Category: Tamil

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,சரியான சத்தியத்தின் வடிவத்தை சிந்தையில் உருவாக்குகிறது!

26-09-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,சரியான சத்தியத்தின் வடிவத்தை சிந்தையில் உருவாக்குகிறது!

13. நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டுபோய்விட்டார்கள் என்று சொல்லுங்கள்.
15. அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதருக்குள்ளே இந்நாள்வரைக்கும் பிரசித்தமாயிருக்கிறது.(மத்தேயு 28:13, 15) NKJV.

ஒரு குறிப்பிட்ட காரணத்தினால் அல்லது வலுவாக நம்பிக்கை வைத்திருக்கும் இடத்தில்,ஒருவரின் மனதில் அரண்கள்( STRONG HOLD) உண்மையில் உருவாகிறது.

இயேசு சிலுவையில் அறையப்பட்டு, ரோமானிய வீரர்களால் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.ஆனால் பிதாவானவர் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினார். இது அவரது மரணத்திற்கு காரணமானவர்களிடம் தெரிவிக்கப்பட்டதும், அவருடைய சீஷர்கள் உடலைத் திருடிச் சென்றதாகப் புகாரளிக்க ரோமானிய வீரர்களுக்கு லஞ்சம் கொடுத்தனர். இது செய்திகளில் தலைப்புச் செய்தியாக மாறியது, மேலும் இதுவே யூதர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு தலைமுறை தலைமுறையாக இன்று வரை நம்பப்படுகிறது.

பிசாசுகளின் அரண் என்பது பொய்கள் மற்றும் வஞ்சனைகள் அடிப்படையாகக் கொண்ட ஒரு வலுவான தவறான சிந்தனை வடிவமாகும்.
இன்றுவரை யூதர்கள் இந்த தவறான செய்தியை நம்புகிறார்கள்.ஆகவே,இன்னும் அவர் வரவில்லை என்பது போல் தங்கள் மேசியாவுக்காகக் காத்திருக்கிறார்கள்.

ஒரு உண்மையான மதம் ஒரு பொய்யின் மூலம் எவ்வாறு ஒரு தவறான தகவலை அப்பாவித்தனமாக நம்பும் வகையில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிகிறோம்.மற்றும் கிறிஸ்துவில் தேவன் ஏற்கனவே வைத்திருக்கும் நன்மையை ஒருபோதும் காணமுடியாதபடி செய்து,அடுத்தடுத்த தலைமுறைகளின் விசுவாசத்திற்கும் பெரும்அழிவைஏற்படுத்துகிறது என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது .

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, நாம் சரியாக வாழாததற்குக் காரணம்,சத்தியம் என்ன என்பதை நாம் விசுவாசியாதது தான்.கலாச்சாரம் மற்றும் நம் முன்னோர்களின் அனுபவங்கள் மூலம் நமக்குக் உந்தப்பட்ட ஒரு மனநிலையை நாம் வெறுமனே நம்பி பின்பற்றுகிறோம் .
எனினும், சத்திய ஆவியான பரிசுத்த ஆவியானவரை நாம் அழைக்கும்போது, ​​அவர் நம்மை எல்லா சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துகிறார்.மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து பிதாவின் வலதுபக்கத்தில் அமர்ந்திருக்கும் இயேசுவை நமக்கு வெளிப்படுத்துகிறார்.மற்றும் அவர் பரிசுத்த வேதாகமத்தின்படி நம் வாழ்வில் நடக்கச்செய்து இயேசுவின் நாமத்தில் சொல்லப்படாத, கேள்விப்படாத மற்றும் முன் சம்பவிக்காத ஆசீர்வாதங்களை இன்றே நம் வாழ்வில் வெளிப்படுத்துகிறார். ஆமென் 🙏.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,சரியான சத்தியத்தின் வடிவத்தை சிந்தையில் உருவாக்குகிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

இயேசுவை நோக்கிப் பார்த்து தேவனின் மிகச்சிறந்த அன்பளிப்பை அனுபவியுங்கள்!

25-09-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்த்து தேவனின் மிகச்சிறந்த அன்பளிப்பை அனுபவியுங்கள்!

10. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்.(யோவான் 4:10) NKJV‬‬

என் அன்பானவர்களே, இந்த மாதத்தின் கடைசி வாரத்திற்கு வரும் வேளையில் , ​தேவன் உங்களுக்கு மிகச் சிறந்ததைத் தர விரும்புகிறார் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்! அவர் எப்போதும் உங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார் – தீய எண்ணங்கள் அல்ல, நன்மையான எண்ணங்கள்,வறுமை பற்றிய எண்ணங்கள் அல்ல மாறாக செழிப்பின் எண்ணங்கள்.
அவருடைய தொடர்ச்சியான நல்ல எண்ணங்களே மேலே குறிப்பிடப்பட்ட இந்த இதயம் உடைந்த சமாரியப் பெண்ணின் வாழ்க்கையில் நம்முடைய கர்த்தராகிய இயேசுவைக் கொண்டுவந்தது.அந்த பெண்ணின் பின்னணி -அவளுக்கு 5 கணவர்கள் இருந்தார்கள்,அப்போது அவளுடன் வாழ்ந்தவர் கூட அவளது கணவர் அல்ல.

ஆனால்,அவளுடைய சமூக நிலையைப் பற்றி பேசுகையில்,அவளுடைய பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரத்தின் மீது அவளுக்கு வைராக்கியம் இருந்தபோதிலும்,அவளுடைய சுற்றுப்புறத்தில் அவளுக்கு நல்ல பெயர் இல்லை.தன் மூதாதையரான யாக்கோபு முற்காலத்தில் கட்டிய கிணற்றில் அவள் பெருமை கொண்டாள்.தற்செயலாக,அதே கிணற்றண்டையில் அவள் இயேசுவை சந்தித்தாள் ஆனால்,ஆண்டவர் அவளைச் சந்தித்தது அவளுடைய வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றி மாபெரும் தாக்கத்தை அவளுக்கு ஏற்படுத்திய தெய்வீக சித்தத்தின் சந்திப்பாகும் .

தேவனால் அனுப்பப்பட்டவர் தன்னிடம் பேசுகிறார் என்பது அவளுக்குத் தெரியாது மற்றும் தன்னை நினைத்துப் பார்க்க முடியாத உயரத்தை அடையும் வரத்தை ஆண்டவர் அவளுக்கு கொடுக்க வந்திருக்கிறார் என்றும் தெரியவில்லை.ஒரு குறிப்பிட்ட கலாச்சாரம் மற்றும் கடந்த கால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு,அதனால் ஏற்பட்ட தவறான சிந்தனை முறையே அவளுக்கு தேவனின் மிகச் சிறந்ததைப் பெறுவதைத் தடுத்தது .வேதம் இதை தவறான அரண்கள்( DEMONIC STRONG HOLD) என்று அழைக்கிறது.

ஆம் கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,நம் மனதில் கட்டுகிற தவறான அரண்களே தேவனின் மிகச் சிறந்ததைப் பெறுவதற்குத் தடையாக இருக்கலாம். இன்றைய தினம் உங்களுக்கான கிருபையானது உங்களைத் தேடி வந்து இப்படிப்பட்ட தவறான அரண்களை உடைக்கிறது,மேலும் இந்த வாரத்தின் எஞ்சிய நாட்களும் இந்த கிருபை உங்களுக்கு உதவவும்,அது உங்கள் வாழ்க்கையில் தேவன் எதிர்பார்க்கும் மிக உயர்ந்த நிலைக்கு உங்களை உயர்த்தவும், தேவனின் மிகச் சிறந்த அன்பளிப்பை நன்றியுள்ள இதயத்தோடு பெற்றுக்கொள்ளவும் உதவுகிறது ! இது உங்கள் நாள்! ஆமென் 🙏.

இயேசுவை நோக்கிப் பார்த்து,தேவனின் மிகச்சிறந்த அன்பளிப்பை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

nature

இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய ஆசீர்வாதங்களை சதாகாலமும் அனுபவியுங்கள்!

22-09-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய ஆசீர்வாதங்களை சதாகாலமும் அனுபவியுங்கள்!

18.மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். (வெளிப்படுத்துதல் 1:18)

இப்போது உங்கள் எண்ணங்களின் மையம் எதில் நோக்கமாயிருக்கிறது? நீங்கள் தற்போது எதில் ஆர்வமாக உள்ளீர்கள்?
தேவனும் எதில் ஈடுபாடு கொண்டிருக்கிறார் என்பதை நான் உங்களுக்கு சொல்கிறேன்? அவர் எப்பொழுதும் உங்களை நினைத்துக் கொண்டே இருக்கிறார். உங்களை நினைக்காமல் ஒரு நொடி கூட கடப்பதில்லை. உங்களைப் பற்றிய அவரது எண்ணங்கள் சமாதானத்திற்கானவை, தீயவை அல்ல. இது தான் நற்செய்தியாகிய சத்தியம் ! அல்லேலூயா!

“உங்கள் உடல் உங்கள் எண்ணங்களைப் பின்பற்றுகிறது” என்று சொல்வது போல், ஒவ்வொரு மனிதனைப் பற்றிய அவரது எண்ணங்கள் தான் அவரை இந்த உலகத்திற்கு அடியெடுத்து வைக்கச்செய்தது .அவர் மேலும் நமக்காக மரித்து நரகத்திற்குச் சென்று அங்கு இறந்தவர்களையும் நரகத்தில் கட்டுண்டர்வர்களையும் தம் மரணத்தால் விடுவித்தார் .
அவரில் எந்த பாவமும் இல்லை,ஆனால் அவர் நம்முடைய எல்லா பாவங்களை சுமந்து தீர்த்தத்தினால், பிசாசுக்கு நம் ஆத்துமாக்கள் மீது சட்டபூர்வமான உரிமை இல்லை.அவர் பெற்றுத்தந்த இந்த சுதந்திரம் இன்று காலை சத்தியமாக உங்களை விடுவிக்கிறது. அல்லேலூயா!

என் அன்பான நண்பர்களே, நீங்கள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சனை எவ்வளவு தீவிரமானதாக இருந்தாலும் அல்லது அற்பமானதாக இருந்தாலும், இயேசு உங்களை விடுவிக்கிறார்! அவர் பிரபஞ்சத்தின் மறுக்கமுடியாத ராஜா! அவர் இருளின் அனைத்து வல்லமைகளையும் ஆட்சி செய்கிறார்.அவர் ராஜாக்களின் ராஜா மற்றும் பிரபுக்களின் தேவன்!அவரே அண்ட சராசரங்களையும் ஆட்சி செய்கிறார்! ஆமென் 🙏

என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் என்று உரைக்கிறார். (எரேமியா 33:3)

அவருடைய இரத்தத்தால்,உங்கள் நீதியான இயேசுவை நீங்கள் நேரடியாக அணுகலாம்! அவருடைய நீதி உங்களை விடுவித்து,உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட எண்ணிலடங்கா ஆசீர்வாதங்களுடன் உங்களை ஆசீர்வதிக்கும். இதுவே நற்செய்தி,இதுவே சத்தியம் ! ஆமென் 🙏.

இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய ஆசீர்வாதங்களை சதாகாலமும் அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

nature

இயேசுவை நோக்கிப் பார்த்து ,உங்கள் வாழ்வில் அவரின் திருப்புமுனையை அனுபவியுங்கள்!

21-09-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்த்து ,உங்கள் வாழ்வில் அவரின் திருப்புமுனையை அனுபவியுங்கள்!

18.மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். (வெளிப்படுத்துதல் 1:18)

2020-21 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே கிரிக்கெட் டெஸ்ட் போட்டித் தொடர் எனக்கு நினைவிருக்கிறது. இரு அணிகளும் ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவிருந்தன. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியர்கள் ஆஸ்திரேலியர்களால் தாழ்த்தப்பட்டனர், மீதமுள்ள 3 போட்டிகளில் இந்தியா நிச்சயமாக தோல்வியடையும் என்று அனைவரும் நினைத்தனர்.ஆனால் திடீரென அலைகள் திரும்பியது. எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராக, மீதமுள்ள 3 போட்டிகளில் இந்தியா 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ஒரு வெற்றியாளரின் மேலாதிக்கம் எதிராளியின் சொந்த களத்தில் எதிராளியை வெல்வதில் உள்ளது.
அதேபோல், இந்த களத்தின் ஆட்சியாளரான பிசாசை வெல்ல இயேசு மரணம் மற்றும் நரகத்திற்குள் நுழைய வேண்டியிருந்தது.

மனிதன் இழந்த ஆதிக்கத்தை மீண்டும் பெற்று,மனித குலத்தின் நீதியையும் தேவன் மீட்டெடுத்தார், மேலும் மனிதனுக்கு மிகவும் விரும்பத்தக்க பரிசான பரிசுத்த ஆவியானவரின் தேவ பிரசன்னத்தையும் வழங்கினார். *இயேசுவின் மரணமும் அவருடைய உயிர்த்தெழுதலும் மனிதன் இழந்ததை விட மிகஅதிகமாகப் பெறச் செய்தது.அல்லேலூயா!

ஆம் என் அன்பானவர்களே, இந்த நாள் உங்களுடைய நாள் – இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பிய தேவன் உங்களையும் தாழ்ந்த குழியிலிருந்து எழுப்பி, இயேசுவின் நாமத்தில் உன்னதமான உயரத்தில் வைப்பார்.
ஆமென் 🙏.

இயேசுவை நோக்கிப் பார்த்து ,உங்கள் வாழ்வில் அவரின் திருப்புமுனையை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

இயேசுவை நோக்கிப் பார்ப்பது ,அவருடைய நித்திய வாழ்க்கையை அனுபவிக்கச்செய்கிறது!

20-09-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது ,அவருடைய நித்திய வாழ்க்கையை அனுபவிக்கச்செய்கிறது!

18.மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். (வெளிப்படுத்துதல் 1:18)

தேவனுடைய குமாரனின் மரணத்தை அவசியமாக்கியது மனிதகுலம் ஆனால் அவருடைய தெய்வீகம் (பரிசுத்த ஆவி) தேவனுடைய குமாரனின் உயிர்த்தெழுதலை அவசியமாக்கியது (ரோமர் 1:4).

அந்த ஜீவனாகிய தேவ குமாரன் மரணத்திற்குத் தன்னயே கொடுத்தது நினைத்துக்கூட பார்க்க முடியாதது. மேலும், மரணம் இறுதியாக உயிர்தெழுதலின் வெற்றியில் விழுங்கப்படுகிறது என்பதை முழுமையாக புரிந்துகொள்வது கடினம் (1 கொரிந்தியர் 15:54,54).

இயேசு நரகத்தில் இருந்தபோது பிசாசு வென்றது போல் தோன்றியது, ஆனால் அவனது கேலிக்குரிய சிரிப்பு 3 பகல் மற்றும் 3 இரவுகள் மட்டுமே நீடித்தது.பிசாசு 6000 வருடங்களாக ஏமாற்றி, ஊழலால் சம்பாதித்த அனைத்தையும் இழந்தான்.மனிதனுக்கு நிரந்தரமானதாகவும்,மீள முடியாததாகவும் தோன்றிய இழப்பு, இயேசுவின் ஞானத்தினாலும், பணிவினாலும் மனிதன் என்றென்றும் திரும்ப பெற்றான், இனி ஒருபோதும் அதை இழக்கமாட்டான். அல்லேலூயா!

ஆம் என் அன்பானவர்களே,வாழ்வில் நீங்கள் சம்பாதித்த பெயர்,புகழ்,செல்வம்,உடல்நலம், அந்தஸ்து , நேரம் போன்றவற்றை இழந்திருக்கலாம், ஆனால் நற்செய்தி என்னவென்றால் இயேசு, மரணம், நோய் மற்றும் பிசாசை வென்று நரகம்,மரணம் என்பதன் திறவுகோல்களை தன் கைகளில் எடுத்தார் .எனவே, நீங்கள் இயேசுவை மட்டும் விசுவாசித்தால் இழந்த அனைத்தையும் மீண்டும் பெறுவீர்கள்.அவர் சிலுவையில் உங்கள் மரணத்தை மரித்தார் மற்றும் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து உங்களுக்கு நித்திய வாழ்க்கையை (சாவாமையை) கொடுத்தார்..ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,அவருடைய நித்திய வாழ்க்கையை அனுபவிக்கச்செய்கிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

nature

இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய அதீத அன்பை அனுபவியுங்கள்!

19-09-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய அதீத அன்பை அனுபவியுங்கள்!

18.மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். (வெளிப்படுத்துதல் 1:18)

இயேசுவே தேவன் ! அவர் சதாகாலமும் வாழ்பவர்.அவரில் ஜீவன் இருக்கிறது (யோவான் 1:3). அவரே ஜீவன் (யோவான் 14:6).
மனிதர்களால் புரிந்துகொள்ள கடினமான காரணம் என்னவெனில், சதாகாலமும் வாழ்பவர்,அவரில் ஜீவன்
இருக்கிறது ,அவரே ஜீவனாகவும் இருகிறார்,அப்படி இருக்க அவர் எப்படி இறக்க முடியும்?

கோடிக்கணக்கான ஆண்டுகளாக ஒளி அளிக்கும் சூரியன் இருளாக மாற முடியுமா? அல்லது இருளால் ஒளியை விழுங்க முடியுமா? மாறாக, இருள் என்பது ஒளி இல்லாததை குறிக்கின்றது.அதுபோலவே, மரணம் என்பது வாழ்வின்மயை குறிக்கின்றது.

என் பிரியமானவர்களே,மனித குலத்தின் மேலான நன்மைக்காக எதுவாக இருந்தாலும் தேவன் அதை செய்ய முடியும். ஆகவே மரிக்க முடியாதவர் மனித குலத்திற்காக மரணத்தை சுவைத்தார் (எபிரேயர் 2:9) தம் மரணத்தின் மூலம் மரணத்தின் மீது வல்லமையுள்ள பிசாசை அழித்து,மரணத்திலிருந்தும் வாழ்நாளெல்லாம் மரண பயத்தின் அடிமைத்தனத்திலிருந்தும் நம்மை விடுவித்தார் (எபிரேயர் 2:14, 15)

பாவமே அறியாத இயேசு,ஒருபோதும் பாவம் செய்யாதவர் நமக்காக பாவம் ஆனார், இதனால் நாம் கிறிஸ்துவுக்குள் தேவனுடைய நீதியாக ஆக முடியும். தேவன் தனது சித்தம் மற்றும் முன்னறிவிப்பின்படி மனிதனை மீட்டெடுப்பதற்காக,மனிதனின் அதி மேன்மையான நன்மைக்காக எதையும் செய்ய முடியும் மற்றும் எதுவாகவும் மாற முடியும் அது தான் அவர் அன்பு !.ஆமென் 🙏

ஆண்டவரே! ஒன்றுமில்லாத மனிதன் மீது நீங்கள் கண்ணோக்கமாக இருக்க அவன் எம்மாத்திரம்?!

இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய அதீத அன்பை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

nature

இயேசுவை நோக்கிப் பார்த்து ,நாம் இழந்ததை அவர் மீட்டுக்கொடுப்பதை அனுபவியுங்கள்!

18-09-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்த்து ,நாம் இழந்ததை அவர் மீட்டுக்கொடுப்பதை அனுபவியுங்கள்!

18. மரித்தேன்,ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். (வெளிப்படுத்துதல் 1:18)K J V.

என் அன்பானவர்களே, மேற்கூறிய கடவுளின் குரலை இன்று உங்களுக்காக நான் விளக்க வேண்டுமானால், அது பின்வருமாறு இருக்கும் ,

“நான் நித்திய தேவனாயிருந்தாலும் ,மனிதகுலத்திற்காக ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் மனிதனாக பிறந்து ,மனிதனுக்காக ஜீவனை அளித்து மரித்தேன்,ஆனால் இப்போது நான் சதாகாலமும் வாழ்கிறேன்.மேலும் மனிதகுலத்தை அச்சுறுத்தும் நரகத்தையும் மரணத்தையும் நான் வென்றுவிட்டேன்.ஜீவன் மற்றும் இறப்பு என்ற தீய சுழற்சியில் இருந்து நான் மனிதகுலத்தை முற்றிலும் விடுவித்தேன்.இப்போது, ​​நான் நித்தியமாய் வாழ்வது போல் நீங்களும் நித்தியத்தில் வாழ்கிறீர்கள் .ஆமென்!”

மனிதன் காலத்திற்குக் கட்டுப்பட்டவன், அவனுக்கு ஒரு தொடக்கமும் முடிவும் உண்டு- பிறப்பதற்கு ஒரு நேரம்,இறப்பதற்கு ஒரு நேரம் என்று பிரசங்கி புத்தகம் மனிதனின் விரக்தியை அழகாக வரையறுக்கிறது, ஏனெனில் அவன் காலத்திற்குக் கட்டுப்பட்டவன்.
மனிதனுடைய வாழ்க்கையில் தேவன் இல்லாத வரை விரக்தி நிலைத்திருக்கும். இதற்குக் காரணம், மனிதன் தன் வரையறுக்கப்பட்ட அறிவின்படி தன்னை புரிந்து கொண்டு தெய்வீகத்தின் தேவையைப் பார்க்கவில்லை ,மாறாக தன்னிடம் திறமையும்,ஞானமும் இருப்பதாக அவன் திருப்தி அடைகிறான்,எனவே அவ தன்னைத்தானே மெச்சிக்கொண்டுஞானமும், திறமையும் கடவுளிடமிருந்து வருகிறது என்பதை அறியாத்திருக்கிறான்.

அவன் குழப்பமான,தீர்க்க முடியாத பிரச்னையை சந்திக்கும்போது, ​தனக்கு மேலான ஒரு சிருஷ்டிகர் இருப்பதை அவன் உணர்கிறான். அவன் தனது காலத்தின் தொடக்கத்தில் இதை உணர்ந்திருந்தால், அவன் தனது வாழ்க்கையின் பல விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர்த்திருக்கலாம். அதை அவன் உணரும் போது, தாமதமாகிவிட்டது.ஆனால், நித்திய தேவன் காலக்கட்டத்தில் நுழைந்து, இது மிகவும் தாமதமாகவில்லை என் தாசனே ,இதோ நான் எல்லாவற்றையும் புதிதாக செய்கிறேன் என்று கூறுகிறார்! அல்லேலூயா!

ஆம் என் பிரியமானவர்களே, எல்லாவற்றையும் புதிதாக்கவும், இழந்த அனைத்தையும் மீட்டெடுக்கவுமே இயேசு வந்தார்.அவர் என்றென்றும் வாழ்கின்றதால் ,இந்த வாரம் உங்கள் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அவருடைய அற்புதமான மறுசீரமைப்பின் வல்லமையை வெளிப்படுத்துகிறார்.ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்த்து ,நாம் இழந்ததை அவர் மீட்டுக்கொடுப்பதை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

nature

இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய விசுவாசத்தில் இணைந்து அற்புதங்களை அனுபவியுங்கள்!

15-09-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய விசுவாசத்தில் இணைந்து அற்புதங்களை அனுபவியுங்கள்!

22. இவனைக் கொல்லும்படிக்கு அது அநேகந்தரம் தீயிலும் தண்ணீரிலும் தள்ளிற்று, நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள் மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான்.
23. இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார்.
24. உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான்(மாற்கு 9:22-24) NKJV.

மேற்கண்ட வேத பகுதி எனக்கு மிகவும் பிடித்தமான மற்றும் மிகவும் ஆறுதல் அளிக்கும் பகுதி.காதுகேளாத மற்றும் ஊமையாய் இருந்த ஒரு மகனின் தந்தையைப்பற்றிப் பேசப்படுகிறது .அவர் மகனுக்கு பேசவோ கேட்கவோ முடியவில்லை காரணம் அவன் ஒரு அசுத்த ஆவியால் பாதிக்கப்பட்டிருந்தான். அது அவர் மகனை கொல்லும் நோக்கத்துடன் பலமுறை நெருப்பில் தள்ளியது .
அவர் தனது மகனின் வாழ்க்கையில் விடுதலையைக் காண எல்லா வழிகளையும் முயற்சித்தார், ஆனால் பயனில்லாததால் அந்த மகனின் தந்தை மிகவும் அவநம்பிக்கையுடன் மற்றும் நம்பிக்கையை இழந்த நிலையில் காணப்பட்டார். கடைசியாக, அவர் தனது மகனை சர்வவல்லமையுள்ள இயேசுவிடம் கொண்டு வந்தார்.அல்லேலூயா!

தன் மகனுக்கு இதுவரை எந்தப் பரிகாரத்தையும் பார்க்க முடியாததால்,விசுவாசத்தை இழந்தது மாத்திரமல்ல,மேலும் தேவனால் குணப்படுத்த முடியுமா என்ற தீவிர சந்தேகமும் கூட இருந்தது. ,”உம்மால் கூடுமானால் செய்யும் “என்று தகப்பன் சொல்லிய கூற்றிற்கு இது தான் காரணம்.

கர்த்தராகிய இயேசு அவருக்கு “*உங்கள் மகனைக் குணப்படுத்த எனக்கு (இயேசு) விசுவாசம் இருக்கிறது என்று நீங்கள் நம்பினால்,எல்லாம் கூடும்*”என்று பதிலளித்தார் .

அவர் (தந்தை), விரக்தியடைந்து, தனது மகன் குணமடைவதைக் காணும் ஏக்கத்தில் கிட்டத்தட்ட நம்பிக்கையற்றவராக இருந்ததால், தாம் எப்படியாவது இயேசுவின் விசுவாசத்தில் இணைத்து விடுதலையைக் கொண்டுவர முடியும் என்று உறுதியாயிருந்தார்.,எனவே அவர் தனது மகன் சுகமடையும் முன்பு அவருடைய விசுவாசக் குறைபாட்டை முதலில் குணப்படுத்தும்படி இயேசுவிடம் கதறுகிறார்.

எல்லா மனிதரையும் காப்பாற்றவும்,விடுவிக்கவும்,குணப்படுத்தவும்,வல்லவரான இயேசுவால் தந்தை மற்றும் மகன் இருவரும் உடனடியாக குணமடைந்தனர்.

ஆம் என் பிரியமானவர்களே, உங்களுக்கு போதிய விசுவாசம் இல்லாவிட்டாலும்,அற்புதங்கள் செய்ய தேவையான அனைத்து விசுவாசமும் இயேசுவிடம் உள்ளது.அவருடைய விசுவாசத்தில் இணைந்து உங்கள் அற்புதங்களை பெற்றுக்கொள்ளுங்கள்,உங்கள் தேவைகளை வழங்குவதற்கு அவருடைய அற்புதங்களைச் செய்யும் திறனைப் பற்றிக் கொள்ளுங்கள்*. அல்லேலூயா! அவர் இரக்கமும்,அன்பும், பொறுமையும், கருணையும் உள்ளவர்,உங்கள் விசுவாசமின்மையை தம் விசுவாசத்தால் குணப்படுத்துகிறார்.ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய விசுவாசத்தில் இணைந்து அற்புதங்களை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

nature

இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய ஒப்பற்ற ஆற்றலை அனுபவியுங்கள்!

14-09-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய ஒப்பற்ற ஆற்றலை அனுபவியுங்கள்!

14. அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள்.
15. அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி
16. அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான். லூக்கா 17:14-16 NKJV

அவருடைய பூமிக்குரிய ஊழியத்தின் காலத்தில், ​​கர்த்தராகிய இயேசு ஒருமுறை 10 தொழுநோயாளிகளை குணப்படுத்தினார்.அந்த நாட்களில் தொழுநோய்,கோவிட் போன்ற மிகவும் பயங்கரமான நோயாக இருந்தது. அது தொற்றுநோயாக இருந்தது மற்றும் கிட்டத்தட்ட எந்த சிகிச்சையும் இல்லை.எவரும் தங்கள் சுகத்தைப் பெற்றதில்லை.
பத்து தொழுநோயாளிகள் கர்த்தராகிய இயேசுவிடம் அவருடைய இரக்கத்திற்காக மன்றாடினார்கள், கர்த்தர் பத்து பேரையும் குணமாக்கினார்,ஆனால் ஒருவர் மட்டுமே தேவனுக்கு நன்றி சொல்லவும் மகிமைப்படுத்தவும் திரும்பினார்.
தேவனின் வல்லமையின் மதிப்பு ஒருவருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. அவர் தனது பிரச்சனையின் தீவிரத்தை அறிந்திருந்தார், மேலும் அந்த மாபெரும் பிரச்சனையை கர்த்தர் மட்டுமே தீர்க்கமுடியும் என்பதையும் அவர் அறிந்திருந்தார்.

என் அன்பானவர்களே, உங்கள் பிரச்சனை பாரதூரமானதாகவும் தீர்க்க முடியாததாக இருந்தாலும்,தேவனால் அதை தீர்க்க முடியும். தேவனுக்கு நீங்கள் ஏறெடுக்கும் நன்றியின் வெளிப்பாடு, உங்கள் தேவைக்கான தீவீரத்தின் அளவை வெளிப்படுத்துகிறது.

அந்த தொழுநோயாளி இயேசுவின் பாதத்தில் முகங்குப்புற விழுந்து, அவருக்கு நன்றி செலுத்தி,தேவனை மகிமைப்படுத்தினார்.அவர் குணமடைந்த பிறகு அவரது நன்றியின் அழுகை,குணமடைவதற்கு முன் அவரது அவநம்பிக்கையான அழுகையை விட சத்தமாக இருந்தது. அவர் உண்மையிலேயே தேவனின் வல்லமையை ப் புரிந்துகொண்டார் – அவர் சர்வ வல்லமையுள்ள தேவன்! நன்றியுணர்வு என்பது நம் உதடுகளில் அல்ல மாறாக நம் இதயத்தின் ஆழத்திலிருந்து நம் முழு ஜீவனையும் உள்ளடக்கியதாகும் .

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, நீங்கள் அவநம்பிக்கையுடன் இருக்கும் பகுதிகளில் அவருடைய அற்புதமான வல்லமையை அனுபவிப்பீர்கள் என்று இந்த நாளில் நான் தீர்க்கதரிசனமாக உரைக்கிறேன். அவருடைய ஒப்பற்ற நற்குணம் உங்களைத் தாழ்த்தி,சர்வவல்லமையுள்ள இயேசுவின் நாமத்தில் நன்றியுணர்வுடன் உங்களை நிரப்பும்! ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய ஒப்பற்ற ஆற்றலை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

nature

இயேசுவை நோக்கிப் பார்த்து,நம்மிலும்,நமக்குள்ளும் செயல்படும் அவரது திறனை அனுபவியுங்கள்!

13-09-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்த்து,நம்மிலும்,நமக்குள்ளும் செயல்படும் அவரது திறனை அனுபவியுங்கள்!

27. இயேசு அவ்விடம் விட்டுப் போகையில், இரண்டு குருடர் அவர் பின்னே சென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.
28. அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம், ஆண்டவரே! என்றார்கள். (மத்தேயு 9:27-28 NKJV)

இரண்டு பார்வையற்ற மனிதர்கள் கர்த்தரின் கருணையைப் பார்க்கும்படி கூக்குரலிட்டனர்.கர்த்தர் தங்கள் பார்வையை மீட்டெடுக்க விரும்புகிறாரா என்று உறுதியாகத் தெரியாததால் அவர்கள் கதறினர். எனவே, அவர் அவர்களை சுகமாக்க சித்தம் கொண்டு இறங்குமாறு இயேசுவைத் தேடி கூக்குரலிட்டனர்.

என் அன்பு நண்பரே, பிதா உங்கள் கோரிக்கையை எப்போதும் நிறைவேற்ற தயாராக இருக்கிறார். அதனால்தான் அவர் தம்முடைய குமாரனாகிய இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பினார்.

ஆனால்,நம்முடைய கிருபையுள்ள கர்த்தராகிய இயேசு பூமியில் நடமாடிய நாட்களிலும், இன்றும் உள்ள கேள்வி அவருக்கு சித்தமா இல்லையா என்பது அல்ல (அவர் சித்தமில்லை என்றால்,அவர் ஏன் வந்து மனித குலத்திற்காக சாக வேண்டும்? ) *மாறாக அன்றும்,இன்றும் இருக்கும் ஒரே கேள்வி – அவரால் இதைச் செய்ய முடியும் (HIS ABILITY ) என்று நீங்கள் நம்புகிறீர்களா என்பதுதான் .

ஆம் என் பிரியமானவர்களே,*அவரால் செய்ய முடியும் என்பதை விசுவாசிப்பதில் தான் பிரச்சினை ,மேலும் நாம் கேட்பதற்கும் அல்லது நினைப்பதற்கும் மேலாக கூட அவரால் செய்ய முடிகிறது (எபேசியர் 3:20). நம்மை ஆசீர்வதிக்கும்படி அவரிடம் கேட்பதில் இருந்து*நம்முடைய கற்பனைக்கு அப்பாற்பட்டு அவரால் செய்யமுடியும் என்று அவரை நம்புவதற்கு நம்மில் வேலை செய்யும்படி நம்முடைய பிரார்த்தனை இருக்கட்டும். அல்லேலூயா!

_நம்மில் உள்ள கிறிஸ்து, அவருடைய திறமையை நமக்குள்ளும்,நம் மூலமாகவும் வெளிப்பட பிராத்திக்கிறேன் _. ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்த்து,நம்மிலும்,நமக்குள்ளும் செயல்படும் அவரது திறனை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம் .