Author: vijay paul

scenery

இயேசுவை நோக்கிப் பார்ப்பது தேவனுடைய பிரதிபலிப்பை அனுபவிக்கச்செய்கிறது !

05-09-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது தேவனுடைய பிரதிபலிப்பை அனுபவிக்கச்செய்கிறது !

8.இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஒமெகாவும் நானே ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார் .
18. மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்
(வெளிப்படுத்துதல் 1:8, 18) NKJV

இன்றைய காலத்த்தில் ஆங்கிலம் ஒரு உலகப்பொது மொழியாக உள்ளது.போல புதிய ஏற்பாடு எழுதப்பட்ட காலத்தில் ,அந்த பிராந்தியத்தில் தகவல்தொடர்புக்கான முதன்மையான அதிகாரப்பூர்வ மொழியாக கிரேக்கம் பேசப்பட்டது ஆங்கிலத்தில் ‘A’ மற்றும் ‘Z’ இருப்பதைப் போலவே ‘Alpha’ என்பது கிரேக்க மொழியின் முதல் எழுத்தும், ‘Omega’ என்பதும் கடைசி எழுத்தும் ஆகும்.

ஒவ்வொரு மொழியும் அதன் எழுத்துக்களால் இணைக்கும் போது வார்த்தைகளாக வெளிப்படுத்தப்படுகிறது. அதுபோலவே, தேவனின் வார்த்தை மனிதகுலத்திற்கு தேவனின் வெளிப்பாடாகும். இயேசுவே தேவனின் வார்த்தை. அவர் மனிதகுலத்திற்கு தேவனின் முழுமையான வெளிப்பாடாக இருக்கிறார்.இப்போது இயேசு ‘நானே ஆல்ஃபாவும் ஒமேகாவும்’ என்று கூறும்போது, ​​தேவன் சொல்ல வேண்டிய அனைத்தும் இயேசுவில் சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.அல்லேலூயா!

எனவே,இயேசு மனிதகுலத்திற்கு தேவனின் முழுமையான வெளிப்பாடாக இருக்கிறார் மற்றும் நீங்கள் இயேசுவில் உங்களைக் காண்கிறீர்கள்.இயேசுவின் வெளிப்பாடு உங்களின் வெளிப்பாடுமாகும் .மேலும் நம் சிறந்த புரிதலுக்காக,தேவனுக்கும்,மனிதனுக்கும் இடையிலான தொடர்பு மற்றும் வெளிப்பாட்டை அடைய ஒரே வழி இயேசு மட்டுமே
.
ஒருவருடைய வாழ்க்கையின் ஆரம்பம் பிறப்பு என்றால் ஒருவருடைய வாழ்க்கையின் முடிவு மரணம் ஆகாது ஏனென்றால்,இயேசு உங்கள் ஆல்பா மற்றும் ஒமேகாவாக மாறும்போது.மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தவரின் வல்லமை (முடிவற்ற வாழ்க்கை) உங்களை சாவாமைக்கு கொண்டு செல்லும்.ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது தேவனுடைய பிரதிபலிப்பை அனுபவிக்கச்செய்கிறது !

கிருபை நற்செய்தி தேவாலயம் .

scenery

இயேசுவை நோக்கிப் பார்ப்பது அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையை அனுபவிக்கச்செய்கிறது !

04-09-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையை அனுபவிக்கச்செய்கிறது !

8.இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்:நான் அல்பாவும், ஒமெகாவும் நானே ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.
~18. மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்
~(வெளிப்படுத்துதல் 1:8, 18) NKJV

என் அன்பான நண்பர்களே,ஆசீர்வதிக்கப்பட்ட செப்டம்பர் மாத வாழ்த்துக்கள்!இந்த மாதத்தின் ஒவ்வொரு நாளும் இயேசுவின் நாமத்தில் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டு,மகிமையான ஈவுகளை உங்களுக்கு அளிக்கும்படியாக பிராத்திக்கிறேன்

நாம் இயேசுவை தனிப்பட்ட முறையில் அறிந்து கொள்ள புத்தகங்கள், ஒத்திசைவுகள், சமூக ஊடகங்கள், பிரசங்கிகள் அல்லது ஆசிரியர்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.ஆசிரியர்/ பிரசங்கியார் போதிப்பதின் மூலம் பெறும் ஆசீர்வாதம் இருந்தாலும்,பரிசுத்த ஆவியானவர் மற்றும் அவருடைய வார்த்தையின் மூலம் இயேசுவை தனிப்பட்ட முறையில் அறிந்துகொள்வது ஒரு பெரிய ஆசீர்வாதமாகும், ஏனெனில் இது ஒரு தனிப்பட்ட அனுபவம் மற்றும் அது நித்தியமான தெய்வீகத்தின் வெளிப்பாடாக மாறும். அல்லேலூயா!

என் அன்பானவர்களே, இந்த மாதத்தில் ஒவ்வொரு நாளும் ஆண்டவராகிய இயேசுவை சிறந்த முறையில் உங்களுக்கு வழங்க முயற்சிப்பேன்,அதனால் நீங்கள் அவரை தனிப்பட்ட முறையில் தியானிக்கும்போது, ​​​​பரிசுத்த ஆவியானவர்,ஆண்டவராகிய இயேசுவை முற்றிலும் புதிய பரிமாணத்தில் வெளிப்படுத்துவார், மேலும் நீங்கள் நிச்சயமாக இயேசுவின் பெயரில் அவருடைய உயிர்த்தெழுதலை அனுபவிப்பீர்கள்!

இயேசுவே ஆல்ஃபாவும் ஒமேகாவும்,ஆரம்பமும் முடிவுமாக இருக்கிறார் ! ஆல்ஃபா மற்றும் ஒமேகா, ஆரம்பம் மற்றும் முடிவு,ஆகிய இயேசு கிறிஸ்துவின் இந்த வெளிப்பாடு- வெளிப்படுத்துதல் புத்தகத்தில் மூன்று முறை தோன்றுவதை நான் கவனித்தேன், அதாவது வெளிப்படுத்துதல் 1:8, 21:6 மற்றும் 22:13. ஒவ்வொரு முறையும் அது குறிப்பிடப்படும்போது, ​​அது அவருடைய வருகையைக் குறிக்கிறது. ஆம், அவர் உங்களுக்கு ஒரு புதிய தொடக்கத்தைத் தரவும், உங்கள் இரட்சகராகவும், உங்கள் நீதியாகவும், உங்கள் ஆண்டவராகவும் அவரைப் பற்றிக் கொண்டதற்காக உங்களுக்கு வெகுமதி அளிக்கவும் வருகிறார்.

என் அன்பானவர்களே,நீங்கள் இந்த மாதம் மற்றும் இந்த வாரம் தொடங்கிய வேளையில்,​​அவர் தம்மை உங்களுக்கு வெளிப்படுத்த (encounter) வருகிறார், மேலும் அவர் உங்களுக்கான தனது திட்டங்களை விளக்கி கூறுகிறார் , உங்களில் ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்கி, உங்கள் உறுதிப்பாட்டிற்காக உங்களுக்கு வெகுமதி (reward )அளிக்கிறார்ஆமென் 🙏.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையை அனுபவிக்கச்செய்கிறது !

கிருபை நற்செய்தி தேவாலயம் .

scenery

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்த்து,அவருடைய நன்மையையும் நிரம்பி வழியும் ஆசீர்வாதத்தையும் அனுபவியுங்கள் !

31-08-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்த்து,அவருடைய நன்மையையும் நிரம்பி வழியும் ஆசீர்வாதத்தையும் அனுபவியுங்கள் !

1. கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார் ; நான் தாழ்ச்சியடையேன்.
6 . என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன். (சங்கீதம் 23:1, 6) NKJV

என் அன்பான நண்பர்களே,இந்த மாத இறுதிக்குள் வந்துவிட்டோம்,நல்ல மேய்ப்பரான இயேசுவுடன் நீங்கள் ஒரு அழகான ஆன்மீக பயணத்தை மேற்கொண்டீர்கள் என்று நான் நம்புகிறேன். இதில் முக்கியமானது என்னவென்றால், நம் எல்லோருக்கும் இயேசுவுடனான ஒரு தொடர் உறவு கட்டாயமாக தேவைப்படுகிறது .அது சிறியதோ பெரியதோ, கையாளக்கூடியதோ இல்லையோ, மகிழ்ச்சியோ துக்கமோ நம் எல்லாப் பிரச்சினைகளையும் அவரிடம் கொண்டு செல்ல வேண்டும்.நாம் அவருடன் ஒவ்வொரு நாளும் பிரார்த்தனை நேரத்தில் மட்டுமல்ல. பலமுறை பேசுகிற உறவுக்குள் வரவேண்டும்.

இயேசுவோடு நமக்குள்ள உறவை உண்மையாக்குபவர் பரிசுத்த ஆவியானவர்! அவர் சர்வவல்லமையுள்ள தேவனின் பிரசன்னமாக இருக்கிறார்.நமது முதன்மைக் காரியமாக அவருக்கு முன்னுரிமை அளிக்கும்போது ,நம்மைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் சீரமைக்கவும் நம்மீது கவனம் செலுத்தி நம்மைப் பின் தொடர வழிச்செய்கிறது .
.
இது தாவீதின் அனுபவம், தன் வாழ்வின் மேய்ப்பனாகிய தேவனை எப்பொழுதும் தனக்கு முன்பாக வைத்ததால் , நன்மையும் கருணையும் தன் வாழ்நாள் முழுவதும் தம்மைப் பின்தொடர்ந்தன என்று சாட்சி கூறுகிறார்.

நீங்கள் கர்த்தரைப் பின்பற்றும்போது, ​​எல்லா நன்மைகளும்,கிருபைகளும் மற்றும் இரக்கமும் உங்களைப் பின்தொடரும்.
பதவி உயர்வு , ஊதிய உயர்வு , நல்ல ஆரோக்கியம், அமைதி ,மகிழ்ச்சி மற்றும் எந்த ஆசீர்வாதத்திற்கும் பின் தொடர்ந்து நீங்கள் ஓட வேண்டியதில்லை.உங்கள் ஆத்துமாவின் நல் மேய்ப்பனை உங்கள் கண்மணியாக வைத்திருக்கும் மாத்திரத்தில் இவை அனைத்தும் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களைப் பின்தொடரும். அல்லேலூயா !

நீங்கள் ஆசீர்வதிக்கிறவரை தேடும்போது,பரிபூரண ​​ஆசீர்வாதங்கள் உங்களைத் தேடி,உங்களைக் கண்டுபிடித்து, இயேசுவின் நாமத்தில் நிரம்பி வழியும் அளவிற்கு உங்களைச் சூழ்ந்து கொள்ளும் .ஆமென் 🙏

என் அன்பு நண்பர்களே , இந்த மாதம் முழுவதும் என்னுடன் நற்செய்தி ஊழியத்தில் இணைந்ததற்கு நன்றி. வரவிருக்கும் மாதத்தில் கடவுள் உங்களுக்கு இன்னும் பெரிய விஷயங்களை வைத்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன்.ஆசீர்வதிக்கப்பட்டிருங்கள் !ஆசீர்வாதத்தில் நிலைத்திருங்கள் !!ஆமென் 🙏.

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்த்து, அவருடைய நன்மையையும் நிரம்பி வழியும் ஆசீர்வாதத்தையும் அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

scenery

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்த்து,நிரம்பி வழியும் அவருடைய அபிஷேகத்தை அனுபவியுங்கள்!

30-08-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்த்து,நிரம்பி வழியும் அவருடைய அபிஷேகத்தை அனுபவியுங்கள்!

5. என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. (சங்கீதம் 23:5) NKJV.

” நீர் என் தலையில் எண்ணெய் பூசுகிறீர் ” . இதில்தான் நம் வாழ்வின் மாற்றத்திற்கான எல்லை நிர்ணயம் செய்யப்படுகிறது என் அன்பு நண்பர்களே,தேவனின் அபிஷேகம் ஒருவருடைய வாழ்க்கையில் எல்லா மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது.
பிசாசும் அவனுடைய படைகளும் மனிதர்களுக்கு பயப்படுவதில்லை,ஆனால் தேவனின் அபிஷேகம் யார் மீது தங்கியிருக்கிறதோ அந்த மனிதனைப் பார்த்து அவர்கள் நிச்சயமாக பயந்து நடுங்குகிறார்கள் .
தாவீது அநேகமாக கோலியாத்தின் உருவ அளவில் பாதியாக இருந்திருக்கலாம்,ஆனால் சாமுவேல் தீர்க்கதரிசி மூலம் அவர் எண்ணெயால் (பரிசுத்த ஆவியானவர்) அபிஷேகம் செய்யப்பட்டதால்,தாவீது பெலிஸ்தியரான கோலியாத்தை விட உயரமாகவும் வலிமையாகவும் காணப்பட்டார்.

” எனது பாத்திரம் நிரம்பி வழிகிறது “என்றால் “எனது தேவைகளுக்கு போதுமானதை விட என்னிடம் உள்ளது” என்பதாகும் .எனவே, பரிசுத்த ஆவியின் அபிஷேகம்தான் நிரம்பி வழிவதையும் மிகுதியையும் வெளிப்படுத்தி விளக்குகிறது.

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே ,உங்கள் சமகாலத்தவர்களை விட நீங்கள் மிகவும் அற்பமானவராகவோ அல்லது மிகவும் குறைவாகவோ தோன்றலாம், ஆனால் உங்கள் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் இயேசுவின் பெயரில் உங்கள் சமகாலத்தவர்களைத் தாண்டி நீங்கள் சிறந்து விளங்கச்செய்யும் !

நாசரேத்து ஊரானாகிய இயேசுவை பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் செயப்பட்ட விதத்தில் (அப்போஸ்தலர் 10:38) இந்த நாளில் ,தேவன் உங்களையும் அபிஷேகம் செய்வார், மேலும் அவர் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஆக்கப்பூர்வமான யோசனைகளையும் பல மடங்கு வாய்ப்புகளையும் வழங்குவார்.அவருடைய மகிமைக்காக உங்கள் வாழ்க்கையில்.அவர் வழக்கத்திற்கு மாறான தயவைப் பொழிவதால், நீங்கள் அவருடைய நிரம்பி வழியும் ஆசீர்வாதத்தில் நடப்பீர்கள். நாம் கேட்பது அல்லது நினைப்பது அனைத்திற்கும் மேலாக அவர் மிக அதிகமாகவும், மிகுதியாகவும் செய்ய வல்லவர் (எபேசியர் 3:20).அவரே நிரம்பி வழியும் தேவன் ! அவரையே விசுவாசியுங்கள்,ஆசீர்வாதத்தை பெறுங்கள்! ஆமென் 🙏.

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்த்து,நிரம்பி வழியும் அவருடைய அபிஷேகத்தை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

scenery

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்த்து ,அவர் உங்கள் எதிரிகள் முன்னிலையில் ஏற்படுத்திய விருந்தை அனுபவியுங்கள்!

29-08-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்த்து ,அவர் உங்கள் எதிரிகள் முன்னிலையில் ஏற்படுத்திய விருந்தை அனுபவியுங்கள்!

5. என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
6. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன். (சங்கீதம் 23:5-6) NKJV.

இந்த சங்கீதம் 23ஐ தாவீது எப்போது எழுதினார்? அவர் மேய்ப்பனாக இருந்த காலமா அல்லது இஸ்ரவேலின் ராஜாவாக ஆன பிறகா ?
அவர் மேய்ப்பராக இருந்தபோது எழுதியிருந்தால் இந்த வார்த்தைகள் அவருடைய எதிர்காலத்திற்காக தீர்க்கதரிசனமாக பேசப்பட்டதாயிருக்கும்.ஆனால்,அவர் அரசரான பிறகு எழுதப்பட்டிருந்தால், அவர் தேவனின் அற்புதமான அன்பு மற்றும் உண்மைத்தன்மையின் சாட்சியைப் பகிர்ந்து கொள்கிறதாயிருக்கும்
.
ஒரு சில ஆடுகளுடன் அலைந்து திரிந்த ஒரு ஏழை மேய்ப்பனான நிலையிலிருந்து, ஒரு தேசத்தின் மக்களால் சூழப்பட்ட ஒரு அரசனாக உயர்ந்த நிலைக்கு தேவன் அவரை உயர்த்தினார்.

என் அன்பானவர்களே, இதுவே உங்களுக்கும் சாட்சியாக இருக்கும். சமுதாயத்தில் எங்கிருந்தாலும் நீங்கள் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும். இன்று என் வார்த்தைகள் தீர்க்கதரிசனமாக உங்களுக்கு இருக்கலாம்.இதுவே ,இறுதியில் உங்கள் சாட்சியாக மாறும், ஏனெனில் இது ஏற்கனவே தேவனோடு உங்களுக்காக செய்யப்பட்ட ஒப்பந்தமாயிருக்கிறது.
வேதனையையும் அவமானத்தையும் கடந்து வந்த நீங்கள், இன்று இரட்டிப்பு மரியாதையை அணிந்து, தேவன் உங்களுக்கு கொடுக்கும் புதிய பெயரையும்,கனத்தையும் அனுபவிப்பீர்கள் .

நல்ல மேய்ப்பரிடம் உங்களை விட்டுகொடுத்து உங்களை ஒப்படைக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் எதிரிகளுக்கு முன்பாக நீங்கள் தாழ்த்தப்பட்டால், ஆண்டவராகிய எபினேசர் உங்களை உயர்த்தி, உங்கள் எதிரிகளின் முன்னிலையில் உங்களை உட்கார வைப்பார்.
உங்கள் எதிரிகள் முன்னிலையில் கடவுள் உங்களுக்கு முன்பாகவே ஒரு மேஜையை தயார் செய்துள்ளார்! இந்த வசனம் (message Translation ல்) வேறு வார்த்தையில் இவ்வாறாக கூறப்படுகிறது-“எனது எதிரிகளுக்கு முன்பாக நீர் எனக்கு அறுசுவை ஆடம்பர உணவை தயார்செய்துள்ளீர்.” இது அருமை!
இயேசுவின் நாமத்தில் உன்னதமாக வாழவும், கம்பிரமாக நடக்கவும், ஆவிக்குரிய ஆலோசனையில் செயல்படவும் உங்களை ஆசீர்வதிக்கிறேன். ஆமென் மற்றும் ஆமென் 🙏.

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்த்து ,அவர் உங்கள் எதிரிகள் முன்னிலையில் ஏற்படுத்திய விருந்தை அனுபவியுங்கள்

கிருபை நற்செய்தி தேவாலயம் .

scenery

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பாருங்கள்,அவருடைய மிகுதியான ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள் !

28-08-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பாருங்கள்,அவருடைய மிகுதியான ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள் !

5. என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
6. என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன். (சங்கீதம் 23:5-6) NKJV.

என் அன்பானவர்களே ,நாம் ஒரு புதிய வாரத்தைத் தொடங்கி இந்த மாதத்தை முடிக்கிறவேளையில் நான் விசுவாசத்தோடு ஆணையிட்டு கூறுகின்ற காரியமாவது, கடந்த நாட்களில் உங்களைத் தொல்லை செய்த உங்கள் எதிரிகள் அனைவரும் மனிதனின் உதவியாளரான எபினேசரால் மட்டுமே வரும் உங்கள் மேன்மைக்கும்,உயர்வுக்கும் சாட்சியாக இருப்பார்கள்!

சஞ்சலமும், துக்கமும் நிறைந்த நாட்கள் முடிந்துவிட்டன . உன் தலையில் அபிஷேக எண்ணெய் குறையாது. விரைவான மற்றும் சூழ்நிலைக்கு பொருத்தமான முடிவுகளை எடுக்க உங்கள் பகுத்தறியும் வல்லமை கூர்மைப்படுத்தப்படும்.உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நீங்கள் ஏராளமான ஆசிர்வாதங்களை அனுபவிப்பீர்கள்.

தேவன், அவரது முழு வல்லமையோடும் மற்றும் நிரம்பி வழிகிற மிகுதியானஆசிர்வாதங்களோடும் உங்களை ஆக்கிரமிக்கின்றகாலம் , உங்கள் தேவைக்கு போதுமான ஆசிர்வாதங்களை மட்டும் பெறாமல்,தேவைக்கு மிஞ்சி மிகுதியான ஆசீர்வாதங்களை கிருபையாக இயேசுவின் நாமத்தில் பெருகிறீர்கள்!

உங்கள் வாழ்வு இயேசுவின் நாமத்தில் “காத்திருத்தல்” நிலையிலிருந்து “உடமையோடு நடக்க மற்றும் இளைப்பாறுதலோடு ஆட்சி செய்ய துரிதப்படுத்துகிறது .ஆமென் 🙏

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பாருங்கள்,அவருடைய மிகுதியான ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

scenery

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்ப்பது உங்கள் உயர்வை அனுபவிக்கச்செய்கிறது !

25-08-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்ப்பது உங்கள் உயர்வை அனுபவிக்கச்செய்கிறது !

4.நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும் .
(சங்கீதம் 23:4 ) .
5. என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.(சங்கீதம் 23:5)

வசனங்கள் 4 மற்றும் 5இல் மிகவும் தெளிவாக காண்பது எதிரிகள் உங்களுக்கு முன்பாக நிற்பது மட்டும் தான் ,ஆனால் வசனம் 5 இல் காணப்படாதது அவர் உங்கள் எதிரிகளுக்கு முன்பாக ஒரு விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறார் என்பதாகும் .

ஆம் என் அன்பானவர்களே,இருளில் நாம் சரியாய்ப் பார்ப்பதில்லை அதனால் நம் ஆசீர்வாதம் நமக்கு இல்லை என்று அர்த்தம் அல்ல .எலிசா தீர்க்கதரிசியைக் கைதுசெய்ய சிரியாவின் இராணுவம் வந்தபோது, ​​​​எலிசாவின் வேலைக்காரன் படையைப் பார்த்து பயந்து கூக்குரலிட்டார், ஆனால் அவர் பார்க்காதது கடவுளின் மனிதரான எலிசாவைச் சுற்றியிருந்த தேவனின் படையானது எண்ணிக்கையில் எதிரிகளை விட அதிகமாக இருந்தது. _(2 இராஜாக்கள் 6:14-16).

நீங்கள் பிரச்சனைகளால் சூழப்பட்டுள்ளது உண்மையாக இருக்கலாம் ஆனால் உங்கள் ஆத்துமாவின் மேய்ப்பர் உங்கள் மகிமைக்காக ஒரு விருந்தை தயார் செய்துள்ளார் என்பது சத்தியம்.அது விரைவில் வெளிப்படும்.
ஏசாயா 49:9 இல் கூறப்பட்டுள்ளபடி,” உங்களை நீங்கள் வெளிப்படுத்துங்கள் “என்ற மேய்ப்பரின் வார்த்தையைப் பெறுங்கள்.உங்கள் மேய்ப்பராகிய கிறிஸ்துவில் உங்கள் அடையாளம் அவருடைய நீதி மற்றும் உங்களில் அவருடைய வெளிப்பாடு மேன்மை! ஆமென் 🙏

நீங்கள் கிறிஸ்துவுக்குள் தேவனுடைய நீதி என்றும், கிறிஸ்துவே உங்களில் வெளிப்பட்ட மகிமை என்றும் உங்கள் உறுதியான அறிக்கையை கேட்க தேவன் விரும்புகிறார் . அவர் இன்று உங்களிடம் சொல்கிறார் “உங்களை நீங்களே வெளிப்படுத்துங்கள்” உங்கள் வீழ்ச்சியை க் கண்டு மகிழ்ந்த எதிரிகள் இயேசுவின் பெயரில் நீங்கள் உயர்த்தப்படுவதைக் காண்பார்கள் என்று நான் அறிவிக்கிறேன் ! ஆமென் மற்றும் ஆமென் 🙏

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்ப்பது உங்கள் உயர்வை அனுபவிக்கச்செய்கிறது !

கிருபை நற்செய்தி தேவாலயம்.

scenery

உண்மையும்,நம்பிக்கையுமான மேய்ப்பராகிய இயேசுவைக் காண்பது வாழ்வைத் தருகிறது !

24-08-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

உண்மையும்,நம்பிக்கையுமான மேய்ப்பராகிய இயேசுவைக் காண்பது வாழ்வைத் தருகிறது !

4. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும் .
(சங்கீதம் 23:4 ) .

தேவன் நம்மைவிட்டு பல மைல்களுக்கு அப்பால் இருப்பதாகத் தோன்றும்போது அல்லது அவரை அடைய முடியாததாகத் தோன்றும் போது,பயணம் மிகவும் பயமாகவும், தெளிவற்ற நிலையாகவும்,நிச்சயமற்றதாகவும் தோன்றும் போது, மிக ​​நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள் , இந்த கட்டத்தில் உங்கள் உணர்வு உங்கள் விசுவாசத்திற்கு வழிசெய்கிறது.இயற்கையானது இயற்கைக்கு அப்பாற்பட்டதை வெளிப்படுத்த வழிவகுக்கின்றது.முட்டைப்புழுவானது எப்படி ஒரு பட்டாம்பூச்சியாக மாறுகிறதோ நீங்களும் புதிய உங்களை வெளிப்படுத்துகுறீர்கள் !

உங்கள் பாதை பயமாக இருந்தாலும், நீங்கள் உயர்ந்து கொண்டே இருப்பீர்கள் ! பள்ளத்தாக்கு வழியாக நீங்கள் நடப்பது தண்ணீரின் மேல் நடக்கின்ற அனுபவத்தை அளிக்கிறது. அல்லேலூயா!

எல்லா அச்சங்களும் விசுவாசத்தால் விழுங்கப்பட்டன, சாவானது,சாவாமையினால் விழுங்கப்பட்டது . மரணம், ஆண்டவருடைய வெற்றியில் விழுங்கப்பட்டது .மனித பலவீனம் இறுதியாக தெய்வீகத்திற்கு தலை வணங்கி அவர் மாட்சிமையின் பாதத்தில் அடிபணிந்தது !

உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறுகிறது ! சொல்ல முடியாத ஆனந்தக் கண்ணீர் மற்றும் மகிமையால் நிறைகிறது .

இயேசு,தன் உயிரைஉங்களுக்காக கொடுத்த நம்பிக்கையான மற்றும் உண்மையுள்ள
நல்ல மேய்ப்பன்! ஆமென் 🙏

உண்மையும்,நம்பிக்கையுமான மேய்ப்பராகிய இயேசுவைக் காண்பது வாழ்வைத் தருகிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

scenery

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்ப்பதே, உங்கள் ஜீவனும் ,மகிமையுமாய் இருக்கின்றது !

23-08-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்ப்பதே, உங்கள் ஜீவனும் ,மகிமையுமாய் இருக்கின்றது !

4. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும் .
(சங்கீதம் 23:4 ) .

_நம் வாழ்க்கையில் ஏற்படும் சவால்கள் மற்றும் பெரும் சோதனைகள் மரணத்தின் நிழல் மட்டுமே தவிர மரணம் அல்ல. பள்ளத்தாக்கு’ என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கடினமான பயணமாக இருக்கலாம் மற்றும் ‘பள்ளத்தாக்கு’ என்பது பூமியின் தாழ்வான பகுதி அதாவது வாழ்க்கையின் தாழ்வான நிலையை குறிக்கிறது.
ஆனால்,தேவனின் கோலானது அத்தகைய காலங்களில் தோன்றும் எல்லா தீங்குகளிலிருந்து பாதுகாக்கவும் ,தேவனின் தடி வழிகாட்டுதலுக்காகவும் உதவுகின்றது ,எனவே கோலும் ,தடியும் ஒருவர் எப்போதும் பள்ளத்தாக்கில் சிக்கிவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் நம்மைப் பாதுகாக்கின்றது .

ஆம், என் அன்பான நண்பர்களே , இருளில் இருக்கும்போது தான் ஒளியின் மகிமை மிகையாக பாராட்டப்படுகிறது.அப்படியே நாம் தனிமையில் இருக்கும்போதுதான் அவரது அன்பு பொக்கிஷமாக உணரப்படுகிறது .நீங்கள் வாழ்வில் எந்த சிகிச்சையும் பலன் தராமல் நோய்களை அனுபவித்திருக்கலாம். பல வருடங்களாக ஒரே மாதிரியான வேலையில், அதே சம்பளத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கலாம்.சில வேதனையான கட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து வழிகளையும் முயற்சித்து தோல்வி அடைந்திருக்கலாம் ,பல ஆண்டுகளாக நீங்கள் குழந்தை பாக்கியம் இல்லாமல் மனம் உடைந்து போயிருக்கலாம்,ஒரு தொழில்முறைப் படிப்பை வெற்றியோடு முடிக்க நீங்கள் எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டு துரதிர்ஷ்டவசமாக தோல்வியடைந்திருக்கலாம் மற்றும் நான் குறிப்பிடாத வேறு ஏதேனும் போதைப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கையில் நீங்கள் பகிரங்கமாகப் பகிர முடியாத பிற தனிப்பட்ட விஷயங்கள் உங்களைத் துன்புறுத்துவதாக இருக்கலாம்.இவை அனைத்திற்கும் தீர்வு நல்ல மேய்ப்பர் மாத்திரமே!!

 

எனவே ,மகிழ்ச்சியாக இருங்கள் என் அன்பான நண்பர்களே ! கர்த்தராகிய இயேசுவே உங்கள் நல்ல மேய்ப்பன்! இந்த நாளில் நீங்கள் நிச்சயமாக எந்த பெரும் சோதனையிலிருந்து வெளியே வருகிறீர்கள்! அவருடைய நீதியின் ஒளி உங்களைச் சூழ்ந்துள்ளது. எனவே, நீங்கள் மூழ்க மாட்டீர்கள்! நீங்கள் சாக மாட்டீர்கள் !! உங்கள் நம்பிக்கை அற்றுப்போகாது . _ஒரு வேதனையான பள்ளத்தாக்கு இருந்தால், நிச்சயமாக மகிமையின் ஒரு மலையும் இருக்கிறது, நீங்கள் அதை நோக்கி இயேசுவின் பெயரில் செல்கிறீர்கள்! மரணத்தின் நிழல் உங்களைச் சூழ்ந்திருந்தால், நிச்சயமாக நீங்கள் இயேசுவின் நாமத்தில் அவருடைய மகிமையின் பிரகாசத்தால் இன்று அணியப்படுவீர்கள் ! அல்லேலூயா !

அவர் மீது நம்பிக்கையை விட்டுவிடாதிருங்கள் ! அவரது நீதியை நிலைநாட்டுங்கள்!! நீங்கள் ஒருபோதும் வெட்கப்பட மாட்டீர்கள் !!! உங்கள் விடுதலை நீங்கள் நினைப்பதை விட வேகமாக உங்களை நோக்கி வருகிறது !!!! (ரோமர் 9:28,33) ஆமென் 🙏

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்ப்பதே, உங்கள் ஜீவனும் ,மகிமையுமாய் இருக்கின்றது !

கிருபை நற்செய்தி தேவாலயம்.

scenery

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்ப்பது ,அவருடைய நீதியால் நம்மை சிறந்து விளங்கச்செய்யும் !

21-08-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்ப்பது ,அவருடைய நீதியால் நம்மை சிறந்து விளங்கச்செய்யும் !

3. அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
4. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
(சங்கீதம் 23:3,4 ) NKJV.

மேற்கண்ட வசனத்தின் வாயிலாக சங்கீதக்காரன் நீதியின் பாதைகளில், மேய்ப்பரால் வழிநடத்தப்பட்ட அனுபவத்தை சாட்சியமளிக்கிறார்,அது அவர் வாழ்வில் கடினமான மற்றும் சவாலான நேரங்களிலும் கடவுளுடன் நடக்க அவரை ஆயத்தப்படுத்தியது, தன்னில் நல்ல வேலையைத் தொடங்கியவர் அதை முடிப்பார் என்று மேய்ப்பரை நம்பினார்.தேவன் உண்மையுள்ளவர் மற்றும் ஒருபோதும் நம்மைத் தோல்வியடையவிட மாட்டார்.

ஆம்,என் பிரியமானவர்களே,கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய நீதியானது, உங்கள் வாழ்க்கையில் அவருடைய சித்தத்தை நிறைவேற்றி, ஆவியில் நடக்க உங்களைத் தயார்படுத்துகிறது.ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவரின் ஊழியம், நல்ல மேய்ப்பராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் (நீதியின்) சரியான செயலை அடிப்படையாகக் கொண்டதாகும் ! பரிசுத்த ஆவியானவர் உங்களை ஒருபோதும் விட்டுவிடமாட்டார்,ஏனென்றால் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் பலனடையச் செய்யும்.தேவனின் நித்திய மீட்பீற்காக,இயேசு சிலுவையில் கிரையம் செலுத்தினார் மற்றும் தேவைக்கு அதிகமாக செலுத்தினார் – எனவே அந்த கிருபையோடு இந்த நாளையும் இந்த வாரத்தையும் இயேசுவின் நாமத்தில் அனுபவிக்கவும்!

என் அன்பானவர்களே, இன்று நான் நல்ல மேய்ப்பருடன் சேர்ந்து, இயேசுவின் பெயரில்,யாராலும் நிறுத்த முடியாத பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலம் உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் வெளியிடுகிறேன்! இயேசுவின் நாமத்தில் பெற்றுக்கொள்ளுங்கள் .ஆமென் 🙏

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்ப்பது ,அவருடைய நீதியால் நம்மை சிறந்து விளங்கச்செய்யும் !

கிருபை நற்செய்தி தேவாலயம் .