மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்திப்பதில்,தேவ நீதியைக் கேட்டு வாழ்வில் அற்புதங்களைப் பெறுங்கள்!

g17

25-04-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்திப்பதில்,தேவ நீதியைக் கேட்டு வாழ்வில் அற்புதங்களைப் பெறுங்கள்!

2.ஒன்றைமாத்திரம் உங்களிடத்தில் அறிய விரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ,எதினாலே ஆவியைப் பெற்றீர்கள்?
5.அன்றியும் உங்களுக்கு ஆவியை அளித்து, உங்களுக்குள்ளே அற்புதங்களை நடப்பிக்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே செய்கிறார்?
6.அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. கலாத்தியர்-3:2, 5-6 NKJV

நாம் அனைவருக்கும் அறிந்த ஒரு காரியம் என்னவென்றால் விசுவாசம் இல்லாமல் நாம் தேவனிடமிருந்து எதையும் பெற முடியாது.அது பெலவீனத்திலிருந்து சுகம் பெறுதல்,சுகவாழ்வு ,புதிய வேலை வாய்ப்பு ,புதிய வியாபாரத்திற்கான வாய்ப்பு,பூமிக்குரிய அல்லது ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை விசுவாசத்தினால் தவிர தேவனிடமிருந்து பெற முடியாது (எபிரெயர் 11:6)

மேலும், இந்த விசுவாசம் கேள்வியினால்(மீண்டும்,மீண்டும் கிறிஸ்துவின் வார்த்தையை உன்னிப்போடு கேட்பதினாலும்,வருகிறது என்பதை நாம் அறிவோம் (ரோமர் 10:17).
அப்படியானால்,அற்புதங்களை வெளிப்படுத்தும் ,விசுவாசத்தை உண்டு பண்ணும்படியாக நான் கேட்க வேண்டிய கிறிஸ்துவின் வார்த்தை என்ன?

தேவ நீதியைப் பற்றிய கிறிஸ்துவின் வார்த்தையே ஆகும்.

இதைத்தான் அப்போஸ்தலனாகிய பவுல் மேற்கண்ட வசனத்தில் கூறுகிறார்.நாம் விசுவாசத்தின் செய்தியைக் கேட்பதன் மூலம் பரிசுத்த ஆவியைப் பெறுகிறோம்,அபிஷேகத்தினால் நிரம்புகிறோம். ஆபிரகாம் விசுவாசித்தது,அது அவருக்கு நீதிக்காகக் கருதப்பட்டது அதேபோல் விசுவாசத்தைக் கேட்பதன் மூலம் அற்புதங்களை நாம் பெறுகிறோம்.

என் பிரியமானவர்களே,விசுவாசத்தை உண்டுபண்ணும் தேவ நீதியின் செய்தியைக் கேளுங்கள் (நாம் என்ன செய்ய வேண்டும் என்ற எதிர்பார்பில் அல்ல,மாறாக இயேசு எனக்காக என்ன செய்தார் என்பதை பார்க்க வேண்டும்).
கல்வாரியில் இயேசுவின் கீழ்ப்படிதலே நம்மை நீதிமான்களாக்க உந்தியது என்று சித்தரிக்கும் செய்திகள் (ரோமர் 5:19),தொலைந்து போனவர்களைத் தேடிக் காப்பாற்ற இயேசு வந்தார் என்பதைக் காட்டும் செய்திகள் (லூக்கா 19:10) – இப்படிப்பட்ட செய்திகளை கேட்க வேண்டும். .

நீங்கள் விசுவாசத்தினால் வரும் நீதியின் வெளிப்பாட்டைத் தேடும்போது,​​நீங்கள் எதிர்பார்க்கும் ஆசீர்வாதம் உங்களைத் தேடி வரும். அல்லேலூயா!

நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனின் நீதி! நீங்கள் ஆபிரகாமின் விதையானவர்கள்!! நீங்கள் ஆபிரகாமை நம்பி ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்திப்பதில்,தேவ நீதியைக் கேட்டு வாழ்வில் அற்புதங்களைப் பெறுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

61  +    =  66