03-06-25
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் பிதாவை அறிவது, பிதாவின் எல்லையற்ற இரக்கங்களையும் ஆறுதலையும் அனுபவியுங்கள்
“இயேசு எழுந்திருந்து, அந்தப் பெண்ணைத் தவிர வேறு யாரையும் பார்க்காமல், அவளை நோக்கி: ‘ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்கள் எங்கே? உன்னை ஒருவரும் ஆக்கினைக்குள்ளாக்கவில்லையா?’ என்று கேட்டார். அவள், ‘ஒருவரும் இல்லை, ஆண்டவரே’ என்றாள். இயேசு அவளை நோக்கி: ‘நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாக்கவில்லை; போய் இனிப் பாவம் செய்யாதே’ என்றார்”— யோவான் 8:10-11 (NKJV)
விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்,எந்த சாக்குப்போக்கும் இல்லாமல்,எந்த வாதமும் இல்லாமல், மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கீழ் அவளுக்குத் தண்டனை உறுதியானது. அவளைக் குற்றம் சாட்டுபவர்கள் நியாயப்பிரமாணத் தரங்களின்படி முற்றிலும் சரியானவர்கள்.
ஆனால், கிருபையும் சத்தியமும் நிறைந்த இயேசு,ஒவ்வொரு குற்றம் சாட்டுபவர்களையும் வாயடைக்கச் செய்யும் வார்த்தைகளைப் பேசி அமைதிபடுத்தினார்,அதே நேரத்தில் அந்தப் பெண்ணை விடுவித்தார் – நியய்பிரமாணத்தை மீறாமல். இந்த தருணம் எல்லா ஆறுதலின் தேவனான நம் தேவனின் இயல்பை வல்லமைவாய்ந்த முறையில் வெளிப்படுத்துகிறது.
கிரேக்க மொழியில், “ஆறுதல்” என்பது எல்லாம் உங்களுக்கு எதிராகத் தோன்றினாலும்,தேவனின் இறுதித் தீர்ப்பை உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பதாகும்.
நியாயப்பிரமாணமானது குற்றவாளிகளைக் கண்டிக்கிறது, ஆனால் தேவன் தம்முடைய இரக்கத்தால் நம் பலவீனத்தைக் கண்டு, நம் உடைந்த நிலையில் நம்மைச் சந்திக்கிறார். அவர் பாவத்தை மன்னிப்பதில்லை, ஆனால் பாவியை அவர் கைவிடுவதும் இல்லை. நீதியைப் புறக்கணிப்பதன் மூலம் அல்ல,ஆனால் சிலுவையின் வல்லமையால் அதை நிறைவேற்றுவதன் மூலம் நம்மை விடுவிக்கும் ஆறுதலை அவர் வழங்குகிறார்.
பிரியமானவர்களே, ஒருவேளை நீங்கள் ஒரு தவறான முடிவின் காரணமாக கடனில் சிக்கிக் கொண்டிருக்கலாம் அல்லது ஒருவேளை உங்கள் வணிகம் அல்லது சொத்துக்களை அச்சுறுத்தும் ஒரு சட்டப் போராட்டத்தை எதிர்கொண்டிருக்கலாம். நீங்கள் சமாளிக்க முடியாத ஒரு போதைப் பழக்கத்தில் சிக்கியிருக்கலாம். உங்கள் சூழ்நிலை எதுவாக இருந்தாலும், எல்லா ஆறுதலின் தேவனையும், உயிர்த்தெழுதலின் வல்லமையினாலும், இன்று உங்களை விடுதலையாக்குவதாக அறிவிக்கிறார்! ஆமென் 🙏
உயிர்த்தெழுந்த இயேசுவைத் துதிப்போமாக!
கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!