25-06-25
இன்றைய நாளுக்கான கிருபை!
உங்களுடைய இலக்கின் பாதையில் நிலைநிறுத்தும் தேவனின் இரண்டாவது தொடுதலை அனுபவிப்பதன் மூலம் பிதாவின் மகிமையை அனுபவியுங்கள்!
“அவர் எல்லாவற்றையும் அதன் காலத்தில் அழகாகச் செய்துள்ளார். மேலும், கடவுள் ஆரம்பம் முதல் முடிவு வரை செய்யும் வேலையை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்பதைத் தவிர, அவர்களின் இதயங்களில் நித்தியத்தையும் வைத்திருக்கிறார். “பிரசங்கி 3:11 NKJV
ஒவ்வொரு நபருக்கும் தேவனின் நித்திய நோக்கம் உண்மையிலேயே முக்கியமானது – குறிப்பாக நாம் இந்த பூமியில் வாழும்போது.
நம் ஆசைகளும் லட்சியங்களும்,நித்திய கண்ணோட்டம் இல்லாதபோது,இறுதியில் அர்த்தமற்றவையாகிறது. அப்போஸ்தலன் பவுல் அறிவித்தபடி-1 கொரிந்தியர் 15:19, “இந்த வாழ்க்கையில் மட்டுமே நாம் கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்திருந்தால்,நாம் எல்லா மனிதர்களிலும் மிகவும் பரிதாபகரமானவர்கள்.”
சகரியாவும் எலிசபெத்தும் ஒரு குழந்தைக்காக ஏங்கினர்.ஆனால் தேவன் அவர்களை மிகப் பெரிய தீர்க்கதரிசியைப் பெற்றெடுக்கும் இலக்கிற்கு தயார்படுத்திக் கொண்டிருந்தார். முதலில், எலிசபெத் இந்த தெய்வீகத் திட்டத்தைப் புரிந்துகொண்டிருக்க மாட்டார்.ஆனால்,பரிசுத்த ஆவியானவர் தான் இதுவரை பிறந்த மிகப் பெரிய தீர்க்கதரிசியின் தாயாக மாறுவார் என்று வெளிப்படுத்தியபோது (மத்தேயு 11:11), அவள் தன் கணவருடன் விசுவாசத்தில் கூட்டு சேர்ந்து,தேவனின் நித்திய நோக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டாள்.
பிரியமானவர்களே,உங்கள் வாழ்க்கைக்கான தேவனின் நோக்கம் எல்லாவற்றையும் விட முதன்மையானது. இதைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளும்போது, நீங்கள் தேவனின் மிகச் சிறந்த வழியில் நடப்பது மட்டுமல்லாமல், உங்கள் பாதையிலிருந்து எல்லாத் தடைகளும் அகற்றப்படும். உங்கள் இலக்கை நிறைவேற்ற நீங்கள் தெய்வீகமாக நிலைநிறுத்தப்படுவீர்கள், மேலும் பரலோகத்தின் ஜீவ புஸ்த்தகத்தில் விசுவாசத்தின் வெற்றியாளர்களாக எண்ணப்பட்டு ஆசீர்வதிக்கப்படுவீர்கள். ஆமென். 🙏
உயிர்த்தெழுந்த இயேசுவைத் துதியுங்கள்!
கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!