Author: vijay paul

img_200

மகிமையின் ராஜாவும்,இரட்சிப்பின் தேவனுமாகிய இயேசுவைப் பாருங்கள்,வாழ்வில் மகிழ்ச்சியோடு களிகூருங்கள்!

05-03-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவும்,இரட்சிப்பின் தேவனுமாகிய இயேசுவைப் பாருங்கள்,வாழ்வில் மகிழ்ச்சியோடு களிகூருங்கள்!

9. சீயோன் குமாரத்தியே,மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே,கெம்பீரி; இதோ,உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்;அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.சகரியா 9:9

சகரியா தீர்க்கதரிசி உரைத்தது ,ஆண்டவராகிய இயேசு எருசலேமுக்குள் ஒரு கழுதையின் மீது அமர்ந்து வந்தபோது நிறைவேறியது.அது ஒரு- வெற்றிப் பிரவேசம்! ( மத்தேயு 21:4,5,9).

கம்பீரமான குதிரையின் மீது அல்ல,ஒரு கழுதை குட்டியின் மீது அமர்ந்து வந்த தங்கள் ராஜாவின் வருகையைப் பார்த்து மக்கள் ஆரவாரம் செய்வதை கற்பனை செய்து பாருங்கள். ஒரு அந்நியருக்கு இது மிகவும் வித்தியாசமாகவும் அபத்தமாகவும் தோன்றலாம்,ஏனெனில் நியாயமாகப் பேசினால் ராஜாக்கள் குதிரையில் தான் சவாரி செய்வார்கள்,கழுதையின் மீது அல்ல.

என் அன்பானவர்களே, அதுபோலவே இன்று நமது இயற்கையான கண்கள் மனித கண்ணோட்டத்தில் பார்க்கின்றன,ஆனால் தேவனின் கண்ணோட்டத்தில் அல்ல.நாம் விசுவாசிப்பதற்கு நியாயமான அடையாளங்களைத் தேடலாம்,ஆனால்,காணாதவைகளை நம்பி விசுவாசிக்கிறவர்களே பாக்கியவான்கள் (யோவான் 20:29)என்று கூறப்பட்டுள்ளது .
நமது அற்புதத்தைப் பார்த்த பிறகு தேவனுக்கு நன்றி சொல்வது உண்மையான வேததின்படி விசுவாசம் அல்ல,நம் ஆசைகள் நிறைவேறும் முன் அவரைப் புகழ்ந்து தேவனுக்கு நன்றி கூறுவதே விசுவாசம். அது தேவனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
இதைத்தான் இந்த மாதத்தில் செய்ய பரிசுத்த ஆவியானவர் நம்மை ஊக்குவிக்கிறார்,”மகிழ்ச்சியோடிருங்கள் ” மற்றும் “அவருடைய மகிமையில் களிகூருங்கள்”.கர்த்தருடைய மகிழ்ச்சி இன்று உங்கள் பலமாக இருக்கட்டும் (நெஹ் 8:10). அல்லேலூயா! ஆமென் 🙏

என் அன்பானவர்களே,நமது மனதின் வேண்டுதல்கள் மற்றும் அற்புதத்தைப் பார்ப்பதற்கு முன்பே தேவனைப் போற்றி நன்றி சொல்லுங்கள். காத்திருக்கும் வேளையில் பலமான சந்தேகங்களையும்,பயத்தையும் நாம் சந்திக்க நேரிடலாம்.”நான் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதி” என்று அறிக்கையிடுங்கள்.இடைவிடாத அறிக்கையின்மூலம் அனைத்து எதிர்மறை எண்ணங்களையும்,அச்சங்களையும் விரட்டி,இரட்சிப்பின் தேவனை உண்மையாக விசுவாசிப்பதற்கு உங்கள் இருதயத்தில் உறுதி பெறுங்கள்!ஆமென் 🙏.

மகிமையின் ராஜாவும்,இரட்சிப்பின் தேவனுமாகிய இயேசுவைப் பாருங்கள்,வாழ்வில் மகிழ்ச்சியோடு களிகூருங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

img_152

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பாருங்கள்,வாழ்வில் மகிழ்ச்சியோடு அவருடைய இரட்சிப்பை அனுபவியுங்கள்!

04-03-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பாருங்கள்,வாழ்வில் மகிழ்ச்சியோடு அவருடைய இரட்சிப்பை அனுபவியுங்கள்!

9. சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.சகரியா 9:9 NKJV.

என் அன்பான நண்பர்களே, நாம் புதிய மாதத்தைத் தொடங்கியுள்ள நிலையில்,நமது மனப்பான்மை மகிழ்ச்சியடைவதும்,களிகூருவதுமாக இருக்கட்டும்.ஏனென்றால் மகிமையின் ராஜா வெற்றிப் பெற்று இப்போது இரட்சிப்புடன் உங்களிடம் வருகிறார்.உங்களின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் சரியான தீர்வோடு வருகிறார்.இதுவே உங்கள் மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கட்டும்.

ஆம் என் அன்பானவர்களே,இந்த மாதம் நீங்கள் அவருடைய இரட்சிப்பை அனுபவிப்பீர்கள் அதாவது இதை வேறுவிதமாகக் கூறினால் நீங்கள் தற்போது எதிர்கொள்ளும் அல்லது நீங்கள் எதிர்கொள்ளக்கூடிய ஒவ்வொரு பிரச்சனைக்கும் அவருடைய நிரந்தர தீர்வை அனுபவிப்பீர்கள்.நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சுகம் , நிதிநிலை முன்னேற்றம்,மன அழுத்தம் மற்றும் பயத்தில் இருந்து விடுபடுதல்,குடும்ப உறவுகளில் அமைதி அல்லது வேறு ஏதேனும் அழுத்தமான பிரச்சினை போன்ற எல்லாவற்றிலும் நிச்சயமாக தீர்வு உண்டாகும்.

மகிமையின் ராஜா உங்களைக் குணமாக்குவதோடு மட்டுமல்லாமல்,உங்களைச் செழிக்கச் செய்கிறார்.தம்முடைய சிறகுகளில் சுகப்படுத்துதலுடன் மற்றும் கடந்த காலத்தில் உங்களை துன்புறுத்திய எதிரிகளுக்கு முற்றுப்புள்ளிவைக்கிறார். (மல்கியா 4:2,3). அல்லேலூயா!

இது உங்கள் நாள்! இது உங்கள் வாரம்!! இது உங்கள் மாதம்!!! மகிழ்ச்சியோடு இருங்கள்.உங்கள் வாழ்க்கையில் தேவனின் சந்திப்புக்கான நேரம் இது.நீங்கள் மிகவும் எதிர்நோக்கியிருக்கும் அதிசயம் இப்போது வெளிப்படும் என்று விசுவாசியுங்கள்.ஆமென் 🙏

நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனின் நீதி என்பதை அறிக்கையிட நினைவில் கொள்ளுங்கள்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பாருங்கள்,வாழ்வில் மகிழ்ச்சியோடு அவருடைய இரட்சிப்பை அனுபவியுங்கள்*!

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பாருங்கள்,உங்கள் புதிய மனிதன் வெளிப்பட்டு வாழ்வில் ஆளுகை செய்யுங்கள்!

29-02-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பாருங்கள்,உங்கள் புதிய மனிதன் வெளிப்பட்டு வாழ்வில் ஆளுகை செய்யுங்கள்!

26. அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்.
27. அவர்: உன் பேர் என்ன என்று கேட்டார்; யாக்கோபு என்றான்.
28. அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்.ஆதியாகமம் 32:26-28 NKJV

யாக்கோபு தனது வாழ்க்கையில் இரண்டு நபர்களுக்கு பயந்தான் –
1. அவன் சகோதரன் ஏசா, 2. அவனுடைய மாமனார் லாபான்.
தேவன் அவனுக்கு இரண்டு பகிரங்க சந்திப்புகளைக் கொடுத்தார்: முதலாவது லாபானைச் சந்திப்பதற்கு முன்பு (ஆதியாகமம் 28) மற்றும் இரண்டாவது அவனது சகோதரன் ஏசாவைச் சந்திப்பதற்கு முன்பு (ஆதியாகமம் 32).
லாபானைச் சந்திப்பதற்கு முன் நடந்த முதல் சந்திப்பை அவன் சாதகமாகப் பயன்படுத்தியிருந்தால், அடுத்த 20 ஆண்டுகளின் துரோகம்,ஏமாற்றுதல் மற்றும் நம்பிக்கையின்மை ஆகியவற்றிலிருந்து அவன் தன்னைக் காப்பாற்றியிருக்க முடியும்!

20 நீண்ட வேதனையான ஆண்டுகள் கடந்துசென்றாலும் அவன் தனது விலைமதிக்கமுடியாத பாடத்தைக் கற்றுக்கொண்டான்.எனவே,இந்த முறை,அவன் ஏசாவைச் சந்திப்பதற்கு முன்பு,கர்த்தர் அவனுக்கு மற்றொரு தெய்வீக சந்திப்பைக் கொடுத்தார், இப்போது யாக்கோபு அவரைப் பிடித்து, முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் பரிதாபமாக கண்ணீர்விட்டான்,கர்த்தர் அவரை ஆசீர்வதித்தார்.அப்போது விடியல் வரும் வேளையில் ஒரு புதிய மனிதனாக தோன்றினான்! அல்லேலூயா!!

அவன் இனி யாக்கோபு அல்ல.அவன் இப்போது இஸ்ரவேல் என்று அழைக்கப்பட்டான்,அதாவது தேவனுடைய ராஜகுமாரன் – ஒரு வெற்றியாளன் மற்றும் தேவனுடன் என்றென்றும் ஆளுகை செய்யும் ஆட்சியாளன் . யாக்கோபுக்கு எதிராக ஏசாவின் தீய சக்திகளால் இனி வேலை செய்ய முடியவில்லை.அவனை சுற்றியிருந்த அச்சுறுத்தும் இருள்கள் அனைத்தும் அகற்றப்பட்டு எதிரியின் சதி முற்றும் முடிவுற்றது . அவன் இப்போது அதிகாரம் பெற்றவன்.மகிமையின் ராஜாவுடன் ஏற்பட்ட தெய்வீக சந்திப்பு எல்லா மாற்றத்தையும் ஏற்படுத்தியது!

அவருக்குப் பின் வந்த தலைமுறையினர் ஆபிரகாமியர்கள் அல்லது ஈசாக்கியர்கள் என்று அழைக்கப்படவில்லை,ஆனால் அவர்கள் இஸ்ரவேலர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்,ஏனென்றால் தேவனின் அதிகாரம் இந்தப் புதிய பெயரில் அமர்ந்திருந்தது.இன்றுவரை,இஸ்ரவேல் என்று அழைக்கப்படும் தலைமுறை எல்லா எதிர்ப்புகளையும்,கொந்தளிப்புகளையும் மேற்கொண்டு வாலாகமல் ,தலையாகவே உள்ளார்கள்.

என் அன்பானவர்களே,இந்த மாதம் முடிவடையும் நாளில், ​​இது இயேசுவின் நாமத்தில் உங்கள் பங்காக இருக்கட்டும்.மகிமையின் ராஜாவுடன் நீங்கள் உண்மையான சந்திப்பையும் அதன் பலனையும் பெறலாம். அவருடன் என்றென்றும் அரசாளுவதற்கு அவருடைய அதிகாரத்தை நீங்கள் பெறுவீர்களாக.இருளின் அனைத்து சக்திகளும் உங்கள் முன் தலைவணங்கட்டும். நீங்கள் தலையாக இருப்பீர்கள்,ஒருபோதும் வாலாக இருக்கமாட்டிர்கள் .ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பாருங்கள்,உங்கள் புதிய மனிதன் வெளிப்பட்டு வாழ்வில் ஆளுகை செய்யுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

g100

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்த்து,சூழ்நிலைகள் இன்று உங்களுக்கு சாதகமாகத் திரும்புவதை அனுபவியுங்கள்!!

28-02-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்த்து,சூழ்நிலைகள் இன்று உங்களுக்கு சாதகமாகத் திரும்புவதை அனுபவியுங்கள்!!

26. அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்.
27. அவர்: உன் பேர் என்ன என்று கேட்டார்; யாக்கோபு என்றான்.
28. அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்.ஆதியாகமம் 32:26-28 NKJV

தேவனோடு ஒரு பகிரங்க சந்திப்பு வேண்டும் என்ற ஏக்கம் உங்களை தேவனிடம் நெருங்கச் செய்யும்,அவரை ஆவலோடு தேடும் அந்த நம்பிக்கையான இதயம் தேவனால் ஒருபோதும் வெறுக்கப்படாது.
அச்சம் மற்றும் பயமுறுத்தலால் பாதிக்கப்பட்ட யாக்கோபு (தன் சகோதரன் ஏசாவின் பயம் மற்றும் லாபானின் பயம்) விடுதலைக்காகவும்,வேதனையைக் கூட்டாத பரிபூரண ஆசீர்வாதத்திற்காகவும் தேவனைத் தேடினார்.

யாக்கோபு முழு இருதயத்தோடும்,ஆத்துமாவோடும்,பலத்தோடும் இறைவனைத் தேடினார். சில சமயங்களில்,இறைவனின் மௌனம் அல்லது நமது ஜெபங்களுக்கு மறுப்புத் தெரிவிப்பது போல தோன்றுவது என்பது,அவரை நோக்கிய நமது நம்பிக்கையான அழுகைகளிலும் கடுமையான கண்ணீரிலும் வெளிப்படுத்தப்படும் நமது தீவிரத்தன்மையின் அளவைப் பார்ப்பதற்காகவேத்தான்.

கர்த்தராகிய இயேசுவும் அதே சோதனையை அனுபவித்தார்,தாம் தேவனின் குமாரனாக இருந்தபோதிலும், தேவனிடம் கடுமையான அழுகை மற்றும் கண்ணீருடன் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் செய்தார் (எபிரெயர் 5:7,8).

என் பிரியமானவர்களே,உங்களுக்கு பாதகமான விஷயங்கள் நடக்கும்போதோ அல்லது மனிதர்களிடம் உங்களுக்கு தயவு கிடைக்காதபோதோ,தேவனின் தயவு எப்போதும் உண்டு என்பதை நினைவில் வையுங்கள். தேவன் ஒருவரே உங்களை உயரத்திற்கு மாற்ற முடியும் மற்றும் கால அட்டவணையை உங்களுக்கு ஆதரவாக மாற்ற முடியும்,நிச்சயமாக எதிர்நிலை சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக நடக்கும்! மகிழுங்கள்!!

இயேசு உங்களை என்றென்றும் நீதிமான்களாக்கினார், எனவே நீதிமான்களின் பயனுள்ள ஊக்கமான ஜெபம் பெரும் வல்லமையைக் கொண்டுள்ளது மற்றும் அற்புதமான முடிவுகளைத் தருகிறது (யாக்கோபு 5:16b NLT) என்ற புரிதலுடன் அவரைத் தேடுங்கள்.இயேசுவின் பெயரில் சூழ்நிலைகள் இன்று உங்களுக்கு சாதகமாக மாறுகின்றன.ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்த்து,சூழ்நிலைகள் இன்று உங்களுக்கு சாதகமாகத் திரும்புவதை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

img_165

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பாருங்கள்,வாழ்வில் வேதனையற்ற ஆசீர்வாதம் பெறுங்கள்!

27-02-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பாருங்கள்,வாழ்வில் வேதனையற்ற ஆசீர்வாதம் பெறுங்கள்!

5. எனக்கு எருதுகளும், கழுதைகளும், ஆடுகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும் உண்டென்றும், உம்முடைய கண்களில் எனக்குத் தயவுகிடைக்கத்தக்கதாக ஆண்டவனாகிய உமக்கு இதை அறிவிக்கும்படி ஆட்களை அனுப்பினேன் என்றும் உம்முடைய தாசனாகிய யாக்கோபு சொல்லச்சொன்னான் என்று சொல்லும்படி கட்டளைகொடுத்துத் தனக்கு முன்னாக அவர்களை அனுப்பினான்
26. அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்.ஆதியாகமம் 32:5,26 NKJV

யாக்கோபு தனது சொந்த நாட்டை விட்டும் தனது சொந்த குடும்பத்தை விட்டும் ஓடினான்,ஏனெனில் அவன் சகோதரன் ஏசாவின் ஆசீர்வாதத்தைத் திருடியதால் தன்னைக் கொன்றுவிடுவான் என்று பயத்தில் யாக்கோபு ஓடினான்,பரதேசியாய் ஓடி வந்த யாக்கோபு தனது மாமா லாபானுக்கு கடினமாக வேலைசெய்து, மனைவிகள், குழந்தைகள், காளைகள், கழுதைகள், மந்தைகள், ஆண் மற்றும் பெண் வேலைக்காரர்கள் போன்ற பல ஆசீர்வாதங்களைப் பெற்று அதோடு கூட மா வேதனையையும் அனுபவித்தான்!

கர்த்தருடைய ஆசீர்வாதமே ஐஸ்வரியத்தை தரும் ,ஆனால் அதனோடு எந்த வேதனையையும் கூட்டார் என்பதை யாக்கோபு ஒரு காலகட்டத்தில் உணர்ந்தான் (நீதிமொழிகள் 10:22). அந்தோ ! இதை உணர்ந்து கொள்ள அவனுக்கு சுமார் 20 ஆண்டுகள் பிடித்தன.

ஆனால்,தேவன் எப்போதும் உண்மையாகவே இருந்தார்.யாக்கோபு இந்த இருபது வருட போராட்டங்களையும்,வேதனையையும் கடந்து செல்வதற்கு முன்பே,கர்த்தர் பெத்தேலில் அவனுக்குத் தோன்றி,இந்தப் பயணம் முழுவதும் மற்றும் எதிர்கொள்ளும் பெரும் சோதனையின் நேரத்திலும் அவனோடு இருப்பேன் என்று உறுதியளித்தார்.அவர் மனிதர்களை வற்புறுத்துவதில்லை,இருப்பினும் தேர்வை மனிதர்களிடம் விட்டுவிட்டு,அவருடைய நீதியான வழிகளைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை அவர்களுக்கு அளிக்கிறார்.அவருடைய நுகம் எளிதானது, அவருடைய சுமை இலகுவானது என்று இயேசு சொன்னார்!

யாக்கோபு இந்த போராட்டங்கள் மற்றும் வேதனைகள் அனைத்தையும் எளிதாகத் தவிர்த்திருக்க முடியும், ஆனால் அவன் செய்யவில்லை,ஏனெனில் அவனது மனம் ஏற்கனவே தாய்மாமன் வீட்டிற்கு செல்வதில் உறுதியாக இருந்தது.கடினமான வழியில் வாழ்க்கையின் பாடங்களைக் கற்கும் கொள்கையின் சீஷராக அவன் விரும்பினான் .எந்த ஒரு நல்ல முடிவும் அனுபவத்திலிருந்து வருகிறது,ஆனால் அனுபவமே மோசமான முடிவிலிருந்து தான் வருகிறது என்ற கூற்றின்படி வாழ நினைப்பது,உண்மையான வேதாகம அர்த்தத்தில் ஞானம் அல்ல.

என் பிரியமானவர்களே,இன்று நாம் கடினமான பாதையில் சென்றுகொண்டிருந்தாலும் சரி,இனிமேல் அப்படி செல்ல நேர்ந்தாலும் சரி,ஒவ்வொரு தவறையும் சரிசெய்து நம்மை நடத்தும் அவருடைய மகத்தான அன்பும்,தேவ நீதியும் நம்மோடு இருக்கிறது.”கடினத்தின் மூலம் பாடங்களை கற்றுக்கொள்வது” என்ற கொள்கை வழியாக செல்வதைத் தடுக்க இயேசுவே நமது பகுத்தறிவும் ஞானமுமாய் இருக்கிறார்!ஆமென் 🙏

நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதி என்று அறிக்கையிடுங்கள்.அவர் உண்மையுள்ளவர் மற்றும் அவருடைய நீதி உங்கள் கால்களை இடறாமலும் ,சிக்கிக்கொள்ளாமலும் காக்க வல்லது! அல்லேலூயா!! ஆமென் 🙏🏽

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பாருங்கள்,வாழ்வில் வேதனையற்ற ஆசீர்வாதம் பெறுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பாருங்கள்,வாழ்வில் என்றென்றும் ஆளுகை செய்ய ஆசீர்வாதம் பெறுங்கள்!

26-02-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பாருங்கள்,வாழ்வில் என்றென்றும் ஆளுகை செய்ய ஆசீர்வாதம் பெறுங்கள்!

26. அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்.ஆதியாகமம் 32:26 NKJV

தேவன் நம் வேதனைக்கு காரணம் அல்ல,ஆனால் அவர் நம் வேதனையை ஒரு பெரிய ஆதாயமாக மாற்றுகிறார்.ஈசாக்கின் மகன் யாக்கோபு,தன் சகோதரனுக்கு அஞ்சி தன் தகப்பன் வீட்டை விட்டு உயிரைக் காத்துக்கொள்ள ஓடிப்போனான்.தன் தாய் மாமன் லாபானிடம் தஞ்சம் புகுந்த பிறகு யாக்கோபு தன் மாமன் வீட்டில் அவர் மந்தையை மேய்ப்பதற்காக வேலை செய்து,அவர் மகள்களில் ஒருத்தியை மணந்துகொள்ளலாம் என்று எத்தனித்திருந்தான்

காலப்போக்கில்,லாபான் தனது தந்திரங்களை பயன்படுத்தி யாக்கோபிடமிருந்து வேலைகளை தனக்கு சாதகமாக பெற்றுக்கொண்டான்.யாக்கோபு தனது சொந்த சகோதரனின் கோபத்திலிருந்து தஞ்சம் தேடி ஓடிய அவல நிலையை அறிந்ததால் அவனை லாபான் ஏமாற்றினான் .(ஆதியாகமம் 31:13) என்று வேதாகமத்தில் பார்க்கிறோம்.

உதவியற்ற யாக்கோபு துரோகம், ஏமாற்றுதல் மற்றும் நம்பிக்கையின்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டான்.அவன் தன் தந்தை வீட்டுக்கு திரும்பவும் முடியாமல் மற்றும் லாபானுடன் இருக்கவவும் முடியாது என்ற இக்கட்டில் சிக்கிக்கொண்டான்.20 ஆண்டுகளாக அவன் இந்த சோதனையை வேதனையோடு அனுபவித்தான். இந்த சகிக்க முடியாத வேதனை அவனது தெய்வீக இலக்கை அடையச்செய்யும் மாற்றமுடியாத ஆசீர்வாதத்தை தேவனிடமிருந்து தீவிரமாகத் தேடவும் பெறவும் வழிவகுத்தது. – அது சவாலற்ற மற்றும் இணையற்ற.ஆசீர்வாதம் .

என் அன்பானவர்களே, வேதனை என்பது என்னவென்றால்,ஒவ்வொருவரும் விதிவிலக்கு இல்லாமல் வேதனையை கடந்து செல்லக் காரணம் – பல சமயங்களில் அவர்கள் சுயஇச்சை தான், சில சமயங்களில் சூழ்நிலை அல்லது மக்களால் கூட துன்பம் ஏற்படலாம்.ஆனால், நல்ல செய்தி என்னவென்றால், எல்லா மனிதர்களும் கடந்து செல்லும் வேதனையை அனைத்தும் இயேசு கடந்து சென்று நமக்காக வெற்றி பெற்றார். எனவே, இந்த இயேசு உங்கள் வேதனையை இன்று பெரும் ஆதாயமாக மாற்றுகிறார்.

எப்பொழுதும் மீளமுடியாத,ஈடு இணையற்ற மற்றும் சவால் செய்ய முடியாத அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற இயேசுவைப் பற்றிக்கொள்ளுங்கள்!

நினைவில் கொள்ளுங்கள்,அவருடைய நீதியின் (நம்முடைய சுயநீதி அல்ல) அடிப்படையில் அவருடைய ஆசீர்வாதத்தைத் தேடும் போது மட்டுமே அது கிடைக்கும்.இயேசுவே நமது நீதி (T’sidkenu).அவருடைய இரத்தம் உங்களை நீதிமான்களாக்கியது,அவருடைய உயிர்த்தெழுதல் உங்களை என்றென்றும் நீதிமான்களாக்கியது. அல்லேலூயா! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பாருங்கள்,வாழ்வில் என்றென்றும் ஆளுகை செய்ய ஆசீர்வாதம் பெறுங்கள்

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பாருங்கள்,வாழ்வில் ஆளுகை செய்ய மனக்கண்கள் பிரகாசிக்கப் பெறுங்கள்!

23-02-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பாருங்கள்,வாழ்வில் ஆளுகை செய்ய மனக்கண்கள் பிரகாசிக்கப் பெறுங்கள்!

47.அவன் நசரேயனாகிய இயேசு வருகிறாரென்று கேள்விப்பட்டு: இயேசுவே,தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிடத் தொடங்கினான்
51. இயேசு அவனை நோக்கி: நான் உனக்கு என்னசெய்ய வேண்டும் என்றிருக்கிறாய் என்றார். அதற்கு அந்தக் குருடன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்.
52. இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றான்..மாற்கு 10:47,51,52 NKJV

மேசியாவின் முக்கிய அற்புதங்களில் ஒன்று பார்வையற்றவர்களின் கண்களைத் திறப்பது.உடல்நலக் குறைவால் பார்வையற்றவர்,பார்வை இழந்தவர் அல்லது பிறவி குருடராக பிறந்தவர்,பழைய ஏற்பாட்டில் குணமடைந்ததாக சரித்திரம் இல்லை என்ற செய்தியை நாங்கள் பார்த்ததில்லை.

அந்த குருடன் கூக்குரலிட்டபோது,அவன் தற்செயலாகவோ அல்லது தவறாகவோ கூப்பிடவில்லை,மாறாக அவன் தாவீது ராஜாவின் வம்சத்திலிருந்து வந்த இயேசுவாகிய மேசியாவின் பெயரை தீவிரமாக கூச்சலிட்டான்.கர்த்தராகிய இயேசு நின்று உடனடியாக ஒரு ராஜாவிற்குரிய அதிகார வார்த்தையைப் பேசினார்,பிதாவாகிய தேவன் அதை உறுதிப்படுத்தினார்,பார்வையற்ற குருடன் பார்க்கத் தொடங்கினான். அல்லேலூயா!

என் அன்பானவர்களே,இன்று நாம் உடல்ரீதியாக பார்வையற்றவர்களாக இல்லாமல் இருக்கலாம்,ஆனால் நம்மில் பெரும்பாலோர் ஆன்மீக ரீதியில் பார்வையற்றவர்களாக இருக்கிறோம்.ஆகார் தனது மகனுடன் வெளியே அனுப்பப்பட்டாள்,தண்ணீர் இல்லாததால் பாலைவனத்தில் தனது மகன் இறக்கும் தருணத்தில்,தேவன் அந்த பையனின் அவலமான கூக்குரலைக் கேட்டு அவள் கண்களைத் திறந்தார், அவள் ஒரு தண்ணீர் ஊற்றைக் கண்டாள்.அந்த நேரத்தில் தேவன் அங்கு ஒரு ஊற்றை உருவாக்கவில்லை, மாறாக அந்த பாலைவனத்தில் ஏற்கனவே இருந்த ஊற்றைப் பார்க்க ஆகாரின் மூடியிருந்த கண்களைத் திறந்தார். இன்றும் கூட,உங்கள் பிரச்சனைக்கான தீர்வை நீங்கள் பார்க்காமல் இருக்கலாம், ஆனால் உங்கள் கண் முன்னே தீர்வு இருக்கிறது.இந்த குருட்டுத்தன்மையால் ஏற்படும் துன்பம் பயங்கரமானது!

உலகத்தின் ஒளியாக விளங்கும் மேசியாவாகிய ஆண்டவர் இயேசுவை நோக்கி கூப்பிடுங்கள்,அவர் உங்கள் கண்களைத் திறந்து ஒளிரச் செய்வார். (எபேசியர் 1:17-19) இதுவே இன்றைய உங்கள் வேதனைக்குத் தீர்வாகும்.மகிமையின் ராஜா இன்று உங்களை இம்மண்ணில் ஆளுகைச் செய்யும் ஒளி பெற உங்கள் கண்களைத் திறக்கிறார்.ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பாருங்கள்,வாழ்வில் ஆளுகை செய்ய மனக்கண்கள் பிரகாசிக்கப் பெறுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

img_200

வாழ்வில் விரக்தியின் மத்தியில் மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,உங்கள் இலக்கை அடைய உயர்த்தப்படுங்கள்!

20-02-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

வாழ்வில் விரக்தியின் மத்தியில் மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,உங்கள் இலக்கை அடைய உயர்த்தப்படுங்கள்!

27. இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டு: நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி;
28. ஜனக்கூட்டத்துக்குள்ளே அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள்.
29. உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்றுபோயிற்று; அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள்.மாற்கு 5:27-29 NKJV.

விரக்தி என்பது மாறுவேடத்தில் வரும் ஒரு ஆசீர்வாதம்,அதை சரியான அணுகுமுறையுடன் கையாளும் போது, ​​உங்கள் இலக்கிற்கு அது உங்களை அழைத்துச் செல்லும்!

வாழ்க்கை உங்களுக்கு உங்கள் தகுதியை விட அதிகமாக வழங்காதபோது,இந்த வாழ்க்கை உங்களை நம்பிக்கையில்லா விளிம்பிற்க்கு தள்ளும்.புத்திசாலித்தனம்,செல்வம்,மக்கள் செல்வாக்கு,கல்வி சாதனைகள் மற்றும் அனுபவங்கள் நீங்கள் விரும்பிய இலக்கை அடைய உதவாத போது மற்றும் உங்கள் உள்மனதின் ஆசை அல்லது இன்றியமையாத தேவைகள் நிறைவேறாதபோது,நீங்கள் அவநம்பிக்கையும் ,விரக்தியும் அடைகிறீர்கள்.உங்கள் எதிர்காலம் உங்களுக்கு இருண்டதாகவும்,என்ன செய்வது என்று தெரியாமல் நம்பிக்கையற்றதாகவும் இருக்கிறது, ஏனென்றால் நீங்கள் உங்களால் முடிந்த அனைத்தையும் முயற்சித்தீர்கள் ஆனால் பயனில்லை.

அப்படிப்பட்ட சமயங்களில்,நெருங்க முடியாத வெளிச்சத்தில் இருக்கும் பரலோகத்தில் உள்ள பெரிய தேவன் உங்களோடு இடைப்படுகிறார்.உங்கள் துக்கத்தை சொல்ல முடியாத மகிழ்ச்சியாகவும் மகிமை நிறைந்ததாகவும்,உங்கள் நோயை ஆரோக்கியமாகவும் இயேசு மாற்றுகிறார்.அப்பொழுது நம் வாழ்வில் நிறைவேறாத கனவுகள் மற்றும் ஆசைகள்,கற்பனைக்கு அப்பாற்பட்ட அற்புதமான இலக்கை அடைகிறது !அல்லேலூயா!!

இன்றே உங்கள் நாள்!இப்போதே உங்கள் அற்புதத்தின் நேரம்!கர்த்தர் உங்கள் விரக்தியிலிருந்து உங்களை உயர்த்தி,உங்கள் இலக்கிற்கு உங்களை அழைத்துச் செல்வார்,அதற்காக நீங்கள் நித்தியமாக நன்றியுள்ளவர்களாக இருப்பீர்கள்,அவருடைய நிபந்தனையற்ற அன்பு மற்றும் விவரிக்க முடியாத பரிசு – இயேசு!

பரிசுத்த ஆவியானவர் இயேசுவின் நாமத்தில் இன்று அவருடைய நீதியாகிய ஆடையின் ஓரத்தைத் தொடும்படி உதவுவீராக!ஆமென் 🙏

நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனின் நீதியாயிருக்கிறீர்கள்!

வாழ்வில் விரக்தியின் மத்தியில் மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,உங்கள் இலக்கை அடைய உயர்த்தப்படுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்.

im

வாழ்வில் விரக்தியின் மத்தியில் மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,உங்கள் இலக்கை அடையுங்கள்!

19-02-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

வாழ்வில் விரக்தியின் மத்தியில் மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,உங்கள் இலக்கை அடையுங்கள்!

25. அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ,
26. அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்படுகிறபொழுது,
27. இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டு: நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி;மாற்கு 5:25-27 NKJV

அந்தப் பெண் இயேசுவைப் பற்றி கேள்விப்படுவதற்கு முன்பு,அவள் 12 ஆண்டுகளாக மெனோரேஜியாஎன்ற நோயால் மிகவும் அவதிப்பட்டாள்.அது அவளுக்கு சமூக அங்கீகாரமின்மை,பணப்பற்றாக்குறை, தொடர்ச்சியான சோர்வு மற்றும் கொடூரமான வலியை ஏற்படுத்தியது.அவள் சமூகத்தால் ஒடுக்கப்பட்டவளும் மற்றும் நம்பிக்கையற்றவளுமாக இருந்தாள்.ஏனென்றால் அவளுடைய வியாதியிலிருந்து குணமடைய அவள் செய்த அனைத்து தீவிரமான முயற்சிகளும் தோல்வியடைந்தன,அவளுக்கு மருத்துவ முறையிலிருந்து எந்த நிவாரணமும் இல்லை,மாறாக அவளுடைய துன்பம் அதிகரித்தது மற்றும் மருத்துவர்களால் கைவிடப்பட்டு அவளுடைய நிலை மோசமடைந்தது.

அந்தோ!அவள் குணமடைய ஏங்கினாள் ஆனால் அதை எப்படி பெறுவது என்று தெரியவில்லை.

என் அருமை நண்பர்களே,வாழ்க்கையில் தீர்வு காணாமல் ஏற்படும் விரக்தியின் காரணமாக மனச்சோர்வு மற்றும் மனஅழுத்தம் ஏற்படுத்துகிறது.ஆனால் அந்த விரக்தியால் துன்பப்படுபவர்களை இயேசுவிடம் கூட்டிச் சென்றால்,அவர் நிச்சயமாக சில பயங்கரமான சூழ்நிலைகளால் உதவியற்ற முறையில் நீண்ட காலமாக .
துன்பப்படும் ஒவ்வொருவருக்கும் பரிகாரத்தைக் கொண்டு வர முடியும்.

என் அன்பானவர்களே,உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால்,அது மிகுந்த மன அழுத்தத்தையும், நம்பிக்கையற்ற தன்மையையும் ஏற்படுத்தியிருந்தால்,அதிலிருந்து விடுபட நீங்கள் மிகவும் ஆவலோடிருந்தால்,தயவுசெய்து மகிழ்ச்சியாக இருங்கள்.இயேசு உங்களை முழுமையாக விடுவிக்க முடியும்.காற்றைக் கடிந்து கடலை அமைதிப்படுத்தியவர், இப்போது நீங்கள் அனுபவிக்கும் புயல்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பார்.

இந்தப் பெண்ணின் விரக்தி அவளை இயேசுவிடம் அழைத்துச் சென்றது! அவள் இயேசுவிடமிருந்து குணமடைந்து நிரந்தரமாக மீட்கப்பட்டாள். அல்லேலூயா!
இன்று இதுவே உங்கள் வாக்கு !உங்கள் வாழ்க்கையின் அச்சுறுத்தும் புயல்களின் மத்தியில் மீட்பராகிய இயேசுவைக்கண்டு அமைதல் பெறுங்கள்.ஆமென் 🙏

வாழ்வில் விரக்தியின் மத்தியில் மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,உங்கள் இலக்கை அடையுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்.

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்த்து,வாழ்வில் ஆளுகை செய்ய அவரைப் பற்றிய ஞானத்தால் அறிவொளி பெறுங்கள்!

16-02-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்த்து,வாழ்வில் ஆளுகை செய்ய அவரைப் பற்றிய ஞானத்தால் அறிவொளி பெறுங்கள்!

10. இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின் செல்லுகிறவர்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
13. பின்பு இயேசு நூற்றுக்கு அதிபதியை நோக்கி: நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நாழிகையிலே அவன் வேலைக்காரன் சொஸ்தமானான். மத்தேயு 8:10, 13 NKJV.

ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்பு பாஸ்டர் பென்னி ஹின்னிடமிருந்து நான் கற்றுக்கொண்ட விசுவாசத்தின் ஏணியில் பல படிகள் உள்ளன.அவற்றை உங்களுக்காக பட்டியலிடுகிறேன்:

1. பொதுவான விசுவாசம்
2. சிறிய விசுவாசம்
3. தற்காலிக விசுவாசம்
4. வலுவான விசுவாசம்
5. பெரிய விசுவாசம் 6. அறிக்கை செய்யும் விசுவாசம்
7. தெய்வீக விசுவாசம்

இயேசு நூற்றுக்கதிபதியின் விசுவாசத்தைக் கண்டு வியந்து,அதை‘பெரிய விசுவாசம்’என்று அழைத்தார்.அது மேற்கண்ட வரிசையில் 5வது படி! யூதராக இல்லாத, ந்த திரித்துவக் கல்லூரியிலும் படிக்காத போதிலும் ‘பெரும் விசுவாசம் ’கொண்ட ஒரு புறஜாதியைக் கண்ட எவரையும் வியக்கச் செய்யும்.

உங்கள் தேவனைப் பற்றிய உங்கள் அறிவு உங்கள் விசுவாசத்தை வரையறுக்கிறது.ஒருபுறம், நீங்கள் யார் என்பதைப் பற்றிய உங்கள் உண்மையான சுய பரிசோதனை,மறுபுறம் உங்கள் தேவன் யார் என்பதைப் பற்றிய உங்கள் ஆழமான சுய-உணர்தல்,இவை உங்கள் விசுவாசத்தின் முழுமையான ஆழத்தை விளக்குகிறது. ஆமென்!

நூற்றுக்கதிபதி இயேசுவை தனது இதயத்தில் ராஜாவாகக் கண்டார்,ஆண்டவராகிய இயேசுவை தேவனின் ஊழியராக அல்ல,சேவை செய்ய வந்தவர் என்று நினைக்கவில்லை.மாறாக
அவர் இயேசுவை ஒரு பெரிய ராஜாவாகக் கண்டார்,அவரை எல்லா படைப்புகளும் வணங்கி,பரிசுத்த்தோடு சேவிக்கின்றதை அறிந்திருந்தார்! அல்லேலூயா!!

அன்புள்ள அப்பா பிதாவே,இயேசுவை உள்ளுணர்வாகவும் நெருக்கமாகவும் அறிந்துகொள்ள ஞானம் மற்றும் வெளிப்பாட்டின் ஆவியை எனக்குக் கொடுங்கள்,அதனால் நான் இயேசுவின் நாமத்தில் மக்களிடமிருந்து அல்ல,தேவனிடமிருந்து புகழ்ச்சி பெற உதவுவீராக.ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்த்து,வாழ்வில் ஆளுகை செய்ய அவரைப் பற்றிய ஞானத்தால் அறிவொளி பெறுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம்.