12-08-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய அற்புதமான வல்லமைக்கு சாட்சியாக இருங்கள்!!
15. உன்னதத்திலிருந்து நம்மேல் ஆவி ஊற்றப்படுமட்டும் அப்படியே இருக்கும்; அப்பொழுது வனாந்தரம் செழிப்பான வயல்வெளியாகும்; செழிப்பான வயல்வெளி காடாக எண்ணப்படும்.ஏசாயா 32:15 NKJV
மனிதனின் ஒவ்வொரு தேவைக்கும் பரிசுத்த ஆவியானவரே பதில்!
பூமியில் முதல் மனிதனை உருவாக்கிய போது அவன் நாசியில் தன் சுவாசத்தை ஊதி அவனை ஜீவாத்துமாவாக்கியவரும் அவரே!
குழந்தை இல்லாத ஆபிரகாமையும் சாராளையும் ஈசாக்கைப் பெற்றெடுக்கச்செய்து, தேசங்களின் தந்தையாகவும் தாயாகவும் ஆக்கியதும் அவரே!
சிம்சோனின் மாபெரிய பலத்திற்கு பின்னால் இருந்த வல்லமையானவர் அவரே !
சவுல் என்ற சாதாரண மனிதனை இஸ்ரவேலின் முதல் ராஜாவாக உயர்த்தியதும் அவரே !
ஆதியிலிருந்த வார்த்தையை தம் ஆவியின் மூலம் இயேசுவாக பூமியில் அவதரிக்கச் செய்தவரும் அவரே!
தம் அபிஷேகத்தை நசரேனாகிய இயேசுவின் மீது ஊற்றி ,எல்லா வகையான நோய்களையும் குணப்படுத்தி, எல்லா வகையான பிசாசுகளின் சக்திகளிலிருந்து மக்களை விடுவித்து அற்புதம் செய்தவரும் அவரே!
பரிசுத்த ஆவியானவர் தான் பயத்தோடு இருந்த சீஷர்களுக்குப் புது சிருஷ்டியின் அனுபவத்தைப் பெற செய்து அவர்கள் மூலமாக பெரிய அற்புதங்களைச் செய்து உலகத்தை கலக்கியவரும் அவரே.
பரிசுத்த ஆவியின் உயிர்த்தெழுதல் வல்லமையே பேதுருவை 153 பெரிய மீன்களை ஒரேமனிதனாய் கரைக்குக் கொண்டு வர உதவியது.
பெந்தெகொஸ்தே நாள் முழுமையாக வந்தபோது, கூடிவந்த விசுவாசிகள் மீது பரிசுத்த ஆவியானவர் மகிமையாக இறங்கி வந்ததால். அந்த விசுவாசிகள் உலகை அசைக்க தயாரானார்கள்.
ஆம் என் பிரியமானவர்களே,அதே பரிசுத்த ஆவியானவர் இன்றும் நம்முடனே இருக்கிறார், அவர்தான் நம் மூலமாக பெரிய காரியங்களைச் செய்வார்.! அவர் தான் நம் எதிர்காலத்தை மாற்றுபவர் !!
இந்த வாரம் நீங்கள் அவருடைய அற்புதத்திற்கு சாட்சியாக இருப்பீர்கள், உலக மனிதர்கள் கண்களுக்கு முன்பாக ஆச்சரியப்படவும் மற்றும் தேவனின் மகிழ்ச்சிக்கும் இயேசுவின் நாமத்தில் பாத்திரராயிருப்பீர்கள். ஆமென் 🙏
மகிமையின் ராஜாவாகிய கிறிஸ்துவை சந்தித்து,அவருடைய அற்புதமான வல்லமைக்கு சாட்சியாக இருங்கள்!!
நம்முடைய நீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!
கிருபை நற்செய்தி பேராலயம் !!
