Category: Tamil

g18

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய திறந்த வாசலை அனுபவியுங்கள்!!

03-06-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய திறந்த வாசலை அனுபவியுங்கள்!!

8. உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான். வெளிப்படுத்துதல் 3:8 NKJV

அல்லேலூயா! இது நற்செய்தி!! நம்முடைய நீதியான இயேசுவே உங்களுக்கு முன்பாகச் சென்று பெரிய வாய்ப்புகளின் திறந்த வாசலை உங்களுக்கு முன் வைத்திருக்கிறார்!!!

இன்னும் பெரிய விஷயம் என்னவென்றால், அதை மூட யாருக்கும் அதிகாரம் இல்லை – முற்றிலும் யாருக்கும் இல்லை – எந்த மனிதனும் , தீய சக்தியும் ,கண்ணுக்கு தெரியாத சக்தியும் ,எந்த அரசாங்கமும்,எந்த அதிகாரமும் ,எந்த சூழ்நிலையும் ,கடந்த காலமும் ,கடந்த காலத்தின் இழந்த வாய்ப்புகளும் .நிகழ்காலமும் அல்லது எதிர்காலமும் கூட அந்த வாசலை மூட முடியாது.

ஆம் என் அன்பானவர்களே ! இது இந்த ஜூன் மாதத்தில் தேவன் உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியாகும். கடந்த காலத்தில் நீங்கள் தோல்வியுற்றிருக்கலாம் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களோ அல்லது தெரியாதவர்களோ உங்களை ஏமாற்றியிருக்கலாம், நீங்கள் பிரார்த்தனை செய்து எந்த பலனும் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால், இந்த மாதத்தில், கர்த்தர் உங்களுக்கு முன்பாகச் சென்று, ஒரு பெரிய வாய்ப்புக்கான கதவை உங்களுக்கு முன் வைத்திருக்கிறார் – ஒரு வணிக வாய்பாகவோ, ஒரு தொழில் வாய்ப்பாகவோ அல்லது வேறு எந்த வாய்ப்பாகவோ அந்த வாய்ப்பு உங்கள் மற்ற எல்லா தேவைகளையும் ஒரே நேரத்தில் நிறைவேற்றும் . அல்லேலூயா! ஆமென் 🙏

அன்பானவர்களே உங்களுக்கு எதிரான அனைத்து எதிர்ப்புகளும் ஓய்ந்துவிடும் மற்றும் ,ஒவ்வொரு புயலும் அமைதியடையும். நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்கள் முன் வைக்கப்பட்டுள்ள இந்த திறந்த வாசல் வழியாக உங்களை அழைத்துச் செல்ல தேவதூதர்கள் உதவுவார்கள் என்று இந்த நாளில் விசுவாசமாக நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய திறந்த வாசலை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம்!

g20

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,மறைக்கப்பட்ட பொக்கிஷங்களை அனுபவியுங்கள்!

31-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,மறைக்கப்பட்ட பொக்கிஷங்களை அனுபவியுங்கள்!

2. நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்.
3. உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு,
ஏசாயா 45:2-3 NKJV.

கர்த்தராகிய இயேசுவின் பிரியமானவர்களே,இந்த மாதத்தின் இறுதிக்கு வரும்வேளையில்,இந்த மாதத்திற்கான வாக்குறுதியை நினைவு கூர்வதும், இந்த மே மாதம் முழுவதும் பரிசுத்த ஆவியின் விலைமதிப்பற்ற மற்றும் வல்லமைவாய்ந்த போதனைகளை சீர்தூக்கிப் பார்ப்பதும் தகுதியானது.

தேவனின் நீதி மட்டுமே வாழ்க்கையின் அனைத்து கோணலான பாதைகளையும் நேராக்க முடியும். நமது பிரச்சனைகளுக்குத் தீர்வைக் கொண்டுவருவது நமது செயலாலோஅல்லது கீழ்ப்படிதலாலோ அல்ல.மாறாக இயேசுவின் கீழ்ப்படிதல் சிலுவையில் உச்சக்கட்டத்தை அடைந்தது,அது மட்டுமே நமது எல்லா பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வுகளை கொண்டு வர முடியும். அல்லேலூயா!

இரண்டாவதாக, அவருடைய கீழ்ப்படிதல் நம்மை என்றென்றும் தேவனுடைய பார்வையில் சரியான நிலைநிறுத்தம் செய்தது. இது நம் தந்தையாகிய ஆபிரகாமின் ஆசீர்வாதத்தைப் பெற நம்மைத் தகுதிப்படுத்தியுள்ளது. நாம் ஆபிரகாமின் சந்ததி, இந்த உலகத்தின் வாரிசு!.

மூன்றாவதாக,ஆவியானவர் நம் வாழ்வில் வருவார் என்ற வாக்குறுதி,நம் வாழ்வில் உள்ள மற்ற எல்லா வாக்குறுதிகளையும் மற்றும் ஆசீர்வாதங்களையும் நிறைவேற்றுவதாகும். பரிசுத்த ஆவியானவருடனான நமது ஐக்கியம் மற்றும் நம் வாழ்வின் தலைவராக இருக்கும் உரிமையை அவருக்கு கொடுப்பது உலகக் காரியங்களில் சிறக்கச்செய்கிறது.
பரிசுத்த ஆவியானவர் நம்மீது வரும்போது,அவர் தம்முடைய வசனத்தை நமக்குத் தருவார்,நாம் புதிய பாஷைகளில் (அந்நிய பாஷை) பேசுவோம்.
*அந்நிய பாஷை என்பது தேவனின் மொழியாகும், இது சிறைச்சாலையின் ஒவ்வொரு இரும்புக் கம்பியையும் அறுத்து,தேவன்,நமக்குச் சிறந்ததை அனுபவிக்கத் தடையாக இருக்கும் ஒவ்வொரு தடையையும் உடைக்க உதவுகிறது ,மேலும் மறைந்திருக்கும் பொக்கிஷங்களையும் செல்வங்களையும் நிச்சயமாக நம்மைப் பெறச் செய்கிறது.

இந்த மாதத்தில் நம் வாழ்க்கையை மிகவும் அழகாக வழிநடத்தி,தேவன் நியமித்திருக்கும் இலக்கை அடைய உதவிய ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவருக்கு நான் நன்றி கூறுகிறேன். இந்த மாதம் முழுவதும் என்னுடன் தியானிக்க இணைந்ததற்கு மிக்க நன்றி மேலும் வரும் மாதங்களிலும் இறைவனின் அருளால் இந்த சிறந்த பயணத்தை தொடர உங்களை ஊக்குவிக்கிறேன். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,மறைக்கப்பட்ட பொக்கிஷங்களை அவர் திறப்பதை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் பரிசுத்த ஆவியின் ஆதிக்கத்தை பெறுங்கள்!

30-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் பரிசுத்த ஆவியின் ஆதிக்கத்தை பெறுங்கள்!

14. நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.ரோமர் 6:14
18. ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல. கலாத்தியர் 5:18

ஆளுகையானது நியாயப்பிரமாணத்தின்படி இருக்கும் போது, ​​பாவம் மனிதன் மீது ஆதிக்கம் செலுத்துகிறது, ஆனால் ,ஆவியானவர் ஆளுகை செய்யும் போது, ​​விசுவாசி நியாயப்பிரமாணத்தின் கீழ் இல்லை,எனவே பாவம் விசுவாசி மீது ஆதிக்கம் செலுத்துவதில்லை மேலும் நோய் மற்றும் வறுமை மீதும்கூட , அதாவது நியாயப்பிரமாணமும் ஆவியும் ஒன்றுக்கொன்று பிரத்தியேகமானவை. இரண்டில் ஒன்று எந்த நேரத்திலும் வேலை செய்யும் திறன் கொண்டவை .இருகாரியங்களும் அருகருகே அல்லது ஒரே நேரத்தில் வேலை செய்ய முடியாது. இதுவே ஒரு விடுதலையான வெளிப்பாடு!

மனிதனால் முடியாது என்பதையும் தேவன் அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதையும் காட்டவே நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது.தங்களுக்கு தானே உதவக்கூடியவர்களுக்கு தேவன் உதவுகிறார் என்றால், நமக்கு ஏன் தேவன் தேவை?
பத்து கட்டளைகளில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய காரியம் “நீங்கள் இதை செய்யவேண்டும் மற்றும் நீங்கள் இதை செய்ய கூடாது ” என்று பட்டியல் செல்லும் , மனிதன் கடவுளைச் சார்ந்திருப்பதைக் காட்டும் மிக முக்கியமான அம்சமான “நீங்கள் ஜெபிக்க வேண்டும்” என்று எங்கும் குறிப்பிட வில்லை . நியாயப்பிரமாணத்தை மனிதனால் தன் பலத்தில் வைத்திருக்க முடியாது என்பதை நிரூபிப்பதே நியாயப்பிரமாணத்தைக் கொடுத்ததன் நோக்கம் என்பதை இது காட்டுகிறது.

எனவே, பரிசுத்த ஆவியானவரின் தோற்றம் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிகவும் தேவையான பரிமாணமாகும்

பரிசுத்த ஆவியானவர் இல்லாமல், உங்களால் ஒன்றும் முடியாது,நீங்கள் இல்லாமல் அவரால் ஒன்றும் முடியாது! ஒவ்வொரு மனிதனைப் பற்றியும் தேவன் பார்க்க விரும்பும் காரியம் – ஆவியானவர் மற்றும் நீங்கள் இருவரும் பிரிக்க முடியாத நபர்களாக இருக்கவேண்டும் .
நீங்கள் எவ்வளவு சீக்கிரம் (உங்கள் தற்காப்பு, தன்னம்பிக்கை, சுய முயற்சி)யை விடுகிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் உங்கள் மீது இறங்கும்!

வீட்டுக்கொடுங்கள் மேலும் பரிசுத்தஆவி அசைவாடட்டும்! அப்போது நீங்கள் அமைதியை அனுபவிப்பீர்கள், உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்பீர்கள், வெற்றியை அனுபவிப்பீர்கள், இயேசுவின் நாமத்தில் ஆளுகை செய்வீர்கள்!! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் பரிசுத்த ஆவியின் ஆதிக்கத்தை பெறுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பரிசுத்த ஆவியின் வாழ்கை முறை மாறும் கிருபையைப் பெறுங்கள்!

29-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பரிசுத்த ஆவியின் வாழ்கை முறை மாறும் கிருபையைப் பெறுங்கள்!

3. அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.
4. மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார்.ரோமர் 8:3-4

பிதாவின் வாக்குத்தத்தமாகிய பரிசுத்த ஆவியானவர்- நமக்கு இயேசுவின் கீழ்ப்படிதல் மற்றும் அவரது நீதியான செயலின் மூலம் வழங்கப்பட்டார். ஏனெனில்,மனிதன் தனது விருப்பத்தின் மூலம் தனது முயற்சிகளால் நியாயப்பிரமாணத்தின் தேவைகளைக் கடைப்பிடிக்க முடியவில்லை.மனிதனால் செய்ய முடியாததை தேவன் செய்து முடித்தார்.இதை தேவன் எவ்வாறு செய்தார் என்பதை வெளிப்படுத்துவதில் மேற்கண்ட வசனங்கள் மிகவும் தெளிவாக குறிக்கின்றன.அது அருமை!

ஆளுகை என்பது பரிசுத்த ஆவியானவரிடம் உள்ளது!
நாம் நமது கட்டுப்பாட்டை பரிசுத்த ஆவியின் கைகளில் விட்டுக் கொடுக்கும்போது, ​​அவர் நமக்கு எல்லாவற்றையும் கற்பிப்பார் (யோவான் 14:26) மேலும் எல்லா சத்தியத்திற்கும் நம்மை வழிநடத்துவார் (யோவான் 16:13) வெற்றிக்கு நம்மை வழிநடத்துவார். அவாமனம், தோல்வி மற்றும் நிர்ப்பந்தமான காரியங்கள் போன்றவற்றிலிருந்து விடுவித்து, ஆற்றல்மிக்க, வெற்றிகரமான, சுதந்திரமான, சரியான மனநிலை உள்ள மற்றும் வாழ வயது திரும்பும் அற்புதமான காரியங்களை மாற்றுவதன் மூலம் அவர் நம்மைப் புதுப்பிக்கிறார்!

அவர் உங்களை மட்டுப்படுத்துவதும் இல்லை நாம் அவரை மட்டுப்பதவும் முடியாது மாறாக அவர் உதவியாளராக இருப்பதன் மூலம்,தேவன் நீங்கள் எந்த உயர்வை அடைய நினைத்திருந்தாலும் அதை அடைய பரிசுத்த ஆவியானவர் உதவுவார்.இக்கட்டு காலங்களில் மட்டுமின்றி எல்லா நேரங்களிலும் அவர் எப்போதும் நம்மோடிருக்கும் உதவியாளர் அப்படிப்பட்ட பரிசுத்த ஆவியானவரை ஆசீர்வதிப்போமாக!

நீங்கள் அவரை ருசித்தால்,அவர் உங்கள் நண்பராக இருக்க வேண்டும் என்று நீங்கள் நிச்சயமாக ஏங்குவீர்கள்,ஏனென்றால் உண்மையிலேயே அவர் ஒருவருக்கு இருக்கக்கூடிய சிறந்த நண்பர் – சிறியவர் மற்றும் பெரியவர், ஆணோ பெண்ணோ, பணக்காரரோ ஏழையோ, படித்தவர் அல்லது படிக்காதவர் எல்லோருக்கும் பரிசுத்த ஆவியானவர் எப்போது இருக்கும் உதவியாளர் (பாராக்கிலிட்டோஸ்)!! ஆமென் 🙏

என் அன்பானவர்களே,உங்களைப் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் ஞானஸ்நானம் கொடுக்கும்படி பிதாவிடம் கேளுங்கள்,கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.பரிசுத்த ஆவியைப் பெற நீங்கள் பல நாட்கள் உபவாசம் இருக்க வேண்டிய அவசியமில்லை. இயேசுவின் கீழ்ப்படிதலினால் தேவன் உங்களை என்றென்றும் நீதிமான்களாக்கினார் என்று விசுவாசிப்பது தான் உங்களுக்குத் தேவை.நீங்கள் அவருக்கு நன்றி கூறிவிட்டு,பூமியில் ஒரு புகழ்பெற்ற மற்றும் ஆளுகை செய்யும் வாழ்க்கையை அனுபவிக்க இன்றே பரிசுத்த ஆவியைப் பெறுங்கள்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,பரிசுத்த ஆவியின் வாழ்கை முறை மாறும் கிருபையைப் பெறுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் பரிசுத்த ஆவியின் ஆளுகையை அனுபவியுங்கள்!

28-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் பரிசுத்த ஆவியின் ஆளுகையை அனுபவியுங்கள்!

22. அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்;யோவான் 20:22 NKJV
4. அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.
8. பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.அப்போஸ்தலர் 1:4, 8 NKJV

கர்த்தராகிய இயேசு மரித்தோரிலிருந்து எழுந்தபோது,​​அவர் தம்முடைய சீஷர்களிடத்தில் வந்து,பரிசுத்த ஆவியை அவர்கள்மேல் ஊதினார், பரிசுத்த ஆவியானவர் அன்றிலிருந்து அவர்களில் தங்கியிருந்தார்.
இருப்பினும், கர்த்தராகிய இயேசு பரலோகத்திற்கு ஏறுவதற்கு முன்பு, பிதாவின் வாக்குத்தத்தமாகிய பரிசுத்த ஆவியானவருக்கு காத்திருக்கும்படி தம் சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.

இப்போது,கேள்வி என்னவென்றால்,இயேசு ஏற்கனவே பரிசுத்த ஆவியை அவர்களில் ஊதியிருந்ததால் , அவர்கள் ஏற்கனவே பெற்ற பரிசுத்த ஆவிக்காக மீண்டும் காத்திருப்பதன் முக்கியத்துவம் என்ன?
இப்போது அது ஆவியானவரைக் குறிக்கிறது!
தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு மோசேயின் மூலம் நியாயப்பிரமாணத்தை (தார்மீகச் சட்டங்கள் என்று அறியப்படும் பத்துக் கட்டளைகள்) வழங்கியபோது, ​​அவர்கள் தேவனுக்கு முன்பாக ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களாகவும்,மக்கள் முன் சரியானவர்களாகவும் நடந்துகொள்ள அவர்களை ஆளும் கொள்கைகளாக இருந்தது. ஆனால் யாராலும் நியாயப்பிரமாணத்தை கடைப்பிடிக்க முடியவில்லை.
எனவே, தேவன் நியாயப்பிரமாணத்திற்கு பதிலாக , ஆளும் கொள்கைகளை அதாவது – பரிசுத்த ஆவியானவரை,ஆளும் நபராக அனுப்பினார்!

இன்று, பரிசுத்த ஆவியானவர் நம்மில் வசிப்பவர் மட்டுமல்ல (நாம் மீண்டும் பிறக்கும்போது இது நிகழ்கிறது) ஆனால் அவர் நம்மீது ஆளுகையும் கொண்டிருக்கிறார் (நாம் பரிசுத்த ஆவிக்குள் ஞானஸ்நானம் எடுக்கும்போது இது நிகழ்கிறது). நம்மை ஆளுகிறவர் என்ற முறையில்,அவர் நம் வாழ்வில் முழு ஆட்சியைப் பெற அனுமதிக்கவேண்டும்..அப்பொழுது நமது வாழ்க்கை உலகிற்கு சாட்சியாக மாறுகிறது. அல்லேலூயா!

என் பிரியமானவர்களே,பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் இருப்பது மட்டுமல்லாமல், அவர் உங்கள் மீதும் இருக்கட்டும்!
உங்களைப் பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் செய்யும்படி பிதாவிடம் கேளுங்கள். அவர் உங்கள் ஆளுநராக இருக்கும்போது நீங்கள் ஆவியானவரால் நடத்தப்படும் தேவனின் குமாரர்களாக இருப்பீர்கள். (ரோமர் 8:14)ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,வாழ்வில் பரிசுத்த ஆவியின் ஆளுகையை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம்!

img_125

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,பரிசுத்த ஆவியைப் பெற்று உங்கள் மூலமாக வெளிப்படுவதை அனுபவியுங்கள்!

27-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,பரிசுத்த ஆவியைப் பெற்று உங்கள் மூலமாக வெளிப்படுவதை அனுபவியுங்கள்!

4. அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்.
8. பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். அப்போஸ்தலர் 1:4, 8 NKJV

பரிசுத்த ஆவியானவர் பிதா நமக்கு அருளிய “வாக்குறுதியானவர்”,ஆவியானவர் நமக்குள் வரும்போது,நம் வாழ்வில் தேவனின் மற்ற எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றுகிறார்.
நம்முடைய கர்த்தராகிய இயேசு நமக்கு அனுப்பிய பரிசுத்த ஆவியானவர் பூமியில் வாழும் மனிதகுலம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் இறுதி தீர்வாக அவரே இருக்கிறார்.

பரிசுத்த ஆவியானவர் என்பவர் தேவன் கூறிய மற்றும் இப்போதும் கூறுகின்ற அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுகின்றவராயிருக்கிறார்.
அவர் இயேசு யார் என்பதன் வெளிப்பாடு..உலகிற்கு நம் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட எல்லையில்லாத இயேசு அவர்!

ஆவியானவர் நமக்குள் வரும்போது,நீங்கள் வரம்பற்ற,வெல்ல முடியாத வல்லமையைப் பெறுவீர்கள்,அதன் மூலம் நீங்கள் உலகிற்கு சாட்சியாக இருக்க முடியும். உங்கள் வார்த்தைகளை விட உங்கள் வாழ்க்கை உலகத்தாருக்கு சத்தமாக பேசும் .

மே மாதத்தின் இந்த இறுதி வாரத்தில்,எல்லையற்ற இயேசுவை உங்கள் வாழ்வில் அனுபவியுங்கள்,அவர் எல்லாத் தடைகளையும் உடைத்து, அனைத்து இரும்புக் கம்பிகளையும் வெட்டி, மறைவான இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பொக்கிஷங்களையும் செல்வங்களையும் உங்களுக்கு பரிசாகப் பெறுவதை நீங்கள் அனுபவிப்பீர்கள். ஏனென்றால், இயேசு தன் களங்கமில்லாத கீழ்ப்படிதலினால், எல்லாப் பாவங்களிலிருந்தும் நம்மை விடுவித்து,என்றென்றும் நீதிமான்களாக்கினார். அல்லேலூயா! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,பரிசுத்த ஆவியைப் பெற்று உங்கள் மூலமாக வெளிப்படுவதை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

img_126

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,உங்களில் உள்ள கிறிஸ்துவை உணருங்கள்!

24-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,உங்களில் உள்ள கிறிஸ்துவை உணருங்கள்!

17. உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். யோவான் 14:17 NKJV
27. புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம். கொலோசெயர் 1:27 NKJV

ஆம் என் அன்பானவர்களே, தேவன் தம்முடைய வாசஸ்தலத்தை நம்மில் ஏற்படுத்துகிறார்.அவர் இம்மானுவேலாக இந்த உலகத்திற்கு வந்தார்,இப்பொழுது தேவன் நம்முடன் இருக்கிறார்.அதாவது,தேவன் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பியதால்,கிறிஸ்து இப்போது நம்மோடு மட்டுமல்ல, நம்மிலும் வாழ்கிறார். அல்லேலூயா!

உங்களில் உள்ள கிறிஸ்து உங்களிடம் உள்ள ஒவ்வொரு நம்பிக்கையையும் உணர்வதாகும் .
உங்களில் கிறிஸ்து யார் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளும்போது,நீங்கள் தேவனை அனுபவிப்பீர்கள்.
உதாரணத்திற்கு:
“என்னில் கிறிஸ்து” என்பது எனது வெற்றியாக இருக்கிறார்
“என்னில் உள்ள கிறிஸ்து” எனக்கான அவரது இலக்கிற்கு என்னை வழிநடத்துகிறார்.
“என்னில் உள்ள கிறிஸ்து” அவருடைய மகிமையைக் கொண்டுவருகிறார்.
“என்னில் உள்ள கிறிஸ்து”  உலகிற்கு தேவனைக் காண உதவுகிறார்.
“என்னில் உள்ள கிறிஸ்து”, சவால்களை எதிர்கொள்ள எனக்கு உதவுகிறார் .
அல்லேலூயா! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,உங்களில் உள்ள கிறிஸ்துவை உணருங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம்!

img_131

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,பரிசுத்த ஆவியானவரை வாழ்வில் பெறுங்கள்!

23-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,பரிசுத்த ஆவியானவரை வாழ்வில் பெறுங்கள்!

16. நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார யோவான் 14:16 NKJV
7. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். யோவான் 16:7 NKJV‬‬.

பரிசுத்த ஆவியானவர் தேவனின் பிரசன்னம்! சங்கீதம் 139:7ல் சங்கீதக்காரன் கூறுகிறார் “உம்முடைய ஆவியிலிருந்து நான் எங்கே போக முடியும்? அல்லது உமது பிரசனத்திலிருந்து இருந்து நான் எங்கே ஓடிப்போக முடியும்?” சங்கீதம் 139:7
அதன்படி தேவன் பரிசுத்த ஆவியின் மூலம் எங்கும் இருக்கிறார்.

​​பரிசுத்த ஆவியானவரின் மூன்று வெவ்வேறு மற்றும் வித்தியாசமான அனுபவங்கள் உள்ளன.இந்த மூன்று அனுபவங்களையும் ஆண்டவர் இயேசு மிகத் தெளிவாக விளக்குகிறார்.
1. பரிசுத்த ஆவியானவர் நம்முடன் இருக்கிறார் (இயேசுவை நமக்கு வெளிப்படுத்துகிறார்)
2. பரிசுத்த ஆவியானவர் நம்மில் இருக்கிறார் (இயேசுவை நம்மில் பிரதிபலிக்கிறார்)
3. பரிசுத்த ஆவியானவர் நம்மீது இருக்கிறார் (இயேசுவை உலகுக்குக் வெளிப்படுத்துகிறார்)

ஆம்,இயேசுவை வெளிப்படுத்த பரிசுத்த ஆவியானவர் நம்முடன் இருக்கிறார் (யோவான் 15:26; எபேசியர் 1:17,18). நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று பேதுரு இயேசுவுக்குப் பதிலளித்தபோது, ​​அதை பேதுருவுக்கு வெளிப்படுத்தியது பிதாவின் பரிசுத்தஆவி என்று கர்த்தர் கூறினார் (மத்தேயு 16:16,17). உண்மையில், பரிசுத்த ஆவியானவர் இந்த உலகில் உள்ள அனைவருடனும் இருக்கிறார். ஒவ்வொரு மனிதனின் பாவத்தையும் நீக்கிய இயேசுவை வெளிப்படுத்த அவர் ஒவ்வொருவருடனும் இணைந்து செயல்படுகிறார். இயேசு அவர்களின் பாவங்களை (பிரச்சனைகளை) நீக்கிய தேவனின் ஆட்டுக்குட்டி என்று அவர் உலகம் முழுவதற்கும் (ஒவ்வொரு மனிதனுடனும் தனித்தனியாக வேலை செய்கிறார்)சாட்சியாக இருக்கிறார்,மேலும் அவர்கள் இப்போது அமைதியையும் தெய்வீக ஆரோக்கியத்தையும் அனுபவிக்க முடியும். அல்லேலூயா!

என் அன்பானவர்களே,இன்று நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் இருந்து முற்றிலும் விடுபடலாம். இயேசு உங்கள் மீட்பர் மற்றும் இரட்சகர்,அவர் உங்கள் நீதி! அவரை உங்கள் இதயத்தில் ஏற்றுக்கொண்டு, அவருடைய நித்திய அன்பை அனுபவியுங்கள்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,பரிசுத்த ஆவியானவரை வாழ்வில் பெறுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

img_139

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவரை அனுபவியுங்கள்!

22-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவரை அனுபவியுங்கள்!

16. நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார யோவான் 14:16 NKJV
7. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்;* நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். யோவான் 16:7 NKJV‬‬.

இயேசு தாம் பிதாவினிடத்தில் திரும்பிச் செல்ல வேண்டும் என்பதால்,அவர்கள் இருதயம் கலங்கி கொண்டிருக்க வேண்டாம் என்று இயேசு தம் சீடர்களை ஊக்குவித்தார். பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு தேற்றரவாளன் மட்டும் அல்ல; அவர் இயேசுவைப் போலவே மற்றொரு உதவியாளர்.அவர் ஒரு நபர் ,வெறும் சக்தி அல்ல. அவரே தேவன்,படைக்கப்பட்ட சக்தி அல்ல.அவர் இயேசுவின் பண்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்: பரிசுத்தமானவர், அன்பானவர், உண்மையுள்ளவர், சர்வ வல்லமையுள்ளவர் மற்றும் இரக்கமுள்ளவர்.

சபையின் ஆரம்பகால விசுவாசிகள் இயேசுவை அறிந்த விதத்திலேயே பரிசுத்த ஆவியை அனுபவித்தனர்.கர்த்தராகிய இயேசு மற்றும் பரிசுத்த ஆவியானவர் (பாராக்லெட்டோஸ்) இருவரும் தங்கள் இயல்பு மற்றும் செயல்பாட்டில் ஒரே மாதிரியானவர்கள்.

ஆம் என் அன்பானவர்களே, பரிசுத்த ஆவியானவர் தேவனும் தேவ சுபாவம் உள்ளவர் (அப்போஸ்தலர் 5:4).அவருக்கு சித்தம் (1 கொரிந்தியர் 12:11),மனம் (ரோமர் 8:27) மற்றும் உணர்ச்சிகள் உள்ளன (1 தெசலோனிக்கேயர் 1:6).நீங்கள் அவருடன் வேறொரு சராசரி நபரைப் போல உறவாடலாம் மற்றும் இன்னும் சிறப்பாகப் பழகலாம்.ஏனெனில் அவருடைய பெயர் தேற்றரரவாளன் ! *நீங்கள் அவருடன் பேசலாம் மற்றும் உங்கள் எல்லா உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளலாம். நீங்கள் உங்களைப் புரிந்துகொள்வதை விட அவர் உங்களைப் புரிந்துகொள்கிறார்.அவர் உங்களுடன் ஐக்கியம் கொள்ள விரும்புகிறார்.
நீங்கள் அவரை அனுபவித்தால் நீங்கள் ஒருபோதும் இருக்கும் விதமாக இருக்க மாட்டீர்கள்.ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவரை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

img_140

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,உங்களுக்காக பரிந்து பேசும் வழக்கறிஞராக பரிசுத்த ஆவியானவர் உதவுவதை அனுபவியுங்கள்!

21-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,உங்களுக்காக பரிந்து பேசும் வழக்கறிஞராக பரிசுத்த ஆவியானவர் உதவுவதை அனுபவியுங்கள்!

7. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். யோவான் 16:7 NKJV‬‬.

தற்போதைய சகாப்தம் பரிசுத்த ஆவியானவரின் சகாப்தம்.
யார் இந்த பரிசுத்த ஆவியானவர்?
பரிசுத்த ஆவியானவர் என்பவர் சில மாய மூடுபனி அல்ல.அவர் ஒரு நபர்! நம்முடைய கர்த்தராகிய இயேசு பரிசுத்த ஆவியானவர் நபர் என்பதை குறிக்க “அவர்” என்ற பெயரை பயன்படுத்துகிறார்!
மேலும் அவரை நமது “உதவியாளர்” என்றும் அறிமுகப்படுத்துகிறார்.

உதவியாளர் என்ற சொல் பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கிறது மற்றும் இது கிரேக்க வார்த்தையான “பாராக்கிலி ட்டோஸ்” என்பதன் மொழிபெயர்ப்பாகும். ஆங்கிலத்தில் இந்த வார்த்தைக்கு சரியான சமமான வார்த்தை இல்லை,அதாவது ” ஒரு நபரை ஆதரித்து பேச அழைக்கப்பட்டவர் “(KJVல்),வழக்கறிஞர் (NIV, NLT)ல்,நண்பர் (message ல்) மற்றும் உதவியாளர் (ESV)ல் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.கிரேக்க இலக்கியத்தில், “பாராக்கிலி ட்டோஸ்” என்பது வழக்கறிஞர் என்று பொருள்படும், குற்றம் சாட்டப்பட்டவரைப் பாதுகாக்க நீதிபதி முன் நிற்கும் வழக்கறிஞர். இந்த அர்த்தத்தில் பரிசுத்த ஆவியானவர் நம்மோடு நின்று நமக்காக மன்றாடுகிறார் என்று அர்த்தம். அல்லேலூயா!

என் பிரியமானவர்களே,உலகம் முழுவதும் உங்களுக்கு எதிராக நின்றாலும், மோசேயின் நியாயப்பிரமாணம் உங்கள் மீது குற்றம் சாட்டினாலும்,நீங்கள் தவறியிருந்தாலும்,பரிசுத்த ஆவியானவர் எப்போதும் உங்களுக்காக நின்று நியாயாதிபதியின் முன் உங்களுக்காக பரிந்து பேசுகிறார். அவர் ஒரு வழக்கிலும் தோல்வியடைந்ததில்லை,ஒரு வழக்கையும் இழக்கமாட்டார்.பரிசுத்த ஆவியானவரை உங்கள் துணையாக கொண்டு, நீங்கள் எப்போதும் இயேசுவின் நாமத்தில் வெற்றியாளராக இருப்பீர்கள்!

நீங்கள் எல்லா குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டீர்கள் என்பது மட்டுமல்லாமல், நீங்கள் என்றென்றும் நீதிமான்கள் என்பதற்கும் அவர் சாட்சியாக இருக்கிறார். எனவே, நீங்கள் வாழ்வில் வெற்றி பெறுவதற்காக,இயேசுவுக்குத் தகுதியான அனைத்தையும் அவர் உரிமையுடன் வழக்காடி உங்களக்கு பெற்றுத் தருகிறார்.

என் அன்பானவர்களே, பரிசுத்த ஆவியானவர் என்று அழைக்கப்படும் இந்த விலைமதிப்பற்ற நபரை அழையுங்கள். அவரிடம், “நீர் என் பாராகிளிட்டோஸ்” என்று கூறுங்கள்.உங்கள் வாழ்க்கையில் முழு அணுகலைப் பெற அவரை உங்கள் இதயத்திற்குள் அனுமதியுங்கள்,இந்த நாளில் உங்களுக்காக தேவனின் வாக்குறுதியை அவர் எவ்வளவு அழகாகப் பெறுகிறார் என்பதைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,உங்களுக்காக பரிந்து பேசும் வழக்கறிஞராக பரிசுத்த ஆவியானவர் உதவுவதை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!