இன்று உங்களுக்குக்கான கிருபை!
25 ஆகஸ்ட் 2026
தேவனுடைய நீதியானது இயேசுவை மையமாகக் கொண்டது!
வேதவசனம்:
“கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையோடும் உத்தம இருதயத்தோடும் நடந்துகொண்டதை நினைவுகூரும்படி உம்மை வேண்டிக்கொள்கிறேன்…”ஏசாயா 38:3
“நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.”
2 கொரிந்தியர் 5:21
இன்று விசுவாசிகள் சில சமயங்களில் பழைய ஏற்பாட்டு விசுவாச வீரர்களைக் குறிப்பிட்டு தேவனிடம் வருகிறார்கள்; அவ்வாறு செய்யும்போது, அறியாமலேயே தங்கள் நீதியான வாழ்க்கை, தங்கள் விசுவாசம் அல்லது தங்கள் கண்ணீர் ஆகியவற்றையே தங்கள் நம்பிக்கையின் அடிப்படையாக மாற்றிக்கொள்கிறார்கள்.
எசேக்கியா தனது சொந்த வாழ்க்கையை சுட்டிக்காட்டி வேண்டிக்கொண்டார்:
“நான் எப்படி நடந்துகொண்டேன் என்பதை நினைவுகூரும்…”
அவர் சாராம்சத்தில் இப்படிக் கூறினார்:
“என் கண்ணீரைப் பாரும்.”
ஆனால், தேவனிடம் அணுகுவதற்கு நற்செய்தி நமக்கு மிக சிறந்ததொரு அடிப்படையை அளிக்கிறது.
நீதி என்பது அடிப்படையில் நான் எவ்வளவு கச்சிதமாக செயல்படுகிறேன் என்பதைப் பற்றியதல்ல. நீதி என்பது இயேசுவை மையமாகக் கொண்டது—அவரே என் இடத்தில் நின்றவர்,என் பாவத்தை சுமந்தவர், என் மரணத்தை ஏற்றுக்கொண்டவர் மற்றும் என் நீதியாக்கத்திற்காக உயிர்த்தெழுந்தவர்.
ஆகவே நாம் ஜெபிக்கும்போது, நம் கண்ணீரையோ அல்லது நம் செயல்பாடுகளையோ சுட்டிக்காட்டுவதில்லை.
நாம் சொல்கிறோம்:
“பரலோகத் தகப்பனே,எங்கும் எதிரொலித்த இயேசுவின் தீவிரமான கூக்குரலையும் கண்ணீரையும் நீர் கேட்டபடியால், நீர் என்னை 360 பாகை அளவில்—அதாவது எல்லாப் பக்கங்களிலிருந்தும்—நிச்சயமாக ஆசீர்வதித்திருக்கிறீர்!”
“பரலோகத் தகப்பனே, இயேசு நடந்துகொண்ட கச்சிதமான விதத்தைக் கண்டு நீர் முழுமையாகத் திருப்தியடைந்தபடியால், நீர் என்னை 360 பாகை அளவில்—அதாவது எல்லாப் பக்கங்களிலிருந்தும்—நிச்சயமாக ஆசீர்வதித்திருக்கிறீர்!”
இப்படியே நாம் இன்று ஜெபிக்கிறோம்—நம் சொந்த நீதியை நம்பாமல்,கிறிஸ்துவின் கச்சிதமான நீதியில் முழுமையாக சார்ந்திருந்து!
ஜெபம்
அப்பா தேவனே,என் நீதி என் செயல்பாடுகளின் அடிப்படையில் அல்ல,மாறாக கிறிஸ்து செய்து முடித்த கிரியையின் அடிப்படையில் அமைந்திருப்பதற்காக உமக்கு நன்றி.தேவனுடைய பரிசுத்த ஆவியானவரே, அவருடைய கச்சிதமான நீதியில் முழுமையாக சார்ந்திருக்கவும், இயேசுவின் நிமித்தம் உம்மைத் தைரியத்துடன் அணுகவும் எனக்குக் கற்றுத்தாரும். ஆமென்.
விசுவாச அறிக்கை
கிறிஸ்து இயேசுவுக்குள் நான் தேவனுடைய நீதியாக இருக்கிறேன்!
என் சொந்த நீதியை அல்ல, கிறிஸ்துவின் நீதியையே நான் நம்புகிறேன்.
கிறிஸ்துவுக்குள் நான் ஏற்றுக்கொள்ளப்பட்டவளாகவும், நீதியாக்கப்பட்டவளாகவும், ஆசீர்வதிக்கப்பட்டவளாகவும் இருக்கிறேன்.
நான் கிறிஸ்துவின் நீதிக்குத் திரும்புகிறேன்,மேலும் ஆளுகை செய்ய உயர்த்தப்படுகிறேன்!ஆமென் 🙏
உயிர்த்தெழுந்த இயேசுவைப் போற்றுங்கள்!
⸻
கிருபை நற்செய்தி பேராலயம்!
