மகிமையின் பிதாவை அறிவது அவருடைய சிறந்ததை நீங்கள் பெறுவதற்கு காரணமாகிறது!

66

04-03-25
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் பிதாவை அறிவது அவருடைய சிறந்ததை நீங்கள் பெறுவதற்கு காரணமாகிறது!

27. சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.
28. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.மத்தேயு 11:27-28 (NKJV)

“என்னிடம் வா… நான் உனக்கு இளைப்பாறுதல் தருகிறேன்.” இந்த இளைப்பாறுதல் மன அமைதி அல்லது உடல் தளர்வு பற்றியது மட்டுமல்ல – இது இன்னும் மேலானது! உண்மையான இளைப்பாறுதல் என்பது உங்களுக்கான தேவனின் கனவை நிறைவேற்றுவதாகும்-அவருடைய மிகச் சிறந்ததை பெறுவதாகும்!

தேவன் இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து வெளியே வழிநடத்தியபோது,அவருடைய நோக்கம் அவர்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பது மட்டுமல்லாமல், பாலும் தேனும் ஓடும் தேசத்திற்கு அவர்களைக் கொண்டுவருவதாகும். அவர்களின் இளைப்பாறுதல் என்பது வனாந்தரத்தை விட்டு வெளியேறுவது மட்டுமல்ல, தேவனின் வாக்குறுதியான தேசத்தில்-தங்களின் தெய்வீக ஆஸ்திக்குள் நுழைவதும் ஆகும்.

இது அவர்களுக்கு தேவனின் சிறந்ததாக இருந்தது:
“உன் தேவனாகிய கர்த்தர் உன் பிதாக்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திற்கு உன்னைக் கொண்டுவருகிறார், நீங்கள் கட்டாத பெரிய மற்றும் அழகான நகரங்கள், நீங்கள் நிரப்பாத எல்லா நல்ல பொருட்களும் நிறைந்த வீடுகள், நீங்கள் தோண்டாத கிணறுகள், திராட்சைத் தோட்டங்கள் மற்றும் நீங்கள் நடாத ஒலிவ மரங்கள்.
—உபாகமம் 6:10-11 NKJV

அன்பானவ்ர்களே, இது ஆச்சரியமாக தோன்றவில்லையா?!

இந்த மாதம், கர்த்தராகிய இயேசு உங்களுக்கு இளைப்பாறுதலைத் தருவார்-உங்கள் வாழ்க்கைக்காக அவர் விரும்பிய இலக்கிற்கு அவர் உங்களை அழைத்துச் செல்வார்,அவர் உங்களுக்காக மிகச் சிறந்ததை தருகிறார்!

உங்கள் கவலைகள், உங்கள் கஷ்டங்கள் மற்றும் உங்கள் கண்ணோட்டத்தை கூட அவர் கைகளில் ஒப்படைத்துவிட்டு, அவருடைய இளைப்பாறுதலில் அடியெடுத்து வையுங்கள். அப்பொழுது அவர் உங்களுக்காக சிறந்ததை வெளிப்படுத்துவதை இயேசுவின் நாமத்தில் அனுபவிப்பீர்கள். ஆமென் 🙏

மகிமையின் பிதாவை அறிவது அவருடைய சிறந்ததை நீங்கள் பெறுவதற்கு காரணமாகிறது.

நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனுடைய நீதி!

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *