Category: Tamil

scenery

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்ப்பது ,அவருடைய நீதியால் நம்மை சிறந்து விளங்கச்செய்யும் !

21-08-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்ப்பது ,அவருடைய நீதியால் நம்மை சிறந்து விளங்கச்செய்யும் !

3. அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
4. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
(சங்கீதம் 23:3,4 ) NKJV.

மேற்கண்ட வசனத்தின் வாயிலாக சங்கீதக்காரன் நீதியின் பாதைகளில், மேய்ப்பரால் வழிநடத்தப்பட்ட அனுபவத்தை சாட்சியமளிக்கிறார்,அது அவர் வாழ்வில் கடினமான மற்றும் சவாலான நேரங்களிலும் கடவுளுடன் நடக்க அவரை ஆயத்தப்படுத்தியது, தன்னில் நல்ல வேலையைத் தொடங்கியவர் அதை முடிப்பார் என்று மேய்ப்பரை நம்பினார்.தேவன் உண்மையுள்ளவர் மற்றும் ஒருபோதும் நம்மைத் தோல்வியடையவிட மாட்டார்.

ஆம்,என் பிரியமானவர்களே,கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய நீதியானது, உங்கள் வாழ்க்கையில் அவருடைய சித்தத்தை நிறைவேற்றி, ஆவியில் நடக்க உங்களைத் தயார்படுத்துகிறது.ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவரின் ஊழியம், நல்ல மேய்ப்பராகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் (நீதியின்) சரியான செயலை அடிப்படையாகக் கொண்டதாகும் ! பரிசுத்த ஆவியானவர் உங்களை ஒருபோதும் விட்டுவிடமாட்டார்,ஏனென்றால் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் பலனடையச் செய்யும்.தேவனின் நித்திய மீட்பீற்காக,இயேசு சிலுவையில் கிரையம் செலுத்தினார் மற்றும் தேவைக்கு அதிகமாக செலுத்தினார் – எனவே அந்த கிருபையோடு இந்த நாளையும் இந்த வாரத்தையும் இயேசுவின் நாமத்தில் அனுபவிக்கவும்!

என் அன்பானவர்களே, இன்று நான் நல்ல மேய்ப்பருடன் சேர்ந்து, இயேசுவின் பெயரில்,யாராலும் நிறுத்த முடியாத பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலம் உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் வெளியிடுகிறேன்! இயேசுவின் நாமத்தில் பெற்றுக்கொள்ளுங்கள் .ஆமென் 🙏

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைப் பார்ப்பது ,அவருடைய நீதியால் நம்மை சிறந்து விளங்கச்செய்யும் !

கிருபை நற்செய்தி தேவாலயம் .

scenery

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் கண்டு,நீதியின் பாதைகளில் நடப்பதை அனுபவிப்போம் !

18-08-23
இன்றைய நாளுக்கான  கிருபை !

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் கண்டு,நீதியின் பாதைகளில் நடப்பதை அனுபவிப்போம் !

3. அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். ( சங்கீதம் 23:3 ) NKJV.

நீதியே பாவத்தை குணப்படுத்துகிற மாற்று மருந்தாக விளங்குகிறது .நீதியின் அளவுகோலிலிருந்து குறைவாக காணப்படுவது பாவம் என்று கூறப்படுகிறது 2 கொரிந்தியர் 5:21 – நம்முடைய எல்லாப் போராட்டங்களுக்கும் மிகவும் வல்லமை வாய்ந்த தீர்வுகளில் ஒன்றைத் தருகிறது. ” நாம் கிறிஸ்துவுக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத இயேசுவை தேவன் நமக்காக பாவமாக்கினார் .” ஆமென்!

இயேசுவாகிய ஆண்டவர், தூயவர் மற்றும் நீதிக்கெல்லாம் அதிபதியானவர்,ஒரு பாவமும் அறியாத அவர் நமக்காக பாவம்ஆனார்.எனவே பாவிகள் மற்றும் பாவ இயல்பு கொண்ட நாம் கடவுளின் நீதியாக மாற்றப்பட்டோம். இதுவே கல்வாரி சிலுவையில் நடந்த தெய்வீக பரிமாற்றம் ஆகும் .ஆகையால் பரிசுத்த ஆவியானவர் இந்த வகையான நீதிக்கு நம்மை வழிநடத்துகிறார்.இது தேவனின் வகையான நீதியே தவிர மனித உரிமை அல்லது மனித நன்மையினால் உண்டானதல்ல.

இரண்டாவதாக,அவர் என்னை “நீதியின் பாதைகளில்” வழிநடத்துகிறார் என்று வாக்குறுதியாக வசனம் கூறுகிறது. இது “பாதைகள்” மற்றும் “பாதை” அல்ல என்பதை நினைவில் கொள்ளவும் . ‘எல்லா சாலைகளும் ரோம் நகரத்திற்குச் செல்கின்றன’ என்ற பழைய பழமொழி எனக்கு நினைவிற்கு வருகிறது, அதாவது நம் வாழ்வில் அனைத்து தேர்வுகள், முறைகள் அல்லது செயல்கள் இறுதியில் ஒரே முடிவைக் கொண்டுவரும். மேலும், ஒவ்வொருவரின் வெவ்வேறு பிரச்சனைகளுக்கும், தீர்வுகளைக் கொண்டுவருவதற்கான அணுகுமுறையும் வித்தியாசமாக இருக்கலாம், *இருப்பினும் இவை அனைத்தும் “அவரது நீதிக்குள் ” அடங்க வேண்டும்.
ஒரு மருத்துவமனையில் இருப்பதைப் போலவே, இருதயவியல், சிறுநீரகவியல், நரம்பியல் மற்றும் பல பிரிவுகள் இருக்கலாம். முடிவில்நோயாளிக்கு ஆரோக்கியத்தை தருவதே அதன் நோக்கமாயிருக்கிறது .

என் பிரியமானவர்களே, நீங்கள் வெவ்வேறு பிரச்சனைகளை சந்தித்துக்கொண்டிருக்கலாம், ஆனால் நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டியது எல்லாம், ” நான் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதி ” 2 கொரிந்தியர் 5:21 வசனத்தை அறிக்கை செய்யும்போது சில சமயங்களில் நீங்கள் ஒரு மந்திரத்தை சொல்வது போல் தோன்றினாலும், இந்த வாக்குமூலத்தை தீவிரமாகப் பிடித்துக் கொள்ளுங்கள் .அப்போது , நீங்கள் எப்போதும் ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவருக்குக் கீழ்ப்படிகிறதினால் ,அது என்றென்றும் ஆசீர்வாதத்தையும், குணப்படுத்துதலையும்,விடுதலையையும் உங்களுக்குள் கொண்டுவருகிறது. இதுவே அவருடைய நீதி!
ஆமென் 🙏

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் கண்டு,நீதியின் பாதைகளில் நடப்பதை அனுபவிப்போம் !

கிருபை நற்செய்தி தேவாலயம் .

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் கண்டு,அவருடைய நீதியை அனுபவியுங்கள் ! !

17-08-23
இன்றைய நாளுக்கான  கிருபை !

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் கண்டு,அவருடைய நீதியை அனுபவியுங்கள் ! !

3. அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். (சங்கீதம் 23:3 ) NKJV.

என் அன்பானவர்களே, நீதியின் பாதையில் நடப்பது என்றால் , “என்னால் முடியாது ஆனால் உங்களால் முடியும்” என்று ஒப்புக்கொள்வதாகும்.எதிர்காலத்தைக் குறித்து முற்றிலும் நம்பிக்கையற்ற நிலையில் இருக்கும்போது அவரிடத்தில் முற்றிலும் ஒப்புக்கொடுக்கும்போது நமக்கு தைரியத்தை ஏற்படுத்துகிறது. ..

விசுவாசம் என்பது உணர்வல்ல ஆனால் உணர்வானது விசுவாசத்தைப் பின்பற்றும்.
விசுவாசம் என்பது ” எனக்குத் தெரியும்” என்று கூறுவதில் இல்லை ,மாறாக விசுவாசமானது ” எனக்கு தெரியாது” என்று ஒப்புக்கொண்டு ஆண்டவரிடம் விசுவாசத்தை வைப்பதாகும். உங்கள் உணர்வுகள் சூழ்நிலைக்கு எதிர்மாறாகப் பேசலாம், தீவிர கவலைகளை வெளிப்படுத்தும் சந்தேகங்கள், அச்சங்கள் மற்றும் தடுமாற்றத்தையும் கூட ஏற்படுத்தலாம்.இந்த காரியம் அப்படிஆகவில்லை என்றால் என்ன செய்வது மேலும் அந்த காரியத்தில் தோல்வி ஏற்பட்டால் நம்மிடம் பிளான் B இருக்கிறதா?” என்று யோசித்து கொண்டே இருக்கச்செய்யும்.
ஆனால் , விசுவாசம் என்பது ‘நான் எதை நம்புகிறேன் என்பதல்ல, மாறாக ‘யாரை’ நம்புகிறேன் என்பதாகும் . (2 தீமோத்தேயு 1:12).

தாவீது தேவனை மேய்ப்பனாக பாவித்தார் .அவர் எல்லா விஷயங்களிலும் மேய்ப்பருடன் தொடர்பு கொள்ளத் தொடங்கினார் – குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும் இல்லாவிட்டாலும். அவர் தனது மேய்ப்பராகிய தேவனிடம் ஆலோசிக்கத் தொடங்கினார், அவர் உணர்ந்த அனைத்தையும், அவர் நினைத்த அனைத்தையும், அவரது ஆசைகளிலும் ,அச்சங்களிலும் ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவர் அவரை வழிநடத்தினார். அவர் தனது குடும்பத்தில் கடைசியாக பிறந்தவர், ஆனால் தேவன் அவரை நாட்டின் முதல் குடிமகனாக மாற்றினார் . இந்த காரியம் உண்மையாகவே ஆச்சரியமாக இருக்கிறது*!

என் அன்பானவர்களே , இயேசு என்று அறியப்பட்ட ஆண்டவர் , உண்மையான மற்றும் ஒரே நல்ல மேய்ப்பன். அவர் உங்களுக்காக உயிரைக் கொடுத்தார், பிதா அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார், அவர் இனி ஒருபோதும் மரிப்பதில்லை . அவரை உங்கள் இரட்சகராகவும், உங்கள் மேய்ப்பராகவும், உங்கள் நீதியாகவும் ஆக்குங்கள், நீங்கள் ஒருபோதும் வெட்கப்பட மாட்டீர்கள்.அவர் உங்களை ஒருபோதும் தோல்வியடைய விட மாட்டார். அவரை நம்புங்கள்! * *உங்கள் வாழ்க்கையின் முழுமையான கட்டுப்பாட்டையும் அவருக்குக் கொடுங்கள், அவர் உங்கள் வாழ்க்கையை அழகாகவும்,ஆசிர்வாதமாகவும் , போற்றத்தக்கதாகவும் இன்றே மாற்றுவார் ! ஆமென் 🙏

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் கண்டு ,அவருடைய நீதியை அனுபவியுங்கள்! !

கிருபை நற்செய்தி தேவாலயம்

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் கண்டு,அவருடைய நீதியை அனுபவியுங்கள் ! !

16-08-23
இன்றைய நாளுக்கான  கிருபை !

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் கண்டு,அவருடைய நீதியை அனுபவியுங்கள் ! !

3. அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். (சங்கீதம் 23:3 ) NKJV.

அவருடைய நீதியின் பாதையில் நடப்பது என்பது, கர்த்தருடைய பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படுவதற்கு மனப்பூர்வமாகத் நாம் தெரிவு செய்வதாகும் .அது ஒரு தாழ்மையான தொடக்கமாக இருந்தாலும்,கடைசி முடிவு யாராலும் கற்பனை செய்வதை விட மிகவும் புகழ்பெற்றதாக இருக்கும்!

நீதியின் பாதையில் நடப்பது என்பது, இயேசு தன் பிதாவின் சித்தத்திற்குக் கீழ்ப்படிந்ததை எனது ஒரே அடிப்படையாகக் கொண்டு சரியானதை, சரியான நேரத்தில், சரியான வழியில் பெறுவதாகும்.

நீதியின் பாதையில் நடப்பது என்பது, என் வாழ்வில் சவால்கள் வந்தாலும் அல்லது தடைகள் என் வெற்றியைத் தடுத்தாலும் அவருடைய நீதியானது பிதா எனக்கென்று முன்குறித்த ஸ்தலத்திற்கு என்னை அழைத்துச் செல்லும்,அங்கு எனக்காக பிரத்தியேகமாக ஏற்படுத்திய ஸ்தலத்தில் நான் ஒரு இணையற்ற மற்றும் சவாலற்ற ஆளுமை கொண்ட மனிதனாக வெளிப்படுவேன்.

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே ,இன்று இயேசு என்று அழைக்கப்படும் தம் மேய்ப்பன் மூலம் தேவன் இதைச் செய்ய முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
ஆம் நான் நம்புகிறேன் என்றால் அவரை உங்கள் நீதியாக ஆக்குங்கள்,நீங்கள் நீதியின் பாதையில் நடக்கும்போது சில சவால்களை சந்தித்தாலும் நீங்கள் ஒருபோதும் தோல்வியடைய மாட்டீர்கள்.
நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாயிருக்குறீர்கள் ! ஆமென் 🙏

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் கண்டு ,அவருடைய நீதியை அனுபவியுங்கள்! !

கிருபை நற்செய்தி தேவாலயம்

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் கண்டு ,அவருடைய நீதியை அனுபவியுங்கள்! !

15-08-23
இன்றைய நாளுக்கான  கிருபை !

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் கண்டு ,அவருடைய நீதியை அனுபவியுங்கள்! !

3. அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். (சங்கீதம் 23:3 ) NKJV

மேய்ப்பரின் அற்புதமான செயல் இது!  ஆடுகளின் இயல்பான போக்கு வழிதவறிச் செல்வது. பின்னடைவு என்பது காலப்போக்கில் நடைபெறுவது அது திடீரென்று நடப்பது அல்ல . உண்மையிலிருந்து விலகிச் செல்வது அந்த நபர் கூட உணராதபடி படிப்படியாக இழுத்துச்செல்லுவதாகும் .

பொதுவாக விண்வெளியில் ராக்கெட் வெடிக்கும்போது, ​​இலக்கை நோக்கி சரியான பாதையில் செல்லாது , ஆகவே ,ஒவ்வொரு 8வது வினாடியிலும் ஒரு வழித்திருத்தம் செய்யப்படுகிறது இந்த வழித்திருத்தம் இல்லாமல், விண்வெளி விண்கலம் அதன் இலக்கை (விரும்பிய இலக்கு) அடையாது.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீது நம்பிக்கை வைத்துள்ள அனைவருக்கும் இப்படியே நடக்கிறது . ஆனால், இயேசு நம்முடைய உண்மையான மற்றும் நல்ல மேய்ப்பராக இருந்து நம்மை சரியான பாதையில் அல்லது நீதியின் பாதையில் வழிநடத்துகிறார், ஏனென்றால் நாம் அதற்கு தகுதியானவர்கள் அல்ல, ஆனால் அவருடைய நாமத்தின் நிமித்தமாக நாம் நல் மேய்ப்பரால் நீதியின் பாதையில் வழி நடத்தப் படுகிறோம் .

வேத வசனத்தில் கூறியபடி அவர் நம் ஆத்துமாவை மீட்க்கிறார்’ என்றால் வாழ்வில் வழி விலகிப்போன நம்மை திரும்ப சரியான பாதையில் நடத்துவது என்று பொருள் .உலகத்தின் பொறுப்பகளினாலும் , செல்வத்தின் வஞ்சகத்தினாலும் நமது ஆத்துமா சோதிக்கப்பட்டு நாம் வழி விலகிச் செல்கிறோம். நம்முடைய நல்ல மேய்ப்பராகிய இயேசு நம் வாழ்வில் தலையிட்டு, அவருடைய நாமத்தினிமித்தம் அவருடைய நீதியின் பாதையில் நம்மை வழிநடத்துகிறார்.

ஆம், என் பிரியமானவர்களே, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாகிய நல் மேய்ப்பர் , நம் நீதியாக இருக்கிறார் ( our T’sidkenu) .. “இயேசு என்னோடு இருக்கிறார்,என் நீதியாய் இருக்கிறார், எனவே நான் வழிதவறவும் இல்லை, வெட்கப்படவும் மாட்டேன்”என்று தொடர்ந்து அறிக்கை செய்வோம் . நிச்சயமாக, உங்கள் நல்ல மேய்ப்பராகிய கர்த்தராகிய இயேசு உங்கள் தேவனாகிய பிதா – விரும்பிய- ஏதிர்காலத்தை நோக்கி உங்களை வழிநடத்துவார். *இயேசுவின் நாமத்தில் சரியான முறையில் ,சரியான நேரத்தில், சரியான இடத்தில் இருப்பீர்கள்! . ஆமென் 🙏

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் கண்டு,அவருடைய நீதியை அனுபவியுங்கள்! !

கிருபை நற்செய்தி தேவாலயம் .

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் காண்பது,அவருடைய பாதுகாப்பை அனுபவிக்கசெய்கிறது !

14-08-23
இன்றைய நாளுக்கான  கிருபை !

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் காண்பது,அவருடைய பாதுகாப்பை அனுபவிக்கசெய்கிறது !

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன் . சங்கீதம் 23:1 NKJV

பிரியமானவர்களே, இன்று முதல் இயேசுவின் நாமத்தில் உங்கள் வாழ்க்கையில் எந்தக் குறைவும் இருக்காது!
பிதாவின் இதயத்திற்குப் பிடித்தமான மனிதன் தாவீது , தன் சொந்த அனுபவத்திலிருந்து இந்த வார்த்தைகளைப் பேசினார் .தாவீது தனது குடும்பத்தில் கடைசியாக பிறந்தவர், அவருக்கு மந்தையை மேய்க்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.

தாவீது,தன் பராமரிப்பில் உள்ள ஆடுகள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், அவைகள் எந்த குறையும் இல்லாமல் முறையாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்தார்.
அவர் ஒரு மேய்ப்பனாக தனது வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பித்தவுடன்,தேவன் நல் மேய்ப்பராக தன்னை எவ்வாறு வழி நடத்துகிறார் என்பதை உணர்ந்தார்.அவருக்கு தனிப்பட்ட முறையில் ஏதேனும் குறைபாடு ஏற்படும் போதெல்லாம், அவர் தேவனை நோக்கிப் பார்த்து, ஒரு சிறிய ஆடு மேய்ப்பனுடன் தொடர்பு கொள்வது போல தாவீது தன் தேவனிடம் தொடர்பு கொண்டார் . இந்த சங்கீதம் தேவனை தனது சொந்த மேய்ப்ராக பாவித்தும் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் விளைவாகவும் எழுதப்பட்டது.

ஆம் என் அன்பு நண்பர்களே ! இன்றும் கடவுள் உங்கள் வாழ்வின் மேய்ப்பராக இருக்க விரும்புகிறார்.இந்த காரணத்திற்காக, அவர் தனது குமாரனாகிய இயேசுவை அனுப்பினார். இயேசு உண்மையான மற்றும் நல்ல மேய்ப்பர் !
_உங்கள் பாரங்கள் மற்றும் வாழ்க்கையின் அனைத்து கவலைகளையும், மிக அழுத்தமான தேவைகள் உட்பட அனைத்தையும் இயேசுவின் மீது சுமத்துங்கள் , ஏனென்றால் அவர் உங்களை கவனித்துக்கொள்கிறார். உங்களால் முடியாது ஆனால் அவரால் முடியும் என்று அவரிடம் சொல்லுங்கள்.தாவீது தனது பராமரிப்பில் இருந்த ஆடுகளுக்குத் தான் பொறுப்பானதைப் போல, உங்கள் எல்லா தேவைகளுக்கும் தேவன்தாமே பொறுப்பு என்று உணர்ந்து சொல்வதன் மூலம் நீங்கள் இன்னும் தைரியமாக எல்லாவற்றையும் மேற்கொள்ளலாம் .உங்கள் குறைகளை நிவர்த்தி செய்யும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் சொல்வதை கேட்க தேவன் விரும்புகிறார், மேலும் இயேசுவின் பெயரில் உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட பாணியில் தேவன் உங்கள் தேவைகளை ஏராளமாக வழங்குவார் .ஆமென் 🙏

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் காண்பது,அவருடைய பாதுகாப்பை அனுபவிக்கசெய்கிறது !

கிருபை நற்செய்தி தேவாலயம்

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் காண்பது அவரை உங்கள் சொந்த இரட்சகராகவும்,மேய்ப்பராகவும் அனுபவிக்கசெய்கிறது !

11-08-23
இன்றைய நாளுக்கான  கிருபை !

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் காண்பது அவரை உங்கள் சொந்த இரட்சகராகவும்,மேய்ப்பராகவும் அனுபவிக்கசெய்கிறது !

“ஆனால் வாசல் வழியாக நுழைபவன் ஆடுகளை மேய்ப்பவன். அவருக்குக் கதவுக் காவலர் திறக்கிறார், ஆடுகள் அவருடைய குரலைக் கேட்கின்றன; அவன் தன் சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே அழைத்துச் செல்கிறான்.”
ஜான் 10:2-3 NKJV

மேய்ப்பருக்கும் ஆடுகளுக்கும் இடையிலான உறவு நெருக்கமானது மற்றும் தனிப்பட்டது. தன் மந்தையிலுள்ள ஆடுகளின் பெயரை அவர் அறிந்திருக்கிறார்,ஆடுகளுக்கும் தங்கள் மேய்ப்பனின் குரலைக் கேட்க கிருபை அருளப்பட்டிருக்கிறது .

அதேபோல் , நல்ல மேய்ப்பராகிய ஆண்டவராகிய இயேசுவும் உங்கள் பெயரால் உங்களை அறிந்திருக்கிறார். உங்களுக்கு மட்டுமே தெரிந்த உங்கள் செல்லப் பெயரைச் சொல்லி அழைப்பார்.அவர் உங்களுடன் தனிப்பட்ட முறையில் மற்றும் நெருக்கமாக தொடர்பு கொள்கிறார்.

என் அன்பானவர்களே , நீங்கள் இயேசுவுக்கு விசேஷித்தமானவர்கள், அவருடைய குரலை உங்களால் கேட்க முடியும் ,அது மிகவும் மென்மையாகவும் அக்கறையுடனும் இருக்கிறது.அவரது மெல்லிய குரல் உங்கள் தோள்களில் இருந்து சுமைகளை அகற்றும். ஆம் என் அன்பர்களே,நீங்கள் இயேசுவை உங்கள் மேய்ப்பராக மாற்றி,அவருக்கு முழுக் கட்டுப்பாட்டைக் கொடுத்தால், அவர் உங்கள் வாழ்க்கையை நீதி மற்றும் சம்பூர்ணமான பாதையில் மிகவும் அற்புதமாக வழிநடத்துவார், அது உங்களை ஆச்சரியப்படுத்தும்.

அவர் உங்கள் மேய்ப்பராக இருப்பதற்கு முன், அவர் முதலில் உங்கள் இரட்சகர். நீங்கள் நித்திய ஜீவனைப் பெறுவதற்காக நல்ல மேய்ப்பன் தம்முடைய ஜீவனைக் கொடுத்தார்.

இந்த வார இறுதிக்கு வரும்போது, ​​ அவரை நம் வாழ்வின் மீட்பராகவும் மேய்ப்பராகவும் ஏற்றுக்கொள்ள ஒரு திட்டவட்டமான மனப்பக்குவத்தை தர ஆண்டவர் கிருபை அருளுவாராக. அவரது மென்மையான குரல், கொந்தளிப்பான காற்றையும் , உங்களை அலைக்கழிக்கும் அலைகளையும் இன்றே அமைதிப்படுத்தும். ஆமென் 🙏

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் காண்பது அவரை உங்கள் சொந்த இரட்சகராகவும்,மேய்ப்பராகவும் அனுபவிக்கசெய்கிறது !

கிருபை நற்செய்தி தேவாலயம்

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் காண்பது அவருடைய நித்திய உடன்படிக்கையின் வல்லமையை அனுபவிக்கசெய்கிறது !

10-08-23
இன்றைய நாளுக்கான  கிருபை !

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் காண்பது அவருடைய நித்திய உடன்படிக்கையின் வல்லமையை அனுபவிக்கசெய்கிறது !

20. நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன் ,

21. இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக . ஆமென். (எபிரேயர் 13:20-21) NKJV

கடந்த மாதம் அவருடைய சித்தத்தை அறிய வேண்டியதன் அவசியத்தை நாம் ஆராய்ந்தோம், அப்போஸ்தலனாகிய பவுல் கொலோசெயர்களுக்காக ஜெபித்த அதே நோக்கத்தில் ஜெபிக்கும்படி உங்களை ஊக்கப்படுத்தினேன் (கொலோசெயர் 1:9).
இந்த மாதத்தில், நம்முடைய நல்ல மேய்ப்பராகிய கர்த்தராகிய இயேசு தம்முடைய சித்தத்தைச் செய்ய உங்களை வழிநடத்துகிறார். அல்லேலூயா!

அது எப்படி சாத்தியமாகும் ? நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தின் மூலமாக என்றால் அது என்ன? கர்த்தராகிய இயேசு, பிதாவாகிய தேவன் மற்றும் நித்திய ஆவியானவருக்கு இடையேயான பரலோக உடன்படிக்கை (ஒப்பந்தம்) இது என்பதாகும்.இயேசு தம் இரத்தத்தை மனிதகுலத்தின் பாவங்களுக்காக சிந்தியதால் ,பிதாவாகிய தேவன் பரிசுத்த ஆவியின் மூலம் மனிதகுலத்தை மீட்ட்டார் .இதுவே ,இரத்தத்திலான நித்திய உடன்படிக்கையாகும் . பாவம் செய்து அதிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு சிறந்ததைச் செய்யவும் , மேலும் தேவன் அழைத்த அழைப்பின்படி அவர்களின் தொழில் துறையில் அவர்களை முதன்மையானவர்களாகவும் ,சிறந்தவர்களாகவும் ஆக்க்கவும் ,இதைக் கண்டு உலகத்தை வியக்கச் செய்வதே இந்த உடன்படிக்கையின் அதிசயமாகும்

இது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது! கடவுள் அனைவரையும் அழைக்கிறார். ஆனால் அனைவரும் அவருக்குப் பதிலளிப்பதில்லை. இருப்பினும், பதிலளிப்பவர்கள் உலகில் உள்ள ஞானிகளுக்கும், உன்னதமானவர்களுக்கும், வலிமையானவர்களுக்கும், உயர்ந்த சாதனை படைத்தவர்களுக்கும் இணையாக இருப்பவர்கள் அல்ல .

ஆனால், நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தின் வேலையானது பலவீனமான, மிகவும் முட்டாள் மற்றும் சிறியவர்களை, வலிமையான மற்றும் புத்திசாலிகளால் கூட அடைய முடியாத நிலைக்கு உயர்த்துவதாகும் . இந்த காரியம் உலகத்தாரை வியக்க செய்கிறது !

ஆம், நல்ல மேய்ப்பரின் நித்திய உடன்படிக்கையின் விலையேறப்பெற்ற இரத்தத்தின் காரணமாக இன்று அவருடைய மந்தையிலுள்ள ஆடுகளான நீங்கள் இதை அனுபவிப்பதே இயேசுவின் நாமத்தில் உங்கள் பங்கு. ஆமென் 🙏.

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் காண்பது அவருடைய நித்திய உடன்படிக்கையின் வல்லமையை அனுபவிக்கசெய்கிறது !

கிருபை நற்செய்தி தேவாலயம் .

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் காண்பது நம்மை சமாதானத்தின் தேவனை அனுபவிக்கசெய்கிறது !

09-08-23
இன்றைய நாளுக்கான  கிருபை !

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் காண்பது நம்மை சமாதானத்தின் தேவனை அனுபவிக்கசெய்கிறது !

20. நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன் ,
21. இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபிரேயர் 13:20-21) NKJV

நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பிய சமாதானத்தின் தேவன், இன்று அவருடைய நித்திய சமாதானத்தை உங்களுக்கு வழங்குகிறார்.உலகத்தால் கொடுக்க முடியாத அமைதியை தேவன் உங்களுக்கு அருளுகிறார்.இதை யாராலும் பறிக்கவும் முடியாது.அல்லேலூயா!

இயேசுவின் மரணத்தின் நிமித்தம் விசுவாசிகளிடையே விஷயங்கள் முற்றிலும் நிச்சயமற்றதாகவும் முற்றிலும் நம்பிக்கையற்றதாகவும் இருந்தபோது,​​​​ சமாதானத்தின் தேவன் எல்லா குழப்பங்களுக்கும் நிச்சயமற்ற தன்மைக்கும் முற்றுப்புள்ளி வைக்க இயேசுவை எல்லா எதிர்பார்ப்புகளுக்கும் எதிராகவும் எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராகவும் மரித்தோரிலிருந்து எழுப்பினார்.

இந்த நாளிலும், எல்லா எதிர்பார்ப்புகளுக்கும் எதிராக,எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராக, இதே சமாதானத்தின் தேவன் காட்சியளித்து, எல்லா நிச்சயமற்ற தன்மைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, உங்களுக்குள்ளும் உங்களைச் சுற்றியுள்ள அனைத்து சூழ்நிலைக்கும் சமாதானத்தை தருவார். இயேசுவின் நாமத்தில் சாதகமான சூழல்கள் மற்றும் அமைதியான மனிதர்களுக்கு அருகில் உங்களை ஓய்வெடுக்கச் செய்யும் நல்ல மேய்ப்பன் அவர் .
அவருடைய விலையேறப்பெற்ற இரத்தம் எல்லா அக்கிரமங்களிலிருந்தும் உங்களைச் சுத்திகரித்து, ஒவ்வொரு நற்கிரியையிலும் உங்களைப் பூரணப்படுத்துகிறது .

என் அன்பானவர்களே,உங்கள் ஆத்துமாவின் மேய்ப்பரை உங்கள் வாழ்க்கையின் விவகாரங்களில் இன்று உங்களை வழிநடத்த அனுமதியுங்கள்,மேலும் அவருடைய சமாதானத்தை அனுபவியுங்கள்.
அவருடைய இரத்தம் உங்களை என்றென்றும் நீதிமான்களாக்கியது .அதனால் அவரை துதித்து மகிழுங்கள் !
ஆமென் 🙏.

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் காண்பது நம்மை சமாதானத்தின் தேவனை அனுபவிக்கசெய்கிறது !

கிருபை நற்செய்தி தேவாலயம்

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் காண்பது நம்மை நீதியின் பாதையில் வழிநடத்துகிறது !

08-08-23
இன்றைய நாளுக்கான  கிருபை !

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் காண்பது நம்மை நீதியின் பாதையில் வழிநடத்துகிறது !

20. நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன்,
21. இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (எபிரேயர் 13:20-21) NKJV

நீங்கள் இயேசுவின் இரத்தத்தில் நம்பிக்கை வைக்கும் போது, ​​நீங்கள் பாவம், அடிமைத்தனம் மற்றும் மரண பயம் ஆகியவற்றிலிருந்து விடுதலையை அனுபவிப்பீர்கள்,அது மாத்திரமல்ல, அவருடைய இரத்தம் உங்களை முழுமைப்படுத்தி இந்த உலகத்திற்கு ஆச்சரியமாக மாற்றும் !

ஆபேல் தனது சொந்த சகோதரர் காயீனால் கொல்லப்பட்டபோது, ​​​​ ஆபேலின் சிந்தப்பட்ட இரத்தம் அனைவருக்கும் நீதிபதியான பிதாவிடம் கூக்குரலிட்டது ,நீதிக்காக பிதாவின் தலையீட்டைக் கோரி, முழு நீதி செய்யப்பட வேண்டும் என்றது . காயீன் சபிக்கப்பட்டு கைவிடப்பட்டதற்கு இதுவே காரணம்.
இருப்பினும், இயேசு தனது சகோதரர்களின் கைகளிலும் (யூத சமூகம்) மற்றும் ரோமானிய ஆட்சியின் கைகளிலும் (புறஜாதிகள் ) கொடூரமான மரணம் அடைந்தபோது, ​​இயேசுவின் இரத்தம் உலகம் முழுவதற்க்காக இரக்கம் வேண்டி மற்றும் மன்னிப்புக்காக அழுதது . (யூதர்கள் மற்றும் புறஜாதிகள் இருவரும்).அவருடைய இரத்தத்தின் ஒவ்வொரு துளியும், “ பிதாவே என்னைத் தண்டியுங்கள்,ஆனால் உலக மக்களை விடுவியுங்கள் “என்று கூக்குரலிட்டது.

என் அன்பானவர்களே, அவருடைய இரத்தம் உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்தினருக்காகவும் உங்கள் அன்புக்குரியவர்கள் அனைவருக்காகவும் இரக்கத்தையும் மன்னிப்பையும் இன்றும் வேண்டுகிறது . அவருடைய இரத்தம், “ பிதாவே ,தேவனே,இவர்களுடைய எல்லா பாவங்களுக்கும் அக்கிரமங்களுக்கும் நான் பொறுப்பேற்கிறேன். என்னைத் தண்டித்து, அவர்கள் ‘குற்றவாளிகள் அல்ல’ என்று அறிவிக்கப்படட்டும்”என்றது .தேவன் அதைக் கேட்டார் இன்னும் இந்த அழுகையைக் கேட்டு, உங்களை ‘குற்றவாளி அல்ல’ என்று அறிவிக்கிறார் அல்லது வேறு வார்த்தைகளில் நீங்கள் “நீதிமான்” என்று அறிவிக்கிறார்.மற்றும் இயேசு தம் இரத்தத்தை நித்திய ஆவியின் மூலம் செலுத்தியதால், நீங்கள் நித்தியமாக நீதிமான்களாக்கப்பட்டீர்கள் .

இயேசு முழு உலகத்தின் அனைத்து பாவங்களையும் ஏற்றுக்கொண்டதால்,அவர் ஒருபோதும் பாவம் செய்யாதபோதும்,நமக்காகத் தானே தன் உயிரை தியாகம் செய்ததால், கடவுள் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, நம் ஆத்துமாவின் மேய்ப்பராக ஆக்கினார் – நமக்காக தனது வாழ்க்கையைத் தந்த உண்மையான மேய்ப்பர்.
அவர் தம்முடைய உயிரையே உங்களுக்காக கொடுத்தால்,உங்கள் வாழ்க்கையின் தேவைகள் அனைத்தையும் அவர் உங்களுக்கு எப்படித் தராமல் இருப்பார்? என் அன்பர்களே,விசுவாசியுங்கள் ! அப்போது நல்ல மேய்ப்பர் அவருடைய பெயருக்காகவே இப்போதும் எப்போதும் உங்களை வழிநடத்துவார் . ஆமென் 🙏

நல்ல மேய்ப்பராகிய இயேசுவைக் காண்பது நம்மை நீதியின் பாதையில் வழிநடத்துகிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம்.