Category: Tamil

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,மறைந்திருக்கும் பொக்கிஷங்களை அவருடைய பரிசுத்த ஆவியின் மூலம் பெற்றுக்கொள்ளுங்கள்!

20-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,மறைந்திருக்கும் பொக்கிஷங்களை அவருடைய பரிசுத்த ஆவியின் மூலம் பெற்றுக்கொள்ளுங்கள்!

9. எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் *கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை;
10. நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார்*. I கொரிந்தியர் 2:9-10 NKJV

என் அன்பானவர்களே, நாம் மற்றொரு வாரத்தைத் தொடங்கும்போது, ​​​​இருளின் பொக்கிஷங்களையும், மறைவான இடங்களின் உள்ள மறைவான செல்வங்களையும் தருவார் என்று இந்த மாதத்தின் தொடக்கத்தில் தேவன் நமக்கு வாக்குறுதி அளித்ததை நினைவுபடுத்துவோம்.

அது எப்படி நடக்கும் என்பதை மேற்கண்ட வேத பகுதி விளக்குகிறது.ஆம்,தேவன் தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலமாக அதை வெளிப்படுத்துகிறார்,மேலும் நம்முடைய சுதந்திரத்தை நாம் அனுபவிக்கவும் செய்கிறார். இந்த பொக்கிஷங்கள் மனித பார்வைக்கு அப்பால்,மனித புரிதல் மற்றும் கற்பனைக்கு அப்பால் மறைந்துள்ளன மற்றும் இயற்கையாக பேசினால்,மனித முயற்சி அல்லது மனித மேன்மையால் வெளிக்கொணர முடியாது.ஆனால் பரிசுத்த ஆவியானவர் ஆழமான மற்றும் மறைவான விஷயங்களைத் தேடி உங்களுக்கு பெற்றுத்தரமுடியும்,அவரிடமிருந்து எதையும் மறைக்க முடியாது. அல்லேலூயா!

ஆம் என் அன்பானவர்களே, இது பரிசுத்த ஆவியின் சகாப்தம்! நம் வாழ்வில் பரிசுத்த ஆவியைக் கொண்டுவர தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசுவை அனுப்பினார். மனிதன் பாவம் செய்தபோது ஏதேன் தோட்டத்தில் பரிசுத்த ஆவியை இழந்தான். இருப்பினும், இயேசு சிலுவையில் தம்முடைய தியாக மரணம்,அடக்கம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றின் மூலம் மனிதன் இழந்த அனைத்தையும் மற்றும் பல ஆசீர்வாதங்களை மீண்டும் பெற்றுத்தந்தார். தேவன் தம்முடைய குமாரனை எல்லாவற்றிற்கும் மேலாக கர்த்தராக உயர்த்தியதன் விளைவாக மிக அதிக ஆசீர்வாதங்கள் வந்தன. இன்று இயேசு, கிறிஸ்து மட்டுமல்ல, அவர் கர்த்தரும் ராஜாவுமாயிருக்கிறார்! அவரே மகிமையின் ராஜா!

இந்த மேன்மையின் நோக்கம் உங்களை உயர்ந்த நிலைக்கு உயர்த்துவதாகும்.அவர் உங்களை என்றென்றும் நீதிமான்களாக்கினார்.அவர் உங்களை புதிய சிருஷ்டியாக ஆக்கினார்! உங்கள் கடந்த காலம் உங்களை இனி குற்றப்படுத்த முடியாது. அவர் உங்களை ராஜாக்களாக அரியணையில் அமர்த்தினார்.
தேவன் தம்முடைய ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியின் மூலம் உங்கள் வாழ்க்கையில் இந்த மேன்மையை சாத்தியமாக்குகிறார்.இந்த வாரத்திலும் அடுத்த வாரத்திலும்,பரிசுத்த ஆவியானவர் என்று அழைக்கப்படும் இந்த விலைமதிப்பற்ற நபரைப் புரிந்துகொண்டு ஆசீர்வதிக்கப்படுவோமாக. ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,மறைந்திருக்கும் பொக்கிஷங்களை அவருடைய ஆவியின் மூலம் பெற்றுக்கொள்ளுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

img_173

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,மறைந்திருக்கும் பொக்கிஷங்கள் திறப்பதை அனுபவியுங்கள்!

17-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,மறைந்திருக்கும் பொக்கிஷங்கள் திறப்பதை அனுபவியுங்கள்!

2. நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன்.
3. உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு,
4. வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்; நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும், உனக்கு நாமம் தரித்தேன்.ஏசாயா 45:2-3,4 NKJV

என் பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கீழ்ப்படிதலினால் நீங்கள் நீதி(தேவனின் கிருபையான நீதி)என்னும் பரிசைப் பெறும்போது,அவருடைய நீதியானது,எல்லா கோணலான பாதைகளையும் நேராக்குவதற்கு முன் செல்கிறது,எல்லா தடைகளையும் உடைத்து,மக்களைச் சிறையின் இரும்புக் கம்பிகளை வெட்டுகிறது. கிறிஸ்துவுக்குள் சுதந்திரத்தை அனுபவிப்பதில் இருந்து உங்கள் ஆசீர்வாதங்களை எதுவும் நிறுத்த முடியாது!அல்லேலூயா !

என் அன்பானவர்களே, தேவன் தடைகளை உடைத் தெரிந்தார் அதோடுமாத்திரம் நிற்கவில்லை மற்றும் , எந்தக் கண்ணும் காணாத, காதுகள் கேட்காத, மனிதர்களின் இதயங்களில் நுழையாத தம்முடைய பொக்கிஷங்களையும் மறைவான செல்வங்களையும் உங்களுக்குத் தருகிறார்.தேவன் அவரை விசுவாசித்து அவருடைய நீதியின் வரத்தைப் பெறுகிற நமக்காக இதை ஆயத்தம் செய்திருக்கிறார் (1 கொரிந்தியர் 2:9).
இப்போது உங்கள் பெயரில் மறைந்திருக்கும் அவருடைய செல்வங்கள் பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே வெளிப்படுத்தப்படுகிறது (கண்டெடுக்கப்படுகிறது மற்றும் வெளிப்படுத்தப்படுகிறது). (1 கொரிந்தியர் 2:10) .
நீங்கள் உண்மையில் இந்த செல்வங்களுக்கு தகுதியானவர் அல்ல மாறாக அவற்றை வெளிக்கொணர நீங்கள் உழைக்கவும் முடியாது. நீங்கள் வெறுமனே பரிசுத்த ஆவியுடன் ஒத்துழைத்து, இயேசுவுக்கு மட்டுமே தகுதியான அனைத்து நன்மைகளையும் நன்றியுணர்வுடன் பெற்றுக்கொள்ளுங்கள்!

நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனுடைய நீதியாக இருக்கிறீர்கள்! உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்து இந்த ஆசீர்வாதங்களை வெளிப்படுத்தவும், அனுபவிக்க உங்களுக்கு உதவவும் ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியானவரை அருளியிருக்கிறார் ! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,மறைந்திருக்கும் பொக்கிஷங்கள் திறப்பதை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

img_181

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,தகுதியற்ற மற்றும் சம்பாதிக்கமுடியாத கிருபையைப் பெறுங்கள்!

16-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,தகுதியற்ற மற்றும் சம்பாதிக்கமுடியாத கிருபையைப் பெறுங்கள்!

3. உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்.
4. சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப்பார்; அவர்கள் எல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்திற்கு வருகிறார்கள்; உன் குமாரர் தூரத்திலிருந்து வந்து, உன் குமாரத்திகள் உன் பக்கத்திலே வளர்க்கப்படுவார்கள். ஏசாயா 60:3-4 NKJV

நீங்கள் அவருடைய நீதியைத் தேடிப் பிடித்துக் கொள்ளும்போது,மக்கள் உங்களைத் தேடுவதையும், அதிகாரத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு ஆதரவாக உங்கள் நலனைத் தேடுவதையும் அனுபவிப்பீர்கள். அல்லேலூயா! இது நடப்பதற்குரிய உண்மையாக இருக்க மிகவும் நல்லது!
அதுமட்டுமல்லாமல் ,உங்கள் மகன்கள் மற்றும் மகள்கள்,(மகன்களைப் போன்றவர்கள் அல்லது மகள்கள் போன்றவர்கள்) உங்களுக்குத் திரும்பக் கிடைப்பார்கள்.உங்கள் வாழ்வில் உடைந்த உறவுகள் இயேசுவின் நாமத்தில் மீட்டெடுக்கப்படும்!

வேதத்தில் யோபு என்றழைக்கப்படும் ஒரு மனிதனைக் காண்கிறோம்,அவர் வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்தார்,அவர் எல்லாவற்றிலும் அடிபட்டு இறக்கும் கட்டத்தில் இருந்தார். அவரது இழப்புக்கான காரணத்தை நாங்கள் ஆவிக்குரிய ரீதியில் புரிந்துகொள்ள முயற்சித்தால் ,யோபு தேவ நீதியிலிருந்து விலகியதே காரணம்.

இருப்பினும், கர்த்தர் முதலில் யோபுவின் வாழ்க்கையில் அவருடைய தேவ நீதியை கருணையுடன் மீட்டெடுத்தார், அதன் விளைவாக அவர் இழந்த அனைத்தையும் கர்த்தர் இரட்டதனையாக மீட்டெடுத்தார். யோபுவிடம் தவறு கண்டவர்கள் அவரிடம் பிரார்த்தனை மற்றும் மன்னிப்புக் கோரி வந்தனர்.அவருடைய சகோதரர்கள்,சகோதரிகள் மற்றும் முன்னாள் நண்பர்கள் அனைவரும் வந்து அவரை பொருள் ரீதியாக ஆசீர்வதித்து,அவருடன் விருந்துண்டனர் (யோபு 42:9-11).அதன் பிறகு அவர் நீண்ட ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தார், மேலும் அனைத்து பூமியிலும் அழகான மகள்கள் மற்றும் அழகான மகன்களைப் பெற்றார்.

என் அன்பானவர்களே, இது உங்கள் பங்கு! எதிர்பாராத ஒரு திசையிலிருந்து செல்வமும் புகழும் உங்களைத் தேடி வரும்.பேரும்,புகழும் பூமியின் நான்கு மூலைகளிலிருந்தும் வரும்.எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் தகுதியற்ற மற்றும் சம்பாதிக்கமுடியாத கிருபையைப்பெற்று எந்த நிபந்தனையும் இல்லாமல் இயேசுவுக்குத் தகுதியான அனைத்து நன்மைகளையும் நீங்கள் அனுபவிக்க முடியும்.காரணம் நீங்கள் பெற தகுதியான அனைத்து தண்டனையும் இயேசு ஏற்றுக்கொண்டார். அல்லேலூயா ! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,தகுதியற்ற மற்றும் சம்பாதிக்கமுடியாத கிருபையைப் பெறுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

img_182

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,எழும்பிப் பிரகாசியுங்கள்!

15-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,எழும்பிப் பிரகாசியுங்கள்!

1. எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.
2. இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். ஏசாயா 60:1,2NKJV

தேவனின் மகிமை உங்கள் மீது உதித்தது என்பது அவருடைய வெளிப்பாட்டின் பிரகாசத்தை குறிக்கிறது.

இயேசுவே உலகத்தின் ஒளி!அவர் தேவனின் மகிமையின் பிரகாசமாகவும்,சர்வவல்லமையுள்ள கடவுளின் வெளிப்படையான உருவமாகவும் இருக்கிறார்.அவர் தான் மனிதகுலத்திற்கு கடவுளின் இறுதி வெளிப்பாடு. (எபிரேயர் 1:3) இயேசுவே உங்கள் ஒவ்வொரு தேவைக்கும் பதில், அதாவது தேவனின் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தை. தேவனுடைய வாயிலிருந்து வரும் வார்த்தை – (RHEMA WORD) உங்களை எழும்பி பிரகாசிக்கச் செய்கிறது.அதுவே விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.(ரோமர் 10:17)என்று எழுதப்பட்டுள்ளது. ஆம், கிறிஸ்துவின் ஒரு வார்த்தை உங்கள் எல்லா பிரச்சனைகளையும் முதலும்,கடைசியுமாய் முடிவுக்கு கொண்டுவரும்.

அவருடைய வார்த்தை வரும்போது,தேவனுடைய மகிமை வெளிப்படும்.இதை வேறு வார்த்தைகளில் கூறுவதானால்,மகிமை என்பது தேவனின் வெளிப்படுதல்!தேவன் எல்லா இடங்களிலும் இருக்கிறார். மக்களால் உணர முடியாவிட்டாலும்,பார்க்க முடியாவிட்டாலும் அவர் எங்கும் நிறைந்தவர். இருப்பினும், இயேசுவானவர் வெளிப்படும்போது நம் புலன்கள் உணரும்படி வெளிப்படுவார் அதுவே மகிமை!.
இது நடக்க,முதலில் தேவநீதி வெளிப்பட வேண்டும். அதுவே சங்கீதம் 85:13ல்“ நீதி அவருக்கு முன்னாகச் சென்று, அவருடைய அடிச்சுவடுகளின் வழியிலே நம்மை நிறுத்தும் என்று கூறப்பட்டுள்ளது .
அவருடைய நீதி முன்னே போவதாக எழுதப்பட்டுள்ளது: ஆம்,அது மகிமைக்கு முன் செல்கிறது,பிறகு எல்லா மக்களும் பார்த்து விசுவாசிக்கும்படியாக தேவனுடைய மகிமை அவருடைய நீதிக்குப் பின் வெளிப்படுகிறது.

என் அன்பானவர்களே, இந்த நாளில் அவருடைய மகிமை உங்கள் மீது காணப்படும்,அது அனைவருக்கும் தெரியும் மற்றும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும். ஆமென் 🙏
அவருடைய நீதியைத் தேடுங்கள்,அப்பொழுது மற்றவைகள் எல்லாமே உங்களைத் தேடி வரும்! இயேசுவின் கீழ்ப்படிதல்தான் உங்கள் வாழ்வில் அவருடைய எல்லா ஆசீர்வாதங்களையும் என்றென்றும் முத்திரையிட்டது. இயேசுவின் பாவமில்லாத கீழ்ப்படிதலின் காரணமாக நீங்கள் பெற வேண்டிய அனைத்தையும் பெற்றுக்கொள்ள நீங்கள் கவனம் செலுத்துகிறீர்கள் என்று கர்த்தரிடம் சொல்லுங்கள், ஏனென்றால் இயேசு உங்களுக்கும் எனக்கும் தகுதியான அனைத்தையும் (தண்டனையை) பெற்றார்.இந்நாளில் அவருடைய நீதி உங்களுக்கு முன்பாகச் சென்று அவருடைய மகிமையையும் அவருடைய வெற்றியையும் நீங்கள் அனுபவிக்க வழி செய்கிறது! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,எழும்பிப் பிரகாசியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

g1235

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,உங்களை பிரகாசிக்கச் செய்யும் வெளிப்பாட்டின் வார்த்தையை (RHEMA )பெறுங்கள்!

14-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,உங்களை பிரகாசிக்கச் செய்யும் வெளிப்பாட்டின் வார்த்தையை (RHEMA )பெறுங்கள்!

1. எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.
2. இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். ஏசாயா 60:1,2NKJV

‘உன் ஒளி வந்தது’என்று மேற்கண்ட வசனம் கூறும்போது, அது சூரிய ஒளியையோ, ட்யூப் லைட்டையோ அல்லது பிரகாசமான ஒளிரும் நட்சத்திரத்தையோ குறிக்கவில்லை. ‘உங்கள் ஒளி’ என்பது தேவனின் பொருத்தமான வார்த்தையாகும் (RHEMA ),அது உங்கள் தேவைக்காக வடிவமைக்கப்பட்ட அல்லது முன்குறிக்கப்பட்டது.பரிசுத்த ஆவியானவர் எல்லாவற்றையும் ஆராய்ந்து,அதை எடுத்து உங்களுக்கு வெளிப்படுத்துகிறார்.இந்த வெளிப்படுத்ததலே “RHEMA” வார்த்தை’ என்பார்கள்!

வேதத்தில் அவருடைய மகிமையான வார்த்தைகள் நிறைந்திருந்தாலும்,உங்கள் வாழ்க்கையில் குறிப்பிட்ட சூழ்நிலைக்கு கடவுளின் மகிமையைக் கொண்டுவரும் ஒரு ஏற்ற வார்த்தை உள்ளது.
எரேமியா 15:16 இல் -எரேமியா தீர்க்கதரிசி இதை அழகாகக் கூறுகிறார், உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது என்பதாக. தீர்க்கதரிசியின் இதயம் அந்த வார்த்தையினிமித்தம் மகிழ்ச்சியில் பொங்கியது.அவர் பயம், நோய், பற்றாக்குறை, மனச்சோர்வு மற்றும் நம்பிக்கையின்மை ஆகியவற்றிலிருந்து விடுவிக்கப்பட்டார்.அல்லேலூயா!

என் பிரியமானவர்களே,அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 10:8-ல் சொல்வது போல்,இந்த வார்த்தை நமக்குச் சமீபமாய் நம் வாயிலும் நம் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது; இந்த விசுவாசத்தின் வார்த்தையே நாங்கள் பிரசங்கிக்கிற வார்த்தை.நானும் தொடர்ந்து இந்த வார்த்தையினால் உந்தி ஊக்குவிக்கிறேன். தேவன் உங்களை எவ்வாறு பாவம் நீக்கி நீதியுள்ளவர்களாகப் பார்க்கிறார் என்பதை பல்வேறு கோணங்களில் விளக்கி, விசுவாசத்தின் நீதியின் இந்த வார்த்தையை உங்களுக்குக் கொண்டு வருகிறேன். எனவே,உங்களின் அனைத்து பெலவீனம்,மற்றும் முரண்பாடுகளின் நிஜத்தை பொருட்படுத்தாமல் அவர் எல்லா நேரத்திலும் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறார். அவர் உங்கள் பக்கத்தில் இருக்கிறார்.அவருடைய கிருபை உங்கள் பக்கம் இருக்கிறது. இயேசுவின் கீழ்ப்படிதலினால் அவருடைய நீதி உங்களுக்கு சாதகமாக இருக்கிறது.

உங்களுக்கு இலவசப் பரிசாகக் கொடுக்கப்பட்ட தேவனின் தயவு மற்றும் தேவ நீதியைப் பற்றிய செய்திகளைக் கேட்டுப் படித்துக்கொண்டே இருங்கள்,அப்பொழுது உங்கள் வாழ்க்கையில் தேவனால் வடிவமைக்கப்பட்ட மகத்துவத்தை நீங்கள் கட்டாயமாக அனுபவிப்பீர்கள். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,உங்களை பிரகாசிக்கச் செய்யும் வெளிப்பாட்டின் வார்த்தையை (RHEMA )பெறுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

gg

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,எழும்பிப் பிரகாசியுங்கள்!

13-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,எழும்பிப் பிரகாசியுங்கள்!

1. எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.
2. இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். ஏசாயா 60:1,2NKJV

என் அன்பானவர்களே, உங்கள் ஒளி வந்தது!.உங்களுடைய டைய மேன்மைக்கான நேரம் வந்துவிட்டது! உங்கள் வாழ்வில் தேவன் சந்திக்கும் நேரம் வந்துவிட்டது! ஆம்,எல்லா எதிர்ப்புகளின் மத்தியிலும் தேவனின் மகிமை உங்கள் வாழ்வில் காணப்படும்.

இருளின் நடுவில்,தேவனின் கிருபையும் தேவனின் நன்மையும் (அவருடைய ஒளி) வெளிப்படுகிறது!
பஞ்சத்தின் மத்தியில்,தேவனின் தங்கச்சுரங்கம் வெளிப்படுகிறது!
சோதனையின் மத்தியில்,தேவனின் வெற்றி வெளிப்படுகிறது!
உங்கள் சோகக் கதையின் நடுவே,தேவனின் மகிமை வெளிப்படுகிறது!

மனிதனின் மோசமான நேரம் தேவனின் சிறந்த நேரம்!நீங்கள் எந்த இருளினால் சூழ்ந்து இருந்தாலும், கர்த்தருடைய மகிமையால் இருள் முற்றிலும் மறைந்துவிடும்.இருளால் ஒருபோதும் ஒளியை வெல்ல முடியாது! அல்லேலூயா!!

என் அன்பு நண்பர்களே, கவலைப்படதிருங்கள்! இயேசு உங்களுக்கு முன் செல்கிறார். அவருடைய நீதி உங்களுக்கு முன்பாகச் சென்று, எல்லா கோணலானவைகளையும் நேராக்குகிறது.
நம்முடைய கர்த்தரும் நம்முடைய நீதியுமான இயேசுவின் நாமத்தில் அவருடைய மகிமை இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் வெளிப்படுவதை நீங்கள் அனுபவிப்பீர்கள். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,எழும்பிப் பிரகாசியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

img_200

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,நீதிமானாக்கப்படுவதின் ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்!

10-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,நீதிமானாக்கப்படுவதின் ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்!

14. நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து; கொலோசெயர் 2:14 NKJV

இயேசு சிலுவையில் மனிதனுக்குத் தகுதியான மரணம் உட்பட அனைத்து தண்டனையையும் ஏற்றுக்கொண்டபோது,நியாயப்பிரமாணத்தின் தீவிர கோரிக்கைகளை அவரது சொந்த உடலில் முழுமையாக நிறைவேற்றப்பட்டன.

தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் தேவைகள் ஒரு திவாலான மனிதனிடமிருந்து நீதியைக் கோரியது. ஆனால், பெலனற்ற அவல நிலையில் இருந்த மனிதனுக்கு தண்டனையும் அனுபவிக்க வேண்டிய நிலை இருந்தது.நமது ரட்சகராகிய கிறிஸ்து உங்களுக்கும் எனக்கும் ஏற்பட வேண்டிய தீர்ப்பையும், தண்டனையையும் ஏற்ற்றுக்கொண்டு முழுமையாக சுமந்து தீர்த்தார் .

இயேசு கிறிஸ்து தான் நியாயப்பிரமாணத்தின் நிறைவாக இருக்கிறார்.விசுவாசிக்கிற ஒவ்வொருவருக்கும் நீதிக்கான நியாயப்பிரமாணத்தின் முடிவாக கிறிஸ்துவே இருக்கிறார் (ரோமர் 10:4). மனிதன் குற்றத்திலிருந்தும் தண்டனையிலிருந்தும் விடுவிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல்,மனிதன் நீதிமானாக அறிவிக்கப்படுகிறான் (அவன் பாவம் செய்யாதது போலவே). அல்லேலூயா!

என் அன்பானவர்களே, தேவனின் பார்வையில் உங்களால் சிறப்பாக செயல்பட முடியாமல் போனதற்கு காரணம்,உங்களால் செயல்பட முடியவில்லை என்பதல்ல,ஆனால்,கடந்த வாழ்வில் நடந்த குற்றங்களினால் குற்ற உணர்வுகளும்,எதிர்காலத்தில் தோல்வி ஏற்படும் என்ற பயமும் உங்களைச் செயல்படவிடாமல் தடுக்கிறது.

இன்று,அபிஷேகம் செய்யப்பட்ட இயேசு (கிறிஸ்து) எல்லா குற்றங்களையும் துடைத்து,எல்லா பயத்தையும் உங்கள் வாழ்க்கையிலிருந்து என்றென்றும் விரட்டுகிறார்.அவர் உங்கள் வலது கையைப் பிடித்து உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட வெற்றியை அடையச் செய்கிறார், ஏனென்றால் அவர் சிலுவையின் மரணத்தின் போது நமக்கு எதிராக நிற்கும் ஒவ்வொரு எதிர் சக்தியையும் அடக்கினார்,ஆண்டு கொண்டார்.

இயேசு கிறிஸ்துவே என் நீதி (Jehovah T’sidkenu) என்று நீங்கள் கூறும்போது , பாவம் அல்லது நோய், பயம் அல்லது அவமானம் என ஒவ்வொரு அடிமைத்தனத்தையும் உடைக்கும் அபிஷேகத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள்.உங்களுக்குத் தகுதியான தண்டனை அனைத்தையும் இயேசு சுமந்ததால்,அவருடைய கீழ்ப்படிதலின் மூலம் அவருக்குத் தகுதியான அனைத்தையும் நீங்கள் நிச்சயமாக அறுவடை செய்வீர்கள். இன்று, நீங்கள் சுதந்திரமாக மட்டுமல்ல, நீங்கள் ஆளுகையும் செய்கிறீர்கள்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,நீதிமானாக்கப்படுவதின் ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்.

கிருபை நற்செய்தி தேவாலயம்!

grgc911

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,அவர் கிருபை உங்கள் தேவைகளை மிஞ்சுவதை அனுபவியுங்கள்!

09-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,அவர் கிருபை உங்கள் தேவைகளை மிஞ்சுவதை அனுபவியுங்கள்!

13. உங்கள் பாவங்களினாலேயும், உங்கள் மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடேகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்களெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து;
14. நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;
15. துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார். கொலோசெயர் 2:13-15 NKJV

கிறிஸ்துவின் நீதி உங்களுக்கு முன்பாக சென்று,எல்லா கோணலானவைகளையும் நேராக்கியது .

கிறிஸ்துவானவர் பின்வருவனவற்றைச் செய்துள்ளார்:
1. அவர் உங்கள் எல்லா பாவங்களையும் குற்றங்களையும் என்றென்றும் மன்னித்தார்.உங்கள் கடந்தகால வெறுக்கத்தக்க செயல்கள் இனி உங்கள் உயர்வுக்கு தடையாக இருக்க முடியாது.

2. தேவ கரங்களால் எழுதப்பட்ட பத்து கட்டளைகள்- மனிதனால் ஒருபோதும் நிறைவேற்ற முடியாத நியாயப்பிரமாணம் என்பதால் அவர் அனைத்து எதிர்பார்ப்புகளையும் மனிதனிடமிருந்து எடுத்துவிட்டார். உங்கள் தற்போதைய வாழ்க்கை தேவனின் எதிர்பார்ப்புகள் உள்ள வாழ்க்கை அல்ல.

3. உங்களுக்கு எதிராக முயற்சிக்கும் அனைத்து தீய சக்திகளின் ஆயுதங்களையும் அவர் நிராயுதமாக்கியுள்ளார்.குறிப்பாக குற்ற உணர்வு மற்றும் பயம் என்ற ஆயுதங்களை சிலுவையில் அறைந்ததன் மூலம் நம்மை விட்டு முற்றிலும் நீக்கினார்.உங்கள் எதிர்காலம் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவில் முற்றிலும் பாதுகாப்பானது.

இயேசுவே நமது நீதி! இது நம்மீது அவருடைய வெற்றிக்கொடி.அவர் நிபந்தனையற்ற கிருபையின் எண்ணற்ற ஆசீர்வாதங்களை அனுபவிக்க இரட்டைக் கதவுகளைத் திறந்துள்ளார், அது உங்களை ஆளுகை செய்ய வைக்கிறது.உங்களிடமிருந்து அவருக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை, இருப்பினும் உங்களைச் சுற்றியுள்ள மக்களின் எதிர்ப்புகள் உங்கள்மீது இருக்கிறது.அதை சந்திக்க அவரது வலிந்தோடும் கிருபை அந்த நபர்களின் எதிர்பார்ப்புகளை மிஞ்சுகிறது.

என் பிரியமானவர்களே, கிறிஸ்து இயேசுவின் மூலம் மகிமையில் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் எல்லா தேவைகளையும் தேவன் எப்பொழுதும் பூர்த்தி செய்கிறார் என்ற மனநிலையை வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாக இருக்கிறீர்கள் என்று அறிக்கை செய்து கொண்டே இருங்கள் ; நீங்கள் ஆபிரகாமின் சந்ததி; நீங்கள் ஆபிரகாமை நம்பும் ஆசீர்வாதத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர் மற்றும் நீங்கள் உலகின் வாரிசாக இருக்கிறீர்கள்! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,அவர் கிருபை உங்கள் தேவைகளை மிஞ்சுவதை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,இயேசுவுக்குத் தகுதியான ஆசீர்வாதங்களை நாம் பெற்று ஆளுகை செய்வோம்!

07-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,இயேசுவுக்குத் தகுதியான ஆசீர்வாதங்களை நாம் பெற்று ஆளுகை செய்வோம்!

1.கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது:ஏசாயா 45:1 NKJV

பரிசுத்த ஆவியின் அபிஷேகம்தான் சவுலை இஸ்ரவேலின் முதல் ராஜாவாக ஆக்கியது. ராஜாவின் ஆளுகை அபிஷேகத்தில் இருந்து வருகிறது. பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் நீங்கள் வாழ்க்கையில் ஆளுகை செய்கிறீர்கள்.

நீங்கள் அபிஷேகம் செய்யப்படும்போதும்,தேவன் உங்கள் வலது கையைப் பிடிக்கும்போதும் மூன்று விஷயங்கள் நடப்பதை நாம் காண்கிறோம்:
1. எதிரியை பாதபடியாக்குதல்
2. எதிரிகளின் பலத்தை நிராயுதாமாக்குதல்
3. இரட்டைக் கதவுகள் திறக்கப்பட்டு -அரச வரவேற்புடன் நீங்கள் சிரமமின்றி நுழைதல் .

சைரஸின் வாழ்க்கையில் இதுதான் நடந்தது, இயேசுவின் நாமத்தில் உங்களுக்கும் இதுதான் நடக்கும்.

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்கள் மரணத்தை தாமே ஏற்றுக்கொண்டு உங்களுக்காக பாவமானார்,அதேபோல் இன்று அவருடைய நீதியைப் பெற்று நீங்கள் ஆளுகை செய்கிறீர்கள். சிலுவையில் அவர் தேவனுக்குக் கீழ்ப்படிந்ததால்,வாழ்க்கையில் ஆளுகை செய்வதற்கு தேவன் உங்களுக்கு அவருடைய நீதியை இலவசமாக வழங்கினார்.

சிலுவையில்,இயேசு உங்களுக்குத் தகுதியான பாவத்தை அவர் ஏற்றுக்கொண்டார்,அதே போல் அவருடைய பாவமற்ற வாழ்க்கை மற்றும் சர்வவல்லமையுள்ள தேவனுக்கு எப்போதும் முழுமையாக கீழ்ப்படிந்ததால் அவருக்குத் தகுதியான நீதியை இன்று நீங்கள் பெறுவீர்கள்.

நமக்குத் தகுதியானதை அவர் முழு மனதோடு பெற்றுக்கொண்டார்(ஏனெனில் நாம் தண்டனைக்கும் மரணத்திற்கும் மட்டுமே தகுதியானவர்கள்) எனவே,அவருக்குத் தகுதியானதை நாம் எதிர்பார்ப்போடு பெற வேண்டும்.அவை வாழ்வு, ஆரோக்கியம், நல்வாழ்வு, செல்வங்கள் உட்பட பரலோக மற்றும் பூமிக்குரிய ஆசீர்வாதங்கள். இது தான் தெய்வீக பரிமாற்றம்!
நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனுடைய நீதி என்று ஒப்புக்கொள்வதில் நீங்கள் எவ்வளவு தீவிரமாக இருக்கிறீர்களோ (கர்த்தராகிய இயேசுவுக்குத் தகுதியானதை நீங்கள் பெறுவீர்கள்), இயேசுவின் நாமத்தில் சிரமமின்றி மற்றும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையில் ஆளுகை செய்ய அவருடைய அபிஷேகத்தையும் அப்படியே அனுபவிப்பீர்கள். ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,இயேசுவுக்குத் தகுதியான ஆசீர்வாதங்களைப் பெற்று நாம் ஆளுகை செய்வோம் .

கிருபை நற்செய்தி தேவாலயம்!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,ஆசீர்வாதங்களை பெறுவதற்கான அபிஷேகத்தை பெறுங்கள்!

06-05-24
இன்றைய நாளுக்கான  கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,ஆசீர்வாதங்களை பெறுவதற்கான அபிஷேகத்தை பெறுங்கள்!

1. கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது:ஏசாயா 45:1 NKJV

வரலாற்று ரீதியாகப் பார்த்தால் ,தேவன் தாம் தேர்ந்தெடுத்த ஜனமாகிய இஸ்ரவேலை பாபிலோனிலிருந்து விடுவிப்பதற்காகவும்,அவர்கள் வாக்களிக்கப்பட்ட தேசத்தை மீண்டும் சுதந்தரிப்பதற்காகவும் பெர்சியாவின் புறஜாதி அரசரான சைரஸை அபிஷேகம் செய்தார்.
தீர்க்கதரிசனமாகப் பார்த்தால் ,இன்று தேவன் நமக்கு கொடுத்த சுந்தந்திரத்தை பெறுவதற்கு வாக்குத்தத்தமாக இருக்கும்..

தேவன் சைரஸை அபிஷேகம் செய்தது போல், நசேரனாகிய இயேசுவை பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் செய்தார், அவர் நன்மை செய்து, பிசாசினால் ஒடுக்கப்பட்ட அனைவரையும் குணப்படுத்தினார், ஏனென்றால் தேவன் இயேசுவோடு இருந்தார் (அவரது வலது கையைப் பிடித்தார்) அப்போஸ்தலர் 10:38.

இன்று, அந்த அபிஷேகம் செய்யப்பட்ட இயேசு(கிறிஸ்து) கர்த்தராக உயர்ந்தவர் மற்றும் அவர் உங்கள் வலது கையைப் பிடித்து, பரிசுத்த ஆவியினாலும்,வல்லமையினாலும் உங்களை அபிஷேகம் செய்ய விரும்புகிறார்.

சைரஸ் ராஜாவுக்கும் மற்ற தேசங்களின் ராஜாக்களுக்கும் இடையே வித்தியாசத்தை ஏற்படுத்தியது இந்த அபிஷேகம்! இன்றும் கூட, அபிஷேகம்தான் உங்கள் சமகாலத்தவர்களிடமிருந்து – குறிப்பாக இந்த மாதம் மற்றும் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களை வேறுபிரித்துக் காண்பிக்கும். அல்லேலூயா!

என் அன்பானவர்களே, வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் ஆட்சி செய்ய உங்களுக்கு பரிசுத்த ஆவியும் அவருடைய வல்லமையும் தேவை. மற்றவற்றிலிருந்து உங்களை வேறுபிரித்துக் காண்பிக்கும் இந்த அபிஷேகத்தை நீங்கள் பெறவில்லை என்றால், நீங்கள் இன்று அதைப் பெறலாம்!
இயேசுவே சிலுவையில் கீழ்ப்படிவதன் மூலம் தேவனின் இந்த மிக வல்லமை வாய்ந்த பரிசைப்(பரிசுத்த ஆவியானவர்) பெற உங்களைத் தகுதிப்படுத்துகிறார்.
தேவனின் இந்த மாபெரும் பரிசை நீங்கள் பெற்றிருந்தால், நீங்கள் உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும். இயேசு தேவனுக்குக் கீழ்ப்படிந்து, உங்களை என்றென்றும் நீதிமான்களாக்கிய அவருடைய இரத்தத்தைச் சிந்தியதால் இந்த அபிஷேகம் வருகிறது.

ஜெபம்: அன்பான பரலோகத் தகப்பனே, இயேசுவின் ஜீவாதார பலியின் நிமித்தம் என் எல்லா பாவங்களையும் மன்னித்து, என்னை என்றென்றும் நீதியுள்ளவனாக்கியதற்கு நன்றி. இந்த அடிப்படையில்,பரிசுத்த ஆவியை வரமாகப் பெற நான் உங்களிடம் கேட்கிறேன். நான் இயேசுவை என் கர்த்தராகவும் இரட்சகராகவும் விசுவாசித்து ஏற்றுக்கொள்கிறேன். ஆமென் 🙏

.மகிமையின் ராஜாவாகிய இயேசுவைச் சந்தித்து,ஆசீர்வாதங்களை பெறுவதற்கான அபிஷேகத்தை பெறுங்கள்

கிருபை நற்செய்தி தேவாலயம்!