கிறிஸ்துவின் நீதியின் மேன்மை!

இன்று உங்களுக்குக்கான கிருபை!
24 ஆகஸ்ட் 2026

கிறிஸ்துவின் நீதியின் மேன்மை!

வேதவசனம்:
“கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையோடும் உத்தம இருதயத்தோடும் நடந்துகொண்டதை நினைவுகூரும்படி உம்மை வேண்டிக்கொள்கிறேன்…”ஏசாயா 38:3

“அவர் (இயேசு)… பலத்த கூக்குரலோடும் கண்ணீரோடும் விண்ணப்பங்களையும் வேண்டுதல்களையும் ஏறெடுத்தார்… அவருடைய வேண்டுதல் கேட்கப்பட்டது…”எபிரெயர் 5:7

எசேக்கியா கண்ணீரோடு ஜெபித்தார், தேவன் அவர் ஜெபத்தைக் கேட்டார்.
இயேசு கண்ணீரோடு ஜெபித்தார், பிதா அவர் ஜெபத்தைக் கேட்டார்.

ஆனால், கிறிஸ்துவுடைய நீதியின் ஜெபதிற்கும் மற்றும் எசேக்கியாவுடைய நீதியின் ஜெபத்திற்கும் இடையே ஒரு மகிமையான வித்தியாசம் உள்ளது.

1. எசேக்கியா தன் உயிர் காக்கப்பட வேண்டும் என்று கெஞ்சினார்.
ஆனால், நம் எல்லோரின் உயிர்கள் காக்கப்பட வேண்டும் என்பதற்காக இயேசு தம் உயிரையே ஒப்புக்கொடுத்தார்.
(“ஆனாலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது.”
லூக்கா 22:42
மேலும்:
“நீங்கள் என்னைத் தேடுகிறீர்களானால், இவர்களைப் போகவிடுங்கள்.”
யோவான் 18:8)

2) எசேக்கியா மரணத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்.
கிறிஸ்து மரணத்திற்குள் சென்று அதை வென்றார்.

3) எசேக்கியாவின் கண்ணீர் அவருக்கு மேலும் பதினைந்து ஆண்டுகளைப் பெற்றுத்தந்தது.
கிறிஸ்துவின் கண்ணீர் நமக்கு நித்திய மீட்பைப் பெற்றுத்தந்தது.

எசேக்கியா தன் சொந்த நீதியை முன்வைத்து வேண்டினார்.
கிறிஸ்து நீதியற்றவர்களுக்காகத் தம்முடைய பரிபூரண நீதியை ஒப்புக்கொடுத்தார்.

ஆகவே, “நான் எவ்வளவு நன்றாக வாழ்ந்தேன் என்பதை நினைவுகூரும்” என்று சொல்லி நாம் தேவனிடம் வருவதில்லை.

மாறாக, நாம் இவ்வாறு சொல்கிறோம்:

பிதாவே, கிறிஸ்து எவ்வளவு பரிபூரணமாக வாழ்ந்தார், எவ்வளவு முழுமையாகத் தம்மை ஒப்புக்கொடுத்தார், அவருடைய பலி எனக்காக எவ்வளவு கச்சிதமாகப் பேசுகிறது என்பதை நினைவுகூரும்.”

நம்முடைய நீதி அளவற்ற மேன்மை வாய்ந்தது; ஏனெனில் நம்முடைய நீதி கிறிஸ்துவினுடையதே ஆகும்!

ஜெபம்
அப்பா தேவனே,என் உயிர் காக்கப்படத் தம் உயிரைக் கொடுத்த இயேசுவுக்காக உமக்கு நன்றி. அவருடைய கண்ணீர்,கீழ்ப்படிதல்,பலி,மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவை எனக்காகப் பேசுகின்றன. கிறிஸ்துவினுடைய பரிபூரண நீதியில் நான் முழுமையாக சார்ந்திருக்கிறேன். இயேசுவின் நாமத்தில், ஆமென்.

விசுவாச அறிக்கை
கிறிஸ்துவின் கண்ணீர் எனக்காகப் பேசுகிறது!
கிறிஸ்துவின் கீழ்ப்படிதல் எனக்காகப் பேசுகிறது!
கிறிஸ்துவின் நீதி எனக்காகப் பேசுகிறது!
அவருடைய உயிர்த்தெழுதல் என் வெற்றி!
நான் நித்தியமாக மீட்கப்பட்டு நீதிமானாக்கப்பட்டிருக்கிறேன்!
கிறிஸ்து இயேசுவுக்குள் நான் தேவனுடைய நீதியாயிருக்கிறேன், ஆளுகை செய்ய உயர்த்தப்பட்டிருக்கிறேன்! ஆமென் 🙏

உயிர்த்தெழுந்த இயேசுவைப் போற்றுங்கள்!


கிருபை நற்செய்தி பேராலயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *