தியானத்தின் மூலம் மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்!

g16

26-04-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

தியானத்தின் மூலம் மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்!

2. அதற்கு ஆபிராம்: கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக்கர்த்தனாய் இருக்கிறானே என்றான்.
5. அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்.
6. அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.ஆதியாகமம் 15:2, 5-6 NKJV

விசுவாசத்தினால் வரும் நீதியின் வெளிப்பாட்டைத் தேடும்போது,நீங்கள் எதிர்பார்க்கும் ஆசீர்வாதம் உங்களைத் தேடி வரும்! அல்லேலூயா!

கீழ்வரும் பகுதியில் நம் பிதாவாகிய ஆபிரகாமின் சாட்சியைப் பார்க்கிறோம்,.அவர் ஒரு குழந்தையைப் பெற ஆவலோடு தேடினார்,ஏனென்றால் அவர் குழந்தை இல்லாமல் வயதானவராக மாறிக்கொண்டிருந்தார்.அவர் தேவனின் வாக்குறுதிகளை அறிக்கை செய்துகொண்டிருந்தார்,அப்படியே மாதங்கள் மற்றும் ஆண்டுகள் கடந்துவிட்டன,எதுவும் நடக்கவில்லை.அவர் முதன்முறையாக தேவனை நம்பி, தனது உறவினர்களையும் நாட்டையும் விட்டு தேவன் அவரை அழைத்த தேசத்திற்கு வந்ததிலிருந்து சுமார் 10 ஆண்டுகள் கடந்துவிட்டன.

குழந்தை இல்லாமையின் பிரச்சினை உண்மையில் ஆபிரகாமை மிகவும் கடுமையாக பாதித்தது மற்றும் விரக்தியோடு அவர் தேவனைத் தேடினார், அப்பொழுது தேவ நீதியைத் தேடுமாறு அவருக்கு நினைவூட்டி தேவன் அவரை அமைதிப்படுத்தினார்,அதன் மூலம்,ஆசீர்வாதம் அவரைத் தேடி வரும் என்று தேவன் உரைத்தார் .
தேவன் ஆபிரகாமுக்கு தேவ நீதியைப் பற்றிய புதிய புரிதலைக் கொடுத்தார்,எனவே ஆபிரகாமுக்கு சாத்தியமற்றது என்று தோன்றியதை மிகவும் தெளிவாகக் காணக்கூடியதாகவும் நிச்சயமாக சாத்தியமாகும் என்று ஆபிரகாம் விசுவாசித்தார்!

தேவநீதியைப் பற்றிய புதிய புரிதலில்,ஆபிரகாம் ஒரு குழந்தைக்காக பிரயாசப்பட்டார்,ஆனால்,தேவன் அவரை எண்ணற்ற குழந்தைகளுக்குத் தந்தையாக ஆக்குவதற்கு ஏற்கனவே ஆணையிட்டிருந்ததை கண்டார்.

என் அன்பானவர்களே,நீங்கள் விடுதலையை நாடுகிறீர்கள்,ஆனால் நீங்கள் ஒரு மீட்பராக இருக்க வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டுள்ளார்.,நீங்கள் உங்கள் இல்லத்தின் முன்னேற்றதிற்காக பணத்தை எதிர்பார்க்கிறீர்கள்,ஆனால் நீங்கள் ஒரு நாட்டிற்கே நிதியாளராக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். நீங்கள் குணமடையத் தேடுகிறீர்கள்,ஆனால் மக்களை குணப்படுத்தும் சுகாதார அமைப்பின் தலைவராக நீங்கள் இருக்க வேண்டும் என்றும் எண்ணிலடங்கா வியாதிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீங்கள் சுகம் அளிக்கும்படியாக தேவன் ஆணையிட்டுள்ளார். அவருடைய நீதியைப் பற்றிய புதிய புரிதலை நீங்கள் தேடும்போது உங்களுக்கு இதுவே நடக்கும்,இதுவே நம் பிதாவாகிய ஆபிரகாமுக்கு நேர்ந்தது அவர் நம்மைகுறித்து நினைத்திருந்த காரியங்கள் நாம் நம்மைக் குறித்து நினைப்பதை காட்டிலும் பெரியது.ஆமென் 🙏

நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனின் நீதி! நீங்கள் ஆபிரகாமின் விதையானவர்கள்!! நீங்கள் ஆபிரகாமை நம்பி ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!! ஆமென் 🙏

தியானத்தின் மூலம் மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  +  34  =  42