இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய உயிர்த்தெழுதலின் ஜீவனை அனுபவியுங்கள் !

 

31-05-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய உயிர்த்தெழுதலின் ஜீவனை அனுபவியுங்கள் !

25. இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
26. உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.(யோவான் 11:25-26) NKJV.

இந்த மாத இறுதிக்கு வந்த வேலளையில் , இந்த மாதத்திற்கான வாக்குறுதி வசனத்தை மீண்டும் நினைவு கூற விரும்புகிறேன். இயேசு கிறிஸ்துவே உயிர்த்தெழுதலும் ,நித்திய ஜீவனுமாயிருக்கிறார்.தன் மரணத்தால் ,மரணத்தை என்றென்றும் ஒழித்தார்.  (2 தீமோத்தேயு 1:10). இயேசுவை மட்டும் நம்பினால், நாம் ஒருபோதும் இறந்து போவதில்லை !  அல்லேலூயா!

விசுவாசிப்பது என்பது மிகவும் எளிதானது.அது சாதி,மதம், கலாச்சாரம்,சமூகம் அல்லது நிறம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு மனிதனுக்கும் சாத்தியமாகும்.மனிதர்களின் இரட்சிப்பு மற்றும் ஆசீர்வாதங்களுக்காக கடவுள் அதற்குண்டான காரியங்களை மிகவும் எளிதானதாக செய்தார்.நாம் அவரை விசுவாசிக்க மாத்திரம் வேண்டும் ! அவ்விசுவாசம் மற்றும் சந்தேகம் என்பது சுய நம்பிக்கை மற்றும் உறுதியான ஆதாரங்களைத் தேடுவதன் விளைவாகும்.

அவருடைய உறுதியான அன்பையும், அயராத நன்மையையும் ,நம்மீது கொண்ட நீண்ட பொறுமையையும நாம் சிறிது நேரம் சிந்தித்துப் பார்த்தால் , நாம் நிச்சயமாக அவரை நன்றியுடன் அரவணைப்போம் .

அவருடைய அன்பையும் ,நன்மையும் நினைத்தால் நிச்சயம் நன்றியுணர்வு உண்டாகும்.விசுவாசம் என்பது இதுதான். !!ஆமென் 🙏

இயேசுவே உயிர்த்தெழுதல்,ஜீவன் என்று பாருங்கள், அவருடைய உயிர்த்தெழுதலின் ஜீவனை அனுபவியுங்கள் !

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6  ×  1  =