Category: Tamil

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது!

2-11-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது!

தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.(யோவான் 1:18) ‭NKJV.

இயேசுவின் நாமத்தில் ஆசீர்வதிக்கப்பட்ட இனிய நவம்பர் மாதத்தின் வாழ்த்துக்கள்!

பூமியில் மனிதகுலத்தின் வரலாறு முழுவதுமாக, மனிதர்கள் தேவனை விவரிக்க முயற்சித்திருக்கிறார்கள்.சிலர் தேவனைப் பார்க்காமலேயே தேவனை வரையறுக்க முயன்றனர்.
ஒரு சிலர் தங்கள் உண்மையான அனுபவங்கள் அல்லது தேவனுடனான சந்திப்புகளைப் பகிர்ந்துகொள்கின்றனர்,ஆனால் அவர்களின் சந்திப்புகள் அல்லது அனுபவங்கள் தேவனின் ஒரு அம்சத்தை மட்டுமே சித்தரிக்கின்றன,தேவனின் முழுமையை அல்ல.
தேவனை முழுமையாக அறிந்தவர் மற்றும் தேவனை முழுமையாக பார்த்த ஒரே ஒருவர் இயேசுநாதர் மட்டுமே.!

தேவனைப் பற்றிய இயேசுவின் அறிவு தேவனின் ஒரு அம்சம் மாத்திரம் அல்ல,ஏனென்றால் அவர் எப்போதும் தேவனோடு இருக்கிறார். அவர் தேவனை உள்ளேயும் வெளியேயும் அறிவார்.
தேவனைப் பற்றிய இயேசுவானவருக்கு உள்ள அறிவு அனுபவங்கள் அல்லது சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டது அல்ல, அது மனிதகுல வரலாற்றின் போது சில புனிதர்களுக்கு கிடைத்த சந்திப்பு அனுபவம் அல்ல மாறாக இயேசு எப்போதும் தேவனுடன் இருக்கிறார்.அவரே தேவனாகவும் இருக்கிறார் ! அல்லேலூயா!!
தேவன் யார் என்பதை மனிதர்களுக்கு வெளிப்படுத்த தேவன் தம்முடைய ஒரே குமாரன் இயேசுவை அனுப்பினார்.இயேசு சர்வவல்லவரின் முழுமையான மற்றும் உண்மையான பிரதிநிதி.

தேவனின் ஒரே பேறான குமாரன் பூமியில் வருவதன் நோக்கம்,ஒரே உண்மையான தேவனை வெளிப்படுத்துவது மட்டுமல்ல,அந்த வெளிப்பாட்டின் மூலம் மனிதன் பாவத்தின் மூலம் இழந்த தேவனின் சாயலாக மாற்றப்படுகிறான் அல்லது மீட்டெடுக்கப்படுகிறான்.
இயேசுவைப் பார்ப்பது நம்மை கிறிஸ்துவாக மாற்றுகிறது! ஆமென் 🙏
மேலும் இயேசு தேவனை தேவனாக வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதைவிட முக்கியமாக தேவனை நம் பிதாவாக வெளிப்படுத்தவும் வந்தார். அல்லேலூயா!
இயேசுவைக் காணும்போது பிதாவை அறிகிறோம் ! அல்லேலூயா! .ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,பிதாவை வெளிப்படுத்துகிறது !

கிருபை நற்செய்தி தேவாலயம்.

img_185

ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பார்ப்பது,விவரிக்க முடியாத ஆசீர்வாதங்களைத் திறக்கிறது!!

31-10-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பார்ப்பது,விவரிக்க முடியாத ஆசீர்வாதங்களைத் திறக்கிறது!!

17. சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான்.(வெளிப்படுத்துதல் 7:17) NKJV.

என் அன்பானவர்களே,இந்த மாத இறுதிக்கு வரும்வேளையில் நம் தேவ ஆட்டுக்குட்டியானவர் செய்த தியாகங்களை நினைப்பூட்ட விரும்புகிறேன்.​​மனித குலத்தைக் காப்பாற்ற மனிதனாக உருவெடுத்து,நம்மை செல்வந்தராக மாற்ற ஏழைக்கோலமாக அவதரித்தார்,அப்படியே நம்மை ஆசீர்வதிக்க அவர் சாபமாக மாறினார்,நம்முடைய பாவங்களுக்காக அவர் பாவமாக மாறி விலைமதிப்பற்ற ரத்தத்தைச் சிந்தி நம்மை நீதிமான்களாக மாற்றினார்.மனுகுலத்திற்காக மரணத்தை ருசித்து,அதை ஜெயித்து மரணத்தை என்றென்றும் ஒழித்ததினால் மனிதனை என்றென்றும் சாவாமை அடையச்செய்தார் மற்றும் நம்மை என்றென்றும் நீதிமான்களாக்கினார்.அல்லேலூயா!

அவர் நம்மை மேய்ப்பராக பாதுகாத்து வழி நடத்துகிறார்.நம் கண்களிலிருந்து ஒவ்வொரு கண்ணீரையும் துடைத்து ஜீவ தண்ணீரின் அஸ்திபாரங்களுக்கு நம்மை வழிநடத்துகிறார். மரணமோ,நோயோ,துக்கமோ,வலியோ நமக்கு இராமல் என்றென்றும் தம்முடன் நித்தியத்தில் வைத்திருக்கிறார். இயேசுவின் நிமித்தம் பிதாவாகிய தேவன் நமக்கு என்றென்றும் நம் நித்திய தந்தை ஆனார்.7 வது முத்திரையைத் திறப்பதன் மூலம் வெளிப்படுகிற விவரிக்க முடியாத ஆசீர்வாதங்களை நமக்கு அளிக்கிறார்.ஆமென் 🙏

என் அன்பான நண்பர்களே,இந்த மாதத்தின் ஒவ்வொரு நாளும் ஆட்டுக்குட்டியானவரின் வெளிப்பாட்டின் பயணத்தின் மூலம் எங்களுடன் இணைந்ததற்கு நன்றி.என்றென்றும் ஆட்சி செய்யும் சிம்மாசனத்தில் உள்ள ஆட்டுக்குட்டியை கிருபையுடன் நமக்கு வெளிப்படுத்திய பரிசுத்த ஆவியானவரை நான் வணங்குகிறேன்.
நம் நித்திய பிதாவை இயேசுவின் நாமத்தில் நெருக்கமாக அறிந்துகொள்ள நவம்பர் மாதத்தில் எங்கள் ஊழியத்துடன் இணைந்து ஆசீர்வாதம் பெறுங்கள்.ஆமென் 🙏

ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பார்ப்பது,விவரிக்க முடியாத ஆசீர்வாதங்களைத் திறக்கிறது.!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

img_171

ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பார்ப்பது,நமது இலக்கை அடைய தேவனின் பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது!!

30-10-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பார்ப்பது,நமது இலக்கை அடைய தேவனின் பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது!!

9. தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,
10. எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள். (வெளிப்படுத்துதல் 5:9-10) NKJV.

தேவனை அறிய புத்தகங்கள்,சமூக ஊடகங்கள்,மாதாந்திர இதழ்கள் போன்றவற்றின் மூலம் இருப்பினும் ,பரிசுத்த ஆவியானவர் மட்டுமே தேவனை சிறந்த முறையில் நமக்கு வெளிப்படுத்த முடியும்.மேலும் இயேசு கிறிஸ்து என்ற நபரின் மூலமும் தேவனை அறிய முடியும்.

பரிசுத்த ஆவியானவர் இயேசுவை நமக்கு வெளிப்படுத்துவது தான் இயேசுவை நோக்கிப் பார்ப்பது என்று அழைக்கப்படுகிறது. இயேசுவை அறிந்து கொள்ள நாம் முயற்சி செய்யும்போது, ​பரிசுத்த ஆவியானவர் இயேசுவில் உள்ள தேவனின் பரிமாணத்தை வெளிப்படுத்துகிறார் அல்லது நம் மனக் கண்களை திறக்கிறார்- சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் தேவ ஆட்டுக்குட்டி மட்டுமே ஒவ்வொரு ஜீவனின் இலக்கையும் (DESTINY யை )அறிந்திருக்கிறார்.

பரிசுத்த ஆவியானவர் தேவ ஆட்டுக்குட்டியை சிங்காசனத்தில் உங்களுக்கு வெளிப்படுத்தும்போது, ​​இந்த பூமியில் ராஜாக்களாகவும்,ஆசாரியர்களாகவும் உங்களை மாற்றி உங்கள் இலக்கை (DESTINY யை ) நீங்கள் காணத் தொடங்குவீர்கள்.
ஆட்டுக்குட்டியானவரை ஆராதிப்பதின் மூலம் தேவன் நமக்கு வைத்திருக்கும் இலக்கை பார்பதுமட்டுமல்லாமல் இவ்வுலகில் உன்னதமாக அதை நடைமுறையில் யதார்த்தமாக்கவும் முடியும். நீங்கள் எவரை வழிபடுகிறீர்களோ அவருடைய சாயலாக மாற்றப்படுகிறீர்கள்.அதன் அடிப்படையில் தேவ ஆட்டுக்குட்டியை சிம்மாசனத்தில் வைத்து வழிபடுவது உங்களை அரியணையில் அமர்த்தும்.இது எல்லாருக்கும் பொருந்தும் சட்டம் ! (சங்கீதம் 106:19,20).

நாங்கள் (GRGC தேவாலயம்) நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை)ஆராதனையில் கிட்டத்தட்ட 3 மணிநேர தொடர்ச்சியான துதி ஆராதனையை மேற்கொண்டோம் – சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் தேவ ஆட்டுக்குட்டிக்கு எங்கள் துதியின் காணிக்கைகளை அர்பணித்தோம்.சமூக ஊடகங்களில் ( YOUTUBE ல் ) எங்கள் நிகழ்ச்சியைப் பார்த்து,தேவ ஆட்டுக்குட்டியானவரை ஆராதிக்கும் வேளையில் உங்கள் கண்கள் திறக்கப்பட்டு உங்கள் வாழ்க்கையின் இலக்கை பார்ப்பதோடு மட்டுமல்லாமல் இந்த பூமியில் நிஜ வாழ்க்கையில் அதை அனுபவிப்பீர்கள் என்று தீர்க்க தரிசனமாக உரைக்கிறேன்! ஆமென் 🙏

ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பார்ப்பது,நமது இலக்கை அடைய தேவனின் பரிமாணங்களை வெளிப்படுத்துகிறது!!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

img_169

ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பார்ப்பது,இன்று உங்கள் மீது பரலோக ஆசீர்வாதங்களைத் திறக்கிறது!

27-10-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பார்ப்பது,இன்று உங்கள் மீது பரலோக ஆசீர்வாதங்களைத் திறக்கிறது!

உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர சூரிய நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத் தொழுது சேவிக்க இணங்காதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.(உபாகமம் 4:19) NKJV.

மனிதன் தன் இலக்கை அறியவும், தனக்கென ஒரு பெயரைப் பெறவும்,சில சமயங்களில் விண்ணுலகைப் பார்த்து, அவற்றைத் தன் வழிபாட்டுப் பொருளாக ஆக்கிக் கொள்கிறான்,இவை எல்லாம் வல்ல இறைவனால் உருவாக்கப்பட்டு மற்றும் தேவனின் ஆட்டுக்குட்டியான இயேசுவின் மூலம் படைக்கப்பட்டது என்பதை மறந்து போனான்.அவர் ஒருவரே அனைத்து வழிபாடுகளுக்கும்,ஆராதனைக்கும் என்றென்றும் தகுதியானவர்.

குறி சொல்பவர்கள் தங்கள் சொந்த கணிப்புகள் அல்லது சில நட்சத்திரங்களின் நிலைப்பாட்டின் காரணங்களைப் பயன்படுத்தி வணிகம், வேலை, திருமணம் மற்றும் பலவற்றில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதாகக் கூறி கதைகளை உருவாக்குகிறார்கள்.ஆனால் ,தேவன் இவை அனைத்தையும் படைத்து மனித குலத்திற்கு பாரம்பரியமாக கொடுத்துள்ளார் என்பதை நாம் சிந்தித்து உணர வேண்டும்.

என் அன்பானவர்களே,பரலோகத்தின் தேவன் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க இந்த விண்ணுலகை படைத்துள்ளார்.நீங்கள் சிம்மாசனத்தில் இருக்கும் தேவ ஆட்டுக்குட்டியைப் பார்க்கும்போது,அவர் விண்ணுலகைக் கையாளும் 6 வது ஆசீர்வாதத்தைத் திறக்கிறார்.ஆகையால் பகலில் சூரியனும் இரவில் சந்திரனும் உங்களைத் தாக்காது (சங்கீதம் 121:6).தேவன் ஒவ்வொரு நாளையும் உங்களுக்கு ஆசீர்வாதமாக படைத்தார்.
அவருடைய நன்மைக்காக அவருக்கு நன்றி. இயேசுவின் நாமத்தில் உங்களுக்கு சாதகமாக வானத்தின் சாஸ்த்ரங்களும்,பரலோகத்தின் ஆசீர்வாதங்களும் இணைந்து உங்களை ஆசீர்வதிக்க இன்று தேவன் நியமிக்கப்பட்ட நேரம்.ஆமென் 🙏

ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பார்ப்பது,இன்று உங்கள் மீது பரலோக ஆசீர்வாதங்களைத் திறக்கிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

img_157

ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பார்ப்பது,வாழ்க்கையில் வெற்றியோடு நம்மை ஆட்சி செய்ய வைக்கிறது !

26-10-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பார்ப்பது,வாழ்க்கையில் வெற்றியோடு நம்மை ஆட்சி செய்ய வைக்கிறது !

9. முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்; சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை.
10. இதைப் பார், இது நூதனம் என்று சொல்லப்படத்தக்க காரியம் ஒன்றுண்டோ? அது நமக்கு முன்னுள்ள பூர்வகாலங்களிலும் இருந்ததே. (பிரசங்கி 1:9-10 )NKJV

சூரியனுக்குக் கீழே உள்ள இந்த பூமியைப் பற்றிய விஷயங்களின் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால், வாழ்க்கை ஒரே வட்டத்தில் சுற்றி வருவது போல் உணரச்செய்கிறது.நம் அனுபவத்தில் புதிதாக எந்த மாற்றமும் இருக்காது.அது விரைவில் சலிப்பிலும்,நடுத்தர வாழ்விற்கும் வழிவகுக்கும், அது காலப்போக்கில் ஏமாற்றமளிக்கும்.இது தான் பிரசங்கியின் அனுபவமாக இருந்தது, இன்றும் நம்மில் பலரும் அப்படித்தான் இருக்கிறோம் .
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் தேவனின் ஆட்டுக்குட்டியான இயேசுவை நாம் பார்க்கத் தொடங்காத வரை, நம் வாழ்வில் தேவனால் நியமிக்கப்பட்ட இலக்கை நாம் ஒருபோதும் அறிய முடியாது . இதன் விளைவாக, சிலர் இங்கே பூமியில் வாழ்வின் நோக்கத்தை (நம்பிக்கையை) இழந்து, வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவதைப் பற்றி சிந்திக்கிறார்கள்.

என் அன்பான நண்பர்களே,உங்கள் வாழ்க்கையில் தேவன் சிறந்த திட்டங்களை வைத்திருக்கிறார்.உங்கள் வாழ்க்கைக்கு ஒரு திட்டவட்டமான நோக்கம் இருக்கிறது,அது சர்வவல்லமையுள்ள அவராலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது,அவரே உங்கள் விசுவாசத்தின் தொடக்கமும்,முடிவுமாக இருக்கிறார். சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்கும் ஆட்டுக்குட்டியான இயேசுவை நீங்கள் பார்த்தால் மட்டுமே உங்கள் ஆத்ம திருப்திக்கு வழிவகுக்கும்.இயேசு தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலம் உங்களை சலிப்பு தட்டுதலிலும், ,நடுத்தரத்திலிருந்தும் விடுவிப்பார்.அவருடைய தெய்விக இலக்கை அடையாமல் முடிவில்லாமல் முயற்ச்சி செய்கிற தீய சுழற்சியில் இருந்து அவர் உங்களை விடுவிப்பார்.

இவ்வாழ்க்கையில் நம்மை வெற்றியோடு ஆளச் செய்யும் ஆட்டுக்குட்டியான இயேசுவை சிங்காசனத்தில் காண நம் பிதாவாகிய தேவன் இந்த நாளில் நம் மனக்கண்களை திறக்கட்டும்.ஆமென் 🙏

ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பார்ப்பது,வாழ்க்கையில் வெற்றியோடு நம்மை ஆட்சி செய்ய வைக்கிறது !

கிருபை நற்செய்தி தேவாலயம் .

ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பார்ப்பது,அவருடன் என்றென்றும் சிங்காசனத்தில் அமர்த்தப்படுவதற்கு மரணத்தின் பிடியிலிருந்து நம்மை விடுவிக்கிறது!

25-10-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பார்ப்பது,அவருடன் என்றென்றும் சிங்காசனத்தில் அமர்த்தப்படுவதற்கு மரணத்தின் பிடியிலிருந்து நம்மை விடுவிக்கிறது!

11. பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது.
12. அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள். (வெளிப்படுத்துதல் 5:11-12) NKJV.

எண்ணற்ற தேவதூதர்கள்,கர்த்தர் அமர்ந்திருக்கும் சிம்மாசனத்தையும்,நான்கு உயிரினங்களையும் பெரியவர்களுடன் சூழ்ந்துகொண்டு,“ஆட்டுக்குட்டியானவர் துதிக்கு பாத்திரர் !” என்று ஒருமனதாக பாடு கிறார்கள்.ஒருமுறை கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியை அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து வணங்குகிறார்கள்.பரலோகத்தில் வாழ்பவர்கள் அனைவரும் என்றென்றும் வாழ்கிறார்கள்.அவர்கள் ஒருபோதும் மரணத்தை அனுபவித்ததில்லை, இனி ஒருபோதும் மரிக்கவும் மாட்டார்கள்.

மரணம் என்பது தொலைந்தவர்கள் தங்கள் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கும் இடமாகும். அங்கு சென்றவர்கள் யாரும் திரும்புவதில்லை. இருப்பினும்,அங்கு சென்று வெற்றியுடன் திரும்பிய ஒரே ஒருவர் தேவ ஆட்டுக்குட்டியானவர் மட்டுமே . ஆட்டுக்குட்டியானவர் தம்மை விசுவாசிக்கிறவர்களை மரணத்தினின்று மீட்பதற்காக, மனுக்குலத்தின் நிமித்தமாக அவர் அங்கு வந்தார். கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததால்,மரணம், நரகம் மற்றும் பிசாசு உட்பட அதன் அனைத்து குடிமக்களையும் வென்றதால் நமக்கு மீட்பு வந்தது.

ஆட்டுக்குட்டியானவர் மரித்தோரிலிருந்து எழுந்தது மட்டுமல்லாமல்,பரலோகத்திற்கு ஜெய கிறுஸ்துவாக சென்றார்,சர்வவல்லமையுள்ள கடவுளின் வலது பாரிசத்தில் வீற்றிருந்தார்,மேலும் பழைய ஏற்பாட்டு காலத்தில் சிறைபிடிக்கப்பட்ட அனைவரையும்,அந்த மரணத்தின் உறைவிடத்திலிருந்து மிக உயர்ந்த நிலைக்கு தம்மோடு அழைத்துச் சென்றார்.ஒருபோதும் பாவம் செய்யாத அனைத்து பரலோகவாசிகளும் . ஆபிரகாமும் மற்றவர்களும் இதில் அடங்குவர்.ஆட்டுக்குட்டியான இயேசுவின் இரத்தம் சிந்தப்படும் வரை அவர்கள் காத்திருந்தனர்.இரத்தம் அவர்களை மரணத்தின் பிடியிலிருந்து மீட்டது.ஆட்டுக்குட்டியானவருக்கு அல்லேலூயா!

என் அன்பானவர்களே,ஆட்டுக்குட்டியின் சிந்தப்பட்ட இரத்தத்தை நீங்கள் நம்பினால், மரணம் உங்களைத் தாக்காது .பரலோகம் என்றென்றும் உங்கள் வசிப்பிடமாக மாறும்.ஆமென் 🙏

ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பார்ப்பது,அவருடன் என்றென்றும் சிங்காசனத்தில் அமர்த்தப்படுவதற்கு மரணத்தின் பிடியிலிருந்து நம்மை விடுவிக்கிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

துதிக்கு பாத்திரரான ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பாருங்கள்,நம்மை மீட்டெடுத்து,முடிசூட்டுவதை அனுபவியுங்கள்!

24-10-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

துதிக்கு பாத்திரரான ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பாருங்கள்,நம்மை மீட்டெடுத்து,முடிசூட்டுவதை அனுபவியுங்கள்!

13. அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன். (வெளிப்படுத்துதல் 5:13) NKJV.

ஒவ்வொரு உயிரினமும்,அதன் இருப்பிடம் எங்கிருந்தாலும்,இறுதியில் எல்லாம் வல்ல தேவனையும்,சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் கிறிஸ்து இயேசுவாகிய ஆட்டுக்குட்டியையும் போற்றி வணங்கும்.

தன் சுய விருப்பத்தின் காரணமாக,தேவனாகிய கர்த்தரை முழு மனதுடன் வணங்கும் எந்த மனிதனும் பாக்கியவான்,ஏனென்றால் அத்தகைய மனிதன் மனித புரிதலுக்கு அப்பாற்பட்ட தேவனின் விவரிக்க முடியாத ஆசீர்வாதத்தை அனுபவிப்பான்.ஆட்டுக்குட்டியானவருக்கு அல்லேலூயா!

ஆட்டுக்குட்டியானவரை மிகவும் தனித்துவமாகவும்,அனைத்து வழிபாடுகளுக்கு பாத்திரராகவும், மரியாதையை பெறுவதற்கு தகுதியானவராகவும் ஆக்கியது எது? அது உங்கள் மீதும் என் மீதும் உள்ள அவரது உறுதியான அன்பு! நாம் பாவிகளாக இருந்தபோதே ,​​நம்மைச் சுற்றியுள்ளவர்களால் நாம் தகுதியற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்டபோதே ,​​​​நம் சொந்த மனசாட்சியே நம்மைக் கண்டித்தபோதே , ​​கர்த்தராகிய இயேசுவின் கிருபை ஒன்றே நம்மைத் தேடிவந்தது,அவர் தொண்ணூற்றொன்பதை விட்டு விட்டு காணாமல் போன என்னை தேடி வந்தார.அவர் நமக்காக இறந்தார்,நம் மரணத்தை அவர் ஏற்றுக் கொண்டார்.அவர் எப்பொழுதும் நம்மைக் கவனத்தில் கொள்கிறார்.அவர் நம்மைப் பற்றி நினைக்காமல் ஒரு கணம் கூட கடந்து போவதில்லை.அல்லேலூயா !!!

ஒரு தாய் தன் மார்பில் குழந்தையை மறந்துவிட்டு,தான் பெற்ற குழந்தையின் மீது இரக்கம் காட்டாமல் இருக்க முடியுமா? அவள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை என்று அவர் கூறுகிறார். ! அவருடைய இரக்கம் ஒருபோதும் குறையாது.கைகளை உயர்த்தி ஆட்டுக்குட்டியானவரை வணங்குவோம்.அவர் ஒருவரே எல்லா கனத்திற்கு பாத்திரர் மற்றும் நம்மை முழுவதுமாக இரட்சித்து,மகிமை மற்றும் கௌரவத்தால் முடிசூட்ட வல்லவர்!ஆமென் 🙏

துதிக்கு பாத்திரரான ஆட்டுக்குட்டியானவரை நோக்கிப் பாருங்கள்,நம்மை மீட்டெடுத்து,முடிசூட்டுவதை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

img_139

இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவரே நீதியைச் செயலாக்கும் தேவ ஆட்டுக்குட்டி!

23-10-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவரே நீதியைச் செயலாக்கும் தேவ ஆட்டுக்குட்டி!

மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. (யோவான் 1:29)
6. அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்டவண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.(வெளிப்படுத்துதல் 5:6 )NKJV

தேவனின் ஆட்டுக்குட்டியாக அறிமுகப்படுத்தப்பட்ட கிறிஸ்துவாகிய இயேசு முழு உலகத்தின் பாவத்தையும் நீக்குவதைக் கண்டோம் . (யோவான் 1:29)
ஆட்டுக்குட்டியாக கொல்லப்பட்ட இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததையும்,இப்போது பரலோகத்தில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ஆட்டுக்குட்டியையும் பார்க்கிறோம். இவை இரண்டும் தீவிர முரண்பாடுகளாக இருக்கின்றன.

பூமியில் தேவனின் ஆட்டுக்குட்டியாக,அவர் சாந்தமாக இருந்தார். அவர் பலியிடுவதற்கு ஆட்டுக்குட்டியாகவும்,மயிர் கத்தரிப்பவருக்கு செம்மறி ஆடாகவும் கொண்டு செல்லப்பட்டார்,ஆனால் அவர் வாயைத் திறக்கவில்லை,மாறாக அவர் தேவனின் கோபத்தை முற்றிலுமாக ஏற்றுக்கொண்டார்,ஏனென்றால் அவர் பாவம் செய்யாதவர் நமக்காக பாவமாக மாறினார்,அதனால் தான் அவர் தேவனிடம்,மனிதகுலதிற்காக உரிமையோடு பரிந்து பேசமுடிந்தது .

ஆனால் இப்போது,நம்மை தேவனிடம் சமரசம் செய்தபடியினால் அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டார்,ஆகையால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதியையும், ஒடுக்குபவர்களுக்கு நியாயத்தீர்ப்பையும் நிறைவேற்றுவதற்கு பரலோகத்தின் உயர்ந்த சிங்காசனத்தில் அமர்த்தப்பட்ட ஆதிக்கம் செய்யும் ஆட்டுக்குட்டியானவராக இருக்கிறார்.

என் பிரியமான நண்பர்களே, இந்த வாரம், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் கழுவப்பட்ட நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாக இருக்கிறீர்கள்.சிங்காசனத்தில் வீற்றிருக்கும் ஆட்டுக்குட்டியனவரால் நிறைவேற்றப்பட்ட தேவனுடைய நீதியை உங்கள் வாழ்க்கையில் அனுபவிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
அவர் 4 வது முத்திரை மற்றும் 5 வது முத்திரையைத் திறந்தபடியால் – எல்லா தீமைகளிலிருந்தும் (அது மரணத்திற்கு கூட வழிவகுத்திருக்கலாம்) பாதுகாப்பின் ஆசீர்வாதம் மற்றும் இயேசுவின் பெயரில் உங்களுக்கு நீதியையும்,பரிபூரண ஆசீர்வாதங்களையும் வழங்குகிறது!ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவரே நீதியைச் செயலாக்கும் தேவ ஆட்டுக்குட்டி!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

img_126

ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்ப்பது,இன்று கடவுளின் செல்வத்தைத் திறக்கிறது!

20-10-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்ப்பது,இன்று கடவுளின் செல்வத்தைத் திறக்கிறது!

1. அப்பொழுது எலிசா: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; நாளை இந்நேரத்தில் சமாரியாவின் வாசலிலே ஒரு மரக்கால் கோதுமை மா ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.( II இராஜாக்கள் 7:1) NKJV

கிமு 9 ஆம் நூற்றாண்டில் மன்னர்கள் காலத்தில் சமாரியா நகரம் கடுமையான பஞ்சம் மற்றும் உணவுப் பற்றாக்குறையை அனுபவித்து வந்தது. உண்மையில் அவர்கள் எதைச் சாப்பிட்டார்கள் என்பது முக்கியமில்லாத ஒரு வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள், அவர்கள் பசியைத் தணிக்க எதையெல்லாம் சாப்பிட்டார்கள் என்று விவரிப்பது மிகவும் அருவருப்பானதாக இருக்கலாம். அது ஒரு பரிதாபகரமான காலமாக இருந்தது.

உதாரணத்திற்கு நைஜீரியாவில்-ஒரு பையில் 5 கிலோ சிறந்த தரம் கோதுமை மாவு (இன்றைய வேதப் பகுதியில் உள்ள மெல்லிய மாவுக்கு சமம்) விலை நைரா 12,000.இன்றைய பொருளாதார சூழலில் எலிசா தீர்க்கதரிசியின்,தீர்க்கதரிசன வார்த்தையை நான் எடுத்துக் கொண்டால், _ஒரு ஷெக்கல் என்பது நைரா 290 அல்லது 300 என்று சொல்லலாம். (1 ஷெக்கல்=N 300/-).
அப்படியென்றால்,அந்த நாட்களில் தேவனின் அதீத அன்பின் தாக்கத்தை அவருடைய மக்கள் மீது உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
மேலே உள்ள எடுத்துக்காட்டில்,40 மடங்கு (40% அல்ல)விலை சரிந்தது .அதாவது நைரா 12,000மாகிய மாவு விலை சரிந்து நைரா 300 வரை மாறியது . என்ன அற்புதம்!

ஆம் என் பிரியமானவர்களே, தேவன் நம்மை இதே பாணியில் ஆசீர்வதிப்பார்,மேலும் நாம் கிருபையின் காலகட்டத்தில் இருப்பதால் நம்மை இன்னும் அதிகமாக ஆசீர்வதிப்பார் !

ஆகவே ,இன்று நமக்கு தேவைப்படுவது நமது விசுவாசம் மட்டுமே! தேவனின் ஆட்டுக்குட்டியானவர் தனது சொந்த இரத்தத்தை நம்மை மீட்க விலையாகக் கொடுத்தார் என்று விசுவாசியுங்கள்.அவர் நம்மை “என்றென்றும் நீதிமான்களாக” தகுதிப்படுத்தினார்.பூமியில் என் வாழ்நாளின் எல்லா நாட்களிலும் நான் கிறிஸ்துவின் தியாகத்தில் தேவனின் ஐசுவரியங்களை அதாவது (கிருபை ) பெறுவதற்கு நான் தகுதி பெற்றுள்ளேன் என்பதே இதன் பொருள்.

என் பிரியமானவர்களே, நம்மில் உள்ள ஒவ்வொரு உயிரணுவும் இயல்பாக “கிறிஸ்து இயேசுவுக்குள் நான் தேவனுடைய நீதி” என்று சொல்லுவதற்கு அவருடைய கிருபையை ஊக்கத்துடன் தேடுவோம்.நமக்காக பலியிடப்பட்ட ஆட்டுக்குட்டியானவரின் நீதி இன்று தேவனின் ஐசுவரியத்தை நமக்குத் திறக்கிறது!! ஆமென் 🙏

ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்ப்பது,இன்று கடவுளின் செல்வத்தைத் திறக்கிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

img_118

ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்ப்பது,எல்லா புத்திக்கும் மேலான சமாதானத்தை அளிக்கிறது!

19-10-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்ப்பது,எல்லா புத்திக்கும் மேலான சமாதானத்தை அளிக்கிறது!

6. நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
7. அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். பிலிப்பியர் 4:6-7 NKJV

20. சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.(ரோமர் 16:20) NKJV..

மக்கள் கவலைப்படுகிறதினால்,பதஷ்டமடைகிறார்கள்,சுய கட்டுப்பாட்டை இழக்கிறார்கள், ஆக்ரோஷமாக மாறுகிறார்கள,கஷ்டப்படுகிறார்கள்,தூக்கமின்மை ,பீதியடைந்து தாக்குதல்கள் அடைகிறார்கள் மற்றும் உணர்ச்சி முறிவு ஆகியவற்றின் விளைவாக தீர்க்க முடியாத சேதங்களில் முடிவடைகிறார்கள்.

கடவுள் அமைதியின் உருவானவர். அவர் ஒருவரே மனித குலத்திற்கு அமைதியை வழங்க முடியும். அவர் சமாதானத்தைக் கொண்டுவர கர்த்தராகிய இயேசுவின் மூலமாக வேலை செய்கிறார். இயேசு அமைதியின் ராஜா! அவர் மனிதகுலத்தின் மீது விதிக்கப்பட்ட நியாயத்தீர்ப்பைத் தானே ஏற்றுக்கொண்ட தேவ ஆட்டுக்குட்டியானவர்.*எனவே, நீங்களும் நானும் எல்லாப் புரிதலையும் கடந்த அமைதியைப் பெறலாம்..

என் அன்பானவர்களே,தேவனின் ஆட்டுக்குட்டியான இயேசுவின் மீது உங்கள் கவலைகளை வைத்து விடுங்கள்,ஏனென்றால் அவர் உங்களை கவனித்துக்கொள்கிறார்.தேவனிடம் உங்கள் பிரார்த்தனைகளில் உங்கள் கவலைகள் மற்றும் அச்சங்களை ஒப்படையுங்கள்.உலகில் எந்த மருந்தோ, சிகிச்சையோ கொடுக்க முடியாத ஒரு அற்புதமான அமைதியை அவர் உங்களுக்கு வழங்குகிறார் ! அல்லேலூயா !

அவர் இந்த நாளில் சாத்தானை உங்கள் காலடியில் நசுக்கி, இயேசுவின் பெயரில் நீண்ட காலமாக உங்களை வாட்டியெடுக்கும் உங்கள் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்குகிறார்..உங்கள் அமைதிக்காக ஆண்டவர் ஏற்படுத்திய நாள் இன்று,அதனால் மகிழ்ச்சியடையுங்கள்! ஆமென் 🙏

ஆட்டுக்குட்டியான இயேசுவைப் பார்ப்பது,எல்லா புத்திக்கும் மேலான சமாதானத்தை அளிக்கிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம் .