மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆளுகை செய்யுங்கள்!

img_69

02-04-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆளுகை செய்யுங்கள்!

18.அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து,அவர்களை நோக்கி:வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மத்தேயு 28:18 NKJV.

ஆண்டவராகிய இயேசு நம்முடைய பாவங்களின் நிமித்தமாக நம் மரணத்தை நமக்காக ஏற்று மரித்தார் என்பது முற்றிலும் ஒரு அற்புதமான உண்மை மற்றும் அதோடு,இயேசு நம்மை என்றென்றும் நீதிமான்களாக்க சாவை ஜெயித்து மூன்றாம்நாள் உயிர்த்தெழுந்தார்.அதனால்,இயேசுவுக்கு வானத்திலும் பூமியிலும் எல்லா அதிகாரமும் கொடுக்கப்பட்டுள்ளது,அதன் விளைவாக இந்த அதிகாரம் நமக்கும் ஆளுகை கொடுக்கப்பட்டிருக்கிறது.இது நல்ல செய்தி. இதுதான் நற்செய்தி!

என் பிரியமானவர்களே,இந்த மாதத்தை ஆரம்பிக்கும் போது,இயேசுவானவர் வானத்திலும் பூமியிலும் எல்லா அதிகாரமும் கொண்டவர் என்ற எண்ணத்தை மனதில் கொண்டிருங்கள்,இதன் விளைவாக பாவம், நோய், பயம், அடக்குமுறை,எல்லாவற்றின் மீதும் நீங்கள் ஆளுகை செலுத்துவீர்கள்.உங்கள் மீது உச்சரிக்கப்பட்ட அனைத்து சாபங்களும் மற்றும் மரணத்தையும் ஆளுகை செய்யுங்கள். அல்லேலூயா! இது எல்லாவற்றிலும் மிக நல்ல செய்தி.

என் அன்பானவர்களே,இந்த மாதம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நன்மைகள் உண்டாகும். உயிர்த்தெழுந்த மற்றும் சிம்மாசனத்தில் அமர்ந்திருககிற ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே உங்கள் நீதியாயிருக்கிறார்,இதன் விளைவாக உங்களுக்கு எதிராக வாய்க்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காது மற்றும் எதிர்க்கும் ஒவ்வொரு நாவும் கண்டிக்கப்படும். ஆமென் 🙏

என் பிரியமானவர்களே,நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனின் நீதி என்பதை அறிக்கையிடுங்கள்,மேலும் மகிமையின் ராஜாவைப் பற்றிய புதிய புரிதலைப் பெற்றுக்கொள்ளுங்கள்,உங்கள் மூலம் பூமியில் அவருடைய ஆளுகையை நடைபெறுவதாக.ஆமென்🙏.

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் ஆளுகை செய்யுங்கள்*!

கிருபை நற்செய்தி தேவாலயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *