அவருடைய மௌனம், என்னுடைய நீதி!

இன்று உங்களுக்குக்கான கிருபை!
26 ஆகஸ்ட் 2026

அவருடைய மௌனம், என்னுடைய நீதி!

வேதவசனம்:
அவர் ஒடுக்கப்பட்டும், சிறுமைப்படுத்தப்பட்டும் இருந்தார்; ஆனாலும் அவர் தம்முடைய வாயைத் திறக்கவில்லை; அடிக்கப்படும் ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர் கத்தரிக்கிறவனுக்கு முன்பாக சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும் அவர் தம்முடைய வாயைத் திறக்காதிருந்தார்.”ஏசாயா 53:7

“அவர் நிந்திக்கப்பட்டபோது பதிலுக்கு நிந்திக்கவில்லை; பாடுபட்டபோது பயமுறுத்தவில்லை; நீதியாய் நியாயத்தீர்க்கிறவருக்கே தம்மை ஒப்புக்கொடுத்தார்.”1 பேதுரு 2:23

இயேசு மதத் தலைவர்கள், பிலாத்து மற்றும் ஏரோது ஆகியோருக்கு முன்பாகப் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டார்.

அவருக்கு எதிரான ஒவ்வொரு குற்றச்சாட்டும் பொய்யானவை. அவரால் தன்னைத் தற்காத்துக்கொண்டிருக்க முடியும். ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதிலளித்து, ஒவ்வொரு பொய்யையும் வெளிப்படுத்தியிருக்க முடியும்.

ஆனால் அவர் தம் வாயைத் திறக்கவில்லை.

ஏன்?

ஏனெனில், அவர் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் ஒரு குற்றமற்ற மனிதராக மட்டும் அங்கே நிற்கவில்லை; அவர் நம்முடைய ஸ்தானத்தில் நின்றுகொண்டிருந்தார்.

ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் எதிராக இயேசு தன்னைத் தற்காத்துக்கொண்டிருந்தால், நியாயமாக நமக்கு எதிராக இருந்த குற்றச்சாட்டுகளை அவரால் எப்படி சுமந்திருக்க முடியும்?
அவர் மௌனமாக இருந்தார்—அவர் குற்றவாளி என்பதற்காக அல்ல, மாறாக நம்முடைய ஸ்தானத்தை அவர் மனமுவந்து ஏற்றுக்கொண்டதாலேயே.

ஏசாயா 53:6 இவ்வாறு கூறுகிறது:

“கர்த்தரோ நம் எல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.”

அவருடையவை நமக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக, நமக்குரியவற்றை இயேசு ஏற்றுக்கொண்டார்.

அவருடைய நீதியை நாம் பெறும்படி, அவர் நம்முடைய தண்டனைத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டார்.
அவருடைய அங்கீகாரத்தைப் நாம் பெறும்படி, அவர் நம் மீதான குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார்.
நாம் நீதிமான்களாக நிற்கும்படி, அவர் குற்றவாளியாக நிறுத்தப்பட்டார்.

இதுவே நமக்கான தேவனுடைய நீதி!

ஆகவே, சத்துரு உங்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைக் கொண்டுவரும்போது, ​​உங்கள் செயல்களை நியாயப்படுத்தி உங்கள் நீதியை நிலைநாட்ட முயற்சிக்காதீர்கள்.

இயேசுவை நோக்குங்கள்.

அவருடைய மௌனம் பலவீனமல்ல.

அவருடைய மௌனம் பிதாவின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்தலும், நமக்காக அவருடைய பரிபூரண நீதியை வெளிப்படுத்துதலுமாய் இருந்தது.

அன்று அவர் கொண்டிருந்த மௌனம், இன்றும் உங்களுக்கு எதிரான ஒவ்வொரு குற்றச்சாட்டையும் அமைதியாக்குகிறது; ஏனெனில் அவருடைய மௌனம் உங்களை என்றென்றும் நீதிமான்களாக்கியது. ஆமென் 🙏

ஜெபம்
பரலோகப் பிதாவே,பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் மௌனமாக இருந்து,மனமுவந்து என்னுடைய ஸ்தானத்தை ஏற்றுக்கொண்ட இயேசுவுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். அவருடைய நீதி, அங்கீகாரம் மற்றும் ஆசீர்வாதத்தை நான் பெற்றுக்கொள்ளும்படி, என்னுடைய பாவம், தண்டனைத் தீர்ப்பு மற்றும் எனக்கு எதிரான ஒவ்வொரு குற்றச்சாட்டையும் அவர் சுமந்ததற்காக உமக்கு நன்றி. கிறிஸ்துவின் நிறைவேற்றப்பட்ட கிரியையில் நான் நிலைத்திருக்கிறேன்.இயேசுவின் நாமத்தில்!ஆமென் 🙏

விசுவாச அறிக்கை
கிறிஸ்து இயேசுவுக்குள் நான் தேவனுடைய நீதியாய் இருக்கிறேன்!
எனக்கு எதிரான எல்லா குற்றச்சாட்டுகளையும் இயேசு ஏற்றுக்கொண்டார்!
நான் இனி கண்டிக்கப்படுவதில்லை—நான் நீதியாக்கப்பட்டிருக்கிறேன்!
இயேசுவின் இரத்தத்தினாலும் நீதியினாலும் எல்லா குற்றச்சாட்டுகளும் மௌனமாக்கப்படுகின்றன!
கிறிஸ்துவுக்குள் நான் நீதியுள்ளவனாகவும், ஏற்றுக்கொள்ளப்பட்டவனாகவும், ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருக்கிறேன்!
இயேசு கிறிஸ்துவின் மூலமாக நான் வாழ்க்கையில் ஆளுகை செய்கிறேன்!“ஆமென் 🙏

உயிர்த்தெழுந்த இயேசுவைப் போற்றுங்கள்!

கிருபை நற்செய்தி பேராலயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *