இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய அன்பில் நீராடுங்கள் !

19-06-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய அன்பில் நீராடுங்கள் !

. சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு.
2. அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக: உமது நேசம் திராட்சரசத்தைப்பார்க்கிலும் இன்பமானது.
3. உமது பரிமளதைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமளதைலமாயிருக்கிறது; ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.(சாலமன் பாடல் 1:1-3) NKJV

மனிதகுலம் என்று அழைக்கப்படும் அவரது தலைசிறந்த படைப்பிலிருந்து தேவன் பெறுகின்ற மிகப்பெரிய மகிழ்ச்சி அவர்களுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருப்பதுதான்
அவருடைய செயல்கள் அவருடைய நற்குணத்தை வெளிப்படுத்துகின்றன.அவருடைய நற்குணம் நம்மைத் தேடி வருகிறது, அவருடைய அன்பானது வாழ்வை தொலைத்தவர்களையும், இழந்தவர்களையும், கடைசிநிலையில் இருக்கிறவர்களையும் தேடி வருகிறது.அவரது அளவிட முடியாத அன்பை அவர் நம் மீது செலுத்துவது நம்மை முழுவதுமாக ஆச்சரியத்துள்ளாக்குகிறது.

சீமோன் பேதுரு தனது வாழ்வில் அதுவரை கண்டிராத அளவு மிகப்பெரிய மீன் பிடித்தலை அனுபவித்தார் .வலை கிழியுமளவும் ,படகு மூழ்கும் அளவும் மிகப்பெரிய மீன் பிடித்தலை அனுபவித்தபோது அது பேதுருவை தேவ நன்மையை உணரும்படி செய்தது (லூக்கா 5:1-10). இயேசுவின் இந்த நற்குணம் பேதுரு செய்த எல்லா பாவங்களையும் மூடி தலை சிறந்து விளங்கியது அதற்கு பேதுருவின் பதில் “என்னை விட்டு அகன்று போம் ஆண்டவரே, ஏனென்றால் நான் ஒரு பாவமுள்ள மனிதன்.” கடவுளின் நற்குணம் எல்லா தலைமுறைகளுக்கும் எப்போதும் இணையற்றதாகவும், நிகரற்றதாகவும் இருக்கும்”.
இதற்கு ஈடாக, ஆண்டவர் எதிர்பார்ப்பதெல்லாம் அவரோடு ஒரு நெருக்கமான உறவு மட்டும் தான் ! அதற்கு
பேதுரு “ஆம்” என்று பதிலளித்தார் .

மணமகனுக்கும் மணமகளுக்கும் இடையே உள்ள அந்யோனமான அன்பின் மூலம் விவரிக்கப்படும் இந்த பரஸ்பர அன்பை வெளிப்படுத்தும் வகையில் எழுதிய புத்தகம் தான் சாலொமோனின் உன்னதப்பாட்டு மற்றும் அவரது நற்குணத்தை ருசித்தவர்கள்,அவரது மணமகள் இறைவனுக்குப் பிரியமானவன் ,அவருடைய நற்குணத்தை ருசித்தபின்,அவருடைய அன்பை அதிகமாகப் பெற ஏங்குகிறான்.

நீங்கள் கர்த்தராகிய இயேசுவின் பிரியமானவள் ! கடவுள் உங்களை அவருடன் நெருங்கிய உறவை வைத்துக் கொள்ள அழைக்கிறார்.ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவர் இந்த வாரம் கீழ் வரும் காரியங்களை உங்கள் வாழ்க்கையில் வெளிப்படுத்துவார், அவருடைய அன்பின் நீளம், அகலம், உயரம் மற்றும் ஆழம் என்ன என்பதை நீங்கள் அனுபவிப்பீர்கள் .
இதன் முடிவில் ,நாம் கேட்பதற்கும் நம் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட அவருடைய திறனை வெளிப்படுத்தும் அவர் அன்பையும் ,ஆற்றலையும் அனுபவிப்போம் . (எபேசியர் 3:14-20)ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய அன்பில் நீராடுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  +  12  =  18