இன்று உங்களுக்குக்கான கிருபை!
31 ஆகஸ்ட் 2026
பரிசுத்த ஆவியானவரிடமிருந்து 360° ஆசீர்வாதம் வரை!
வேதவசனம்
“மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினால், பரிசுத்த ஆவியின்படி வல்லமையுள்ள தேவகுமாரனென்று ரூபிக்கப்பட்டார்.” ரோமர் 1:4
“கிருபையின் பரிபூரணத்தையும் நீதியின் ஈவையும் பெற்றுக்கொள்ளுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவரைக் கொண்டு ஜீவனில் ஆளுகை செய்வார்கள்.” ரோமர் 5:17
ஆகஸ்ட் மாதத்தை நிறைவு செய்யும் வேளையில், இம்மாதத்தின் வெளிப்பாட்டை ஒரு மகிமையான சத்தியமாகத் தொகுத்துக்கொள்வோம்:
எல்லாம் இயேசுவைப் பற்றியதே!
ரோமர் 1:4-ல் நாம் தொடங்கினோம் – அவருடைய உயிர்த்தெழுதல், இயேசு தேவகுமாரன் என்பதற்கும், நாம் என்றென்றும் நீதியுள்ளவர்களாக அறிவிக்கப்பட்டதற்கும் (அவர் செய்து முடித்த கிரியையின் முழுமைக்குமான) ஒரு தெய்வீக அறிவிப்பாக இருந்தது.
ஆகவே, தேவன் நமக்கு அளிக்கும் பதிலானது நமது செயல்பாடுகள்,கண்ணீர் அல்லது நமது சொந்த நடை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்ததல்ல; மாறாக, கிறிஸ்து எவ்வளவு பரிபூரணமாக நடந்துகொண்டார் என்பதன் அடிப்படையிலேயே அமைகிறது. அவருடைய கண்ணீரும் கூக்குரலும் நித்திய மீட்பைக் கொண்டுவந்தன; நம்முடைய ஜீவன் காப்பாற்றப்பட அவர் தம் ஜீவனைக் கொடுத்தார்.
எனவே, கிறிஸ்துவின் நீதியே நம்முடைய நீதி!
(அவருடைய நீதி நமக்கு ஒரு ஈவாக அருளப்பட்டுள்ளது.)
கிறிஸ்துவின் நீதி என்பது நமக்குள் இருக்கும் தேவனுடைய சுபாவம் -அதாவது நமக்குள் இருக்கும் அவருடைய ‘டிஎன்ஏ’ (DNA) – என்பதையும் நாம் அறிந்துகொண்டோம்.யாக்கோபின் வாழ்வில் அவர் செயல்பட்டது போலவே,நம் வாழ்விலும் அவர் தலையிட்டு,முடிவுகளை நமக்கு சாதகமாக மாற்றுகிறார்.
மேலும், நற்செய்தியைத் தொடர்ந்து கேட்டு விசுவாசிக்கும்போது, அவருடைய நீதியைக் குறித்த நமது புரிதல் பெருகுகிறது.
ஆகவே, ஆகஸ்ட் மாதத்தின் செய்தி எளிமையானது:
கிறிஸ்துவின் நீதியின் ஈவைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
ஒவ்வொரு தேவைக்கும், ஒவ்வொரு சூழலுக்கும், ஒவ்வொரு நிலைமைக்கும் ஏற்ற கிருபையின் பரிபூரணத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
கிறிஸ்து செய்து முடித்த கிரியையில் இளைப்பாறுங்கள்.
பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை விசுவாசியுங்கள்.
தெய்வீகத் தலையீட்டை எதிர்பாருங்கள்.
வாழ்வில் ஆளுகை செய்யுங்கள்!
கிறிஸ்து மீட்பை மிக சரியாக நிறைவேற்றியிருப்பதால், தேவனுடைய கிருபை நம்மை சுற்றிலும் – அதாவது 360° கோணத்திலும் – செயல்படுவதை நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம்.
அவருடைய நீதி நமக்காகப் பேசுகிறது.
அவர் செய்து முடித்த கிரியை நமக்குப் பதிலளிக்கிறது.
அவருடைய உயிர்த்தெழுதல் நமக்கு வெற்றியைத் தருகிறது.
அவருடைய கிருபை நம்மை சூழ்ந்துள்ளது.
அவருடைய ஆசீர்வாதம் நம்மை சுற்றிலும் பாய்கிறது.
ஜெபம்
பரலோகத் தகப்பனே,பரிசுத்த ஆவியானவரின்படி உயிர்த்தெழுதலின் மூலம் வல்லமையுள்ள தேவகுமாரனாக அறிவிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். அவருடைய பரிபூரண நீதியானது என்னுடைய நீதியாக மாறியிருப்பதற்கும், அவர் செய்து முடித்த கிரியை என்னுடைய நம்பிக்கையாக இருப்பதற்கும் நன்றி. இயேசுவின் நாமத்தில், ஆமென்.
விசுவாச அறிக்கை
நான் கிருபையின் பெருக்கத்தையும் நீதியின் ஈவையும் பெற்றுக்கொள்கிறேன்!
கிறிஸ்து இயேசுவுக்குள் நான் தேவனுடைய நீதியாய் இருக்கிறேன்!
இயேசுவே என்னுடைய நீதியாயிருக்கிறார்!
அவர் செய்து முடித்த கிரியையே என்னுடைய நம்பிக்கையாயிருக்கிறது!
அவருடைய உயிர்த்தெழுதலே என்னுடைய வெற்றியாயிருக்கிறது!
பரிசுத்த ஆவியானவர் எனக்குள் கிரியை செய்கிறார்!
கிறிஸ்துவின் நீதி எனக்காகப் பேசுகிறது!
எல்லாக் குற்றச்சாட்டுகளும் மௌனமாக்கப்படுகின்றன!
தேவன் என் சூழ்நிலைகளில் தலையிடுகிறார்!
நான் எல்லாப் பக்கங்களிலிருந்தும் (360°) ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன்!
கிருபை எனக்குச் சாதகமாகச் செயல்படுகிறது!
இயேசு கிறிஸ்துவின் மூலமாக வாழ்க்கையில் ஆளுகை செய்ய நான் உயர்த்தப்பட்டிருக்கிறேன்! ஆமென் 🙏
உயிர்த்தெழுந்த இயேசுவைப் போற்றுங்கள்!
⸻
கிருபை நற்செய்தி பேராலயம்!
