Author: vijay paul

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,பெந்தெகொஸ்தே அனுபவத்தை இப்பொழுது அனுபவியுங்கள் !

30-05-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,பெந்தெகொஸ்தே அனுபவத்தை இப்பொழுது அனுபவியுங்கள் !

14. அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாய்: யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.
16. தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது . (அப்போஸ்தலர் 2:14, 16) NKJV.

தேவனுடைய வல்லமையின் மிகவும் அசாதாரணமான நிரூபணம் அப்போஸ்தலர் 2-ல் திடீரென்று நிகழ்ந்தது கர்த்தராகிய இயேசுவை நம்பியதால், தங்கள் சொந்த மக்களால் இழிவாகப் பார்க்கப்பட்ட, கேலி செய்யப்பட்ட, துன்புறுத்தப்பட்ட விசுவாசிகள் மீது பரிசுத்த ஆவியானவர் இறங்கி வந்தார் .யோவேல் தீர்க்கதரிசியால் கூறப்பட்ட தீர்க்க தரிசன நிறைவு இதுவே என்று பேதுரு தைரியமாக எழுந்து நின்று விளக்குகிறார் .

எருசலேமில் வசித்த பலரில் 120 பேர் மட்டுமே மேலறையில் கூடியிருந்தனர் .ஆனால் கடவுள் அவர்கள் பக்கம் இருந்தார். ஆண்டவராகிய இயேசு எப்போதும் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், இகழப்பட்டோர் மற்றும் கொடிய நோயால் மரணப்படுக்கையில் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் பக்கம்தான் எப்போதும் இருக்கிறார் .

கடவுளின் வியத்தகு செயல் அனைத்து மக்களையும் திகைக்க வைத்தது, அதனால் பேதுரு எழுந்து நின்று “அதுதான் இது” என்று பிரகடனப்படுத்தினார், கடந்த காலங்களில் கடவுள் வாக்குறுதியளித்த, தீர்க்கதரிசனமாக கூறிய அனைத்தும் இப்போது நிறைவேறியதாக அவர் அறிவித்தார்! புதிய சகாப்தம் தொடங்கியது ,இன்றும் இப்போதும் கடவுள் ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றுகிறார் , ஏனென்றால் இந்த ஆசீர்வாதத்தை முறையாக நமக்காக தன் உயிரை விலையாக கொடுத்த இயேசுவின் நிமித்தம் பரிசுத்த ஆவியானவர் நிஜப்படுத்த வந்திருக்கிறார். அல்லேலூயா!

ஆம் என் அன்பானவர்களே, இன்று கடவுள் வாக்களித்த அனைத்தும் உங்கள் வாழ்க்கையில் நிறைவேறும் நாள்! இது தான் உண்மையிலேயே பெந்தெகொஸ்தே கொண்டாட்டம் !!ஆமென் 🙏

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,பெந்தெகொஸ்தே அனுபவத்தை இப்பொழுது கொண்டாடுங்கள் !

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய பரிசுத்த ஆவியின் முழுமையை அனுபவியுங்கள் !

29-05-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய பரிசுத்த ஆவியின் முழுமையை அனுபவியுங்கள் !

4. அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.
8. பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.(அப்போஸ்தலர் 1:4, 8) NKJV

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து சீஷர்களுக்குள் தம் ஆவியை ஊதினார்.அன்று, கர்த்தராகிய இயேசுவின் விசுவாசிகள் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள்.
அவர் பரலோகத்திற்கு எடுத்துச் செல்லப்படும் நேரம் வந்த போது, ​​அவர்களை “என்றென்றுமுள்ள ஆசீர்வதித்தினால் “ஆசீர்வதித்தார், அவர்களை பிதாவின் வாக்குறுதியான பரிசுத்த ஆவியானவருக்கு காத்திருக்கும்படி கட்டளையிட்டார் –
சபை உருவான ஆரம்பகாலத்தில் நடந்த இந்த நிகழ்வு பிற்காலத்தில் ,விசுவாசிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இவை இரண்டும் ஒரே அனுபவம் என்று சிலர் நினைத்தார்கள்.

என் அன்பானவர்களே , அந்த இரண்டும் ஒன்றல்ல. இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்தார் என்றும், கடவுள் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்றும் நாம் நம்பும்போது, ​​பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வருகிறார் . இவரே நம்மில் உள்ள கிறிஸ்து. நாம் புதிய சிருஷ்டியாக மாறுகிறோம்! இந்த பரிசுத்த ஆவியானவர் விசுவாசிக்குள் என்றென்றும் வசிப்பவர்.
இருப்பினும்,பிதாவின் வாக்குத்தத்தமாக ,விசுவாசிகள் மீது அருளப்பட்ட பரிசுத்த ஆவியானவர் ஒரு வித்தியாசமான அனுபவம் . விசுவாசிகள் மீது வந்த பரிசுத்த ஆவியானவர் இப்பொது அவர்கள் வாழ்க்கைக்கு தலைவராக இருக்கிறார் .

தண்ணீரைக் குடிப்பதும், தண்ணீரில் முற்றிலும் மூழ்குவதும் வேறு ,வேறான காரியம் . பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வருவது நாம் தண்ணீரைக் குடிக்கின்ற அனுபவம் .நம்மீது உள்ள பரிசுத்த ஆவியானவர் நாம் தண்ணீரில் மூழ்கும், நம் வாழ்வின் தலைவராக செயல்படும் அனுபவமாக இருக்கிறர் .  பரிசுத்த ஆவியானவர் நம்மிலும்,நம்மீதும் இருக்கின்ற இவை இரண்டையும் இயேசுவின் நாமத்தில் இன்றே அனுபவிப்போம்- ! ஆமென் 🙏

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய பரிசுத்த ஆவியின் முழுமையை அனுபவியுங்கள் !

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,நித்தியத்தை இப்போது அனுபவியுங்கள் !

25-05-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,நித்தியத்தை இப்போது அனுபவியுங்கள் !

தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். I யோவான் 5:11 NKJV
தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.I கொரிந்தியர் 1:9 NKJV

நித்திய ஜீவன் அளவுகோலாக வரையறுக்கப்படவில்லை. இது முடிவற்ற வாழ்க்கை மட்டுமல்ல. இது தரமான அனுபவமும் கொண்டது. நித்திய ஜீவன் என்பது நித்தியமானவருடனான உறவு.
நம் ஒவ்வொருவருக்கும் கடவுளின் அழைப்பு, அவருடைய குமாரனாகிய நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன் நல் உறவையும் மற்றும் ஐக்கியத்தையும் கொள்ள வேண்டும் என்பதாகும். ஏனென்றால், இயேசு நித்தியமானவர் !

அவர் அனைவருடனும் இருக்கிறார் ஆனால் அவரை ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவருக்குள்ளும் அவர் வாசம் செய்கிறார். இயேசு கிறிஸ்துவை உங்கள் இருதயத்தில் வைத்திருப்பது நித்திய ஜீவன். இதன் மூலம் நித்திய ஜீவன் நம் வாழ்வில் ஆரம்பித்து விட்டது என்று அர்த்தமல்ல மாறாக நாம் நித்திய ஜீவனைஅனுபவிக்க ஆரம்பித்துவிட்டோம் என்று அர்த்தம்.

புதிய சிருஷ்டி – எப்பொழுதும் இயேசுவோடு தொடர்ந்து ஐக்கியம் கொள்வது என்று அர்த்தம் .ஏனென்றால்,அவருடைய உயிர்த்தெழுதலின் சுவாசத்தால் நீங்கள் ஒரு புதிய சிருஷ்டியாக இருக்கிறீர்கள்.
அவரைப் போலவே நீங்களும் இப்போது இந்த வாழ்வில் நித்தியமாக இருக்கிறீர்கள் (1 யோவான் 4:17) ஆமென் 🙏

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,நித்தியத்தை இப்போது அனுபவியுங்கள் !

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவரை நெருக்கமாக அனுபவியுங்கள் !

24-05-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவரை நெருக்கமாக அனுபவியுங்கள் !

ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.(யோவான் 17:3 ) NKJV .
நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது . ( I யோவான் 1:3) NKJV.

அன்பான அப்போஸ்தலரான யோவான், கடவுளையும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவது ‘நித்திய ஜீவன்’ என வரையறுக்கிறார் . * *இந்த அறிவு அவரோடு ஒருங்கிணையவும் / நல் நட்ப்பையும் விளைவிக்கிறது , இதை வேறுவிதமாகக் கூறினால், கடவுளை நெருக்கமாக அறிந்துகொள்ள உதவுகிறது.

பிராண நண்பர் இயேசு எனக்கு இருக்கிறார் !” என்று ஒரு அழகான பாடல் உள்ளது, அவரை ஒரு நண்பராக வைத்திருப்பதன் மூலம் நாம் எப்படி தேவையற்ற வலிகளைத் தவிர்க்கலாம், அமைதியுடன் நடக்கலாம், சோதனைகளை வெல்லலாம் என்று அந்த பாடல் சொல்கிறது. _இயேசுவைப் போல் உண்மையுள்ள ஒரு நண்பனை உலகம் முழுவதும் தேடினாலும் அப்படி ஒருவரை நாம் காண முடியாது என்று பாடலாசிரியர் தனது இதயப்பூர்வமான அனுபவத்தைக் கூறுகிறார்.

இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்த, இயேசுவுக்கு மிக நெருக்கமான அப்போஸ்தலன் யோவான்- அவர் இயேசுவைக் காட்டிக் கொடுத்தவரை அறிந்தவர், இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது சிலுவையின் அடிவாரத்தில் நின்ற ஒரே அப்போஸ்தலன், பைபிளின் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்தின விசேஷத்தை எழுதிய அப்போஸ்தலன். இன்று ,அவர் அப்படியான உறவையும் ,நட்ப்பையும் நாமும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடு கொண்டிருக்க நம்மை அழைக்கிறார்.

என் அன்பானவர்களே இயேசுவுடன் பேசத் தொடங்குங்கள், நீங்கள் மெதுவாக ஆனால் நிச்சயமாக அவருடன் ஒரு ஆழமான நெருக்கத்தை வளர்த்துக் கொள்வீர்கள். யோவான் மற்றும் பாடலாசிரியர் இயேசுவை சிறந்த நண்பராகக் கொண்ட அனுபவம் இன்று உங்களுக்கும் இருக்க விசுவாசிக்கிறேன் மற்றும் வேண்டிக்கொள்கிறேன் ! ஆமென் 🙏

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவரை நெருக்கமாக அனுபவியுங்கள் !

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவருடைய நித்திய வாழ்க்கையை அனுபவியுங்கள் !

23-05-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவருடைய நித்திய வாழ்க்கையை அனுபவியுங்கள் !

1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். யோவான் 1:1-2 NKJV

ஆதாம் கடவுளிடமிருந்து பெற்றது ‘ஜீவ சுவாசம்’ அன்றி ‘நித்திய ஜீவன்’ அல்ல. அவர் நித்திய ஜீவனைப் பெற்றிருந்தால், அவர் இறந்திருக்க மாட்டார்.
ஆதாமும்,ஏவாளும், அவருக்குக் கீழ்ப்படிவார்களா என்று கடவுள் பார்க்க விரும்பினார்?
ஆனால் ! அவர்களோ கீழ்ப்படியாமல் பாவம் செய்தனர் . இதன் நிகர விளைவு என்னவென்றால், பாவமும் மரணமும் மனிதர்களைக் கட்டுப்படுத்தியது மற்றும் மனிதன் என்றென்றும் வாழ வேண்டும் என்ற கடவுளின் முதன்மையான நோக்கம் முறியடிக்கப்பட்டது.

சுவாரஸ்யமாக, ஏதேன் தோட்டத்தின் நடுவில் இரண்டு மரங்கள் வைக்கப்பட்டன, இரண்டும் அறிவின் மரங்கள் – நன்மை தீமை பற்றிய அறிவு மற்றும் கடவுளின் அறிவு (ஜீவ விருட்சம் ). ஆதாமும் ஏவாளும் ஜீவ விருட்சமாகிய கடவுளைப் பற்றிய அறிவைத் தேர்ந்தெடுத்திருந்தால், அவர்கள் என்றென்றும் வாழ்ந்திருப்பார்கள்.  ஆனால், அவர்கள் நன்மை தீமை அறியும் மரத்தைத் தேர்ந்தெடுத்து மரணத்தை தங்கள் வாழ்வில் அனுமதித்தனர்.

மனிதனை இறுதிவரை விட்டுக்கொடுக்காத இறைவனுக்கே துதி. முதலாம் ஆதாம் இழந்ததை தம்முடைய குமாரனாகிய இயேசுவை விசுவாசிக்கிறவன் நித்திய ஜீவனைப் பெறுவான் என்று அவரை இரண்டாம் ஆதாமாக அனுப்பினார் . மனிதன் இழந்ததை விட அவன் பெற்றது மிக அதிகம். அல்லேலூயா! கடவுளுக்கே துதி ,கனம் மகிமை !! ஆமென் 🙏

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

Good reads

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவருடைய நித்திய வாழ்க்கையை அனுபவியுங்கள் !

22-05-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவருடைய நித்திய வாழ்க்கையை அனுபவியுங்கள் !

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.யோவான் 3:16 NKJV‬‬

நித்திய வாழ்வு என்பது நம் வாழ்வில் கடவுளின் விருப்பம் ஆகும் .  நித்திய ஜீவன் அவரில் இருப்பது போல, நம்மில் இருக்க வேண்டும் என்பதே நம் அனைவருக்கும் அவருடைய முதன்மையான நோக்கம்.
நம்மீது அவர் வைத்திருக்கும் அன்பு மிகவும் பெரியது மற்றும் அளவற்றது என்பதால் தான் அவர் தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசுவைக் கொடுத்தார், இது கற்பனை செய்ய முடியாதது,ஆகையால் நிச்சயமாக நம்மில் உள்ள மிக உயர்ந்த ஆசீர்வாதம் நித்திய வாழ்வு!

இந்த நித்திய ஜீவனைப் பெறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் ?
“விசுவாசிக்க வேண்டும் “
ஆம், கடவுளையும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிற எவரும் நித்திய ஜீவனைப் பெறுவார்கள்.

நித்திய ஜீவன் என்றால் என்ன?
“ஒன்றான மெய்த் தேவனாகிய பிதாவையும் அவர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அவர்கள் அறிவதே நித்திய ஜீவன்.” யோவான் 17:3

பிதாவாகிய கடவுளையும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் தனிப்பட்ட முறையில் அறிவதே நித்திய ஜீவன். ஒரு நபரை அறிவதற்கும் ஒரு நபரைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. இயேசுவை தனிப்பட்ட முறையிலும்,ஆழத்தோடு மற்றும் நெருக்கமாக அறிவதே நம்மை நித்தியமாக்குகிறது .

நாம் மீண்டும் பரிசுத்த ஆவியானவரால் பிறக்கும்போது இது சாத்தியமாகும்- கடவுளால் நாம் பிறந்தோம். இந்த “புதிய சிருஷ்டி” உயிர்த்தெழுந்த இயேசுவின் சுவாசத்தால் பிறந்தது, எனவே இது புதிய சிருஷ்டி என்று அழைக்கப்படுகிறது.
இயேசுவை ஆண்டவராகவும் இரட்சகராகவும் உங்கள் இதயத்தில் ஏற்றுக்கொள்ளும் போது, ​​நீங்கள் கடவுளிடமிருந்து பிறக்கிறீர்கள்.நீங்கள் ஒரு புதிய சிருஷ்டியாய் மாறுகிறீர்கள் !கடவுளின் வார்த்தையாகிய அழியாத விதையிலிருந்து நீங்கள் மீண்டும் பிறக்கும்போது, ​​​​உங்களுக்குள் நித்திய ஜீவன் இருக்கிறது!  அல்லேலூயா!! ஆமென் 🙏

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவருடைய பரலோக ஆசீர்வாதத்தை அனுபவியுங்கள் !

19-05-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவருடைய பரலோக ஆசீர்வாதத்தை அனுபவியுங்கள் !

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார் .(எபேசியர் 1:3 )

ஆதாமின் காலத்திலிருந்து இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலம் வரை,கடவுளின் ஆசீர்வாதங்கள் பூமிக்குரிய ஆசீர்வாதங்கள் மட்டுமே . ஏனென்றால், கடவுள் மனிதனுக்கு பூமியைப் பற்றிய அதிகாரத்தை மட்டுமே கொடுத்தார் (உயர்ந்த வானம் கர்த்தருடையது, ஆனால் பூமியை அவர் மனிதர்களுக்குக் கொடுத்தார்.” சங்கீதம் 115:16 NIV )
இருப்பினும், கர்த்தராகிய இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த பிறகு, அவர் தனது உயிர்த்தெழுதலின் வல்லமையை ,புதிய சிருஷ்டி வாழ்க்கையை விசுவாசித்த அனைவருக்கும் ஊதினார், இப்போது ஆசீர்வாதங்கள் பரலோகத்திற்கு நீட்டிக்கப்படுகின்றன (“பின்னர் இயேசு அவர்களிடம் வந்து, “எல்லா அதிகாரமும் வானமும் பூமியும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.என்று ” மத்தேயு 28:18 NIV).குறிப்பிடப்பட்டிருக்கிறது .

ஆம் என் அன்பானவர்களே , நீங்கள் கிறிஸ்துவில் இருந்தால், நீங்கள் ஒரு புதிய சிருஷ்டி! நீங்கள் என்றென்றும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ! நீங்கள் இப்போது பூமி மற்றும் பரலோகம் ஆகிய இரண்டின் ஆசீர்வாதங்களாலும் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளீர்கள்.  அல்லேலூயா! ஆமென் 🙏

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவருடைய பரலோக ஆசீர்வாதத்தை அனுபவியுங்கள் !

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவரை விசுவாசிப்பதற்கு அவருடைய ஆசிர்வாதத்தை பெறுங்கள்!

17-05-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவரை விசுவாசிப்பதற்கு அவருடைய ஆசிர்வாதத்தை பெறுங்கள்!

25. மற்றச் சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள். அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான்.
26. மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
27. பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்.(யோவான் 20:25-27) NKJV

பொதுவாக நீங்கள் ஒரே குடும்பத்தில் வளர்க்கப்படும் போது, அதில் அன்பும் பகிர்வும், நம்பிக்கையும் முக்கியமான பங்கு வகிக்கும்போது,குடும்ப உறுப்பினர்களின் கூட்டு அனுபவத்தை ஏற்காமல் இருப்பதும் ,எந்த நேரத்திலும் முரணாக சாட்சி கொடுப்பதும் நிச்சயம் மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தும்.
ஆனால், மேற்கண்ட வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சூழ்நிலையில்,உயிர்த்தெழுந்த ஆண்டவர் இயேசு மீண்டும் அவர்கள் அனைவருக்கும் தோன்றினார், முதன்முறையாக அவர் தோன்றியபோது அவர்கள் மத்தியில் தோமா இல்லாத காரணத்தினால் அவர்மீண்டும் காட்சியளித்து அவர்களில்,ஒற்றுமை மற்றும் சமாதானம் நிலவ வேண்டும் என்ற நோக்கத்துடன் அவ்வாறு செய்தார் .
மனித முரண்பாடுகள் மற்றும் நம்பிக்கையின்மை இருந்தபோதிலும் கர்த்தராகிய இயேசுவின் பெருந்தன்மையையும் உறுதியான அன்பையும் மட்டுமே இது காட்டுகிறது.

தன்னால் இயற்கையாகப் பார்க்க முடியாததை விசுவாசிப்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ளது. மேலும், இயற்கையாகக் காணக்கூடியவற்றை எளிதில் விசுவாசிப்பது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ளது.
இருப்பினும், நாம் சாதாரணமாக அல்லது இயல்பாக பார்க்க முடியாததை தொடர்ந்து நம்புவதற்கு தெய்வீக ஆசீர்வாதம் தேவை. உயிர்த்தெழுந்த ஆண்டவரின் சுவாசத்தின் விளைபொருளான புதிய படைப்பின் மீது தங்கியிருக்கும் ஆசீர்வாதம் இது.

தோமா இந்த ஆசீர்வாதத்தை முதல் நிகழ்வில் தவறவிட்டார்.ஆனால், இயேசுவுக்கே மகிமை ! இயேசு இன்னும் இரண்டாவது முறையாக தோமாவைத் தேடி வந்தார். தோமா இரண்டாவது தோற்றத்தின் போது விசுவாசித்து இந்த ஆசீர்வாதத்தைப் பெற்றார் .
என் அன்பானவர்களே,நாம் பார்க்கும் உலகத்தை விட நம்மால் பார்க்க முடியாத உலகமே உண்மையானது. இன்று நீங்கள் இந்த பகுதியை வாசிக்கும்போது கண்ணுக்குத் தெரியாததைக் காண ஆண்டவர் உங்களை ஆசீர்வதிக்கக் காத்திருக்கிறார்.
ஆமென் 🙏

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவரை விசுவாசிப்பதற்கு அவருடைய ஆசிர்வாதத்தை பெறுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவருடைய என்றென்றுமுள்ள நீதியுள்ள ஆசிர்வாதத்தை அனுபவியுங்கள் !

16-05-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவருடைய என்றென்றுமுள்ள நீதியுள்ள ஆசிர்வாதத்தை அனுபவியுங்கள் !

அந்தப்படி, கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற மனுஷனுடைய பாக்கியத்தைக் காண்பிக்கும் பொருட்டு:
7. எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.
8. எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான்.(ரோமர் 4:6-8 )NKJV.

அப்போஸ்தலராகிய பவுல் சங்கீதம் 32:1,2ல் இருந்து மேற்கோள் காட்டுகிற காரியமாவது , கடவுளால் மட்டுமே மனிதனை “நீதிமான்”என்று அறிவிக்க முடியும். இது சாதி, மதம், நிறம் அல்லது கலாச்சாரம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு மனிதனுக்கும் வழங்கப்பட்ட கடவுளின் ஆசீர்வாதம். நம்மிடமிருந்து தேவைப்படுவது எல்லாம் அவரை ‘நம்புவது’ மட்டுமே.

மனிதன் தன் சொந்த தியாகத்தினாலோ அல்லது நற்காரியங்கள் மூலமோ கடவுளின் பார்வையில் நீதிமான் ஆக முடியாது.பூமியில் வாழ்ந்த மனிதர்களில் உண்மையான நீதிமானாக வாழ்ந்து காட்டியவர் இயேசு நாதர் மட்டுமே. அவர் பூமியில்வாழ்ந்த நாட்களில் நியாயப்பிரமானத்தின் அனைத்து தேவைகளையும் அவரால் மட்டுமே பூர்த்தி செய்ய முடிந்தது.உலகம் முழுவதற்கும் – இருந்தவர்களும், இருப்பவர்களும், வருபவர்களுமாகிய அனைவருடைய பாவங்களை சுமந்து அவர்களை நீதிமானாக்கத் தம்மையே அர்ப்பணித்தார்.

கடவுள் சிலுவையில் இயேசுவினுடைய இந்த பலியை ஒப்புக்கொண்டார், ஆகவே ,முழு உலகத்தின் பாவங்கள் அனைத்தையும் அவருடைய மகன் இயேசுவின் மீது சுமத்தினார். மேலும் தெய்வீக பரிமாற்றத்தின் மூலம் தேவ நீதியை இலவசமாக மனிதனுக்கு கொடுத்தார் .இதன் விளைவாக என்றென்றுமுள்ள நித்திய ஆசீர்வாதம் அவரை விசுவாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அளிக்கப்பட்டது.அல்லேலூயா !

எனவே ,இயேசுவின் காரணமாக நீங்கள் என்றென்றும் நீதிமான்களாக அறிவிக்கப்படுகிறீர்கள். உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசு இந்த ‘என்றென்றும் நீதியுள்ள’ ஆசீர்வாதத்தால் உங்களை ஆசீர்வதித்தார். இதை நீங்கள் நம்புகிறீர்களா?
உங்கள் செயலோ அல்லது உங்கள் முற்பிதாக்களின் செயலோ இந்த ‘என்றென்றும் நீதியுள்ள’ஆசீர்வாதத்தை மாற்ற முடியாது.

நீ என்றென்றும் மாற்றமுடியாத நீதிமான்!  எனவே,மற்ற எல்லா ஆசீர்வாதங்களும் இயேசுவின் பெயரில் மாற்ற முடியாத உங்கள் பங்காகும்! அவருடைய என்றென்றும் நீதி நம்மை என்றென்றும் ஆசீர்வதித்திருக்கிறது ! ஆமென் 🙏

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள்,அவருடைய என்றென்றுமுள்ள நீதியுள்ள ஆசிர்வாதத்தை அனுபவியுங்கள் !

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய என்றென்றுமுள்ள ஆசிர்வாதத்தை அனுபவியுங்கள் !

15-05-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய என்றென்றுமுள்ள ஆசிர்வாதத்தை அனுபவியுங்கள் !

50. பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.
51. அவர்களைt ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.லூக்கா 24:50-51 NKJV

உயிர்த்தெழுந்த இயேசு தம்முடைய உயிர்த்தெழுதலின் மூலம் புதிய சிருஷ்டியாக மாறிய தம் சீஷர்களை முதலில் ஆசீர்வதிக்காமல் அவர் பரலோகத்திற்கு ஏறியிருக்கமாட்டார்.
அவர் அவர்களை ஆசிர்வதித்த கணமே அவர்களிடமிருந்து பிரிந்தார் என்பதே உண்மை. மகிமையின் ராஜா மகிமையோடு பரத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் ! அல்லேலூயா!!
விசுவாசிகள் (புதிய சிருஷ்டிகள்) பெற்ற இறைவனின் இந்த ஆசீர்வாதத்தின் தனித்தன்மை என்ன?
புதுசிருஷ்டி அழியாத, என்றென்றுமுள்ள ஆசீர்வாதம் நிறைந்தது என்பதாகும் ! அல்லேலூயா!

ஆபிரகாம் தனது மகன்களை ஆசீர்வதித்த பிறகு,அவர் மரித்து போனார்.ஈசாக்கு தன் மகன்களை ஆசீர்வதித்த பிறகு, அவரும் கடந்து சென்றார். யாக்கோபு அல்லது இஸ்ரேல் அவரது மகன்களை ஆசீர்வதித்த பிறகு,அவரும் கடந்து சென்றார், ஆரோன் மற்றும் மோசேயும் இப்படியே ஆசீர்வதித்தார்கள் . ஆனால் அந்த ஆசீர்வாதங்கள் என்றென்றும் நிலைத்திருக்கும் ஆசீர்வாதங்கள் அல்ல.
அந்த ஆசீர்வாதங்களைப் போலல்லாமல், கர்த்தராகிய இயேசு மரித்தோரிலிருந்து எழுந்த பிறகு அவர்களை ஆசீர்வதிக்கத் தேர்ந்தெடுத்தார், அவர் அவர்களை ஆசீர்வதித்த உடனேயே, அவர் பரலோகத்திற்கு பரமேறினார்.எனவே இந்த ஆசீர்வாதமானது நிரந்தரமாக என்றும் நிலைத்திருக்கும்.

இன்றும் என் பிரியமானவர்களே, இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்றும், அவர் பரலோகத்திற்கு ஏறி தேவனுடைய வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கிறார் என்றும் நீங்கள் விசுவாசிக்கும்போது, ​​நீங்கள் அவருடைய என்றென்றுமான ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள் – உயிர்த்தெழுதலின் ஆசீர்வாதம்! இந்த ஆசீர்வாதம் யாராலும் மாற்ற முடியாதது. யார் உங்களை சபித்திருந்தாலும்,உயிர்த்தெழுதலின் இந்த ஆசீர்வாதத்திற்கு எதிராக எந்த சக்தியும் செயல்பட முடியாது. நீங்கள் என்றென்றும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ! அல்லேலூயா! ! ஆமென் 🙏

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய என்றென்றுமுள்ள ஆசிர்வாதத்தை அனுபவியுங்கள்!
கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.