Category: Tamil

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் நோக்கிப் பாருங்கள்,அவருடைய வாழ்க்கையை உங்களில் அனுபவியுங்கள் !

06-04-23

இன்றைய  நாளுக்கான  கிருபை !

 

 ஜீவ அப்பமாகிய இயேசுவைப் நோக்கிப் பாருங்கள்,அவருடைய வாழ்க்கையை உங்களில் அனுபவியுங்கள் !

 

இஸ்ரவேல் புத்திரர் அதைக் கண்டு, அது இன்னது என்று அறியாதிருந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, இது என்ன என்றார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: இது கர்த்தர் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பம்.

யாத்திராகமம் 16:15 NKJV.

வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப் போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார்.(யோவான்

6:58 NKJV)

 

இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்தில் பயணம் செய்தபோது,தேவன் தினமும் வானத்திலிருந்து அப்பத்தை அனுப்பி அவர்களுக்கு உணவளித்தார்.

 

இஸ்ரவேல் மக்கள் எதிர்பார்த்த அப்பம் கடவுள் வழங்கியதிலிருந்து வேறுபட்டதாக இருந்தது . அவர்கள் மோசேயிடம்,“என்ன அது” என்று கேட்டார்கள். “என்ன” என்பது எபிரேய மொழியில் “மன்னா” என்று பொருள் படும். கடவுள் அப்பம் என்று அழைத்தார்,இஸ்ரவேல் மக்கள் ‘மன்னா'( WHAT -என்ன ) என்று அழைத்தார்கள் . அப்போதிருந்தே ,அவர்களால் அதை பரத்திலிருந்து வரும் அப்பமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்தக் கருத்து வேறுபாடு தான் பாலும் தேனும் ஓடும் தேசத்தை,கடவுள் ஏற்படுத்திய ஆசீர்வாதமான எதிர்காலத்தை இஸ்ரவேல் புத்திரர் இழக்கச் செய்தது மட்டுமல்லாமல், அவர்கள் வனாந்தரத்தில் இறந்தும் போனார்கள் .

 

என் அன்பானவர்களே , இயேசு கிறிஸ்து பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட ஜீவ அப்பம். இந்த ஜீவ அப்பத்தை விசுவாசத்தினால் உண்பவன் சாகமாட்டான். (ஏனெனில், சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது; கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை.- எபிரெயர் 4:2 )ஆமென் 🙏.

 

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் நோக்கிப் பாருங்கள்,அவருடைய வாழ்க்கையை உங்களில் அனுபவியுங்கள் !

 

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் நோக்கிப் பாருங்கள்,அவருடைய முடிவில்லா வாழ்க்கையை அனுபவியுங்கள் !

05-04-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் நோக்கிப் பாருங்கள்,அவருடைய முடிவில்லா வாழ்க்கையை அனுபவியுங்கள் !

நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார்.
ஜான் 6:51 NKJV.

மேற்கண்ட வசனத்தின் பொருள் என்னவென்றால் ,நமக்கு கொடுக்க ஆண்டவராகிய இயேசுவிடம் அப்பம் இருக்கிறது என்பதல்ல,மாறாக அவரே பரலோகத்திலிருந்து வந்த அப்பமாக இருக்கிறார். பழம் தாவரத்தின் உண்ணும் பகுதியாக இருப்பது போலவே, இயேசுவும்,எல்லையற்ற கடவுளை நாம் புரிந்து கொள்ளும் பகுதியாக இருக்கிறார்.அல்லேலூயா!

இயேசுஆதியில் இருந்த வார்த்தையாக அவதாரமாகி பூமிக்கு வந்தார் .பரிசுத்த ஆவியானவர் அந்த வார்த்தையை மனித வடிவமாக மாற்றியது போல் (வார்த்தை மாம்சமாக மாறியது), நாம் இராப்போஜனத்தில் பங்கு கொள்ளும் போது அந்த அப்பமானது ,கடவுளின் தீராத ஆற்றல் மூலமாக அனைத்து இயற்கை விதிகளையும் மீறி மனிதனை நித்திய ஜீவனாக மாற்றுகிறது .  இப்படித்தான் ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவர் வெறும் தண்ணீரை மனிதகுலம் இதுவரை ருசித்திராத, உடனடி( instantaneous) அற்புதமான, இனிமையான திராட்சரசமாக மாற்றினார்.

என் அன்பானவர்களே , இராப்போஜனத்தில் பங்கு பெரும்போது இயேசுவில் பங்குகொண்டு , அவருடைய முடிவில்லா வாழ்க்கையை அனுபவியுங்கள் .  அது ஒரு ரொட்டித் துண்டாகத் தோன்றினாலும்,அவரில் பங்கு கொள்ளும்போது சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாவல்லமையை உங்களில் செயலாற்றி உங்களை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் .! ஆமென் 🙏

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் நோக்கிப் பாருங்கள்,அவருடைய முடிவில்லா வாழ்க்கையை அனுபவியுங்கள் !

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் நோக்கிப் பாருங்கள்,உங்கள் மன விருப்பங்கள் நிறைவேறியதை அனுபவியுங்கள் !

04-04-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் நோக்கிப் பாருங்கள்,உங்கள் மன விருப்பங்கள் நிறைவேறியதை அனுபவியுங்கள் !

26. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
27. அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார் ; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார்.ஜான் 6:26-27 NKJV.

வாழ்க்கையில் உங்கள் முதன்மையான முன்னுரிமை என்ன? ஏனென்றால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் இந்த பூமியில் நீங்கள் எதைச் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதைத் தேடுவதில் முழுமையாக இயக்கப்படுகின்றன.

நான் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தபோது, ​​பட்டயக் கணக்காளர் (CA)ஆக வேண்டும் என்பது என் ஆசை. எனது முழு ஆற்றலையும் நேரத்தையும் அந்த முயற்சியில் செலவழித்தேன், இது எனக்கு மிகவும் இலாபகரமான மற்றும் ஆசீர்வாதமான எதிர்காலத்தைத் தரும் என்று நான் நம்பினேன். பரீட்சை நெருங்கியதும், ஒரு நாளைக்கு குறைந்தது 12-14 மணி நேரமாவது படிப்பில் செலவிடுவேன். நான் எல்லா நொறுக்குத் தீனிகளையும் குறைத்தேன், மேலும் பல விருப்பமான உணவுகளையும் தவிர்த்தேன், அதனால் எனது படிப்பில் கவனம் செலுத்த மிகவும் எச்சரிக்கையாக இருக்க முடியும்.வெற்றிகரமான பட்டயக் கணக்காளராக ஆவதே எனது ஒரே கவனம் மற்றும் ஆர்வமாக இருந்தது.
ஆண்டவருடைய கிருபையால் நான் பட்டயக் கணக்காளர்(CA) ஆனேன்.ஆனால் நான் பெற்ற அனுபவத்தில் சொல்ல வரும் கருத்து என்னவென்றால், எனது முயற்சிகள் எனது இலக்கை அடைய எனக்கு உதவியிருந்தாலும்,அந்த முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பு அனைத்தும் எந்த வகையிலும் என்னை கிறிஸ்துவில் உள்ள நித்திய ஜீவனுக்கு அழைத்துச் செல்லும் வழியாக அது இல்லை!

இன்று கர்த்தராகிய இயேசு நீங்கள் உங்கள் இலக்குகளைத் தொடரத் தேவையில்லை என்று சொல்லவில்லை, ஆனால் பரிசுத்த வேதாகமத்தில் கடவுளுடைய வார்த்தையில் வெளிப்படுத்தப்பட்ட இயேசுவை அறிந்துகொள்வதே வாழ்க்கையில் உங்கள் முதன்மையானதாக இருக்கட்டும் என்று கருணையோடு கூறுகிறார் .நீங்கள் அவரைத் தேடும்போது, ​​நிச்சயமாக வாழ்வும் அதன் மகிமையும் உங்களைத் தேடி வரும் . அவரை அறிவதே நித்திய ஜீவன்! அல்லேலூயா !

நான் இயேசுவை என் ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொண்ட நேரத்தில் , ​​நான் வழிபடும் தேவாலயத்திற்கு ஒரு போதகர் வந்து , “நீ எங்கு சென்றாலும் பரிசுத்த வேதாகமத்தை உன்னோடு எடுத்துச் செல்,பரிசுத்த வேதாகமானது உன்னை உலகம் முழுவதும் கொண்டு செல்லும்” என்று என்னிடம் சவால் விடுத்தார்._அது ஒரு உண்மையான சவால் என்பதற்கு சாட்சியாக நான் இன்று நிற்கிறேன். நான் இரவும் பகலும் வேதாகமத்தை வாசிப்பதற்கு என்னை ஒப்புக் கொடுத்தேன், “இது போதும் ஆண்டவரே” என்று நான் சொல்லும் வரை, குறுகிய காலத்தில் 30 நாடுகளுக்கு மேல் அவருடைய ஊழியத்திற்காக கர்த்தர் என்னை அழைத்துச் சென்றார்.

என் பிரியமானவர்களே , பரிசுத்த வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்ட இயேசுவை அறிய உங்களை நீங்கள் ஒப்புக்கொடுங்கள் .அதுவே கர்த்தரை மகிழ்விக்கும் உழைப்பு, உண்மையிலேயே அவர் உங்கள் இதயத்தின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவார்! ஆமென் 🙏

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் நோக்கிப் பாருங்கள்,உங்கள் மன விருப்பங்கள் நிறைவேறியதை அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் நோக்கிப் பாருங்கள்,இப்புவியில் நித்திய வாழ்க்கையை அனுபவியுங்கள் !

03-04-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் நோக்கிப் பாருங்கள்,இப்புவியில் நித்திய வாழ்க்கையை அனுபவியுங்கள் !

ஜீவ அப்பம் நானே.

இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே.(ஜான் 6:48, 50) NKJV

பிதாவாகிய தேவன் தடைசெய்யத பழத்தை ஆதாமும்,ஏவாளும் உண்டதால்,முழு மனித இனத்திற்கும் மரணம் தவிர்க்க முடியாததாயிற்று . அதுபோலவே ஜீவ அப்பத்தை உண்பதால், முழு மனித இனத்திற்கும் நித்திய ஜீவன் உண்டாகிறது .

ஏதெனில் தடைசெய்யப்பட்ட பழத்தை உண்டதால் மனிதன் வெறும் மனிதனாக மாறினான்.மற்றும் தெய்வீக சக்தியை இழக்கவேண்டியதாயிற்று இருப்பினும், இன்று இறைவனின் இராப்போஜனத்தில் பங்கேற்பதன் மூலம்.நாம் மீண்டும் இறைவனுடன் ஒன்றி உறவாடி இவ்வுலகில் நித்திய வாசியாக மாறி வெற்றி வாழ்க்கை வாழச்செய்கிறது . அல்லேலூயா!

கர்த்தராகிய இயேசுவின் அன்பானவர்களே,இந்த வாரம் தொடங்கும் போது, ​​அவருடைய இராப்போஜனத்தில் பங்குகொள்ள நம்மை அர்ப்பணிப்போம், நாம் தினமும் இருமுறை. இராப்போஜனத்தில்பங்குப்பெற உங்களை அன்புடன் அழைக்கிறேன். இதன் மூலம் கடவுளின் உண்மையான வாழ்க்கையை அனுபவிப்போம். அவர் தம் வார்த்தைக்கு உண்மையுள்ளவர்,ஆகையால் மேற்கூறப்பட்ட வசனத்தின்படி, அவரில் பங்கு கொண்டு நாம் இந்த பூமியில் மரிக்காமல் வாழ்ந்திருப்போம் .

அவருடைய இராப்போஜனத்தில் பங்கேற்பதன் மூலம், இயேசு உங்கள் மரணத்தை தான் ஏற்று மரித்தார் என்றும் நீங்கள் அவருடைய வாழ்க்கையை வாழ்கிறீர்கள் என்றும் அறிவிக்கிறீர்கள்.
மேலும் ,அவருடைய இராப்போஜனத்தில் பங்கேற்பதன் மூலம், அவர் உங்கள் எல்லா நோய்களையும், பாடுகளையும் எடுத்துக்கொண்டார்,ஆகவே அவருடைய தெய்வீக ஆரோக்கியத்தில் நடக்கிறீர்கள் என்றும் அறிவிக்கிறீர்கள். இந்த இராப்போஜனத்தில் பங்கேற்பதன் மூலம், அவர் உங்கள் எல்லா பாவங்களையும் ,சாபங்களையும் கூட சுமந்தார் என்று அறிவிக்கிறீர்கள், எனவே நீங்கள் இப்போது அவருடைய ஆசீர்வாதத்தில் நடக்கிறீர்கள் .அல்லேலுயா ! ஆமென் 🙏

ஜீவ அப்பமாகிய இயேசுவைப் நோக்கிப் பாருங்கள்,இப்புவியில் நித்திய வாழ்க்கையை அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவைக் காண்பதன் மூலம் ,வாழ்வில் இளைப்பார்ந்து வெற்றி ஆட்சி செய்வோம் !

31-03-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவைக் காண்பதன் மூலம் ,வாழ்வில் இளைப்பார்ந்து வெற்றி ஆட்சி செய்வோம் !

உங்களிலுள்ள சகல நன்மைகளும் தெரியப்படுகிறதினாலே உம்முடைய விசுவாசத்தின் அந்நியோந்நியம் கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டுமென்று வேண்டுதல்செய்கிறேன்.(பிலேமோன் 1:6) NKJV.

இந்த மாத இறுதிக்கு வரும் வேளையில்,மாதம் முழுவதும் ஓய்வு அல்லது இளைப்பாறுதலைக்குறித்து அறிந்த சத்தியத்தை நாம் சீர்தூக்கி பார்க்க அழைக்கப்படுகிறோம்.​​ஓய்ந்திருப்பதால் நாம் இந்த வாழ்க்கையில் ஆட்சி செய்கிறோம் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். மனிதன் வியர்த்து உழைக்க வேண்டும் என்று கடவுள் ஒருபோதும் நினைக்கவில்லை.இன்று நாம் உழைத்தாலும், நாம் கிருபையின் படிகளில் லகுவாக நடக்கிறோம் .நாம் செய்துதான் முடிக்க வேண்டும் என்று நம் செயல்திறனை நம்பும் மனநிலையுடன் அல்ல,மாறாக “ஏற்கனவே நமக்காக செய்து முடிக்கப்பட்டது ” என்ற மனநிலையுடன் செயல்படுகிறோம் .அல்லேலூயா!

தேவன் நமக்காகத் திட்டமிட்டிருக்கும் விதமான ஓய்வு இதுவே:
நமக்குத் தேவையான அனைத்தையும் அவர் ஏற்கனவே வழங்கியுள்ளார்.இயேசு கிறிஸ்து நமக்காக செய்த தியாக மரணத்தின் நிமித்தமாக கடவுள் எல்லாவற்றையும் நமக்கு வழங்கியுள்ளார் என்று நாம் நம்ப வேண்டும்.

இதை நாம் உண்மையாகப் புரிந்துகொள்ளும்போது, ​​நம் இதயங்கள் நன்றியறிதலாலும், உருக்கமான அறிக்கையாலும் நிறைந்திருக்கும். நம்முடைய ஜெபத்தில் அதிக நேரம் நன்றி செலுத்துதலால் நிறைந்திருக்குமே தவிர பிரார்த்தனைகள்/கோரிக்கைகள் சிலதாகவே இருக்கும்.
கர்த்தர் தம்முடைய முடிக்கப்பட்ட வேலைகளில் உங்களை இளைப்பாறச் செய்வாராக, இந்த ஓய்வில் அவர் உங்கள் வாழ்க்கையில் ஆளவும், அவருடைய வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கவும் செய்வார்.ஆமென் 🙏.

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவைக் காண்பதன் மூலம் ,வாழ்வில் இளைப்பார்ந்து வெற்றி ஆட்சி செய்வோம் !

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,நிகழ்காலத்தில் நித்தியத்தை அனுபவியுங்கள்!

30-03-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,நிகழ்காலத்தில் நித்தியத்தை அனுபவியுங்கள்!

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.(II கொரிந்தியர் 5:17) NKJV.
மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.(கொலோசெயர் 2:10) NKJV.

புதிய சிருஷ்டி பரிபூரணமும் முழுமையுமானது. ஆதிசிருஷ்டி சிருஷ்டிக்கப்பட்ட நாட்களில் இருந்ததது போலவே அதில் குறை ஏதுமில்லை.
புதிய சிருஷ்டி என்பது நிகழ்காலத்தில் வாழும் நித்தியம் ஆகும் .

வியாதியிலிருந்து குணமடைய மட்டும் அல்ல (3 ஜான் 2).நாம் வாழ்க்கை முழுவதும் ஆரோக்கியமாக இருப்பதே புது சிருஷ்டி.
நம் வாழ்வில் ஏற்படும் பற்றாக்குறை மற்றும் வறுமையில் இருந்து விடுபடுவது மட்டுமல்லாமல், எல்லாவற்றிலும் ஏராளமான ஆசிர்வாதங்களோடே இருப்பதே புது சிருஷ்டி(2 கொரிந்தியர் 8:9).
சூழ்நிலைகளை பார்த்து சோர்ந்து போகாமல்,கர்த்தர் எனக்காக எல்லாவற்றையும் செய்து முடித்தார் என்று விசுவாசத்தோடு நடப்பதே புது சிருஷ்டி .(2 கொரிந்தியர் 5:7)
புது சிருஷ்டி இயற்கை சட்டங்களால் அல்ல (எபிரேயர் 11:3),ஆன்மீக சட்டங்களால் ஆளப்படுவதாகும் .
புது சிருஷ்டி இவ்வுலகத்தில் வாழ்ந்தாலும் இவ்வுலகத்திற்குரியவர்கள் அல்ல . (யோவான் 17:16).
பரிசுத்த ஆவியானவர் புது சிஸ்டியாகிய நம்மில் இருப்பதால் நாம் எல்லாவற்றையும் அறிகிறோம். (1 யோவான் 2:20)ஆமென் 🙏.

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,நிகழ்காலத்தில் நித்தியத்தை அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,புதிய படைப்பின் அற்புதங்களை அனுபவியுங்கள்!

29-03-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,புதிய படைப்பின் அற்புதங்களை அனுபவியுங்கள்!

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.(II கொரிந்தியர் 5:17) NKJV.

“புதிய சிருஷ்டி ” என்பது கிறிஸ்துவை விசுவாசிக்கிறவரைப் பற்றிய மிக அற்புதமான உண்மைகளில் ஒன்றாகும் என்று நான் நம்புகிறேன். தங்கள் சொந்த முட்டாள்தனத்தால் வீழ்ந்த மனிதகுலத்தை, கிறிஸ்துவானவர் மனிதகுலத்தின் மீது வைத்த மிகுந்த அன்பின் மூலம் ,மீட்டு உயர்ந்த நிலைக்கு உயர்த்தினார் .

புதிய சிருஷ்டி என்றென்றும் புதியதாகவே இருக்கும்! மீட்பின் பணியானது இயேசுவின் இரத்தத்தின் வல்லமையால் நிறைவேறியதால், அது ஒருபோதும் கடவுளின் நீதியின் வழியை விட்டு விலகாது.
புதிய சிருஷ்டி என்பது கடவுளின் வகையான அவரைப்போன்ற வாழ்க்கை அவ்வாழ்க்கையானது மனிதனில் செயல்படுவது மனிதனை நிகழ்காலத்தில் நித்தியவாசியாக்குகிறது (Eternal being in time ).

புதிய சிருஷ்டி ஒருபோதும் மரணத்தை ருசிக்க முடியாது, பாவத்தால் கறைபடாது, ஏனென்றால் அது மனிதனை என்றென்றும் நீதிமான்களாக்கிய சிலுவை மரணம் மற்றும் இயேசுவின் கீழ்ப்படிதலின் விளைவாக “பரிசுத்தம்”என்ற முத்திரையிடப்பட்டது .
கிறிஸ்துவை விசுவாசிப்பவர், தான் ஒரு புதிய சிருஷ்டி என்றும்,எந்த தீயசக்தியாலும் வெல்ல முடியாத வெற்றியாளர் என்றும் நம்ப வேண்டும். பிரியமானவர்களே, கிறிஸ்துவின் முடிக்கப்பட்ட வேலையில் ஓய்வெடுங்கள் (விசுவாசியுங்கள்) மற்றதை பரிசுத்த ஆவியானவர் செய்வார். ஆமென் 🙏

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,புதிய படைப்பின் அற்புதங்களை அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,புதிய படைப்பை அனுபவியுங்கள் !

28-03-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,புதிய படைப்பை அனுபவியுங்கள் !

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.(II கொரிந்தியர் 5:17) NKJV

கடவுள் 6 நாட்கள் உலகத்தை படைத்து முடித்தப் பிறகு 7ஆம் நாளில் ஓய்வெடுத்தார் (ஆதியாகமம் 1:1-2:1). அவர் செய்த வேலை சரியாகவும் முழுமையாகவும் முடிந்ததால்,கடவுள் மனிதனிடம் எதிர்பார்த்தது அவன் அவருடைய படைப்பில் ஓய்வெடுத்து அதை அனுபவிக்க வேண்டும் என்பதே ஆகும் . ஆனால்,ஆதாமும்,ஏவாளும் பிசாசினால் ஏமாற்றப்பட்டு, தங்களிடம் இல்லாத ஒன்று இன்னும் ஏதோ எஞ்சி இருக்கிறது என்று நம்பி, முழுப் படைப்பையும் சிதைத்து வீழ்ச்சியில் ஆழ்த்தினார்கள்.
இதுவே படைப்பின் வீழ்ச்சியடைந்த நிலையில் கடவுளை மறுவேலை செய்ய வைத்தது .”மறுவேலை என்பது -மீட்பு”என்று அழைக்கப்படுகிறது. இது இயேசுவின் இரத்தம் சிந்தப்பட்டதன் மூலம் நிறைவேறியது . மீட்பின் வேலையின் விளைவாக, ‘புதிய படைப்பு’ தோன்றியது.

இயேசுவை தனது ஆண்டவராகவும் சொந்த இரட்சகராகவும் ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும் புதிய சிருஷ்டியாயிருக்கிறார்கள் . அவனுடைய / அவளுடைய வாழ்க்கையின் பழைய விஷயங்கள் முற்றிலும் மறைந்துவிட்டன, எல்லாமே புத்தம் புதியதாகிவிட்டன. அல்லேலூயா !

ஆம் என் அன்பானவர்களே, உங்கள் கடந்த காலம் எதுவாக இருந்தாலும், இயேசு உங்கள் கடந்த காலத்தை முற்றிலும் நீக்கி புத்தம் புதிய வாழ்க்கையை உங்களுக்கு வழங்குகிறார். கடவுளின் வகையான இந்த புது சிருஷ்டி காலத்திற்குக் கட்டுப்படாத நித்திய வாழ்க்கையாகும் . இந்த புது சிருஷ்டி (new creation) ஒருபோதும் பலவீனம்,வலி,மற்றும் மரணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் நம்மை வெற்றி வாழ்க்கை வாழச்செய்கிறது . ஆமென் 🙏

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,புதிய படைப்பை அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய அற்புதங்களை இன்றே அனுபவியுங்கள்!

27-03-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய அற்புதங்களை இன்றே அனுபவியுங்கள்!

ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்;
அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார்.
. இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம். (எபிரெயர் 10:5, 7, 10) NKJV.

தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு இந்த உலகத்திற்கு வந்தபோது அவருக்கு ஒரு சரீரத்தை ஆயத்தப்படுத்தினார்.  கர்த்தராகிய இயேசு தம்மை முழுமையாக தேவனோடு இணைத்து, மனுஷீகத்தை ஏற்று, பூமியில் அவதரித்தார். அவர் பூமியில் வந்தபோது மாம்சத்திற்குரிய பலவீனம், வலி, சோதனை மற்றும் மரணம் ஏற்படக்கூடிய (susceptible) மாம்சத்தில் வெளிப்பட்டார் . பாவத்தின் மீதான கடவுளின் தீர்ப்பை அவர் தனது சொந்த உடலின் மீது ஏற்றுக்கொண்டார். உலகத்தின் சிருஷ்டி முழுவதற்கும் மீட்பைக் கொண்டுவருவதற்காக அவர் தனது உடலை, இரக்கமின்றி அடிக்கவும் ,சிலுவையில் அறையவும் அனுமதித்தார். நம்முடைய பாவங்களைத் துடைத்தழிக்க அவர் தம் விலைமதிப்பற்ற இரத்தத்தையும் சிந்தினார். அவர் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை உண்மையாகவும், நிறைவாகவும் முடித்தார். இதுவே இயேசுவைப் பற்றிய கடவுளின் சித்தம் .

இன்று, நம்முடைய இரட்சகராகிய இயேசுவின் கிருபாதார பலியை ஏற்றுக்கொள்வதே நமக்கான தேவனுடைய சித்தம். நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் நம் ஆசீர்வாதத்திற்கு தேவையானதை இயேசு ஏற்கனவே செய்து முடித்தார்,அது முற்றிலும் போதுமானது என்பதை நாம் நம்ப வேண்டும்.

என் அன்பானவர்களே, இந்த வாரம் எல்லாம் வல்ல தேவன் தனது அற்புதமான ஆசீர்வாதங்களையும் அதிசய ங்களையும் உங்கள் வாழ்வில் வெளிப்படுத்துவார். அது நிச்சயமாக நம் அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கி பிரமிக்கவைக்கும் .இந்த ஆசீர்வாதங்கள் ஏற்கனவே உங்கள் பெயரில் செய்து முடிக்கப்பட்டுள்ளதை நம்புங்கள் அதனிமித்தம் ஆண்டவருக்கு நன்றி மாத்திரம் சொல்லுங்கள் . சொல்லப்படாத, கேட்கப்படாத மற்றும் கற்பனைக்கூட செய்யப்படாத அவருடைய ஆசீர்வாதங்களை இயேசுவின் பெயரில் அனுபவிக்க விசுவாசத்தோடு நன்றி பலி செலுத்துங்கள் .
நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவ நீதியாயிருக்கிறீர்கள்! ஆமென் 🙏

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய அற்புதங்களை இன்றே அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய முடிக்கப்பட்ட செயல்களை அனுபவியுங்கள் !

24-03-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய முடிக்கப்பட்ட செயல்களை அனுபவியுங்கள் !

12. ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள்.
13. ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்.(பிலிப்பியர் 2:12-13)NKJV.
ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்கக்கடவோம்.(எபிரெயர் 4:1) NKJV.

கடவுள் நம்மில் செயல்படுவதை அடிப்படையாகக் கொண்டது நமது வேலை. *கடவுள் நமக்குள்ளும் நம் மூலமாகவும் செயல்படுவதற்கு பரிசுத்த ஆவியானவருடன் நமது ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.

அவர் செய்து முடித்தார்.அப்போது நான் என்ன செய்ய வேண்டும் ?அவரது இரட்சிப்பை முழுமையாக இவ்வாழ்கையில் அனுபவிக்க அழைக்கப்படுகிறோம் இரட்சிப்பு என்றால் என்ன? ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் ஒரு பாவமும் செய்யாமல்,சாகும்வரை எல்லாவற்றிலும் பிதாவு க்கு முழுமையாக கீழ்ப்படிந்திருந்தார். ஆனாலும், சிலுவையில் தம் இரத்தத்தைச் சிந்தி, பாடனுபவித்து, பாவம், நோய், சாபம், மரணம் ஆகியவற்றிலிருந்து மனுக்குலத்தை மீட்டெடுத்தார். இதுவே இரட்சிப்பு (REDEMPTION).
அவர், “முடிந்தது” என்று கதறினார். அவர் பூமியில் வாழ்ந்ததும்,பாடனுபவித்ததும், மரித்ததும், என் நிலையில் எனக்காக(AS ME & FOR ME) ஆற்றிய இரட்சிப்பின் செயல். இதன் மூலம் அவர் மனிதகுலத்தின் மீது இருந்த பிசாசின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, நம் அனைவருக்கும் சுகம் ,செல்வாக்கு மற்றும் அனைத்து ஆசீர்வாதங்களையும் நமக்கு உரித்தாக்கினார் .
அவர் செய்து முடித்த இரட்சிப்பின் வேலை முழுமையும் ,பரிபூரணமும் ஆகும் .அதனோடு கூட்ட வேண்டியது வேறு எதுவும் இல்லை.

ஆகவே, 2000 ஆண்டுகளுக்கு முன்பே இயேசுவால் நிறைவு செய்யப்பட்டு முழுமைப்படுத்தப்பட்டவற்றிலிருந்து இன்று நாம் நமது ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம் .

நடைமுறையில் நாம் எப்படி இந்த ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வது ?
சிலுவையில் இயேசு செய்த ஒவ்வொரு மீட்பின் செயலுக்கும், கர்த்தராகிய இயேசுவுக்கும் சர்வவல்லமையுள்ள பிதாவாகிய தேவனுக்கும் நன்றி செலுத்துவதன் மூலம், அவருடைய ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம் .
உதாரணமாக,நீங்கள் குணமடையத் தேடுகிறீர்களானால், இயேசுவின் தழும்புகளால் நான் குணமடைந்தேன் என்பதற்காக அவருக்கு நன்றி கூறுங்கள்.அப்போது, நான் என் சரீரத்தில் அதைப் பார்க்காவிட்டாலும் உணராவிட்டாலும், விசுவாசத்தோடு நன்றி கூறுகிறேன் .
இந்த மனப்பான்மை பரிசுத்த ஆவியானவரின் வல்லமையை வெளிப்படுத்தி, இயேசு ஏற்கனவே செய்ததை இப்போது வெளிப்படுத்துகிறது. அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பது என்பதன் பொருள் இதுதான். ஆமென் 🙏

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய முடிக்கப்பட்ட செயல்களை அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்