இயேசுவை நோக்கிப் பார்த்து,மறுரூபமான வாழ்க்கை முறையை அனுபவியுங்கள் !

28-09-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்த்து,மறுரூபமான வாழ்க்கை முறையை அனுபவியுங்கள் !

4. எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.
5. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி,எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம். (II கொரிந்தியர் 10:4-5 )NKJV

வலுவான நம்பிக்கையோடு( STRONGHOLD) ஒரு காரியத்தை மனதில் கோட்டைக்கட்டி நம்புபவர்கள்- பொதுவாக வாதங்கள், கையாளுதல்(MANIPULATION), பெருமை பேசுதல், தன்னை உயர்த்திக் கொள்ளுதல், புண்படுத்தப்பட்டவர்களின் உணர்வைக் கூட பொருட்படுத்தாமல் தேவனைப் பற்றிய அறிவுக்கு எதிராக (FAULTY PATTERN ) ஒரு கருத்தை முன்வைப்பதில் குறியாக இருப்பார்கள் .

வாதத்தில் வெற்றி பெறுவது மட்டும் முக்கியமல்ல. நான் வாதத்தில் தோற்றாலும், அந்த நபரை வெல்வது தான் மிகவும் முக்கியம். இதுவே கிறிஸ்துவின் வெளிப்பாடு – கிறிஸ்துவின் சாயல்.

தூய ஆவியின் மூலம் மட்டுமே மனக்கோட்டைகளுக்கு எதிராகப் போராடி வெல்லமுடியும். அதைப்பற்றி அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு கூறுகிறார்-ஒருவருடைய சொந்த வாழ்க்கையில், அவருடைய ஆளுமையின் ஒவ்வொரு பகுதியிலும், கிறிஸ்துவின் கீழ்ப்படிதலுக்கு ஒவ்வொரு சிந்தனையையும் மனநிலையையும் எடுத்துச் சென்று அவர் நம்மை முழுவதுமாக ஆட்கொள்ள அனுமதி கொடுக்க வேண்டும்.அதுவே இயேசு கிறிஸ்துவின் கீழ்ப்படிதலுக்கு நம்மை கீழ்ப்படுத்துவதாகும். இதுதான் நம்மை நீதிமான்களாக்கிய தேவநீதி , நம்முடைய கீழ்ப்படிதல் அல்ல கிறிஸ்துவின் கீழ்ப்படிதலே தேவநீதி (ரோமர் 5:18,19).

இதன் அடிப்படையில் என் சுபாவம்(RIGHTEOUS NATURE )கிறிஸ்துவின் சுபாவத்தை போல புதுசிருஷ்டியாக்கப்பட்டிருக்கிறது – புதிய சிருஷ்டி( NEW CREATION ). ஒவ்வொரு மனிதனும் இயேசுவை ஆண்டவராகவும்,இரட்சகராகவும் ஏற்றுக்கொள்ளும் போது இந்த தேவ நீதி பரிசாக வழங்கப்படுகிறது .

உங்களை நீங்களே மாற்றிக் கொள்ள முடியாது. நீங்கள் இயேசுவை உங்கள் இதயத்தில் ஏற்றுக்கொண்டு, உங்களுக்காக சிலுவையில் (உங்கள் இடத்தில்) அவர் மரித்து பிதாவுக்கு கீழ்ப்படிந்ததே உங்களை நீதிமான்களாக்கியது என்றும் அவருடைய உயிர்த்தெழுதல் உங்களை என்றென்றும் நீதிமான்களாக்கியது என்றும் விசுவாசியுங்கள் .நீங்கள் கிறிஸ்துவிலிருந்து பெயர்க்கப்பட்ட தேவநீதி என்பதை ஒப்புக் கொள்ளுங்கள் மற்றும் இதனால் தேவன் உங்களை உள்ளேயும் அதற்கேற்ப வெளியேயும் முழுமையாக மாற்றுகிறார்.உங்கள் மனம் இந்த புதிய முறைக்கு ஏற்ப மறுரூபமடைகிறது,இந்த மனதில் மறுரூபமாக்கப்பட்ட புது சிருஷ்டியின் உன்னத வாழ்க்கையை அனுபவிக்கிறீர்கள். ஆமென் 🙏.

இயேசுவை நோக்கிப் பார்த்து,மறுரூபமான வாழ்க்கை முறையை அனுபவியுங்கள் !

கிருபை நற்செய்தி தேவாலயம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3  ×  3  =