மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய நீதியின் மூலம் என்றென்றும் ஆட்சி செய்யுங்கள்!

08-10-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய நீதியின் மூலம் என்றென்றும் ஆட்சி செய்யுங்கள்!

8. குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது.
9. நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார் என்றும்;எபிரேயர் 1:8-9 NKJV

“நீதியின் செங்கோல் உமது ராஜ்யத்தின் செங்கோல்” – வேறுவிதமாகக் கூறினால்,தேவனின் நீதியின் தரநிலையே அவருடைய ராஜ்யத்தை ஆளுகிறது.

தேவன் ஒவ்வொருவரையும் அவருடைய நீதியின் தரத்தால் அளவிடுகிறார்.இந்த தரநிலையை அவரே அமைத்தார்.அவர் “உண்மையும் சத்தியமும் “நிறைந்தவர். எல்லோரும் பொய்யர்களாக இருந்தாலும், தேவன் உண்மையுள்ளவர்” என்று அவரது வார்த்தையின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். அவரைப் பற்றி வேதம் கூறுவது போல், தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக. ரோமர் 3:4 NLT)

எனவே, தேவனால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கும்,அவரிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கும், ஒருவர் நீதியின் தரத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இருப்பினும், வேதம் கூறுகிறது, “ஒருவனும் நீதிமான் அல்ல – ஒருவன் கூட இல்லை.” (ரோமர் 3:10). ஆனால் மோசேயின் நியாயபிரமாணத்தைக் கைக்கொண்டும் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை பின்பற்றுவதினாலும் ஒருவரும் நீதிமானாகமுடியாது. இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதன் மூலமே நாம் நீதிமான்களாக்கப்படுகிறோம் மற்றும் தேவனால் எற்றுக்கொள்ளப்படுகிறோம். நாம் யாராக இருந்தாலும், இதை விசுவாசிக்கிற அனைவருக்கும் நிஜமாகும். ரோமர் 3:21-22 NLT

ஆம் என் பிரியமானவர்களே, தேவனுடைய நீதியை ஒருபோதும் அடைய முடியாது,மாறாக அவர் தம்முடைய நீதியை ஒரு இலவச பரிசாகக் கொடுக்கிறார், அது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலம் சாத்தியமானது.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இயேசு கிறிஸ்து உங்கள் பாவங்களினிமித்தம் உங்கள் மரணத்தை மரித்தார் என்றும், தேவன் உங்களை நீதிமான்களாக்கியதால் அவர் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார் என்றும் “விசுவாசிப்பது” மட்டுமே (ரோமர் 4:25).

நீங்கள் இயேசு கிறிஸ்துவின் காரணமாக தேவனின் நீதியாக இருக்கிறீர்கள்! நீங்கள் நீதியின் தரதிற்குரியவர், ஏனென்றால் இயேசு உங்களுக்குப் பதிலாக தேவனின் எல்லா நிபந்தனைகளையும் தீர்த்து முடித்தார்!! உங்கள் நடத்தையின் அடிப்படையில் தேவன் உங்களை மதிப்பிடுவதில்லை. அவர் இயேசு செய்து முடித்த சிலுவை தியாகத்தை மட்டுமே பார்க்கிறார்! அல்லேலூயா!! அவரை விசுவாசிக்க மட்டும் செய்யுங்கள்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய நீதியின் மூலம் என்றென்றும் ஆட்சி செய்யுங்கள்!

நம்முடையநீதியானஇயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை( பு) நற்செய்தி பேராலயம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6  +  1  =