03-01-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,நாம் ஆளுகை செய்வதற்கு இடையூராக இருக்கும் ஒவ்வொரு தடையையும் உடைத்தெரிகிறது!
பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.சங்கீதம் 24:1 NKJV
பூமியும் அதன் முழுமையும் தேவனுடையது என்பது நம்மில் பலருக்குத் தெரியும். மேலும் இதை மனிதகுலம் அனுபவிக்க அவர் கொடுத்துள்ளார். இருப்பினும் நாம் அதைப் பார்க்கவும் அனுபவிக்கவும் முடியாது.
ஒவ்வொரு மனிதனும் அவனுக்காக/அவளுக்காக வடிவமைக்கப்பட்ட தேவனின் நோக்கத்தை அடைவதை உறுதிசெய்ய தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பினார்.
தேவனின் இந்த நோக்கத்தை உங்கள் வாழ்க்கையில் உணர்ந்து கொள்வதை உறுதிப்படுத்த,தேவனின் குமாரனின் மரணம் தேவைப்பட்டது.
பாவம் முதலில் தீர்க்கப்பட வேண்டும்,அதற்காக அவருடைய குமாரன் மனுக்குலத்தை மீட்க இரட்சகராக வந்தார்.
மரணத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது,அவர் அதை தேவனுடைய குமாரனாக வென்றார்.
உங்கள் வாழ்க்கையில் தேவனின் நோக்கத்தை நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்காக அவர் மகிமையின் ராஜாவாக மரணத்தை ஜெயித்து எழுந்தார்.
என் அன்பானவர்களே தயாராகுங்கள்,இது உங்கள் நாள்,இன்று இயேசுவின் நாமத்தில் உங்கள் வாக்குத்தத்தம் நிறைவேறும் நாள்.ஆமென் ! 🙏.
மகிமையின் ராஜாவாகிய இயேசுவைப் பார்ப்பது,நாம் ஆளுகை செய்வதற்கு இடையூராக இருக்கும் ஒவ்வொரு தடையையும் உடைத்தெரிகிறது!
கிருபை நற்செய்தி தேவாலயம்.