Author: vijay paul

g13

மகிமையின் ராஜாவாகிய இயேசுகிறிஸ்துவை சந்தித்து,அவருடைய மிகுதியான கிருபையை அனுபவியுங்கள்!

12-07-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுகிறிஸ்துவை சந்தித்து,அவருடைய மிகுதியான கிருபையை அனுபவியுங்கள்!

15. ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது. ரோமர் 5:15 NKJV‬‬

ஒரு பயங்கரமான தொற்றுநோயாக இருந்த கோவிட்-19 இன் காலத்தில்,பலர் பாதிக்கப்பட்டனர் மற்றும் சிலர் மரணத்தை சந்தித்தனர்.இந்த தொற்று மிகவும் கொடியதாய் பரவியது மற்றும் சாதி, மதம், நிறம் அல்லது சமூகம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து நாடுகளுக்கும் கட்டுப்பாடற்ற தீயாக பரவியது.
ஆனால் இந்த காற்றில் பரவும் நோயை தனது வலிமைமிக்க கரத்தால் தடுத்து நிறுத்திய தேவனுக்கு நன்றி!

அதுபோலவே பாவமும் மரணமும் தொற்றக்கூடியது.ஆதாம் முதல் எல்லாத் தலைமுறைகளிலும், காலங்களிலும் எல்லா மனிதர்களுக்கும் பரவி,இந்த பாவத்திற்கு பரிகாரமே இல்லை என்ற சூழ்நிலை தோன்றியபோது, தேவன் இந்த உலகத்தின் மேல் கொண்ட அதீத அன்பின் காரணமாக, தம்முடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசுவை பூமிக்கு அனுப்பி கொடூரமாக பரவி வரும் இந்த பாவத்தின் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதற்காகவே தன் மகனை பலியாக ஒப்புக்கொடுத்தார்.
கர்த்தராகிய இயேசு,பூமியில் வாழ்ந்த காலத்தில் எல்லா நேரங்களிலும் எல்லா விஷயங்களிலும் தேவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்ததால், நமக்கு கிருபையானார். தகுதியற்றவர்களாகிய நமக்கு நிபந்தனையற்ற, மற்றும் உழைத்து பெறமுடியாத கிருபையானார்.
பரிசுத்த ஆவியயாகிய (DOREAH),நீதியின் வரமாகிய நபரின் காரணமாக நமக்கு வந்த கிருபை நமக்குள் கிருபையாய் இருக்கிறார்.

என் அன்பு நண்பர்களே,”எண்கணித முன்னேற்றத்தில்”(ARITHMETIC PROGRESSION ) பாவம் பரவினால் (புற்றுநோயைப் போல வேகமாக பரவினால்), தேவகிருபையானது “வடிவியல் முன்னேற்றத்தில்” (GEOMETRIC PROGRESSION)அதை விட அதிகமாக பரவுகிறது,அதனால் மரணமானது வெற்றியில் விழுங்கப்படும் இதன்நிமித்தம் கிறிஸ்துவின் வாழ்க்கை உங்களுக்குள் ஆளுகை செய்கிறது. ஆமென் !!

“நீங்கள் இருக்கும் ஆழமான குழியை விட இயேசு ஆழமானவர்”.

மகிமையின் ராஜாவாகிய இயேசுகிறிஸ்துவை சந்தித்து,அவருடைய மிகுதியான கிருபையை அனுபவியுங்கள்.

நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றி!

கிருபை நற்செய்தி பேராலயம்  !

img_106

மகிமையின் ராஜாவாகிய இயேசுகிறிஸ்துவை சந்தித்து,அவருடைய பரிசுத்த ஆவியால் பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

10-07-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுகிறிஸ்துவை சந்தித்து,அவருடைய பரிசுத்த ஆவியால் பூமியில் ஆளுகை செய்யுங்கள்!

17.அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே,அந்த ஒருவன்மூலமாய்,மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே. ரோமர் 5:17 NKJV‬‬

முதல் மனிதனின் (ஆதாமின்) குற்றத்தால் பரிசுத்த ஆவியானவர் ஆதாமை விட்டு வெளியேறினார், தேவனின் மகிமை வெளியேறியதின் நிமித்தமாக ஆதாமும், ஏவாளும் தங்களை நிர்வாணமாக இருப்பதை உணர்ந்தனர்.அதனிமித்தம் – தேவனின் நீதியையும் இழந்து,தேவனுடன் சரியாக நிற்கும் தகுதியையும் இழந்து,மற்றும் தேவன் மனிதகுலத்திற்கு கொடுத்த ஆதிக்கத்தையும் (கிரீட மகிமையையும் ) தவறிவிட்டனர். மரணம் புதிய ஆட்சியாளராக மாறியது (மரணம் ஆட்சி செய்தது).
எனவே, மனிதகுலம் இழந்த மூன்று காரியங்கள் -அ) பரிசுத்த ஆவி, ஆ) தேவ நீதி மற்றும் இ) ஆதிக்கம்.

ஆனால் தேவனின் அன்பானது இந்த மூன்றையும் மனிதகுலத்திற்கு மீட்டுக்கொடுக்க தம்முடைய குமாரனாகிய இயேசுவை அனுப்பியது..இயேசு கிறிஸ்துவாகிய கர்த்தர்,தம்முடைய பாவமற்ற நிலை மற்றும் பிதாவின் சித்தத்திற்கு முழுமையாக கீழ்ப்படிந்ததின் மூலம்,ஒவ்வொரு மனிதனுக்கும் இழந்ததான – பரிசுத்த ஆவியானவர்,தேவ நீதி மற்றும் தேவன் கொடுத்த ஆதிக்கம் ஆகியவற்றை மீட்டுக்கொடுத்தார் . இதில் நற்செய்தி என்னவென்றால், ஆதாமின் மூலம் மனிதன் இழந்ததை விட இயேசுவின் மூலம் மீட்டெடுத்த காரியங்கள் மிகப் பெரியது. இன்று பரிசுத்த ஆவியானவர் என்றென்றும் உங்களுடன் தங்கியிருப்பார், இதன் விளைவாக நீங்கள் என்றென்றும் நீதிமான்களாக இருப்பீர்கள் மற்றும் என்றென்றும் ஆளுகை செய்வீர்கள்.

ஆகவே, என் அன்பானவர்களே,பரிசுத்த ஆவியானவரே உங்களை என்றென்றும் நீதிமான்களாக்கி, இயேசுவின் நிமித்தம் அனைத்து இருளின் அந்தகார சக்திகளையும் ஆளுகிறார்.
பரிசுத்த ஆவியானவர் உங்கள் நெருங்கிய நண்பராக இருக்கட்டும். இன்றே அவரை உங்கள் வாழ்வில் அழையுங்கள்,அவரைப் பொக்கிஷமாகக் கருதுங்கள்,அவரோடு பேசிக்கொண்டே இருங்கள்.அப்பொழுது, நீங்கள் ஒருபோதும் இருந்த வண்ணமாக இருக்க மாட்டீர்கள். அல்லேலூயா! ஆமென் !!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய பரிசுத்த ஆவியால் பூமியில் ஆளுகை செய்யுங்கள்.

எங்கள் நேர்மை இயேசுவை போற்றுங்கள் !!
கிரேஸ் புரட்சி நற்செய்தி தேவாலயம்

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவர் மனிதனாக செய்த தியாகத்தினால் பூமியில் ஆளுகை செய்கிறோம்!

08-07-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவர் மனிதனாக செய்த தியாகத்தினால் பூமியில் ஆளுகை செய்கிறோம்!

17. அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே,அந்த ஒருவன்மூலமாய்,மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே. ரோமர் 5:17 NKJV‬‬

நீதியின் வரம் மற்றும் கிருபையின் மிகுதியைப் பெறும்போது,நாம் வாழ்வில் ஆளுகை செய்கிறோம்,வரம் மற்றும் கிருபையானது இரண்டும் சம்பாதிக்க முடியாதது,உழைக்க முடியாதது மற்றும் நிபந்தனையற்றவை என்பதாகும்.

இது நமக்கு நிபந்தனையற்றது மற்றும் சம்பாதிக்க முடியாதது என்றாலும், கர்த்தராகிய இயேசு தம் உயிரையே விலையாக செலுத்தியதால் தான் நாம் அதை பெற்றுக்கொள்ள முடிந்தது.இதற்காகவே அவர் தேவனாக இருந்து நம்மைப் போல மனிதனாக மாற முடிவு செய்தார்.அவர் பாவம் அறியாதபோதும் பாவம் செய்யாதபோதும் பாவிகளுக்கான ஞானஸ்நானத்திற்கு அடிபணிந்தார் (மத்தேயு 3:6). நாம் வெற்றிபெற அவர் பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு தன்னை அனுமதித்து நமக்கு வெற்றியளித்தார்.நமக்காகவே மரிக்க அவர் கல்வாரிக்குச் சென்றார்,ஆகையால் பாவமும் மரணமும் மனிதகுலத்தின் மீது சட்டப்பூர்வமாக உரிமை கோரமுடியாது. அல்லேலூயா!

இவற்றின் சாராம்சம் என்னவென்றால்,தேவனின் பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொள்வதற்கு இயேசுவின் முழுமையான கீழ்ப்படிதல் தேவைப்பட்டது,அந்த தேவனின் கிருபையையும் அவருடைய நீதியாகிய பரிசையும் நம் வாழ்வில் கொண்டு வந்து,நம்மை ஆளுகை செய்ய வைக்கிறது.

என் அன்பானவர்களே, நாம் தேவனிடமிருந்து எல்லாவற்றையும் பெறுகிறோம்,ஏனென்றால் நாம் தகுதியானவர் என்பதால் அல்ல,ஆனால் இயேசு தகுதியானவர் என்ற காரணத்தினால் தான்.அல்லேலூயா! இந்த எண்ணம் நாம் மனதில் கொண்டால் அது தேவனின் பொக்கிஷமான உடைமைகளைத் திறக்கிறது,மனிதனின் வாழ்க்கையில் தகுதியற்ற அனுகூலத்தைப் பொழிகிறது. மேலும் இந்த எண்ணம் உங்களை ஒரு வெற்றியாளரைவிடவும், எப்போதும் தெய்வீகமாகவும், நித்தியமாகவும், தோற்கடிக்கமுடியாதததாகவும், அழியாததாகவும்,பரிசுத்த ஆவியான்வரின் மூலம் எவராலும் வெல்ல முடியாதவராகவும் மாற்றுகிறது!!! ஆமென் !! 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவர் மனிதனாக செய்த தியாகத்தினால் பூமியில் ஆளுகை செய்கிறோம்.

கிருபை நற்செய்தி  !

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை துன்பத்தின் மத்தியில் சந்தித்து வெற்றியாளராக மாறுங்கள்!

05-07-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை துன்பத்தின் மத்தியில் சந்தித்து வெற்றியாளராக மாறுங்கள்!

18. பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளிந்தது.
19. அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் தண்டுவலித்துப் போனபொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படவுக்குச் சமீபமாய் வருகிறதைக் கண்டு பயந்தார்கள்.
20. அவர்களை அவர் நோக்கி: நான்தான், பயப்படாதிருங்கள் என்றார்.
21. அப்பொழுது அவரைப் படவில் ஏற்றிக்கொள்ள மனதாயிருந்தார்கள்; உடனே படவு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது. யோவான் 6:18-21 NKJV

காற்று பலமாக அடித்தது, கடல் சீற்றத்தோடு காணப்பட்டது, இயேசுவின் சீஷர்கள் பயணம் செய்த படகு ஏறக்குறைய கவிழ்ந்துவிடுவதுபோல் அச்சுறுத்தியது.

திடீரென்று, இயேசு தண்ணீரின் மேல் நடந்து, தங்களை நோக்கி வருவதைக் கண்டார்கள். இரவில் இருள் சூழ்ந்திருந்ததால், அவர் சீஷர்களின் ஆத்துமாவின் நேசர் என்பதை அவர்களால் அடையாளம் காண முடியவில்லை.

அவர்களின் பிரச்சனைகளுக்கு மத்தியில் இரண்டு விஷயங்கள் நடந்தன:
1. அவர்கள் தங்கள் கஷ்டத்தின் மத்தியில் இயேசுவைக் கண்டார்கள்.அவர் கடலில் மேல் நடப்பதைக் கண்டார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சீஷர்கள் பிரச்சனையின் ஊடாக கடந்து சென்றபோது இயேசு அவர்களின் பிரச்சினையின் மீது நடந்து வந்தார்.
2. அவர்கள் இயேசுவை மனமுவந்து தங்கள் படகில் ஏற்றியபோது, ​காற்று உடனே நின்றது, உடனே அவர்கள் தங்கள் இலக்கை அடைந்தனர்.

என் பிரியமானவர்களே, உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும்,நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசு உங்கள் பிரச்சனையின் மீது நடந்து வருகிறார் என்பதை நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள்.அவர் உங்கள் பற்றாக்குறையின் மீது நடக்கிறார்,அவர் உங்கள் நோயின் மீது நடக்கிறார்,அவர் எல்லா மன அழுத்தத்தையும் கடந்து செல்கிறார்.ஒவ்வொரு பிரச்சனையும் அவருடைய பாதபடியாகும்.மேலும்,நீங்கள் அவருடைய சரீரமாக இருப்பதால் அது உங்கள் காலடியிலும் பணிந்துகொள்ளும் மற்றும் நீங்கள் அவை களை ஆளுகை செய்கிறீர்கள்!

தற்சமயம் நீங்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளுக்கு மத்தியில் அவரைக் காண வேண்டிக்கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய வார்த்தையை விரைவுபடுத்தி உங்களுக்கு இயேசுவை வெளிப்படுத்துவார். உங்கள் பிரச்சனையின் நடுவே இயேசுவின் வெளிப்பாடே பிரச்சனைக்கு தீர்வாகும்!

சீஷர்களைப் போலவே, கிருபையையும், நீதியின் வரத்தையும் பெறுங்கள்,அப்போது,காற்று ஓய்வது போல, உங்கள் பிரச்சினையும் நின்று, நீங்கள் விரும்பிய இலக்கை இன்றே அடைவீர்கள்.இயேசு கிறிஸ்துவே கிருபை மற்றும் அவர் உங்கள் நீதியாகிய யெகோவா.அவரை ஏற்றுக்கொள்ளும்போது நீங்கள் ஒரு வெற்றியாளரை விட அதிகமானவராயிருக்கிறீர்கள்! அல்லேலூயா!ஆமென் !! 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை துன்பத்தின் மத்தியில் சந்தித்து வெற்றியாளராக மாறுங்கள்.

கிருபை நற்செய்தி  !

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் ஆளுகை செய்ய நிலைநிறுத்தப்படுங்கள்!

04-07-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் ஆளுகை செய்ய நிலைநிறுத்தப்படுங்கள்!

1. இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.
2. அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம். ரோமர் 5:1,2 NKJV‬‬

கிறிஸ்துவோடும், கிறிஸ்துவுக்குள்ளுமான உங்கள் நிலைப்பாடு (POSITION) பாதுகாப்பானது மற்றும் நிரந்தரமானது,அதேசமயம் தற்போது இருக்கும் உங்கள் நிலை தற்காலிகமானது மற்றும் மாறிக்கொண்டே இருக்கிறது.ஏனென்றால் உங்கள் தற்போதைய நிலை உங்கள் உணர்வுகள்,உண்மைகள் அடிப்படையாகக் கொண்டது மற்றும் நீங்கள் செய்ததின் பிரதிபலன்.
ஆனால்,தேவனோடு அல்லது தேவனில் உங்கள் நிலைப்பாடு முற்றிலும் கிறிஸ்து உங்களுக்காகச் செய்ததை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் உணர்வு மற்றும் உண்மையை சார்ந்தது அல்ல.ஏனென்றால் தேவன் எப்போதும் கிறிஸ்துவில் உங்களைக் காண்கிறார்.

தேவன் உங்களைப் பற்றிய நல்ல எண்ணத்தை ஒருநாளும் மாற்றுவதில்லை. உங்களுக்காகவே இவ்வுலகில் வந்து,உங்களுக்காகவே மரித்து,உங்களுக்காகவே அடக்கம் செய்யப்பட்டபடியால் இயேசுவின் நிமித்தம் தேவன் எப்போதும் உங்களைப் பற்றி நல்லதையே நினைக்கிறார்,உங்களைப் பற்றி நன்மையானவைகளையே பேசுகிறார்,எப்போதும் உங்களுக்குச் சிறந்ததையே செய்கிறார். அவர் உங்களுக்காக மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார், மேலும் அவர் உங்களை தன்னோடு கூட இடங்களில் பிதாவின் வலது பாரிசத்தில் நிலைநிறுத்தி இருக்கிறார்.

எனவே, உங்கள் தற்போதைய சூழ் நிலையை (POSITION)ஐ வைத்து உங்கள் நிலையை மதிப்பிடாதீர்கள்,ஆனால் எப்போதும் உங்கள் தற்போதைய நிலையை அவரோடு நிற்க்கும் நிலையை (POSITION)வைத்து மதிப்பிடுங்கள்.
உங்கள் தற்போதைய நிலையை உண்மையானதாக மாற்றும் சவால்கள் வரும்போது, மிகுதியானகிருபையையும், நீதியின் பரிசையும் பெற்றுக்கொண்டு ,அதை வாய்மொழியாக அறிக்கையிடுங்கள்,அப்போது நீங்கள் பூமியில் ஆளுகை செய்ய நிலைநிறுத்தப்படுவீர்கள். அல்லேலூயா!ஆமென் !! 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் ஆளுகை செய்ய நிறுவப்படுவதை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி  !

img_134

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் ஆளுகை செய்யும் மகிமையை அனுபவியுங்கள்!

03-07-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் ஆளுகை செய்யும் மகிமையை அனுபவியுங்கள்!

17. அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே. ரோமர் 5:17 NKJV‬‬

இதோ ஒரு அழகான வாக்குறுதி வசனம்,
உங்கள் கடந்த காலத்தையும் கிறிஸ்துவில் உங்கள் தற்போதைய நிலைப்பாட்டையும் வேறுபடுத்துகிறது
அல்லது
கடந்த காலத்தில் யாரோ ஒருவர் அளித்த தீர்ப்பு பிழையின் விளைவாக ஏற்பட்ட உங்கள் பரிதாபகரமான தற்போதைய நிலைக்கும்,இயேசுவின் நிமித்தம் தேவன் உங்களுக்கு அளித்த உங்கள் தற்போதைய நிலைப்பாட்டிற்கும் இது முரண்பாட்டை விவரிக்கிறது.

ஆம் என் அன்பானவர்களே,கடந்த காலத்தில் நீங்கள் செய்த தவறுகளுக்கு பலியாகி இருக்கலாம் அல்லது மூதாதையரின்,பெற்றோரின் தீய செயலினாலோ அல்லது நீங்கள் வசிக்கும் நாட்டின் மோசமான பொருளாதார நிலையினாலோ அல்லது கடந்த காலத்தின் பிற துன்பங்களினாலோ நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
ஆனால் நல்ல செய்தி என்னவென்றால், ஜாதி, கலாச்சாரம், நிறம், மதம், சமூகம், நாடு அல்லது கண்டம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல்,எல்லா மக்களும் (நீங்களும் நானும் உட்பட) நீதிமான்களாக மாற வேண்டும் என்பதற்காக,இயேசு கிறிஸ்து பாவமாகவும், சாபமாகவும் மாறினார். அவருடைய தியாகத்தின் நிமித்தம் தேவனின் பார்வையில் நாம் என்றென்றும் நீதியுள்ளவர்களாக பார்க்கப்படுகிறோம் மற்றும் நம்மை விட்டு நீங்க முடியாத ஆசீர்வாதங்களினால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். ஆமென்!

உங்கள் தற்போதைய நிலை தற்காலிகமானது,அது எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம் ஆனால் உங்கள் நிலைப்பாடு – அதாவது கிறிஸ்து மற்றும் கிறிஸ்துவுடனான உங்கள் நிலை பாதுகாப்பானது . அது நித்தியமானது யாராலும் மாற்ற முடியாதது.

உங்கள் கசப்பான கடந்த கால அல்லது பரிதாபகரமான தற்போதைய நிலையை தேவன் ஏற்கனவே உங்களுக்கு வைத்த ஒரு அற்புதமான நிகழ்கால நிலைக்கு மாற்றுவதற்கு நீங்கள் அவருடைய பரிபூரண கிருபையையும் நீதியின் பரிசையும் பெற்றுக்கொள்ளவேண்டும்

நான் செய்ய வேண்டியதெல்லாம் “கிருபையின் மிகுதியையும் நீதியின் வரத்தையும் பெறுகிறேன்,நான் ஆளுகை செய்கிறேன்”என்று கூறி தொடர்ந்து கிருபையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.அப்போது,நம்மை கடன் ஆள முடியாது,மரணம் ஆள முடியாது, நோய் ஆள முடியாது,மனச்சோர்வு ஆள முடியாது,தோல்வி ஆள முடியாது,நாட்டின் பொருளாதார வீழ்ச்சி ஆள முடியாது,வறுமை ஆட்சி செய்ய முடியாது,ஆனால் கிருபையின் மிகுதியால் நான்ஆளுகை செய்வேன் மற்றும் இயேசுவின் நாமத்தில் நீதியின் பரிசால் ஆளுகை செய்கிறேன்.!” ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் ஆளுகை செய்யும் மகிமையை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி  !

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் ஆளுகை செய்யும் மகிமையை அனுபவியுங்கள்!

02-07-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் ஆளுகை செய்யும் மகிமையை அனுபவியுங்கள்!

17. அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே.ரோமர் 5:17 NKJV‬‬

மகிழ்ச்சியான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட ஜூலை மாத வாழ்த்துக்கள்!

இந்த மாதம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தேவன் ஒரு “மிகுதியான ஆசீர்வாதத்தை”கட்டளையிட்டுள்ளார்.

ஆம்,கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,இந்த மாதம் உங்கள் வாழ்க்கையில் அவருடைய “மிகுதியான ஆசீர்வாதங்களைத்” பெற்றுத்தருகிற மாதம். இந்த 2024 -ஆண்டின் பிற்பகுதியானது முதல் பாதியை விட
அதிக மகிமையையும் சிறப்பையும் கொண்டுள்ளது, ஏனெனில் அவர் தனது பின்மாரி மழையை -பரிசுத்த ஆவியானவரை பொழிகிறார்!

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் “பெற்றுக்கொள்ளுவது” மட்டுமே. ஆம்,இந்த மாதத்தில் தேவன் உங்களுக்காக வைத்திருக்கும் அனைத்தையும் பெற்றுக்கொள்ளுங்கள்.கடந்த காலத்தில் நீங்கள் துக்கங்கள், தோல்விகள்,ஏமாற்றங்கள், துரோகங்கள் மற்றும் பலவற்றைப் பெற்றிருக்கலாம். ஆனால், இப்போது அலைகளின் திசை மாறிவிட்டன. அவருடைய கிருபை உங்களைத் தேடி வருகிறது.அவருடைய சாதகமான தீர்ப்புகள் உங்களை நியாயப்படுத்தும்.அவருடைய கிருபைகள் உங்கள் மேல் வேகமாக பரவும்,அதனால் நீங்கள் பரலோகத்தில் உள்ள உங்கள் அப்பா தேவனிடம்,”ஏன் என்னை இவ்வளவாக ஆசீர்வதிக்கிறீர்கள்” ? என்று நன்றியின் கண்ணீரோடு கேட்கும்படியாக ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம்,கிருபையின் மிகுதியையும் அவருடைய நீதியலிருந்தும் பெற்றுக்கொண்டு, அதை ஒவ்வொரு நாளும் மற்றும் ஒவ்வொரு நாளில் பலமுறை பெற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.அப்படி செய்யும் போது நீங்கள் நிச்சயமாக இயேசுவின் நாமத்தில் ஆளுகை செய்வீர்கள்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பூமியில் ஆளுகை செய்யும் மகிமையை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

img_151

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,திருப்புமுனைகளை கடக்க உதவும் திறந்த வாசலை அனுபவியுங்கள்!

28-06-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,திருப்புமுனைகளை கடக்க உதவும் திறந்த வாசலை அனுபவியுங்கள்!

15.அவ்விடத்திலிருந்து அவளுக்கு அவளுடைய திராட்சத்தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்; அப்பொழுது அவள் அங்கே, தன் இளவயதின் நாட்களிலும் தான் எகிப்துதேசத்திலிருந்து வந்த நாளிலும் பாடினதுபோல் பாடுவாள்.ஓசியா 2:15 NKJV

“ஆகோர்” என்றால் துன்பங்கள்.பள்ளத்தாக்கு என்பது பூமியின் தாழ்வான பகுதி.ஆகோர் பள்ளத்தாக்கு’ என்பதன் பொருளானது மனிதன் எல்லாப் பக்கங்களிலிருந்தும் பயங்கரமான முறையில் துன்பங்ளினால் மிக மோசமாக தாக்கப்படுவதாகும்.

இருப்பினும்,தேவன் இந்த பிரச்சனைகளை கொண்டு‘நம்பிக்கையின் வாசலை’ உருவாக்கவே பயன்படுத்துகிறார். அவர் உங்கள் நன்மைக்காக எல்லாவற்றையும் ஒன்றாகச் செயல்பட வைக்கிறார்.யாராலும் மூட முடியாத திறந்தவாசலை நான் அமைத்துள்ளேன் என்று அவர் கூறுகிறார்.

பாலைவனத்தில் ஆகாரால் தன் கண் முன்னே இறக்கும் மகனைப் பார்க்க முடியவில்லை, அவன் தனது இறுதி மூச்சை விடுகிற நிலையில் தேவன் காட்சியளித்து, அவளது கண்களைத் திறந்து, ஒரு தண்ணீர்க் கிணற்றைக் காணச்செய்து (ஆதியாகமம் 21:19)இறக்கும் தருவாயில் இருந்த அவளுடைய மகனை காப்பாற்றி ஒரு பெரிய தேசமாக்கினார்.

ஆம் என் அன்பானவர்களே, இந்த மாதத்தின் இறுதிக்கு வந்த வேளையில் அவர் “திறந்த வாசல்” உங்களுக்கு உண்டு என்று உறுதியளித்திருக்கிறார், ஆனால் நீங்கள் இன்னும் உங்கள் முன்னேற்றத்தைக் காணவில்லையா? அல்லது ஒருவேளை நீங்கள் ஆகோர் பள்ளத்தாக்கை அனுபவிக்கிறீர்களா? திடமனதாய் இருங்கள், மகிழ்ச்சியோடு இருங்கள், தேவன் உங்களை மறக்கவில்லை. அவர் உங்கள் ஆகோரின் நடுவில் “திறந்த வாசல்” அமைத்துள்ளார். உங்களோடும் உங்களுக்குள்ளும் இருக்கும் பரிசுத்த ஆவியானவர், உங்களுக்காக தேவன் வைத்திருக்கும் திட்டத்தை இப்போது பார்க்க உங்களுக்கு நிச்சயமாக உதவுவார். ஆமென் ! அவர் திறந்த வாசலால் தேவன் உங்களுக்காக வைத்திருக்கும் எதிர்காலத்தை இயேசுவின் நாமத்தில் அனுபவிப்பீர்கள். ஆமென் 🙏

இந்த மாதம் முழுவதும் உங்களையும் என்னையும் வழிநடத்திய ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவருக்கு நான் நன்றி கூறுகிறேன்.இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் அவர் தொடர்ந்து நம்மை வழிநடத்துவார். “இன்று உங்களுக்கான கிருபை” என்ற தியானத்தில் தினமும் என்னுடன் இணைந்ததற்கு மிக்க நன்றி. பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவி செய்பவராகவும்மற்றும் ஆறுதலளிப்பவராகவும் உங்களோடு இருக்கிறார்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,திருப்புமுனைகளை கடக்க உதவும் திறந்த வாசலை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

img_152

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பரிசுத்த ஆவியின் மூலம் வரும் வெற்றியை அனுபவியுங்கள்!

27-06-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பரிசுத்த ஆவியின் மூலம் வரும் வெற்றியை அனுபவியுங்கள்!

1.ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.
2.கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.ரோமர் 8:1-2 NKJV

பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படும் வாழ்க்கை என்பது பூமியில் உள்ள வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நீங்கள் ஆளுகை செய்ய வைக்கும் வாழ்க்கை முறையாக விளங்குகிறது.

குற்றவுணர்வு என்பது மனித குலத்திற்கு தலையாய எதிரியாக இருக்கிறது.ஆனால், கிறிஸ்துவின் மரணமானது-உங்களுடைய குற்ற உணர்வை தூண்டக்கூடிய பாவத்தை அழித்தது மட்டுமல்லாமல், பாவத்தின் விளைவான மரணத்தையும் அழித்த ஒரே மாற்று மருந்தாக இருக்கிறது.

சிலுவையில் இயேசு கிறிஸ்து உங்களுக்கும் எனக்கும் என்ன செய்தார் என்பதை நிஜமாக்கவே பரிசுத்த ஆவியானவர் நம் வாழ்வில் வருகிறார்.

அனைத்து மனிதகுலத்திற்கும் பரிசுத்த ஆவியானவரின் ஊழியம் என்னவென்றால் ,தேவன் இயேசுவின் உடலில் பாவத்தை நியாயந்தீர்த்தார் மற்றும் அதன் விளைவாக அனைத்து மனிதர்களுடைய பாவங்கள் நிவிர்த்தியாக்கப்பட்டு இயேசுவின் மூலம் விடுதலை பெற்றனர் என்று அறிவிப்பதாகும்.

இயேசுவின் தியாக மரணத்தை இப்போது விசுவாசிக்கும் அனைவருக்கும் பரிசுத்த ஆவியானவரின் ஊழியம் என்னவென்றால்,தேவன் பாவத்தை நியாயந்தீர்த்து, இந்த விசுவாசிகளை என்றென்றும் நீதிமான்களாக அறிவித்தார் என்று தெளிவுபடுத்துவதாகும்.
பரிசுத்த ஆவியின் ஊழியம், முழு மனித இனத்தின் வாழ்விலும் இந்த அழிவை ஏற்படுத்திய பிசாசின் மீது கடவுளின் நியாயதீர்ப்பை வெளிப்படுத்துவதாகும்.

கிறிஸ்துவுக்குள் என் அன்பானவர்களே, இன்று தேவனின் இறுதி தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக உள்ளது.ஆகவே நீங்கள் என்றென்றும் வாழ்வீர்கள், என்றென்றும் ஆளுகை செய்வீர்கள், அவருடைய இறுதி தீர்ப்பை மாற்றியமைக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.
நீங்கள் உண்மையிலேயே கிறிஸ்து இயேசுவில் தேவனின் நீதியிருக்கிறீர்கள்!
உங்களில் கிறிஸ்து” என்பது உங்களில் வசிக்கும் பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படும் வாழ்க்கையாகும்.. உங்களை வழிநடத்த அவரை அனுமதியுங்கள், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அவருடைய ஆளுகையை அனுபவிப்பீர்கள். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பரிசுத்த ஆவியின் மூலம் வரும் வெற்றியை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,உங்களை குற்றப்படுத்த முடியாத வாழ்வை அனுபவியுங்கள்!

26-06-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,உங்களை குற்றப்படுத்த முடியாத வாழ்வை அனுபவியுங்கள்!

1. ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.
2. கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே.ரோமர் 8:1-2 NKJV

மனிதகுலத்தின் மிகப்பெரிய எதிரி குற்றப்படுத்துதல். இதனால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.எல்லா நோய்களுக்கும்,பயத்திற்கும்,மரணத்திற்கும் குற்றப்படுத்துதல் தான் மூல காரணம்.

குற்றப்படுத்துதலின் வரையறை என்பது மிகவும் வலுவான மறுப்பின் வெளிப்பாடாகும் குற்றப்படுத்தலி லிருந்து யாரும் தப்பமுடியவில்லை. ஒவ்வொருவரும் குற்றப்படுத்துதலை எதிர்கொள்கிறார்கள்,பலர் அதற்கு பின்விளைவுகளான நோய், மனச்சோர்வு,சீக்கிரத்தில் முதுமை அடைவது மற்றும் அகால மரணம் போன்ற கொடிய விளைவுகளை எதிர்கொள்கிறார்கள்.

ஆண்டவராகிய இயேசு, அவர் கல்வாரி சிலுவையில் இறக்கவிருந்தபோது, அவர் அனுபவித்த மிகக் கொடூரமான குற்றப்படுத்தல் என்னவென்றால், தேவன் அவரைக் கைவிட்ட தருணமாகும். எல்லா மனித இனமும் முழுவதுமாக குற்றப்படுத்துதலிலிருந்து விடுபட இயேசு இதை சந்தித்தார். அல்லேலூயா!

ஆம் என் அன்பு நண்பர்களே, இன்று இயேசுவின்நிமித்தம் நமக்கு குற்றஉணர்வு இல்லை. பரிசுத்த ஆவியானவர் உங்களை எல்லா குற்றப்படுத்துதலிலிருந்தும் விடுவிக்கிறார்.
அவர் ஜீவ ஆவியானவராயிருக்கிறார்! நீங்கள் தற்போது எந்த வகையான குற்றஉணர்வுகளை எதிர்கொண்டாலும், பரிசுத்த ஆவியானவர் உங்களை எல்லா குற்றஉணர்வுகளிலிலிருந்தும் முழுமையாக விடுவித்து, உங்கள் மகிழ்ச்சியையும், இளமையையும் அடையச்செய்கிறார், மற்றும் அவர் உங்கள் இழப்புகளையும், ஆரோக்கியம், செல்வம், புகழ், பதவி, வீடு, வணிகம் ஆகியவற்றின் தோல்வியிலிருந்து விடுவித்து அனைத்து வீணான ஆண்டுகளையும் மீட்டுக் கொடுக்கிறார் க்கிறார். ஆமென் 🙏

பரிசுத்த ஆவியானவரே, நான் உங்களை என் நண்பராக முழுமனதோடு அழைக்கிறேன்.கிறிஸ்து இயேசுவுக்குள் என்னை தேவனுடைய நீதியாக மாற்றியதற்க்கு நன்றி. எனது அனைத்து இழப்புகளையும் மீட்டமைத்ததற்கு நன்றி.நான் உங்களது முழுமையான மன்னிப்பைப் பெற்று,என்னுள் கிறிஸ்துவில் உள்ள ஜீவ ஆவியின் பிரமாணத்தின் செயல்பாட்டை கைப்பற்றிக்கொள்ள உங்களை அனுமதிக்கிறேன். ஆமென் 🙏

கிருபை நற்செய்தி தேவாலயம்!