Author: vijay paul

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்க்கையில் ராஜாக்களாக ஆட்சி செய்யுங்கள்!

2-12-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்க்கையில் ராஜாக்களாக ஆட்சி செய்யுங்கள்!

10. யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் ராஜா. (சேலா.) சங்கீதம் 24:10 NKJV

என் அன்பானவர்களே,இந்த ஆண்டின் இறுதி மாதம்டிசம்பர் 2024 தொடங்கும் வேளையில் -நம்மில் பலர் இந்த ஆண்டு ஏற்கனவே போய்விட்டது ஆகவே வரும் 2025 வருடத்திலாவது நல்லது நடக்கும் என்று நம்பி காத்திருக்கிறோம் .ஆனால், இந்த ஆண்டு(2024)ல் தேவன் நமக்குன்டான ஆசீர்வாதத்தை முழுமையாக முடிக்கவில்லை என்பதை நான் தைரியமாக அறிக்கையிடுகிறேன்,அவர் நிச்சயமாக அவருக்கே உரிய பாணியில் ஆசீர்வதிப்பார் ! அல்லேலூயா!! அவர் தேவன்,அவரே மகிமையின் ராஜா!

யார் இந்த மகிமையின் ராஜா? சேனைகளின் கர்த்தரே மகிமையின் ராஜா!
சேனைகளின் கர்த்தர் என்ற வார்த்தை வேதத்தில் 245 முறை தோன்றுகிறது என்பது சுவாரஸ்யமானது. எல்லா குறிப்புகளிலும்,சர்வவல்லமையுள்ள தேவன் நம் போர்களை தேவன்,தம் போராக ஏற்று போராடுவதைக் காண்கிறோம்: பலவீனமானவர்களுக்கு அவர் பலம், ஒடுக்கப்பட்டவர்களுக்கு அவர் வழக்காடுபவர், ஏழைகளுக்கு அவர் வள்ளல், நோயுற்றவர்களுக்கு அவர் ஆரோக்கியமாகவும், இறந்தவர்களுக்கு ஜீவனாகவும் இருக்கிறார். அவர் மூடப்பட்ட எல்லா கதவுகளைத் திறக்கிறார், எந்த மனிதனும் திறக்க முடியாமல் போன கதவுகளையும் மூடுகிறார்.

சாமுவேல் என்று அழைக்கப்படும் எல்லா காலத்திலும் மிகப் பெரிய தீர்க்கதரிசிகளில் ஒருவரானவரின் தாய் அன்னாளின் வாழ்க்கையில் அவளுடைய கர்ப்பப்பை மீளமுடியாமல் மூடியிருந்தது, ஆனால் சேனைகளின் கர்த்தர் அதைத் திறந்தார். முதன்முறையாக, வேதத்தில், சேனைகளின் கர்த்தர் என்று குறிப்பிடப்பட்டிருப்பது இந்த சம்பவத்தில் தான்.

என் அன்பானவர்களே, அன்னாளின் தேவன், சேனைகளின் கர்த்தர், உங்கள் போர்களை தம் போராக ஏற்று போராடி உங்களுக்கு அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் இன்றே நிறைவேற்றுகிறார்! ஆமென் 🙏

நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனின் நீதியாக இருக்கிறீர்கள்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்க்கையில் ராஜாக்களாக ஆட்சி செய்யுங்கள்.

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,நன்றியுணர்வுடன் பொங்கி மகிழுங்கள்!

28-11-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,நன்றியுணர்வுடன் பொங்கி மகிழுங்கள்!

9.அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்.II கொரிந்தியர் 12:9 NKJV

உங்கள் உண்மையான பலவீனம் உங்கள் பலவீனம் அல்ல.ஆனால் உங்கள் பலவீனத்தில் அவருடைய பலத்தை உணரத் தவறுவதுதான்.

ஆதாமும் ஏவாளும் தேவனுக்குக் கீழ்ப்படிய தவறிவிட்டார்கள்,ஏனென்றால் அவர்கள் தடைசெய்யப்பட்ட நன்மை தீமை அறியும் விருட்சத்தின் கனியை சாப்பிட்டார்கள்.
ஆனால் கீழ்ப்படியாமைக்கு முன்பு அவர்கள் இதயத்தில் அதிருப்தி இருந்தது.

பெரும்பாலான கிறிஸ்தவர்கள் கிருபையைப் பெறத் தவறியதற்கு முக்கியக் காரணம் உரிமை பாராட்டுவதுதான்.

இத்தகைய ‘உரிமை பாராட்டுதல்’அல்லது ‘அதிருப்தி’ மேலும் நாம் அனுபவிக்கும் பலவீனம்’ ஆகியவற்றின் அடிப்படைக் காரணம் நன்றியுணர்வு இல்லாமையே.

ஆதாமும் ஏவாளும் தங்களுக்குக் கிடைத்த நல்ல விஷயங்களுக்காக அல்லது அனைத்து மரங்களையும் அணுக அனுமதி உள்ளதற்காக தேவனுக்கு நன்றி தெரிவித்திருந்தால்,அவர்கள் அணுக முடியாத ஒரே ஒரு மரத்தின் மீது நாட்டம் காட்டியிருக்க மாட்டார்கள்,தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருந்திருக்க மாட்டார்கள், முழு மனுக்குலத்தையும் சாபத்திலும் மரணத்திலும் மூழ்கடித்திருக்க மாட்டார்கள்.

பலவீனங்கள்,குறைபாடுகள்,ஏமாற்றங்கள் மற்றும் அதிருப்தி போன்றவற்றிலும் கூட தேவனுக்கு நன்றி சொல்வது என்பது எல்லாம் வல்லவரின் வல்லமையை உங்களுக்குள் இருந்து பகிரங்கமாக வெளிப்படுத்துகிறது!

உங்களில் உள்ள கிறிஸ்து நன்றி செலுத்துதலின் ஆவியாக இருக்கிறார்,அவர் கிருபையை உங்களுக்குள் நிரம்பி வழியச் செய்கிறார்,கொஞ்சத்தை மிகுதியாகவும்,பலவீனத்தை வலிமையாகவும்,நோயை ஆரோக்கியமாகவும்,துக்கத்தை மகிழ்ச்சியாகவும்,சிதைவு அல்லது சீரழிவை புத்துணர்ச்சியாகவும், இளமையாகவும்,மரணத்தை வாழ்வாகவும் மாற்றுகிறார்.அல்லேலூயா! ஆமென் 🙏

இன்று எல்லாவற்றிற்கும் நன்றியுள்ள இதயத்துடன் மனமார்ந்த நன்றி செலுத்துகிறோம் எங்கள் பரிசுத்த பிதாவே!!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,நன்றியுணர்வுடன் பொங்கி மகிழுங்கள்!

பரிசுத்த பிதாவே,உம்முடைய ராஜ்யம் வருவதாக!

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!

gg

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,நன்றி செலுத்துவதன் மூலம் அவருடன் ஆட்சி செய்யுங்கள்!

27-11-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,நன்றி செலுத்துவதன் மூலம் அவருடன் ஆட்சி செய்யுங்கள்!

11. இயேசு அந்த அப்பங்களை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் பந்தியிருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படியே மீன்களையும் அவர் எடுத்து அவர்களுக்கு வேண்டியமட்டும் கொடுத்தார். யோவான் 6:11 NKJV

உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்று நாம் ஜெபிக்கும்போது, ​​ராஜ்யத்தின் வல்லமையை அனுபவிப்பதற்கான உறுதியான வழியைப் பற்றி இன்று தியானிப்போம்.

நன்றி செலுத்துதல்” என்பது நீங்கள் விரும்புவதைப் பெறுவதற்கான உறுதியான வழியாகும்.

நன்றி செலுத்துதல்உங்கள் தேவையின் மிகுதியை மிஞ்சும்.

நன்றி செலுத்துதல்கொஞ்சத்தை அதிகமாக்கக் கூடிய திறன் கொண்டது.

உங்களிடம் உள்ளவற்றிற்காக “நன்றி செலுத்துவதுஉங்களிடம் இல்லாததைப் பெற வழி வகுக்கும்.

தொடர்ந்து “நன்றி செலுத்துதல்“, புயலைப் பார்த்து புன்னகைக்க உங்கள் சிந்தனையை அமைதிப்படுத்துகிறது,காரணம் அது இயற்கைக்கு அப்பால் உங்களை பார்க்க செய்கிறது.

நன்றி செலுத்துதல்கிருபையைப் பெருக்குகிறது, இதனால் நீங்கள் தேவனிடமும், எல்லா மனிதர்களிடமும் தயவை பெறலாம்.

உங்களுக்காக தேவனின் வெளிப்படுத்தப்பட்ட விருப்பமான “நன்றி செலுத்துதல்“, ராஜ்யத்தின் வெற்றிக்கான திறவுகோல்களான இரகசியங்களை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறது. ஆமென் 🙏

என் அன்பானவர்களே, உங்களிடம் உள்ள அனைத்திலும், இருப்பவற்றிற்காகவும், இல்லாதவற்றிற்க்காகவும் தேவனுக்கு நன்றி செலுத்துங்கள் (உங்களிடம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அல்லது எவ்வளவு அற்பமாக இருந்தாலும்).
உங்களில் உள்ள கிறிஸ்து கிருபையை மகத்தான முறையில் பெருக்கி, எந்த சவாலையும் தைரியமாக எதிர்கொள்ளும்படி செய்து, நீங்கள் ஆட்சி செய்ய உங்களை மேன்மைப்படுத்துகிறார். அல்லேலூயா! .ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,நன்றி செலுத்துவதன் மூலம் அவருடன் ஆட்சி செய்யுங்கள்!

பரிசுத்த பிதாவே, உம்முடைய ராஜ்யம் வருவதாக!

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய மகிமையின்படி உங்கள் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்வதை அனுபவியுங்கள்!

26-11-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய மகிமையின்படி உங்கள் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்வதை அனுபவியுங்கள்!

8. அப்பொழுது அவருடைய சீஷரிலொருவனும், சீமோன் பேதுருவின் சகோதரனுமாகிய அந்திரேயா அவரை நோக்கி:
9. இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு, ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம் என்றான். யோவான்6:8-9 NKJV

நம் வாழ்வில் பெரும்பாலான நேரங்களில் நமது பிரச்சனையின் மிகுதியைப் பார்த்து அஞ்சி மற்றும் நம்மிடம் உள்ளவற்றின் சிறிதளவையும் பார்த்து நாம் அவதிப்படுகிறோம்.

இந்த மேற்கண்ட வேத பகுதியில் பிலிப்பு தன் மீது வைக்கப்பட்டுள்ள தேவையின் அளவைக் கண்டார் மற்றும் அந்திரேயா,தேவையை பூர்த்தி செய்வதற்கான தன்னிடம் கிடைத்துள்ள குறைவானதைக் கண்டார்.

ஆயினும்கூட, அவர்கள் இருவரும் தங்கள் மத்தியில்உள்ள மகிமையின் ராஜாவின் வல்லமையை காணத் தவறிவிட்டனர், அவர் தங்கள் எல்லாவற்றிலும் போதுமானவர் மற்றும் அவருடைய ராஜ்யம் எந்தக் குறைபாட்டாலும் பாதிக்கப்படுவதில்லை,ஏனென்றால் அவர் ஆசீர்வாதங்களை தனது செல்வத்தின்படி வழங்குகிறார் மாறாக நம் தேவைக்கு ஏற்ப அல்ல.

என் பிரியமானவர்களே,நமக்கு என்ன தேவை குறைவுபடுகிறது மற்றும் நம்மிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதை இயேசு நன்கு அறிவார்.

ஆனால், பரிசுத்த ஆவியின் மூலம் நித்திய வார்த்தையானைவரின் மகிமையைக் குறைத்து ஒரு மனிதனாக (இயேசு)மாற்றக்கூடிய இந்த தேவன்,அதே பரிசுத்த ஆவியின் மூலம் உங்கள் கற்பனைக்கு அப்பால் உங்களை மேம்படுத்த முடியும் என்பதும் உண்மை என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர் தேவன் – சர்வ வல்லமை படைத்தவர்!

5 அப்பங்களும் 2 மீன்களும் 5000 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் திருப்தி அடைந்தது தவிர12 கூடைகளுக்கு மேல் மிச்சம் எடுத்தனர்! அற்புதம்!! தேவன் நம் மத்தியில் இருக்கும் போது உண்மையில் சிறியதை அதிகமாக்குவார் !!

என் அன்பானவர்களே, மகிமையின் ராஜாவைப் பார்க்க மகிமையின் பிதாவானவர் உங்கள் கண்களை ஒளிரச் செய்யட்டும், இதனால் உங்கள் தேவைகளின் மிகுதியானது அவருடைய மகிமையின் ஒளியில் நிழலாக மாறும், மேலும் கிறிஸ்து உங்களில் உள்ள கொஞ்சம் மற்றும் பலவீனங்கள் அனைத்தையும் அவரது மகிமையில் இயேசுவின் நாமத்தில் விழுங்குவாராக. ஆமென் 🙏

அவருடைய நீதியானது அவருடைய வழங்கல் மூலம் ஒவ்வொரு கோரிக்கையையும் முறியடிக்கிறது!

சின்னவன் ஆயிரமாகவும், சிறியவன் இன்று பலத்த தேசமாகவும் ஆக்கப்படுகிறான்,ஏனென்றால் இயேசு உங்கள் நீதியாயிருக்கிறார்! நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாய் இருக்கிறீர்கள்.

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய மகிமையின்படி உங்கள் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்வதை அனுபவியுங்கள்.

பரிசுத்த பிதாவே, உம்முடைய ராஜ்யம் வருவதாக!

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!

grgc911

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய இயற்கைக்கு அப்பாற்பட்ட உதவியை இன்றே பெறுங்கள்!

25-11-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய இயற்கைக்கு அப்பாற்பட்ட உதவியை இன்றே பெறுங்கள்!

5.இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, திரளான ஜனங்கள் தம்மிடத்தில் வருகிறதைக் கண்டு, பிலிப்புவை நோக்கி:இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே கொள்ளலாம் என்று கேட்டார்.
6. தாம் செய்யப்போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக் கேட்டார்.
7.பிலிப்பு அவருக்குப் பிரதியுத்தரமாக: இவர்களில் ஒவ்வொருவன் கொஞ்சங்கொஞ்சம் எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்து அப்பங்களும் இவர்களுக்குப் போதாதே என்றான்.யோவான்-6:5-7

என் அன்பானவர்களே, இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் நாம் இருப்பதால், “உமது ராஜ்ஜியம் வருவதாக” என்ற நம் ஜெபத்தின் வல்லமையை அற்புதமான மற்றும் விவரிக்க முடியாத விதத்தில் பார்க்கப் போகிறோம்!

ஆண்டவராகிய இயேசு சென்ற இடமெல்லாம் தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றிப் பேசுவதைக் கேட்க திரளான மக்கள் கூடினர். சில சந்தர்ப்பங்களில் நகரங்களிலிருந்து மக்கள் இயேசுவைக் கேட்க நகரங்களிலிருந்து மக்கள் வனாந்திரமான இடத்தில் கூடினர் (மாற்கு 6:35). அப்படிப்பட்ட இடத்தில்
உணவை வாங்குவதற்கு போதுமான வசதிகள் இல்லை.

திரளான ஜனங்களுக்கு உணவளிக்க எங்கு உணவு வாங்கலாம் என்று கர்த்தராகிய இயேசு பிலிப்புவிடம் கேட்டார். ஐந்தாயிரத்திற்கும் அதிகமான மக்களை வனாந்திரத்தில் போஷிப்பது என்பது பிலிப்புவுக்கு பெரும் பிரச்சனையாக தோன்றியது.ஆனால்,கர்த்தர் பிலிப்புவைச் சோதித்தார்,ஏனென்றால் திரளான ஜனகூட்டத்தை எப்படி போஷிப்போம் என்பதை அவர் முன்பே அறிந்திருந்தார்.

என் அன்பானவர்களே, உங்கள் தேவையின் பரந்த தன்மையை நீங்கள் பார்ப்பதற்கு முன்பே, கர்த்தராகிய இயேசு நீங்கள் பார்ப்பதற்கு முன்பே தேவையைப் பார்த்திருக்கிறார், மேலும் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை அவர் ஏற்கனவே அறிந்திருக்கிறார். அல்லேலூயா!..

இந்த வாரம் என் நண்பர்களே, நீங்கள் உங்கள் வாழ்வில் உள்ள மாபெரும் தேவையை சந்திக்ககூடும்:அது ஒருவேளை திருப்பிச் செலுத்தவேண்டிய ஒரு பெரிய கடனாக இருக்கலாம்,செலுத்த வேண்டிய அதிகப்படியான கட்டணமாக இருக்கலாம்,வேலை செய்யும் இடத்தில் சந்திக்கும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு அல்லது அனைத்து முயற்சிகளையும் முறியடித்துவிட்டதாகத் தோன்றும் ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கலாம். விசுவாசத்தும் மேற்கொள்ளமுடியாத ஒரு பெரிய வியாதியாக இருக்கலாம். மகிழ்ந்து களிகூருங்கள் !மகிமையின் ராஜாவுக்கு என்ன செய்வது என்று தெரியும். அவருடைய ராஜ்யம் உங்கள் மீது வரும்போது உங்கள் தேவைக்கு அதிகமான ஆசீர்வாதங்களையும் எல்லா எதிர்பார்ப்புகளையும் தாண்டி உங்களுக்கு அபரிவிதமாக வழங்குவார். அவருடைய ராஜ்யம் வருவதாக! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய இயற்கைக்கு அப்பாற்பட்ட உதவியை
இன்றே பெறுங்கள்!

பரிசுத்த பிதாவே, உம்முடைய ராஜ்யம் வருவதாக!

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய உயர்த்தும் மகிமையின் மூலம் ஆளுகை செய்யுங்கள்!

22-11-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய உயர்த்தும் மகிமையின் மூலம் ஆளுகை செய்யுங்கள்!

3. எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்.
4. விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார். ரோமர் 10:3-4NKJV

இஸ்ரவேலுக்காக ஜெபிப்பது உங்களைப் பாதுகாக்கிறது மற்றும் சுய நீதியிலிருந்து உங்களைத் தடுக்கிறது!

சுய நீதி என்றால் என்ன?நியாயபிரமாணத்தைக் கடைப்பிடிக்க முயற்சிப்பதன் மூலம் தேவனுடன் சரியாக இருக்க முயற்சி செய்வதாகும்.பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை.(ரோமர் 3:20).
நாம் எவ்வளவு பாவமுள்ளவர்கள் என்பதை நியாயப்பிரமாணம் வெளிப்படுத்துகிறது. எந்த அளவுக்கு நியாயபிரமாணத்தைக் கடைபிடிக்க முயல்கிறோமோ அந்த அளவிற்கு தோல்வி அடைகிறோம்.
தேவனைப் பிரியப்படுத்த நான் எவ்வளவு அதிகமாக முயற்சிக்கிறேனோ, அவ்வளவு அதிகமாக என்னுடைய செயல்கள் மூலம் தேவன் பிரியப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்கிறேன்.
இதைக்குறித்து தான் பவுல் அழுது புலம்பினார், “ஐயோ, நான் என்ன ஒரு பரிதாபத்திற்குரியவன்! பாவமும் மரணமும் ஆதிக்கம் செலுத்தும் இந்த வாழ்க்கையிலிருந்து என்னை விடுவிப்பது யார்?” என்று ரோமர் 7:24 NLT கூறுகிறது.இது ஒரு பயங்கரமான தீய சுழற்சியாகும், இது சிலுவையில் கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் மட்டுமே முடிவுக்கு வந்தது.

சிலுவையில், நியாயபிரமாணத்தின் கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்பட்டது (நீதியானது), தேவனின் பரிசுத்தம் முழுமையாக உயர்த்தப்பட்டது மற்றும் தேவனின் அன்பு முழுமையாக வெளிப்படுத்தப்பட்டது. அல்லேலூயா! ஆமென்!

பாவத்தை என்றென்றும் நீக்கி,பாவியை அரவணைத்து, அவனை என்றென்றும் நீதியுள்ளவனாக அறிவிப்பதற்கான தேவனின் வழி இதுவே!

இதை தான் இஸ்ரவேல் தேசமானது இன்னும் புரிந்து கொள்ளவில்லை. அவர்களின் கண்களை மூடியிருக்கும் செதில்கள் உதிர்ந்து, அவர்கள் தங்கள் மேசியாவை இயேசுவின் நபரில் மட்டுமே பார்க்க வேண்டும் என்று ஜெபிப்பதே நமது பாரமாக இருக்கிறது!

என் பிரியமானவர்களே, ‘உமது ராஜ்யம் வருவதாக‘, என்பது உங்களது அனைத்து சோதனைகள் மற்றும் போராட்டங்களிலிருந்து உங்களைக் காப்பாற்ற, அவருடைய மகத்தான சிம்மாசனத்தில் அவருடன் என்றென்றும் ஆளுகை செய்ய உங்களை உயர்த்தி அவரது கிருபையைத் தருகிறது! ஆமென் 🙏

இஸ்ரவேல் தேசம் கிறிஸ்து இயேசுவில் தேவனுடைய நீதியாக இருக்கிறது!
நீங்களும் கிறிஸ்து இயேசுவில் தேவனின் நீதியாக இருக்கிறீர்கள்!
கிறிஸ்து இயேசுவில் உள்ள தேவனுடைய நீதியே உயர்த்தும் மகிமை!
அந்த உயர்த்தும் மகிமையை இன்றே அனுபவியுங்கள்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய உயர்த்தும் மகிமையின் மூலம் ஆளுகை செய்யுங்கள்!

பரிசுத்த பிதாவே, உம்முடைய ராஜ்யம் வருவதாக!

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் மூலம் ஆளுகை செய்யுங்கள்!

21-11-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் மூலம் ஆளுகை செய்யுங்கள்!

சகோதரரே, இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச் செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது. ரோமர் 10:1 NKJV
4.அவர்கள் இஸ்ரவேலரே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே;
5.பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென்.ரோமர் 9:4-5 NKJV

விசுவாசத்தின் மூலம் கிருபையால் இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு விசுவாசியும் இஸ்ரவேலை ஆசீர்வதிக்க வேண்டும் என்ற தார்மீகப் பொறுப்பு இருக்கிறது!

ஆபிரகாமுக்கு தேவன் அருளிய ஆசீர்வாதமானது, இஸ்ரவேல் மூலம் பூமியின் முகாந்திரத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் ஆசீர்வதிப்பதாகும்.(ஆதியாகமம் 12:2-3).
தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இஸ்ரவேல் மூலமாக மனித குலத்திற்கு அனுப்பினார்.
முழு வேதத்தில் நாம் கண்ட அனைத்து வாக்குறுதியும்,மேலும் நாம் அனுபவித்த மற்றும் அனுபவித்துக்கொண்டிருக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் இஸ்ரேலின் நிமித்தமாக நமக்கு கிடைத்தன.
இஸ்ரவேலினால் எல்லா தேசங்களுக்கும் இரட்சிப்பு வந்தது.அல்லேலூயா! ஆமென்!

இன்று, நாம் காணும் உலகத்தில்,இஸ்ரவேல் இன்னும் தங்கள் மேசியா வருவார் என்று எதிர்பார்க்கிறது. ஆனால்,அவர் ஏற்கனவே வந்து, பிதாவின் சித்தத்தை பூமியில் நிறைவேற்றி தேவனின் வலது பாரிசத்தில், மகிமையின் ராஜாவாக பரலோகத்தில் அமர்ந்திருக்கிறார் என்பதை அறியாமல் அவர்கள் கண்கள் மூடப்பட்டிருக்கிறது!

ஆகையால், அவர்கள் தங்கள் மேசியாவை நிராகரித்தார்கள் என்பது உண்மைதான், இப்போது இரட்சிப்பு உலகிற்கு வந்துவிட்டது. _அதேபோல், இஸ்ரவேலர் இயேசுவை மேசியாவாக ஏற்றுக்கொள்ளும் போது யூதர்கள் அல்லாத அனைத்து விசுவாசிகளுக்கும் “அபரிவித ஆசீர்வாதங்கள்” வரும் என்பதும் உண்மைதான், அவர்களுடைய தவறு உலகத்திற்கு ஐசுவரியமும், அவர்களுடைய குறைவு புறஜாதிகளுக்கு ஐசுவரியமுமாயிருக்க, அவர்களுடைய நிறைவு எவ்வளவு அதிகமாய் இருக்கும். ரோமர் 11:12.

என் பிரியமானவர்களே, எருசலேம் மற்றும் இஸ்ரவேலின் சமாதானத்திற்காகவும், அவர்கள் இரட்சிக்கப்படுவதற்காகவும் நாம் ஜெபிக்கும்போது, தேவன் நம் வாழ்வில் எண்ணற்ற ஆசீர்வாதங்களைத் தருகிறார்.(சங்கீதம் 122:6). ஆமென்!
இஸ்ரவேலர் மீதுள்ள பகுதியளவு குருட்டுத்தன்மை நீங்கும்படி நாம் ஜெபிக்க வேண்டும்,அதனால் அவர்கள் தங்கள் கண்களால் கண்டு, தங்கள் காதுகளால் சத்தியத்தை கேட்டு, தங்கள் இதயங்களால் புரிந்துகொண்டு குணமடைய வேண்டும். (ரோமர் 11:25,26 , ஏசாயா 6:10). ஆமென் !

இஸ்ரவேல் தேசமானது கிறிஸ்து இயேசுவில் உள்ள தேவனுடைய நீதியாயிருக்கிறது என்று அறிக்கையிடுவோமாக! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் மூலம் ஆளுகை செய்யுங்கள்.

பரிசுத்த பிதாவே, உம்முடைய ராஜ்யம் வருவதாக!

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் அவருடைய நீதியால் ஒளிவீசுங்கள்!

20-11-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் அவருடைய நீதியால் ஒளிவீசுங்கள்!

32. நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார். லூக்கா 22:32NKJV.

தேவனுடைய ராஜ்ஜியம் வருவதன் நோக்கம் உங்கள் சக மனிதர்களுக்கு நீங்கள் உதவுவதாகும். நீங்கள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்.
தேவன் உங்களை கடன்களிலிருந்தும், நோய்களிலிருந்தும், மரணத்திலிருந்தும் விடுவிக்கிறார், அதனால் நீங்கள் உங்கள் அயலாரையும் அதே சோதனையில் உள்ள மற்றவர்களையும் விடுவிக்க தேவனின் கருவியாக இருப்பீர்கள்.

நாம் எதிர்கொள்ளும் சோதனைகள் நம் வாழ்க்கைப் படகை மூழ்கடிப்பது போல் தோன்றலாம், ஆனால் அது அவருக்கு மகிமை உண்டாக்கி நம்மை உயர்த்துவதாகும், சேற்றிலிருந்து நம்மை உடனடியாக உயரத்தில் அவரது மாட்சிமையுடன் அமரும்படி மறுரூபமடைய செய்கிறது. சூழ்நிலைகளின் காரணமாக மூழ்கும் உங்கள் சகோதரன் அல்லது சகோதரியும் கூட உயர்த்தபட வேண்டும் என்ற நோக்கத்துடன் பலப்படுத்தப்பட்டு மகிமையின் ராஜாவை அனுபவிக்க அழைக்கப்படுகிறீர்கள்.

“உமது ராஜ்யம் வருவதாக” என்பது செழிப்பான ஆத்துமாக்களால் பரலோகத்தை நிரப்பி பாதாளத்தை கொள்ளையடிப்பது ஆகும்.

ஆம் என் அன்பிற்குரியவர்களே, நமது அன்பான பிதாவின் கரங்களில் உங்களை ஒப்படைத்து விடுங்கள், நீங்கள் பிதாவிடமிருந்து பெறும்போது உங்களின் அனைத்து தொடர்புகளுக்கும் (குடும்பம், நண்பர்கள், அந்நியர்கள்) கொடுக்கிறீர்கள்.

சில சமயங்களில், நீங்கள் மற்றொரு ஆத்துமாவிற்கு தண்ணீர் ஊற்றும்போது உங்கள் அற்புதத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள் (“தாராள மனப்பான்மை ஐசுவரியமாக்கப்படும், மேலும் தண்ணீர் பாய்ச்சுபவர் தானும் பாய்ச்சப்படுவார்.” நீதிமொழிகள் 11:25).

பரலோகத்திலுள்ள உங்கள் பிதாவை மக்கள் மகிமைப்படுத்துவதற்காக உங்களில் உள்ள அவருடைய நீதி உங்களைச் சுற்றியுள்ள எல்லா உயிர்களுக்கும் பரவட்டும் (மத்தேயு 5:16).ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் அவருடைய நீதியால் ஒளிவீசுங்கள்.

பரிசுத்த பிதாவே, உம்முடைய ராஜ்யம் வருவதாக!

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவரிடமிருந்து ஆட்சியைப் பெற்றுக்கொள்ளுங்கள்!

19-11-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவரிடமிருந்து ஆட்சியைப் பெற்றுக்கொள்ளுங்கள்!

9. நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;
10. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.மத்தேயு 6-9,10 NKJV

“உம்முடைய ராஜ்யம் வருவதாக”என்று நாம் கூறும்போது பரலோக பிதா வீட்டில், இராணுவம் போன்ற ஆட்சியை ஏற்படுத்த தம்மை ஈடுபடுத்துவதில்லை மாறாக அது,பரிசுத்த ஆவியில் நீதி,சமாதானம் மற்றும் மகிழ்ச்சியின் ராஜ்யம்,போட்டி,மன அழுத்தம் மற்றும் பயம் ஆகியவற்றின் ராஜ்ஜியம் அல்ல.அது உங்கள் மீது பிதா அருளுகிற அன்பின் ராஜ்யம்.

பிதாவின் ராஜ்யத்தில் உள்ள மதிப்பீட்டு முறையானது, நீங்கள் அவரிடமிருந்து எவ்வளவு பெற்றுள்ளீர்கள் என்பதைச் சரிபார்ப்பதாகும் அவருடைய தயவு, அவருடைய நீதி, அவருடைய நிபந்தனையற்ற அன்பு ஆகியவைப் பொருந்தும்,மாறாக நீங்கள் அவருக்கு எவ்வளவு கொடுத்தீர்கள் என்பது அல்ல.
பிதாவின் முன் உங்கள் வளர்ச்சியின் அளவீடு அவரிடமிருந்து நீங்கள் எவ்வளவு பெற்றுள்ளீர்கள் என்பதுதான்.

ஏனென்றால், நீங்கள் எப்போது இலவசமாகப் பெறுகிறீர்களோ, அப்போது நீங்கள் தாராளமாக கொடுக்கலாம். பிதாவிடமிருந்து பெறாமல், நம் சக மனிதனை உண்மையாக ஆசீர்வதிக்க முடியாது. பிதாவுடனான உங்கள் செங்குத்து உறவு சரியாக அமைந்தால், மற்ற எல்லா உறவுகளும் சரியான இயக்கத்தில் அமைக்கப்படும்.

தேவன் உலகத்தை மிகவும் நேசித்தார், அவர் தம்முடைய ஒரே குமாரனாகிய இயேசுவை நமக்காக ஜீவபலியாக கொடுத்தார். நீங்கள் அவரிடமிருந்து பெறும்போது பிதாவாகிய தேவன் மதிக்கப்படுகிறார் – அவருடைய ராஜ்யம் வந்து அவருடைய நாமத்தை புனிதமாகவும், மிகவும் கௌரவமாகவும், மேன்மையாகவும் ஆக்குகிறது.

உண்மையான சுதந்திரம் என்பது அவருடைய ராஜ்யத்திலிருந்து பெறுவதே!

அவருடைய அபரிவிதமான கிருபையையும், நீதியின் வரத்தையும் பெற்று, உண்மையான சுதந்திரத்தையும் ஆட்சி அதிகாரத்தையும் அனுபவியுங்கள். ஆமென் 🙏

பரிசுத்த பிதாவே, உம்முடைய ராஜ்யம் வருவதாக!

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பிதாவின் அன்பையும் பராமரிப்பையும் அனுபவியுங்கள்!

18-11-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பிதாவின் அன்பையும் பராமரிப்பையும் அனுபவியுங்கள்!

9. நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக;
10. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.மத்தேயு 6-9,10 nkjv

என் பிதாவுக்கு பிரியமானவர்களே,நம்முடைய கர்த்தராகிய இயேசு செய்த பிரதான ஜெபமானது பிதாவின் ராஜ்யத்தை அழைப்பதை வலியுறுத்துகிறது. இருப்பினும் ஜெபமானது, “பரலோகத்திலுள்ள எங்கள் பிதாவே..” என்று தொடங்குகிறது.

பரலோக ராஜ்யம் பூமியில் முக்கிய பங்கு வகிக்கிகிறது,எனவே,எல்லா வகையிலும் பிரார்த்தனையானது ராஜ்யத்தின் ராஜாவை நோக்கி செலுத்தப்பட வேண்டும்.ஆனால்,பிதாவாகிய தேவன் ராஜாவாக இருந்தாலும், நமக்கு பிதா என்றஉறவு முக்கியமானது.எனவே, “பரலோகத்திலுள்ள எங்கள் பிதா”என்று அவரை அழைக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

இந்த கூற்றானது நமது புரிதலை ஒளிர செய்கிறது! பல சமயங்களில் நாம் எதிர்கொள்ளும் பெரிய பிரச்சனைகளை மட்டுமே தேவனிடம் கொண்டு வந்து சர்வவல்லமையுள்ள தேவனால் தீர்க்கப்பட வேண்டும் என்று நினைக்கிறோம்.அற்பமான விஷயங்களை அவரிடம் கொண்டு செல்ல கூடாதென்றும் அது அவருக்கு முக்கியத்துவம் இல்லாதிருக்கலாம் என்றும் நினைக்கிறோம்.

ஆனால், தேவன் நம் தந்தையாக,அப்பா பிதாவாக இருக்கும்போது,நம்முடைய பெரிய அல்லது சிறிய, குறிப்பிடத்தக்க அல்லது முக்கியமற்ற எல்லா பிரச்சினைகளிலும் அவரை உதவிக்கு அழைக்க முடியும். பிரார்த்தனைக்காக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய விஷயங்கள் அல்லது யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாத விஷயங்கள். மிகவும் அந்தரங்கமானவை – அவை அனைத்தையும் நம் பிதாவாகிய தேவன் அறிந்திருக்கிறார். மேலும் இவை அனைத்திலும் ஈடுபடவும் அதை மிக நுணுக்கமாக தீர்த்து வைப்பதும் அவர் சித்தமாக இருக்கிறது.நன்றி அப்பா!

என் அன்பானவர்களே, இந்த வாரம் பரலோகத் தகப்பன் உங்களுக்காக அவர் காட்டும் அக்கறையை வெளிப்படுத்துகிறது. “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்பது நாம் சாதாரணமாக நினைப்பது போல் ஒரு நிர்வாக மற்றும் பொதுவான விஷயம் அல்ல,மாறாக அது நீதி நிறைந்தது, அமைதி மற்றும் பரிசுத்த ஆவியில் மிகுந்த மகிழ்ச்சி நிறைந்தது. உங்கள் பிதாவாகிய தேவன் ஈடுபடும்போது அது ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஆமென் !

வாழ்க்கையின் மிக அற்பமான பிரச்சனைகளுக்கு கூட தீர்வு பெறுவது இந்த வாரம் உங்கள் சாட்சியாக இருக்கட்டும்.தயவு உங்களை ஒரு கேடயமாக சூழ்ந்துள்ளது.அவருடைய நீதியானது ஒவ்வொரு கோணலான பாதையையும் நேராக்க உங்களுக்கு முன் செல்கிறது. அவருடைய மகிழ்ச்சியே உங்கள் பலம்!ஆமென் மற்றும் ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பிதாவின் அன்பையும் பராமரிப்பையும் அனுபவியுங்கள்.

பரிசுத்த பிதாவே, உம்முடைய ராஜ்யம் வருவதாக!

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!