உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,புதிய படைப்பின் அற்புதங்களை அனுபவியுங்கள்!

29-03-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,புதிய படைப்பின் அற்புதங்களை அனுபவியுங்கள்!

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.(II கொரிந்தியர் 5:17) NKJV.

“புதிய சிருஷ்டி ” என்பது கிறிஸ்துவை விசுவாசிக்கிறவரைப் பற்றிய மிக அற்புதமான உண்மைகளில் ஒன்றாகும் என்று நான் நம்புகிறேன். தங்கள் சொந்த முட்டாள்தனத்தால் வீழ்ந்த மனிதகுலத்தை, கிறிஸ்துவானவர் மனிதகுலத்தின் மீது வைத்த மிகுந்த அன்பின் மூலம் ,மீட்டு உயர்ந்த நிலைக்கு உயர்த்தினார் .

புதிய சிருஷ்டி என்றென்றும் புதியதாகவே இருக்கும்! மீட்பின் பணியானது இயேசுவின் இரத்தத்தின் வல்லமையால் நிறைவேறியதால், அது ஒருபோதும் கடவுளின் நீதியின் வழியை விட்டு விலகாது.
புதிய சிருஷ்டி என்பது கடவுளின் வகையான அவரைப்போன்ற வாழ்க்கை அவ்வாழ்க்கையானது மனிதனில் செயல்படுவது மனிதனை நிகழ்காலத்தில் நித்தியவாசியாக்குகிறது (Eternal being in time ).

புதிய சிருஷ்டி ஒருபோதும் மரணத்தை ருசிக்க முடியாது, பாவத்தால் கறைபடாது, ஏனென்றால் அது மனிதனை என்றென்றும் நீதிமான்களாக்கிய சிலுவை மரணம் மற்றும் இயேசுவின் கீழ்ப்படிதலின் விளைவாக “பரிசுத்தம்”என்ற முத்திரையிடப்பட்டது .
கிறிஸ்துவை விசுவாசிப்பவர், தான் ஒரு புதிய சிருஷ்டி என்றும்,எந்த தீயசக்தியாலும் வெல்ல முடியாத வெற்றியாளர் என்றும் நம்ப வேண்டும். பிரியமானவர்களே, கிறிஸ்துவின் முடிக்கப்பட்ட வேலையில் ஓய்வெடுங்கள் (விசுவாசியுங்கள்) மற்றதை பரிசுத்த ஆவியானவர் செய்வார். ஆமென் 🙏

உண்மையுள்ள ராஜாவாகிய இயேசுவை நோக்கிப் பாருங்கள்,புதிய படைப்பின் அற்புதங்களை அனுபவியுங்கள்!

கிருபை  புரட்சி நற்செய்தி தேவாலயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

96  −  92  =