காரன் ஒருபோதும் தன் சொந்த நீதியைக் குறித்துப் பெருமை பாராட்டவில்லை; மாறாக, தன் நம்பிக்கை, பலன், விடுதலை மற்றும் மேன்மை ஆகியவற்றின் ஊற்றாகத் தேவனுடைய நீதியையே கொண்டாடினார்.
புதிய ஏற்பாடும் இதைத்தான் வெளிப்படுத்துகிறது. கிறிஸ்துவின் பூரணமான கிரியையின் மூலம், தேவனுடைய நீதியே அவருக்கு முன்பாக நம்முடைய நிலையாக மாறியுள்ளது. நாம் நீதிமான்களாக மாற இனி பிரயாசப்படத் தேவையில்லை—கிறிஸ்து இயேசுவுக்குள் நாமே தேவனுடைய நீதியாக இருக்கிறோம். எனவே, நம் வாழ்க்கை இனி குற்ற உணர்வு, ஆக்கினைத்தீர்ப்பு அல்லது சுயநீதியால் ஆளப்படுவதில்லை; மாறாக, கிருபை, அங்கீகாரம் மற்றும் தேவனுடைய பிள்ளைகளாக இருக்கும் உரிமை ஆகியவற்றால் ஆளப்படுகிறது.
நீங்கள் தேவனுடைய நீதியில் நிலைத்திருப்பதால், அவருடைய வாக்குத்தத்தம் உங்கள் அன்றாட அனுபவமாக மாறுவதை எதிர்பார்த்திருங்கள்.
இதை உணர்ந்துகொள்ளுங்கள்:
அவருடைய நீதி உங்களை நிலைநாட்டுகிறது.
அவருடைய நீதி உங்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.
அவருடைய நீதி உங்கள் மேன்மையை பெருகப்பண்ணி, உங்களை சுற்றிலும் ஆறுதலால் சூழ்கிறது.
இன்று,உங்கள் பலவீனங்கள் அல்லது கடந்த கால தோல்விகளைக் கொண்டு உங்களை மதிப்பிட மறுத்துவிடுங்கள். கிறிஸ்து நிறைவேற்றிய காரியங்களைக் கொண்டு உங்களை மதிப்பிடுங்கள். தேவன் உங்களைப் பார்க்கும்போது, அவர் தம்முடைய குமாரனின் நீதியையே காண்கிறார். அதுவே அவர் உங்கள் வாழ்க்கையைக் கட்டியெழுப்பும் அசைக்க முடியாத அஸ்திபாரமாகும்.
ஜெபம்:
பரலோகத் தகப்பனே, கிறிஸ்து இயேசுவுக்குள் என்னை தேவனுடைய நீதியாக மாற்றியதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். உமக்கு முன்பாக நான் கொண்டிருக்கும் நிலை முற்றிலும் கிறிஸ்துவின் நிறைவேற்றப்பட்ட கிரியையைச் சார்ந்திருக்கிறது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். என் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் உம்முடைய நீதி வெளிப்படுவதாக. என் வாழ்வு உமது நாமத்திற்கு மகிமை சேர்க்கும் வகையில், என் மேன்மையை பெருகச் செய்து, எல்லாப் பக்கங்களிலிருந்தும் என்னை ஆற்றுப்படுத்துவேன் என்று நீர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவீராக. இயேசுவின் நாமத்தில். ஆமென்.
விசுவாச அறிக்கை:
கிறிஸ்து இயேசுவுக்குள் நான் தேவனுடைய நீதியாக இருக்கிறேன் என்று தைரியமாக அறிக்கை செய்கிறேன். தேவனுக்கு முன்பாக நான் ஏற்றுக்கொள்ளப்பட்டவளாகவும், நீதிமானாக்கப்பட்டவளாகவும், நிலைநிறுத்தப்பட்டவளாகவும் நிற்கிறேன். தேவனுடைய நீதி எனக்குள்ளும் என் மூலமாகவும் செயல்படுகிறது. எனவே, என் மேன்மை பெருகுகிறது, என் பாதை பிரகாசமாகிறது, மேலும் எல்லாப் பக்கங்களிலிருந்தும் நான் ஆறுதல் பெறுகிறேன். தெய்வீக தயவு, இயற்கைக்கு அப்பாற்பட்ட முன்னேற்றம் மற்றும் உயிர்த்தெழுதலின் வெற்றி ஆகியவற்றில் நான் நடக்கிறேன்.கிறிஸ்துவே என் நீதி,என் மேன்மை மற்றும் என் மகிமை..ஆமென் 🙏
உயிர்த்தெழுந்த இயேசுவைப் போற்றுங்கள்.ஆமென். அல்லேலூயா!
⸻
கிருபை நற்செய்தி பேராலயம்!
