Author: vijay paul

img_95

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,உங்களுடைய திறந்த வாசலை அனுபவியுங்கள்-கராஹ்!!!

10-06-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,உங்களுடைய திறந்த வாசலை அனுபவியுங்கள்-கராஹ்!!!

12. என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற கர்த்தாவே, இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் சித்திக்கப்பண்ணி, என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவு செய்தருளும். ஆதியாகமம் 24:12 NKJV

ஆபிரகாம் தனது நம்பிக்கைக்குரிய வேலைக்காரன் ஒருவரைப் பார்த்து,தன் மகன் ஈசாக்கிற்குப் பொருத்தமான மணமகளைக் கண்டுபிடிக்கும்படி அனுப்பினார்.அவன் பிரயாணம் செய்து,அவனுடைய எஜமானான ஆபிரகாம் அவனைப் போகச் சொன்ன இடத்திற்கு வந்தபோது, ​​அவன் ஆபிரகாமின் தேவனிடம் இந்த ஜெபத்தைச் செய்தான்.
ஈசாக்கின் வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுக்கு ஆபிரகாம் தனது மிகவும் நம்பகமான வேலைக்காரனை அனுப்புவதில் தவறில்லை என்பதை அந்த ஜெபமே காட்டுகிறது.ஆபிரகாம் தன் ஊழியர்களுக்குக் கூட தேவனின் வழிகளை எப்படி அற்புதமாகப் போதித்தார் என்பதை இது காட்டுகிறது.

இந்த வேலைக்காரன் தனக்கு வெற்றியைத் தருமாறு YHWH யிடம் வேண்டிக்கொண்டான். எபிரேய மொழியில் ‘வெற்றி’ என்ற வார்த்தை ‘கரா’ (காவ்-ரா என உச்சரிக்கப்படுகிறது)’, அதாவது ‘முன் ஏற்பாடு இல்லாமல் சந்திப்பது’.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சரியான நபரைச் சந்திப்பதற்கான சரியான நேரத்தில்,சரியான இடத்திற்கு அவரை அழைத்துச் செல்ல அவர் YHWY யிடம் பிரார்த்தனை செய்தார். எல்லாம் வல்ல தேவனால் மட்டுமே இதைச் செய்ய முடியும்.
என் அன்பானவர்களே,அதைத் தொடர்ந்து வந்த மீதி வரலாறு வருமாறு – பல அழகான கன்னிப் பெண்கள் மற்றும் பல உழைப்பாளிகள் மத்தியில் ரெபேக்காவை சந்தித்தார்.ஈசாக்கு தனது வாழ்க்கையில் ரெபேக்காவின் வருகையால் ஆறுதல் அடைந்தார் (ஆதியாகமம் 24:67).

என் அன்பானவர்களே,இன்று இந்த பிரார்த்தனை உங்களுக்காகவும்,உங்கள் எல்லா முயற்சிகளிலும், இந்த வாரம் முழுவதும் மற்றும் உங்கள் வாழ்நாள் முழுவதும் தேவன் உங்களுக்கு ‘கராஹ்’ வழங்குவார்.அப்போது நீங்கள் இயேசுவின் நாமத்தில் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவர் உங்களோடு இருக்கிறார்,அப்பொழுது நீங்கள் இயேசுவுக்கு உங்கள் இதயத்தைத் திறந்திருந்ததால்,பரிசுத்த ஆவியானவர் உங்களில் இருக்கிறார்: உங்களில் உள்ள கிறிஸ்துவே உங்கள் வெற்றி, சரியான நபரை சரியான நேரத்தில் சரியான இடத்தில் சந்திக்கச் செய்கிறார். அல்லேலூயா! ஆமென் 🙏

என் அருமை நண்பர்களே, நீங்கள் சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருக்கவும், உங்கள் வாழ்க்கையில் சரியான நிகழ்வுகள் நடக்கவும் காரணமான பரிசுத்த ஆவியானவரை மட்டுமே நீங்கள் சார்ந்திருக்க முடியும்! நீங்கள் தேவனுடைய பிள்ளையாயிருப்பதினால், தேவன் உங்களை கிறிஸ்துவுக்குள் நீதிமான்களாக்கினார், உங்கள் நடைகள் கர்த்தரால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன (சங்கீதம் 37:23).கராஹ் இன்று உங்கள் ஆசீர்வாதம் ! ஆமென் மற்றும் ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,உங்களுடைய திறந்த வாசலை அனுபவியுங்கள்-கராஹ்!!!

கிருபை நற்செய்தி தேவாலயம்!

img_96

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட இளைப்பாறுதலை அனுபவியுங்கள்!

06-06-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட இளைப்பாறுதலை அனுபவியுங்கள்!

11. பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார்.
12. இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதல்; இதுவே ஆறுதல் என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள்.ஏசாயா 28:11-12 NKJV

நீங்கள் அவருடன் உங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுக்கும்போது,அவர் உங்களை மிகச் சிறந்த நிலைக்கு அழைத்துச் செல்வார். ஓய்வு என்றால் ஆவியின் வழிநடத்துதலின் செயல்பாடு!ஓய்வு என்பது சோம்பலுக்கு வழிவகுக்கும் செயலற்ற நிலை அல்ல. .

உங்களைச் சுற்றியுள்ள இளைப்பாறுதலை விட (உங்கள் சூழ்நிலையில்),நீங்கள் எதிர் நோக்க வேண்டியது உங்களுக்குள் இருக்கும் இளைப்பாறுதல் ஆகும்.

படகைச் சுற்றிலும் சுழற்காற்றும்,கொந்தளிப்பும் ஏற்பட்டபோது,படகையே கவிழ்த்துவிடும் அபாயம் இருந்தது,இயேசு படகின் பின்புறத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார்,அவருடைய சீஷர்கள் அனைவரும் படகு மூழ்காமல் இருக்க கடினமாக உழைத்தார்கள். கொந்தளிப்பான காற்று மற்றும் சீற்றம் கொண்ட அலைகளால் அலைக்கழிக்கப்பட்டனர். இயேசு முதலில் அவர்களை அமைதிப்படுத்தி, பின்னர் கடலை அமைதிப்படுத்தினார். (மத்தேயு 8:23-26).

அந்நியபாஷைகளில் பேசுவது -பரலோக மொழி, உங்கள் மனதையும் உங்கள் முழு உடலையும் அமைதிப்படுத்துகிறது. இது தான் இளைப்பாறுதல் – இது ஆவியின் வழிநடத்துதலுக்கேற்ற செயல்பாடு.

இயேசுவின் மரணம்,அடக்கம், உயிர்த்தெழுதல் மற்றும் மகிமையின் ராஜாவாக மகிமைப்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் உங்களை பரிசுத்த ஆவியால் நிரப்பவும், ஆவியின் அந்நிய பாஷயை உங்களுக்கு வழங்கவும் தேவனிடம் கேளுங்கள். அந்நியபாஷைகளில் பேசும் இந்த வரத்தை நம்புங்கள் மற்றும் விசுவாசத்துடன் அதை பெற்றுக்கொண்டு பேசுங்கள், நீங்கள் புரிந்து கொள்ளாத வேறொரு மொழியைப் பேசுகிறீர்கள் என்பதை உணர்வீர்கள்.

அறியப்பட்ட மொழியைப் பேசுவதிலிருந்து அறியாத மொழிக்கு மாறுவதற்கான சிறந்த வழி, அந்நிய பாஷைகளின் வரத்தைக் கேட்பதாகும் . நீங்கள் பரிசாகப் பெறும் இந்த அந்நிய பாஷையை வாய்மொழியாகப் பேசவேண்டும். இந்த பரிசுக்காக அவருக்கு நன்றி தெரிவிப்பது மற்றும் ,_கிறிஸ்து இயேசுவில் நீங்கள் தேவனின் நீதி என்று ஒப்புக்கொண்டு,ஒப்புக்கொள்வதை அறிக்கைசெய்து நீங்கள் இவற்றைச் சொல்லும்போது, ​​*உங்கள் இதயத்தில் இருந்து வரும் சொற்களின் எழுச்சியை நீங்கள் அனுபவிப்பீர்கள்.இதுவே நீங்கள் அந்நிய பாஷைகளில் பேசுவதற்கான அடையாளம் – உங்கள் மனம் புரிந்துகொள்ள முடியாத பரலோக மொழியை பேசுகிறீர்கள் அதனால் நீங்கள் நிச்சயமாக ஓய்வையும் புத்துணர்ச்சியையும் அனுபவிப்பீர்கள். இயேசுவின் பெயரில் உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட உங்கள் ஆசையை நீங்கள் அனுபவிப்பீர்கள். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட இளைப்பாறுதலை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய திறந்த வாசலை அனுபவியுங்கள்!!

05-06-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய திறந்த வாசலை அனுபவியுங்கள்!!

6. அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டு,
7. மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம்பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார்.
9. அங்கே இராத்திரியிலே பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று; அதென்னவெனில், மக்கெதோனியா தேசத்தான் ஒருவன் வந்து நின்று: நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று தன்னை வேண்டிக்கொண்டதாக இருந்தது.அப்போஸ்தலர் 16:6-7, 9 NKJV

நீங்கள் நினைத்தபடி காரியங்கள் உங்களுக்குச் செயல்படவில்லை என்றால், நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும் மற்றும் முன்னோக்கி செல்லும் வழியைக் காட்ட பரிசுத்த ஆவியானவரிடம் ஜெபிக்க வேண்டும் என்று அர்த்தம்.

அப்போஸ்தலர் பவுலுக்கும் அவரது குழுவினருக்கும் இதுதான் நடந்தது! அவர்கள் முதன்முறையாக தேவனு டைய சித்தம் என்று எண்ணி முயற்சித்தார்கள் ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவர்களைத் தொடர வேண்டாம் என்று எச்சரித்தார்.பின்னர் அவர்கள் ஜெபத்துடன் வேறு வழியில் சென்றார்கள்,மீண்டும் பரிசுத்த ஆவியானவர் அவர்களை இந்த முறையும் அனுமதிக்கவில்லை,ஏனெனில் அது சரியான நேரம் அல்ல.

இறுதியாக அவர்கள் அமைதியாகி, ஓய்வெடுத்து, கடந்த காலத்தில் தேவன் அவர்களுக்கு வழங்கிய அனைத்து வழிகாட்டுதலுக்கும் நன்றி சொல்ல ஆரம்பித்தார்கள்,அநேகமாக அவர்கள் ஆவியில் ஜெபித்திருக்கலாம் (அந்நிய பாஷைகளில்- பரலோக மொழியில்) அப்போது திடீரென்று ஒரு தரிசனம் தோன்றியது – எங்கு செல்ல வேண்டும் மற்றும் எப்படி தொடர வேண்டும் என்ற வழிகாட்டுதல் உண்டாகியது.
என் அன்பானவர்களே,அதே வழியில் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு வழி காட்டுவார். மகிமையின் ராஜாவைப் பற்றி அறிய,ஞானம் மற்றும் வெளிப்பாட்டின் ஆவியால் அவர் உங்கள் புரிதலின் கண்களைத் திறப்பார்.

நம் கண்களுக்கு காட்டப்படுவது பரிசுத்த ஆவியானவரால் வந்ததா என்பதை எவ்வாறு பகுத்தறிவது?
அதற்கு பதில் தேவ தயவு (FAVOUR)! தேவ தயவானது நிபந்தனையற்ற, தகுதியற்ற,பரிசாகும்! அல்லேலூயா!

நீங்கள் அவருடன் உங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுக்கும்போது, ​அவர் உங்களை மிகச் சிறந்த நிலைக்கு அழைத்துச் செல்வார்.
அவரது கூட்டில் ஓய்வெடுங்கள், உங்கள் ஆத்துமா வெறுக்கும் எதிரிகளை நீங்கள் சந்திக்காதபடி, அவர் தனது சிறந்ததை உங்களுக்குக் காண்பிப்பார்.

நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாக இருக்கிறீர்கள்.நீங்கள் ஆபிரகாமின் சந்ததி.நீங்கள் ஆபிரகாமை விசுவாசித்து, ஆவியின் வாக்குத்தத்தத்தைப் பெற்று ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நீங்கள் உலகின் வாரிசாக இருக்கிறீர்கள்.உங்கள் எதிரிகள் அனைவரையும் பாதபடியாக்கி உங்கள் ஆஸ்திகளை இன்றே நீங்கள் இயேசுவின் நாமத்தில் சொந்தமாக்குவீர்கள்! அல்லேலூயா! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய திறந்த வாசலை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம்!

g14

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய திறந்த வாசலை அனுபவியுங்கள்!!

04-06-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய திறந்த வாசலை அனுபவியுங்கள்!!

7. பிலதெல்பியா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது;
8. உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான். வெளிப்படுத்துதல் 3:7,8 NKJV

தேவன் ஒரு வாசலைத் திறக்கும்போது,மற்ற எல்லாக் வாசல்களையும் மூடுகிறார் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

மன அழுத்தம், பதட்டம், துக்கம், அதிருப்தி, தோல்வி மற்றும் வலி போன்றவற்றை ஏற்படுத்திய பயனற்ற தன்மை கொண்ட மற்ற வாசல்களை மூடுவதற்கு பெரும் வாய்ப்பின் வாசலை திறப்பது அவசியமாகிறது.

ஆபிரகாமுக்கு பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய கானான் தேசம் என்று வாக்களிக்கப்பட்டபோது,ஆபிரகாம் தனது நாட்டையும், தன் நெருங்கிய உறவினர்களையும், தன் தந்தையின் வீட்டையும் விட்டு வெளியேற வேண்டியிருந்தது (ஆதியாகமம் 12:1-3).

ஒரு ஆணோ பெண்ணோ திருமணம் செய்துகொண்டால்,அவர்கள் தங்கள் தந்தையையும் தாயையும் விட்டுவிட்டு,புதிய துணையுடன் சேர்ந்துகொள்கிறார்கள் (ஆதியாகமம் 2:24) இருவரும் ஒரு புதிய குடும்பமாக மாறுகின்றனர்!

ஆம் என் பிரியமானவர்களே,யாராலும் மூட முடியாத தாம் திறந்திருக்கும் வாசலுக்கு தேவன் நம்மை அழைத்துச் செல்லும் போது,அந்த நொடியில் நாம் பாதுகாப்பற்றவர்களாக உணரலாம்,மேலும் புதிய மற்றும் தெரியாதவற்றிற்குள் நுழையத் தயங்கலாம். உதாரணமாக,கர்த்தராகிய இயேசு தண்ணீரில் நடந்து வந்தபோது,பேதுரு மட்டுமே தண்ணீரில் தானும் நடக்கத் துணிந்தார்,மீதமுள்ளவர்கள் பாதுகாப்பான படகில் (ஆறுதல் மண்டலம்) தங்க விரும்பினர்.

ஆனால்,தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார்,ஏனென்றால் ஒரு நல்ல வேலையைத் தொடங்கியவர், நம்முடைய சிட்டிகேனு( TSIDKENU ) (பிலிப்பியர் 1:6) இயேசுவின் வெளிப்படும் நாள் வரை அதை முடிக்க உண்மையுள்ளவராயிருக்கிறார்.
வெளித்தோற்றத்தில் பாதுகாப்பாக தோன்றும் படகை விட இயேசுவின் வார்த்தை நிச்சயமாக பாதுகாப்பானது. ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய திறந்த வாசலை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம்!

g18

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய திறந்த வாசலை அனுபவியுங்கள்!!

03-06-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய திறந்த வாசலை அனுபவியுங்கள்!!

8. உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான். வெளிப்படுத்துதல் 3:8 NKJV

அல்லேலூயா! இது நற்செய்தி!! நம்முடைய நீதியான இயேசுவே உங்களுக்கு முன்பாகச் சென்று பெரிய வாய்ப்புகளின் திறந்த வாசலை உங்களுக்கு முன் வைத்திருக்கிறார்!!!

இன்னும் பெரிய விஷயம் என்னவென்றால், அதை மூட யாருக்கும் அதிகாரம் இல்லை – முற்றிலும் யாருக்கும் இல்லை – எந்த மனிதனும் , தீய சக்தியும் ,கண்ணுக்கு தெரியாத சக்தியும் ,எந்த அரசாங்கமும்,எந்த அதிகாரமும் ,எந்த சூழ்நிலையும் ,கடந்த காலமும் ,கடந்த காலத்தின் இழந்த வாய்ப்புகளும் .நிகழ்காலமும் அல்லது எதிர்காலமும் கூட அந்த வாசலை மூட முடியாது.

ஆம் என் அன்பானவர்களே ! இது இந்த ஜூன் மாதத்தில் தேவன் உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியாகும். கடந்த காலத்தில் நீங்கள் தோல்வியுற்றிருக்கலாம் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களோ அல்லது தெரியாதவர்களோ உங்களை ஏமாற்றியிருக்கலாம், நீங்கள் பிரார்த்தனை செய்து எந்த பலனும் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால், இந்த மாதத்தில், கர்த்தர் உங்களுக்கு முன்பாகச் சென்று, ஒரு பெரிய வாய்ப்புக்கான கதவை உங்களுக்கு முன் வைத்திருக்கிறார் – ஒரு வணிக வாய்பாகவோ, ஒரு தொழில் வாய்ப்பாகவோ அல்லது வேறு எந்த வாய்ப்பாகவோ அந்த வாய்ப்பு உங்கள் மற்ற எல்லா தேவைகளையும் ஒரே நேரத்தில் நிறைவேற்றும் . அல்லேலூயா! ஆமென் 🙏

அன்பானவர்களே உங்களுக்கு எதிரான அனைத்து எதிர்ப்புகளும் ஓய்ந்துவிடும் மற்றும் ,ஒவ்வொரு புயலும் அமைதியடையும். நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் முன் வைக்கப்பட்டுள்ள இந்த திறந்த வாசல் வழியாக உங்களை அழைத்துச் செல்ல தேவதூதர்கள் உதவுவார்கள் என்று இந்த நாளில் விசுவாசமாக நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய திறந்த வாசலை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம்!

g20

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,மறைக்கப்பட்ட பொக்கிஷங்களை அனுபவியுங்கள்!

31-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,மறைக்கப்பட்ட பொக்கிஷங்களை அனுபவியுங்கள்!

2. நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்.
3. உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு,
ஏசாயா 45:2-3 NKJV.

கர்த்தராகிய இயேசுவின் பிரியமானவர்களே,இந்த மாதத்தின் இறுதிக்கு வரும்வேளையில்,இந்த மாதத்திற்கான வாக்குறுதியை நினைவு கூர்வதும், இந்த மே மாதம் முழுவதும் பரிசுத்த ஆவியின் விலைமதிப்பற்ற மற்றும் வல்லமைவாய்ந்த போதனைகளை சீர்தூக்கிப் பார்ப்பதும் தகுதியானது.

தேவனின் நீதி மட்டுமே வாழ்க்கையின் அனைத்து கோணலான பாதைகளையும் நேராக்க முடியும். நமது பிரச்சனைகளுக்குத் தீர்வைக் கொண்டுவருவது நமது செயலாலோஅல்லது கீழ்ப்படிதலாலோ அல்ல.மாறாக இயேசுவின் கீழ்ப்படிதல் சிலுவையில் உச்சக்கட்டத்தை அடைந்தது,அது மட்டுமே நமது எல்லா பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வுகளை கொண்டு வர முடியும். அல்லேலூயா!

இரண்டாவதாக, அவருடைய கீழ்ப்படிதல் நம்மை என்றென்றும் தேவனுடைய பார்வையில் சரியான நிலைநிறுத்தம் செய்தது. இது நம் தந்தையாகிய ஆபிரகாமின் ஆசீர்வாதத்தைப் பெற நம்மைத் தகுதிப்படுத்தியுள்ளது. நாம் ஆபிரகாமின் சந்ததி, இந்த உலகத்தின் வாரிசு!.

மூன்றாவதாக,ஆவியானவர் நம் வாழ்வில் வருவார் என்ற வாக்குறுதி,நம் வாழ்வில் உள்ள மற்ற எல்லா வாக்குறுதிகளையும் மற்றும் ஆசீர்வாதங்களையும் நிறைவேற்றுவதாகும். பரிசுத்த ஆவியானவருடனான நமது ஐக்கியம் மற்றும் நம் வாழ்வின் தலைவராக இருக்கும் உரிமையை அவருக்கு கொடுப்பது உலகக் காரியங்களில் சிறக்கச்செய்கிறது.
பரிசுத்த ஆவியானவர் நம்மீது வரும்போது,அவர் தம்முடைய வசனத்தை நமக்குத் தருவார்,நாம் புதிய பாஷைகளில் (அந்நிய பாஷை) பேசுவோம்.
*அந்நிய பாஷை என்பது தேவனின் மொழியாகும், இது சிறைச்சாலையின் ஒவ்வொரு இரும்புக் கம்பியையும் அறுத்து,தேவன்,நமக்குச் சிறந்ததை அனுபவிக்கத் தடையாக இருக்கும் ஒவ்வொரு தடையையும் உடைக்க உதவுகிறது ,மேலும் மறைந்திருக்கும் பொக்கிஷங்களையும் செல்வங்களையும் நிச்சயமாக நம்மைப் பெறச் செய்கிறது.

இந்த மாதத்தில் நம் வாழ்க்கையை மிகவும் அழகாக வழிநடத்தி,தேவன் நியமித்திருக்கும் இலக்கை அடைய உதவிய ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவருக்கு நான் நன்றி கூறுகிறேன். இந்த மாதம் முழுவதும் என்னுடன் தியானிக்க இணைந்ததற்கு மிக்க நன்றி மேலும் வரும் மாதங்களிலும் இறைவனின் அருளால் இந்த சிறந்த பயணத்தை தொடர உங்களை ஊக்குவிக்கிறேன். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,மறைக்கப்பட்ட பொக்கிஷங்களை அவர் திறப்பதை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் பரிசுத்த ஆவியின் ஆதிக்கத்தை பெறுங்கள்!

30-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் பரிசுத்த ஆவியின் ஆதிக்கத்தை பெறுங்கள்!

14. நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.ரோமர் 6:14
18. ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல. கலாத்தியர் 5:18

ஆளுகையானது நியாயப்பிரமாணத்தின்படி இருக்கும் போது, ​​பாவம் மனிதன் மீது ஆதிக்கம் செலுத்துகிறது, ஆனால் ,ஆவியானவர் ஆளுகை செய்யும் போது, ​​விசுவாசி நியாயப்பிரமாணத்தின் கீழ் இல்லை,எனவே பாவம் விசுவாசி மீது ஆதிக்கம் செலுத்துவதில்லை மேலும் நோய் மற்றும் வறுமை மீதும்கூட , அதாவது நியாயப்பிரமாணமும் ஆவியும் ஒன்றுக்கொன்று பிரத்தியேகமானவை. இரண்டில் ஒன்று எந்த நேரத்திலும் வேலை செய்யும் திறன் கொண்டவை .இருகாரியங்களும் அருகருகே அல்லது ஒரே நேரத்தில் வேலை செய்ய முடியாது. இதுவே ஒரு விடுதலையான வெளிப்பாடு!

மனிதனால் முடியாது என்பதையும் தேவன் அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதையும் காட்டவே நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது.தங்களுக்கு தானே உதவக்கூடியவர்களுக்கு தேவன் உதவுகிறார் என்றால், நமக்கு ஏன் தேவன் தேவை?
பத்து கட்டளைகளில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய காரியம் “நீங்கள் இதை செய்யவேண்டும் மற்றும் நீங்கள் இதை செய்ய கூடாது ” என்று பட்டியல் செல்லும் , மனிதன் கடவுளைச் சார்ந்திருப்பதைக் காட்டும் மிக முக்கியமான அம்சமான “நீங்கள் ஜெபிக்க வேண்டும்” என்று எங்கும் குறிப்பிட வில்லை . நியாயப்பிரமாணத்தை மனிதனால் தன் பலத்தில் வைத்திருக்க முடியாது என்பதை நிரூபிப்பதே நியாயப்பிரமாணத்தைக் கொடுத்ததன் நோக்கம் என்பதை இது காட்டுகிறது.

எனவே, பரிசுத்த ஆவியானவரின் தோற்றம் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிகவும் தேவையான பரிமாணமாகும்

பரிசுத்த ஆவியானவர் இல்லாமல், உங்களால் ஒன்றும் முடியாது,நீங்கள் இல்லாமல் அவரால் ஒன்றும் முடியாது! ஒவ்வொரு மனிதனைப் பற்றியும் தேவன் பார்க்க விரும்பும் காரியம் – ஆவியானவர் மற்றும் நீங்கள் இருவரும் பிரிக்க முடியாத நபர்களாக இருக்கவேண்டும் .
நீங்கள் எவ்வளவு சீக்கிரம் (உங்கள் தற்காப்பு, தன்னம்பிக்கை, சுய முயற்சி)யை விடுகிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் உங்கள் மீது இறங்கும்!

வீட்டுக்கொடுங்கள் மேலும் பரிசுத்தஆவி அசைவாடட்டும்! அப்போது நீங்கள் அமைதியை அனுபவிப்பீர்கள், உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்பீர்கள், வெற்றியை அனுபவிப்பீர்கள், இயேசுவின் நாமத்தில் ஆளுகை செய்வீர்கள்!! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் பரிசுத்த ஆவியின் ஆதிக்கத்தை பெறுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பரிசுத்த ஆவியின் வாழ்கை முறை மாறும் கிருபையைப் பெறுங்கள்!

29-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பரிசுத்த ஆவியின் வாழ்கை முறை மாறும் கிருபையைப் பெறுங்கள்!

3. அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.
4. மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்.ரோமர் 8:3-4

பிதாவின் வாக்குத்தத்தமாகிய பரிசுத்த ஆவியானவர்- நமக்கு இயேசுவின் கீழ்ப்படிதல் மற்றும் அவரது நீதியான செயலின் மூலம் வழங்கப்பட்டார். ஏனெனில்,மனிதன் தனது விருப்பத்தின் மூலம் தனது முயற்சிகளால் நியாயப்பிரமாணத்தின் தேவைகளைக் கடைப்பிடிக்க முடியவில்லை.மனிதனால் செய்ய முடியாததை தேவன் செய்து முடித்தார்.இதை தேவன் எவ்வாறு செய்தார் என்பதை வெளிப்படுத்துவதில் மேற்கண்ட வசனங்கள் மிகவும் தெளிவாக குறிக்கின்றன.அது அருமை!

ஆளுகை என்பது பரிசுத்த ஆவியானவரிடம் உள்ளது!
நாம் நமது கட்டுப்பாட்டை பரிசுத்த ஆவியின் கைகளில் விட்டுக் கொடுக்கும்போது, ​​அவர் நமக்கு எல்லாவற்றையும் கற்பிப்பார் (யோவான் 14:26) மேலும் எல்லா சத்தியத்திற்கும் நம்மை வழிநடத்துவார் (யோவான் 16:13) வெற்றிக்கு நம்மை வழிநடத்துவார். அவாமனம், தோல்வி மற்றும் நிர்ப்பந்தமான காரியங்கள் போன்றவற்றிலிருந்து விடுவித்து, ஆற்றல்மிக்க, வெற்றிகரமான, சுதந்திரமான, சரியான மனநிலை உள்ள மற்றும் வாழ வயது திரும்பும் அற்புதமான காரியங்களை மாற்றுவதன் மூலம் அவர் நம்மைப் புதுப்பிக்கிறார்!

அவர் உங்களை மட்டுப்படுத்துவதும் இல்லை நாம் அவரை மட்டுப்பதவும் முடியாது மாறாக அவர் உதவியாளராக இருப்பதன் மூலம்,தேவன் நீங்கள் எந்த உயர்வை அடைய நினைத்திருந்தாலும் அதை அடைய பரிசுத்த ஆவியானவர் உதவுவார்.இக்கட்டு காலங்களில் மட்டுமின்றி எல்லா நேரங்களிலும் அவர் எப்போதும் நம்மோடிருக்கும் உதவியாளர் அப்படிப்பட்ட பரிசுத்த ஆவியானவரை ஆசீர்வதிப்போமாக!

நீங்கள் அவரை ருசித்தால்,அவர் உங்கள் நண்பராக இருக்க வேண்டும் என்று நீங்கள் நிச்சயமாக ஏங்குவீர்கள்,ஏனென்றால் உண்மையிலேயே அவர் ஒருவருக்கு இருக்கக்கூடிய சிறந்த நண்பர் – சிறியவர் மற்றும் பெரியவர், ஆணோ பெண்ணோ, பணக்காரரோ ஏழையோ, படித்தவர் அல்லது படிக்காதவர் எல்லோருக்கும் பரிசுத்த ஆவியானவர் எப்போது இருக்கும் உதவியாளர் (பாராக்கிலிட்டோஸ்)!! ஆமென் 🙏

என் அன்பானவர்களே,உங்களைப் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் ஞானஸ்நானம் கொடுக்கும்படி பிதாவிடம் கேளுங்கள்,கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.பரிசுத்த ஆவியைப் பெற நீங்கள் பல நாட்கள் உபவாசம் இருக்க வேண்டிய அவசியமில்லை. இயேசுவின் கீழ்ப்படிதலினால் தேவன் உங்களை என்றென்றும் நீதிமான்களாக்கினார் என்று விசுவாசிப்பது தான் உங்களுக்குத் தேவை.நீங்கள் அவருக்கு நன்றி கூறிவிட்டு,பூமியில் ஒரு புகழ்பெற்ற மற்றும் ஆளுகை செய்யும் வாழ்க்கையை அனுபவிக்க இன்றே பரிசுத்த ஆவியைப் பெறுங்கள்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பரிசுத்த ஆவியின் வாழ்கை முறை மாறும் கிருபையைப் பெறுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் பரிசுத்த ஆவியின் ஆளுகையை அனுபவியுங்கள்!

28-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் பரிசுத்த ஆவியின் ஆளுகையை அனுபவியுங்கள்!

22. அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்;யோவான் 20:22 NKJV
4. அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.
8. பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.அப்போஸ்தலர் 1:4, 8 NKJV

கர்த்தராகிய இயேசு மரித்தோரிலிருந்து எழுந்தபோது,​​அவர் தம்முடைய சீஷர்களிடத்தில் வந்து,பரிசுத்த ஆவியை அவர்கள்மேல் ஊதினார், பரிசுத்த ஆவியானவர் அன்றிலிருந்து அவர்களில் தங்கியிருந்தார்.
இருப்பினும், கர்த்தராகிய இயேசு பரலோகத்திற்கு ஏறுவதற்கு முன்பு, பிதாவின் வாக்குத்தத்தமாகிய பரிசுத்த ஆவியானவருக்கு காத்திருக்கும்படி தம் சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.

இப்போது,கேள்வி என்னவென்றால்,இயேசு ஏற்கனவே பரிசுத்த ஆவியை அவர்களில் ஊதியிருந்ததால் , அவர்கள் ஏற்கனவே பெற்ற பரிசுத்த ஆவிக்காக மீண்டும் காத்திருப்பதன் முக்கியத்துவம் என்ன?
இப்போது அது ஆவியானவரைக் குறிக்கிறது!
தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு மோசேயின் மூலம் நியாயப்பிரமாணத்தை (தார்மீகச் சட்டங்கள் என்று அறியப்படும் பத்துக் கட்டளைகள்) வழங்கியபோது, ​​அவர்கள் தேவனுக்கு முன்பாக ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களாகவும்,மக்கள் முன் சரியானவர்களாகவும் நடந்துகொள்ள அவர்களை ஆளும் கொள்கைகளாக இருந்தது. ஆனால் யாராலும் நியாயப்பிரமாணத்தை கடைப்பிடிக்க முடியவில்லை.
எனவே, தேவன் நியாயப்பிரமாணத்திற்கு பதிலாக , ஆளும் கொள்கைகளை அதாவது – பரிசுத்த ஆவியானவரை,ஆளும் நபராக அனுப்பினார்!

இன்று, பரிசுத்த ஆவியானவர் நம்மில் வசிப்பவர் மட்டுமல்ல (நாம் மீண்டும் பிறக்கும்போது இது நிகழ்கிறது) ஆனால் அவர் நம்மீது ஆளுகையும் கொண்டிருக்கிறார் (நாம் பரிசுத்த ஆவிக்குள் ஞானஸ்நானம் எடுக்கும்போது இது நிகழ்கிறது). நம்மை ஆளுகிறவர் என்ற முறையில்,அவர் நம் வாழ்வில் முழு ஆட்சியைப் பெற அனுமதிக்கவேண்டும்..அப்பொழுது நமது வாழ்க்கை உலகிற்கு சாட்சியாக மாறுகிறது. அல்லேலூயா!

என் பிரியமானவர்களே,பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் இருப்பது மட்டுமல்லாமல், அவர் உங்கள் மீதும் இருக்கட்டும்!
உங்களைப் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் செய்யும்படி பிதாவிடம் கேளுங்கள். அவர் உங்கள் ஆளுநராக இருக்கும்போது நீங்கள் ஆவியானவரால் நடத்தப்படும் தேவனின் குமாரர்களாக இருப்பீர்கள். (ரோமர் 8:14)ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் பரிசுத்த ஆவியின் ஆளுகையை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம்!

img_125

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,பரிசுத்த ஆவியைப் பெற்று உங்கள் மூலமாக வெளிப்படுவதை அனுபவியுங்கள்!

27-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,பரிசுத்த ஆவியைப் பெற்று உங்கள் மூலமாக வெளிப்படுவதை அனுபவியுங்கள்!

4. அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.
8. பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். அப்போஸ்தலர் 1:4, 8 NKJV

பரிசுத்த ஆவியானவர் பிதா நமக்கு அருளிய “வாக்குறுதியானவர்”,ஆவியானவர் நமக்குள் வரும்போது,நம் வாழ்வில் தேவனின் மற்ற எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றுகிறார்.
நம்முடைய கர்த்தராகிய இயேசு நமக்கு அனுப்பிய பரிசுத்த ஆவியானவர் பூமியில் வாழும் மனிதகுலம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் இறுதி தீர்வாக அவரே இருக்கிறார்.

பரிசுத்த ஆவியானவர் என்பவர் தேவன் கூறிய மற்றும் இப்போதும் கூறுகின்ற அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுகின்றவராயிருக்கிறார்.
அவர் இயேசு யார் என்பதன் வெளிப்பாடு..உலகிற்கு நம் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட எல்லையில்லாத இயேசு அவர்!

ஆவியானவர் நமக்குள் வரும்போது,நீங்கள் வரம்பற்ற,வெல்ல முடியாத வல்லமையைப் பெறுவீர்கள்,அதன் மூலம் நீங்கள் உலகிற்கு சாட்சியாக இருக்க முடியும். உங்கள் வார்த்தைகளை விட உங்கள் வாழ்க்கை உலகத்தாருக்கு சத்தமாக பேசும் .

மே மாதத்தின் இந்த இறுதி வாரத்தில்,எல்லையற்ற இயேசுவை உங்கள் வாழ்வில் அனுபவியுங்கள்,அவர் எல்லாத் தடைகளையும் உடைத்து, அனைத்து இரும்புக் கம்பிகளையும் வெட்டி, மறைவான இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பொக்கிஷங்களையும் செல்வங்களையும் உங்களுக்கு பரிசாகப் பெறுவதை நீங்கள் அனுபவிப்பீர்கள். ஏனென்றால், இயேசு தன் களங்கமில்லாத கீழ்ப்படிதலினால், எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை விடுவித்து,என்றென்றும் நீதிமான்களாக்கினார். அல்லேலூயா! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,பரிசுத்த ஆவியைப் பெற்று உங்கள் மூலமாக வெளிப்படுவதை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!