04-07-25
இன்றைய நாளுக்கான கிருபை!
பிதா ஆளுகையை மீட்டெடுப்பதன் மூலம் அவருடைய மகிமையை அனுபவியுங்கள்!
“பின்பு தேவன் அவர்களை ஆசீர்வதித்தார், தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மீன்கள் மீதும், ஆகாயத்துப் பறவைகள் மீதும், பூமியில் நடமாடும் ஒவ்வொரு உயிரினத்தின் மீதும் ஆளுகை செலுத்துங்கள் என்றார்.”— ஆதியாகமம் 1:28 NKJV
“தேவன் நோவாவையும் அவன் குமாரரையும் ஆசீர்வதித்து, அவர்களை நோக்கி: ‘பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்’ என்றார்.”— ஆதியாகமம் 9:1 NKJV
ஆபிரகாமுடனான தேவனின் உடன்படிக்கையை எது தனித்துவமாக்குகிறது?படைப்பில் ஆதாமின் முதல் ஆசீர்வாதத்தையும் வெள்ளத்திற்குப் பிறகு நோவாவின் ஆசீர்வாதத்துடன் ஒப்பிடுகையில், மனிதகுலத்திற்குக் கிடைத்த ஆசீர்வாதத்தில் இல்லாதது ஆளுகை என்கிற முக்கிய ஆசீர்வாதமாகும். ஆட்சி செய்வதற்கான இந்த ஆளுகை ஆபிரகாமின் 7 மடங்கு ஆசீர்வாதத்தின் மூலம் மீட்டெடுக்கப்படுகிறது – வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் முழுமையான 360 டிகிரியிலும் ஆளுகை ஆசீர்வாதம்.
ஆம்,தேவன் ஆதாமை ஆசீர்வதித்து அவருக்கு ஆளுகையைக் கொடுத்தார். அவர் ஆளுகை செய்யப் படைக்கப்பட்டார், ஆனால் பாவத்தின் மூலம் அந்த ஆளுகையை இழந்தார்.நோவாவும் ஆசீர்வதிக்கப்பட்டார், ஆனால் ஆளுகை அவருக்கு மீட்டெடுக்கப்படவில்லை.
ஆனால் தேவனுக்கு ஒரு பெரிய திட்டம் இருந்தது.அவர் ஒரு மனிதனைத் தேடிக்கொண்டிருந்தார், அவர் மூலம் அனைத்து மனிதகுலத்திற்கும் ஆளுகையயை மீட்டெடுக்க முடியும் என்று நினைத்திருந்தார். அவர் ஆபிரகாமைக் கண்டுபிடித்தார்! மேலும் ஆபிரகாமின் சந்ததியான கிறிஸ்துவின் மூலமும் (மத்தேயு 1:1), பிசாசின் செயல்கள் அழிக்கப்பட்டன
(1 யோவான் 3:8), மேலும் ஆளுகை மனிதகுலத்திற்கு முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது. அல்லேலூயா!
இதோ ஆசீர்வாதத்தின் வாழ்த்து செய்தி:
✦ ஆபிரகாமின் சந்ததியான கிறிஸ்துவின் மூலம், நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல – நீங்கள் ஆளுகை செய்ய அதிகாரம் பெற்றவர்கள்!
✦ நீங்கள் வாலாகாமால் தலையாக இருப்பீர்கள், எப்போதும் மேலே மட்டுமே, கீழே ஒருபோதும் இல்லை!
✦ நீங்கள் எங்கு சென்றாலும் ஆசீர்வாதத்தின் பிரதானத்தலைவர் நீங்கள்!
ஆம், என் அன்பானவர்களே! உங்களை மீட்டெடுப்பதற்கான தேவனின் வழி, ஆபிரகாமிய 7 மடங்கு ஆசீர்வாதத்தின் மூலம்,நீங்கள் ஆளுகையில் வாழவும், ஏராளமான வாழ்க்கையால் நிரம்பி வழியசெய்கிறது. உங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.எனவே உங்கள் சரியான இடத்தில் மகிழ்ச்சியோடு இருங்கள். கிறிஸ்துவில் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் – எனவே பலனடையுங்கள், பெருகுங்கள், பூமியை நிரப்புங்கள், ஆளுகை செய்யுங்கள்! அல்லேலூயா! ஆமென். 🙏
உயிர்த்தெழுந்த இயேசுவைத் துதியுங்கள்!
கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!