Category: Tamil

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் உன்னதமான இலக்கின் திறவுகோல்!

03-10-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் உன்னதமான இலக்கின் திறவுகோல்!

16. என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.
17.தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம்.
18. அவைகளை நான் எண்ணப்போனால், மணலைப்பார்க்கிலும் அதிகமாம்; நான் விழிக்கும்போது இன்னும் உம்மண்டையில் இருக்கிறேன். (சங்கீதம் 139:16-18) NKJV.

சாதி,மதம், நிறம், கலாச்சாரம், சமூகம் அல்லது நாடு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு மனிதனைப் பற்றிய ஞானம் மற்றும் புரிதல் நம் உண்மையான தேவனுக்கு மட்டுமே உண்டு என்கின்ற சத்தியத்தை சங்கீதக்காரன் ஒப்புக்கொள்கிறார்.

நம்மைக்குறித்த அவருடைய எண்ணங்கள் அனைத்தையும் கூட்டினால் பூமியின் மணலின் எண்ணிக்கையை விட அதிகம்! இது உண்மையிலேயே புரிந்துகொள்ள முடியாததும்,நம் சிந்தைக்கு எட்டாததுமாய் இருக்கிறது !.

நீங்களும் நானும் உருவாவதற்கு முன்பே இவை அனைத்தும் அந்த சுருளில் எழுதப்பட்டுள்ளன.உங்கள் முழு வாழ்க்கை வரலாற்ற்றை வரைந்து அதன் பாதுகாவலராக இருப்பவர் தேவன் மட்டுமே.அவரே நமது விசுவாசத்தை தொடங்குகிறவரும் மற்றும் முடிப்பவராயிருக்கிறார்.அவரே ஆல்பா மற்றும் ஒமேகா.அவர் பெயர் இயேசு! அல்லேலூயா!!

ஆம் என் அன்பானவர்களே,இயேசுவே உங்களுடைய மற்றும் என்னுடைய வாழ்க்கையின் ஒமேகாவாயிருக்கிறார்.உங்களைப் பற்றிய எல்லா விஷயங்களிலும் அவர்தான் இறுதி முடிவைக் கூறுவார் இந்த மாதத்தில் அவர் உங்களைப் பற்றிய உன்னதமான இறுதிச் சொல்லை வெளிப்படுத்துகிறார,அவர் உங்களை உயர்த்தி என்றென்றும் ஆசீர்வதிப்பார். அல்லேலூயா!

பரிசுத்த ஆவியே வாரும் ! எங்கள் வாழ்க்கையில் முழுவதுமாய் ஆட்கொள்ள உங்களுக்கு அனுமதி வழங்குகிறோம்,இதன்மூலம் இயேசுவின் பெயரில் எங்கள் வாழ்க்கையில் தேவனின் இறுதிக்கூற்றை புரிந்துகொண்டு அனுபவிக்க எங்களுக்கு உதவுவீராக.ஆமென் 🙏.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,உங்கள் உன்னதமான இலக்கின் திறவுகோல் !

கிருபை நற்செய்தி தேவாலயம் .

இயேசுவை நோக்கிப் பார்த்து ,உங்கள் இன்னல்களுக்கு அவரே இறுதிக்கூற்று என்பதை அனுபவியுங்கள் !

29-09-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்த்து ,உங்கள் இன்னல்களுக்கு அவரே இறுதிக்கூற்று என்பதை அனுபவியுங்கள் !

8. இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஒமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்.
18. மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.( வெளிப்படுத்துதல் 1:8,18) KJV

என் பிரியமானவர்களே,இந்த மாதத்தின் இறுதிக்கு வரும் வேளையில், ஆண்டவராகிய ​​இயேசுவை கிருபையுடன் நமக்கு போதித்த பரிசுத்த ஆவியானவருக்கு நான் நன்றி கூறுகிறேன், நம்முடைய வாழ்க்கையின் மாற்றத்திற்காக,ஆத்துமாக்களின் மேய்ப்பவராகிய தேவன் தம்முடைய குமாரனை நமக்காக வெளிப்படுத்தினார்,

பரிசுத்த ஆவியானவர் மூலமாக வரும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் வெளிப்பாடு மட்டுமே நம் வாழ்வில் தேவனின் அற்புத வல்லமையை கொண்டு வர முடியும்.

ஒவ்வொரு முறையும், நாம் ஒரு சவாலை எதிர்கொள்கிற நேரத்தில்,நாம் பரிசுத்த ஆவியானவரிடம், இயேசுவை வெளிப்படுத்தும்படி கேட்கிறோம்.மரணம் உட்பட நம் வாழ்வின் ஒவ்வொரு விஷயத்திலும் அவரே இறுதி முடிவைக் கூறுகிறார். உண்மை என்னவென்றால், மரணமும் நரகமும் கூட சுதந்திரமாக இயங்க முடியாது, ஏனென்றால் பாதாளத்தின் மற்றும் மரணத்தின் சாவிகள் – இயேசுவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.அவரே ஒமேகாவும்,அதாவது முடிவுமாயிருக்கிறார்.

நோய், வறுமை, இழப்புகள், தோல்விகள் மற்றும் மரணம் உட்பட பலவற்றால் உங்களை அழிக்க முடியாது.ஏனென்றால், நீங்கள் இயேசுவை உங்கள் ஒமேகா என்று முடிவு செய்ததால் இவை எதற்கும் உங்கள் மீது எந்த முடிவுகட்டும் வல்லமையும் இல்லை.

பல சமயங்களில் நம் சொந்த மனப்பான்மையே தேவனின் இணையற்ற அன்பையும் கற்பனை செய்ய முடியாத வல்லமையையும் நம் வாழ்வில் பெறுவதைத் தடுக்கிறது.
கடந்த பல ஆண்டுகள் முன் நடந்த விஷயங்களில் நம் மனசாட்சி நம்மிடம் தவறு கண்டுபிடிக்க முயற்சிக்கிறது. நமது வரையறுக்கப்பட்ட புரிதல் (LIMITED KNOWLEDGE) நமது வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் தடுக்கிறது. எனவே,நமக்குத் தொடர்ந்து பரிசுத்த ஆவியின் மூலம் இயேசுவின் வெளிப்பாடு தேவைப்படுகிறது ,குறிப்பாக இயேசு நமக்காக பாவமாக மாறினார்,இதன் விளைவாக நாம் கிறிஸ்துவில் தேவ நீதியாக இருக்கிறோம் என்ற வெளிப்பாடு. .

இந்த உணர்தல் மற்றும் கிறிஸ்துவில் நாம் தேவநீதி என்ற தீவிர ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமே நம் வாழ்க்கையின் எல்லா பிரச்சினைகளிலிருந்தும் விடுதலையைக் கொண்டு வர முடியும், ஏனெனில் அவை இறுதியாக பாவக் காரணிக்கு பரிகாரம் அளிக்கிறது ..

என் பிரியமானவர்களே, இந்த மாபெரும் விசுவாசஅறிக்கையைப் பற்றிக்கொள்ளுங்கள்-நான் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதி. இந்த செப்டம்பர் மாதத்தின் ஒவ்வொரு நாளும் என்னுடன் இணைந்ததற்கு நன்றி. அடுத்த மாதம் தேவன் உங்களுக்கு இன்னும் பெரிய மற்றும் அற்புதமான ஆசீர்வாதங்கள் வைத்து இருக்கிறார் என்று நான் நம்புகிறேன்.ஆமென் 🙏.

இயேசுவை நோக்கிப் பார்த்து ,உங்கள் இன்னல்களுக்கு அவரே இறுதிக்கூற்று என்பதை அனுபவியுங்கள் !

கிருபை நற்செய்தி தேவாலயம் .

இயேசுவை நோக்கிப் பார்த்து,மறுரூபமான வாழ்க்கை முறையை அனுபவியுங்கள் !

28-09-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்த்து,மறுரூபமான வாழ்க்கை முறையை அனுபவியுங்கள் !

4. எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது.
5. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி,எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம். (II கொரிந்தியர் 10:4-5 )NKJV

வலுவான நம்பிக்கையோடு( STRONGHOLD) ஒரு காரியத்தை மனதில் கோட்டைக்கட்டி நம்புபவர்கள்- பொதுவாக வாதங்கள், கையாளுதல்(MANIPULATION), பெருமை பேசுதல், தன்னை உயர்த்திக் கொள்ளுதல், புண்படுத்தப்பட்டவர்களின் உணர்வைக் கூட பொருட்படுத்தாமல் தேவனைப் பற்றிய அறிவுக்கு எதிராக (FAULTY PATTERN ) ஒரு கருத்தை முன்வைப்பதில் குறியாக இருப்பார்கள் .

வாதத்தில் வெற்றி பெறுவது மட்டும் முக்கியமல்ல. நான் வாதத்தில் தோற்றாலும், அந்த நபரை வெல்வது தான் மிகவும் முக்கியம். இதுவே கிறிஸ்துவின் வெளிப்பாடு – கிறிஸ்துவின் சாயல்.

தூய ஆவியின் மூலம் மட்டுமே மனக்கோட்டைகளுக்கு எதிராகப் போராடி வெல்லமுடியும். அதைப்பற்றி அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு கூறுகிறார்-ஒருவருடைய சொந்த வாழ்க்கையில், அவருடைய ஆளுமையின் ஒவ்வொரு பகுதியிலும், கிறிஸ்துவின் கீழ்ப்படிதலுக்கு ஒவ்வொரு சிந்தனையையும் மனநிலையையும் எடுத்துச் சென்று அவர் நம்மை முழுவதுமாக ஆட்கொள்ள அனுமதி கொடுக்க வேண்டும்.அதுவே இயேசு கிறிஸ்துவின் கீழ்ப்படிதலுக்கு நம்மை கீழ்ப்படுத்துவதாகும். இதுதான் நம்மை நீதிமான்களாக்கிய தேவநீதி , நம்முடைய கீழ்ப்படிதல் அல்ல கிறிஸ்துவின் கீழ்ப்படிதலே தேவநீதி (ரோமர் 5:18,19).

இதன் அடிப்படையில் என் சுபாவம்(RIGHTEOUS NATURE )கிறிஸ்துவின் சுபாவத்தை போல புதுசிருஷ்டியாக்கப்பட்டிருக்கிறது – புதிய சிருஷ்டி( NEW CREATION ). ஒவ்வொரு மனிதனும் இயேசுவை ஆண்டவராகவும்,இரட்சகராகவும் ஏற்றுக்கொள்ளும் போது இந்த தேவ நீதி பரிசாக வழங்கப்படுகிறது .

உங்களை நீங்களே மாற்றிக் கொள்ள முடியாது. நீங்கள் இயேசுவை உங்கள் இதயத்தில் ஏற்றுக்கொண்டு, உங்களுக்காக சிலுவையில் (உங்கள் இடத்தில்) அவர் மரித்து பிதாவுக்கு கீழ்ப்படிந்ததே உங்களை நீதிமான்களாக்கியது என்றும் அவருடைய உயிர்த்தெழுதல் உங்களை என்றென்றும் நீதிமான்களாக்கியது என்றும் விசுவாசியுங்கள் .நீங்கள் கிறிஸ்துவிலிருந்து பெயர்க்கப்பட்ட தேவநீதி என்பதை ஒப்புக் கொள்ளுங்கள் மற்றும் இதனால் தேவன் உங்களை உள்ளேயும் அதற்கேற்ப வெளியேயும் முழுமையாக மாற்றுகிறார்.உங்கள் மனம் இந்த புதிய முறைக்கு ஏற்ப மறுரூபமடைகிறது,இந்த மனதில் மறுரூபமாக்கப்பட்ட புது சிருஷ்டியின் உன்னத வாழ்க்கையை அனுபவிக்கிறீர்கள். ஆமென் 🙏.

இயேசுவை நோக்கிப் பார்த்து,மறுரூபமான வாழ்க்கை முறையை அனுபவியுங்கள் !

கிருபை நற்செய்தி தேவாலயம் .

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,முடிவில்லா ஆசீர்வாதங்களை அனுபவிக்கச்செய்கிறது !

27-09-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,முடிவில்லா ஆசீர்வாதங்களை அனுபவிக்கச்செய்கிறது !

45. பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான்.
46. அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான்.(யோவான் 1:45-46 )NKJV
52. அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறதில்லை என்பதை ஆராய்ந்துபாரும் என்றார்கள். (யோவான் 7:52) NKJV

ஒரு தவறான மனநிலை என்பது, மேலே உள்ள வசனத்தில் நாம் பார்ப்பது போல, கடந்த கால அனுபவங்கள் காரணமாக வலுப்பெற்று சிந்தனையில் காணப்படும் ஒரு நிலையான வடிவமாகும்.
இயேசுவின் நாட்களில் அறிஞர்கள் மற்றும் ‘ஆன்மீக குருமார்கள்’ என்று அழைக்கப்படுபவர்கள் தேவனின் மேசியாவாகிய கிறிஸ்து,கலிலேயா மாகாணம்,மற்றும் குறிப்பாக நாசரேத் என்று அழைக்கப்படும் ஒரு சிறிய கிராமத்திலிருந்து தோன்றுவதற்கான சாத்தியத்தை மறுத்தனர் ஏனென்றால் அந்த மனநிலை உருவாக அவர்கள் தங்கள் வரையறுக்கப்பட்ட அறிவையும் கடந்த கால அனுபவங்களையுமே நம்பினர்.

அனுபவம் மிகவும் அவசியமானது,ஆனால் நம்பிக்கையின் கோட்டையாக மாறும் ஒரு குறிப்பிட்ட அனுபவத்தை சார்ந்திருப்பது கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

யூதர்கள் தங்கள் மேசியாவுக்காக ஆவலுடன் காத்திருந்தனர் – ஆனால் அவர்களில் பெரும்பாலோர் தவறான சிந்தனை முறையால் அவரைத் தவறவிட்டனர், அது அவர்களை ஏமாற்றி,அசுத்த
ஆவிகளுக்குத் தங்கள் மனதைத் திறந்து, மிகப்பெரிய முடிவில்லா ஆசீர்வாதத்திலிருந்து அவர்களை விலக்கி வைத்தது.

என் பிரியமானவர்களே, “உங்கள் சுயபுத்தியில் சாயாமல்,உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு.” (நீதிமொழிகள் 3:5) என்ற வசனத்திற்கேற்ப உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் பரிசுத்த ஆவியானவரை திறந்த மனதோடு ஏற்றுக்கொள்ளுங்கள்,அவர் தாம் விரும்பிய புகலிடத்திற்கு இன்று உங்களை வழிநடத்துகிறார்,இதுவே இன்று இயேசுவின் பெயரில் உங்களுக்காக முன்குறிக்கப்பட்ட உங்கள் எதிர்காலமாக மாறுகிறது . ஆமென் 🙏.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,முடிவில்லா ஆசீர்வாதங்களை அனுபவிக்கச்செய்கிறது !

கிருபை நற்செய்தி தேவாலயம் .

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,சரியான சத்தியத்தின் வடிவத்தை சிந்தையில் உருவாக்குகிறது!

26-09-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,சரியான சத்தியத்தின் வடிவத்தை சிந்தையில் உருவாக்குகிறது!

13. நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டுபோய்விட்டார்கள் என்று சொல்லுங்கள்.
15. அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதருக்குள்ளே இந்நாள்வரைக்கும் பிரசித்தமாயிருக்கிறது.(மத்தேயு 28:13, 15) NKJV.

ஒரு குறிப்பிட்ட காரணத்தினால் அல்லது வலுவாக நம்பிக்கை வைத்திருக்கும் இடத்தில்,ஒருவரின் மனதில் அரண்கள்( STRONG HOLD) உண்மையில் உருவாகிறது.

இயேசு சிலுவையில் அறையப்பட்டு, ரோமானிய வீரர்களால் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.ஆனால் பிதாவானவர் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினார். இது அவரது மரணத்திற்கு காரணமானவர்களிடம் தெரிவிக்கப்பட்டதும், அவருடைய சீஷர்கள் உடலைத் திருடிச் சென்றதாகப் புகாரளிக்க ரோமானிய வீரர்களுக்கு லஞ்சம் கொடுத்தனர். இது செய்திகளில் தலைப்புச் செய்தியாக மாறியது, மேலும் இதுவே யூதர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு தலைமுறை தலைமுறையாக இன்று வரை நம்பப்படுகிறது.

பிசாசுகளின் அரண் என்பது பொய்கள் மற்றும் வஞ்சனைகள் அடிப்படையாகக் கொண்ட ஒரு வலுவான தவறான சிந்தனை வடிவமாகும்.
இன்றுவரை யூதர்கள் இந்த தவறான செய்தியை நம்புகிறார்கள்.ஆகவே,இன்னும் அவர் வரவில்லை என்பது போல் தங்கள் மேசியாவுக்காகக் காத்திருக்கிறார்கள்.

ஒரு உண்மையான மதம் ஒரு பொய்யின் மூலம் எவ்வாறு ஒரு தவறான தகவலை அப்பாவித்தனமாக நம்பும் வகையில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிகிறோம்.மற்றும் கிறிஸ்துவில் தேவன் ஏற்கனவே வைத்திருக்கும் நன்மையை ஒருபோதும் காணமுடியாதபடி செய்து,அடுத்தடுத்த தலைமுறைகளின் விசுவாசத்திற்கும் பெரும்அழிவைஏற்படுத்துகிறது என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது .

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, நாம் சரியாக வாழாததற்குக் காரணம்,சத்தியம் என்ன என்பதை நாம் விசுவாசியாதது தான்.கலாச்சாரம் மற்றும் நம் முன்னோர்களின் அனுபவங்கள் மூலம் நமக்குக் உந்தப்பட்ட ஒரு மனநிலையை நாம் வெறுமனே நம்பி பின்பற்றுகிறோம் .
எனினும், சத்திய ஆவியான பரிசுத்த ஆவியானவரை நாம் அழைக்கும்போது, ​​அவர் நம்மை எல்லா சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துகிறார்.மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து பிதாவின் வலதுபக்கத்தில் அமர்ந்திருக்கும் இயேசுவை நமக்கு வெளிப்படுத்துகிறார்.மற்றும் அவர் பரிசுத்த வேதாகமத்தின்படி நம் வாழ்வில் நடக்கச்செய்து இயேசுவின் நாமத்தில் சொல்லப்படாத, கேள்விப்படாத மற்றும் முன் சம்பவிக்காத ஆசீர்வாதங்களை இன்றே நம் வாழ்வில் வெளிப்படுத்துகிறார். ஆமென் 🙏.

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,சரியான சத்தியத்தின் வடிவத்தை சிந்தையில் உருவாக்குகிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

இயேசுவை நோக்கிப் பார்த்து தேவனின் மிகச்சிறந்த அன்பளிப்பை அனுபவியுங்கள்!

25-09-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்த்து தேவனின் மிகச்சிறந்த அன்பளிப்பை அனுபவியுங்கள்!

10. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்.(யோவான் 4:10) NKJV‬‬

என் அன்பானவர்களே, இந்த மாதத்தின் கடைசி வாரத்திற்கு வரும் வேளையில் , ​தேவன் உங்களுக்கு மிகச் சிறந்ததைத் தர விரும்புகிறார் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்! அவர் எப்போதும் உங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார் – தீய எண்ணங்கள் அல்ல, நன்மையான எண்ணங்கள்,வறுமை பற்றிய எண்ணங்கள் அல்ல மாறாக செழிப்பின் எண்ணங்கள்.
அவருடைய தொடர்ச்சியான நல்ல எண்ணங்களே மேலே குறிப்பிடப்பட்ட இந்த இதயம் உடைந்த சமாரியப் பெண்ணின் வாழ்க்கையில் நம்முடைய கர்த்தராகிய இயேசுவைக் கொண்டுவந்தது.அந்த பெண்ணின் பின்னணி -அவளுக்கு 5 கணவர்கள் இருந்தார்கள்,அப்போது அவளுடன் வாழ்ந்தவர் கூட அவளது கணவர் அல்ல.

ஆனால்,அவளுடைய சமூக நிலையைப் பற்றி பேசுகையில்,அவளுடைய பழக்கவழக்கங்கள் மற்றும் கலாச்சாரத்தின் மீது அவளுக்கு வைராக்கியம் இருந்தபோதிலும்,அவளுடைய சுற்றுப்புறத்தில் அவளுக்கு நல்ல பெயர் இல்லை.தன் மூதாதையரான யாக்கோபு முற்காலத்தில் கட்டிய கிணற்றில் அவள் பெருமை கொண்டாள்.தற்செயலாக,அதே கிணற்றண்டையில் அவள் இயேசுவை சந்தித்தாள் ஆனால்,ஆண்டவர் அவளைச் சந்தித்தது அவளுடைய வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றி மாபெரும் தாக்கத்தை அவளுக்கு ஏற்படுத்திய தெய்வீக சித்தத்தின் சந்திப்பாகும் .

தேவனால் அனுப்பப்பட்டவர் தன்னிடம் பேசுகிறார் என்பது அவளுக்குத் தெரியாது மற்றும் தன்னை நினைத்துப் பார்க்க முடியாத உயரத்தை அடையும் வரத்தை ஆண்டவர் அவளுக்கு கொடுக்க வந்திருக்கிறார் என்றும் தெரியவில்லை.ஒரு குறிப்பிட்ட கலாச்சாரம் மற்றும் கடந்த கால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு,அதனால் ஏற்பட்ட தவறான சிந்தனை முறையே அவளுக்கு தேவனின் மிகச் சிறந்ததைப் பெறுவதைத் தடுத்தது .வேதம் இதை தவறான அரண்கள்( DEMONIC STRONG HOLD) என்று அழைக்கிறது.

ஆம் கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,நம் மனதில் கட்டுகிற தவறான அரண்களே தேவனின் மிகச் சிறந்ததைப் பெறுவதற்குத் தடையாக இருக்கலாம். இன்றைய தினம் உங்களுக்கான கிருபையானது உங்களைத் தேடி வந்து இப்படிப்பட்ட தவறான அரண்களை உடைக்கிறது,மேலும் இந்த வாரத்தின் எஞ்சிய நாட்களும் இந்த கிருபை உங்களுக்கு உதவவும்,அது உங்கள் வாழ்க்கையில் தேவன் எதிர்பார்க்கும் மிக உயர்ந்த நிலைக்கு உங்களை உயர்த்தவும், தேவனின் மிகச் சிறந்த அன்பளிப்பை நன்றியுள்ள இதயத்தோடு பெற்றுக்கொள்ளவும் உதவுகிறது ! இது உங்கள் நாள்! ஆமென் 🙏.

இயேசுவை நோக்கிப் பார்த்து,தேவனின் மிகச்சிறந்த அன்பளிப்பை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

nature

இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய ஆசீர்வாதங்களை சதாகாலமும் அனுபவியுங்கள்!

22-09-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய ஆசீர்வாதங்களை சதாகாலமும் அனுபவியுங்கள்!

18.மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். (வெளிப்படுத்துதல் 1:18)

இப்போது உங்கள் எண்ணங்களின் மையம் எதில் நோக்கமாயிருக்கிறது? நீங்கள் தற்போது எதில் ஆர்வமாக உள்ளீர்கள்?
தேவனும் எதில் ஈடுபாடு கொண்டிருக்கிறார் என்பதை நான் உங்களுக்கு சொல்கிறேன்? அவர் எப்பொழுதும் உங்களை நினைத்துக் கொண்டே இருக்கிறார். உங்களை நினைக்காமல் ஒரு நொடி கூட கடப்பதில்லை. உங்களைப் பற்றிய அவரது எண்ணங்கள் சமாதானத்திற்கானவை, தீயவை அல்ல. இது தான் நற்செய்தியாகிய சத்தியம் ! அல்லேலூயா!

“உங்கள் உடல் உங்கள் எண்ணங்களைப் பின்பற்றுகிறது” என்று சொல்வது போல், ஒவ்வொரு மனிதனைப் பற்றிய அவரது எண்ணங்கள் தான் அவரை இந்த உலகத்திற்கு அடியெடுத்து வைக்கச்செய்தது .அவர் மேலும் நமக்காக மரித்து நரகத்திற்குச் சென்று அங்கு இறந்தவர்களையும் நரகத்தில் கட்டுண்டர்வர்களையும் தம் மரணத்தால் விடுவித்தார் .
அவரில் எந்த பாவமும் இல்லை,ஆனால் அவர் நம்முடைய எல்லா பாவங்களை சுமந்து தீர்த்தத்தினால், பிசாசுக்கு நம் ஆத்துமாக்கள் மீது சட்டபூர்வமான உரிமை இல்லை.அவர் பெற்றுத்தந்த இந்த சுதந்திரம் இன்று காலை சத்தியமாக உங்களை விடுவிக்கிறது. அல்லேலூயா!

என் அன்பான நண்பர்களே, நீங்கள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சனை எவ்வளவு தீவிரமானதாக இருந்தாலும் அல்லது அற்பமானதாக இருந்தாலும், இயேசு உங்களை விடுவிக்கிறார்! அவர் பிரபஞ்சத்தின் மறுக்கமுடியாத ராஜா! அவர் இருளின் அனைத்து வல்லமைகளையும் ஆட்சி செய்கிறார்.அவர் ராஜாக்களின் ராஜா மற்றும் பிரபுக்களின் தேவன்!அவரே அண்ட சராசரங்களையும் ஆட்சி செய்கிறார்! ஆமென் 🙏

என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் என்று உரைக்கிறார். (எரேமியா 33:3)

அவருடைய இரத்தத்தால்,உங்கள் நீதியான இயேசுவை நீங்கள் நேரடியாக அணுகலாம்! அவருடைய நீதி உங்களை விடுவித்து,உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட எண்ணிலடங்கா ஆசீர்வாதங்களுடன் உங்களை ஆசீர்வதிக்கும். இதுவே நற்செய்தி,இதுவே சத்தியம் ! ஆமென் 🙏.

இயேசுவை நோக்கிப் பாருங்கள்,அவருடைய ஆசீர்வாதங்களை சதாகாலமும் அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

nature

இயேசுவை நோக்கிப் பார்த்து ,உங்கள் வாழ்வில் அவரின் திருப்புமுனையை அனுபவியுங்கள்!

21-09-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்த்து ,உங்கள் வாழ்வில் அவரின் திருப்புமுனையை அனுபவியுங்கள்!

18.மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். (வெளிப்படுத்துதல் 1:18)

2020-21 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே கிரிக்கெட் டெஸ்ட் போட்டித் தொடர் எனக்கு நினைவிருக்கிறது. இரு அணிகளும் ஆஸ்திரேலியாவில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவிருந்தன. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியர்கள் ஆஸ்திரேலியர்களால் தாழ்த்தப்பட்டனர், மீதமுள்ள 3 போட்டிகளில் இந்தியா நிச்சயமாக தோல்வியடையும் என்று அனைவரும் நினைத்தனர்.ஆனால் திடீரென அலைகள் திரும்பியது. எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராக, மீதமுள்ள 3 போட்டிகளில் இந்தியா 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ஒரு வெற்றியாளரின் மேலாதிக்கம் எதிராளியின் சொந்த களத்தில் எதிராளியை வெல்வதில் உள்ளது.
அதேபோல், இந்த களத்தின் ஆட்சியாளரான பிசாசை வெல்ல இயேசு மரணம் மற்றும் நரகத்திற்குள் நுழைய வேண்டியிருந்தது.

மனிதன் இழந்த ஆதிக்கத்தை மீண்டும் பெற்று,மனித குலத்தின் நீதியையும் தேவன் மீட்டெடுத்தார், மேலும் மனிதனுக்கு மிகவும் விரும்பத்தக்க பரிசான பரிசுத்த ஆவியானவரின் தேவ பிரசன்னத்தையும் வழங்கினார். *இயேசுவின் மரணமும் அவருடைய உயிர்த்தெழுதலும் மனிதன் இழந்ததை விட மிகஅதிகமாகப் பெறச் செய்தது.அல்லேலூயா!

ஆம் என் அன்பானவர்களே, இந்த நாள் உங்களுடைய நாள் – இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பிய தேவன் உங்களையும் தாழ்ந்த குழியிலிருந்து எழுப்பி, இயேசுவின் நாமத்தில் உன்னதமான உயரத்தில் வைப்பார்.
ஆமென் 🙏.

இயேசுவை நோக்கிப் பார்த்து ,உங்கள் வாழ்வில் அவரின் திருப்புமுனையை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

இயேசுவை நோக்கிப் பார்ப்பது ,அவருடைய நித்திய வாழ்க்கையை அனுபவிக்கச்செய்கிறது!

20-09-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது ,அவருடைய நித்திய வாழ்க்கையை அனுபவிக்கச்செய்கிறது!

18.மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். (வெளிப்படுத்துதல் 1:18)

தேவனுடைய குமாரனின் மரணத்தை அவசியமாக்கியது மனிதகுலம் ஆனால் அவருடைய தெய்வீகம் (பரிசுத்த ஆவி) தேவனுடைய குமாரனின் உயிர்த்தெழுதலை அவசியமாக்கியது (ரோமர் 1:4).

அந்த ஜீவனாகிய தேவ குமாரன் மரணத்திற்குத் தன்னயே கொடுத்தது நினைத்துக்கூட பார்க்க முடியாதது. மேலும், மரணம் இறுதியாக உயிர்தெழுதலின் வெற்றியில் விழுங்கப்படுகிறது என்பதை முழுமையாக புரிந்துகொள்வது கடினம் (1 கொரிந்தியர் 15:54,54).

இயேசு நரகத்தில் இருந்தபோது பிசாசு வென்றது போல் தோன்றியது, ஆனால் அவனது கேலிக்குரிய சிரிப்பு 3 பகல் மற்றும் 3 இரவுகள் மட்டுமே நீடித்தது.பிசாசு 6000 வருடங்களாக ஏமாற்றி, ஊழலால் சம்பாதித்த அனைத்தையும் இழந்தான்.மனிதனுக்கு நிரந்தரமானதாகவும்,மீள முடியாததாகவும் தோன்றிய இழப்பு, இயேசுவின் ஞானத்தினாலும், பணிவினாலும் மனிதன் என்றென்றும் திரும்ப பெற்றான், இனி ஒருபோதும் அதை இழக்கமாட்டான். அல்லேலூயா!

ஆம் என் அன்பானவர்களே,வாழ்வில் நீங்கள் சம்பாதித்த பெயர்,புகழ்,செல்வம்,உடல்நலம், அந்தஸ்து , நேரம் போன்றவற்றை இழந்திருக்கலாம், ஆனால் நற்செய்தி என்னவென்றால் இயேசு, மரணம், நோய் மற்றும் பிசாசை வென்று நரகம்,மரணம் என்பதன் திறவுகோல்களை தன் கைகளில் எடுத்தார் .எனவே, நீங்கள் இயேசுவை மட்டும் விசுவாசித்தால் இழந்த அனைத்தையும் மீண்டும் பெறுவீர்கள்.அவர் சிலுவையில் உங்கள் மரணத்தை மரித்தார் மற்றும் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து உங்களுக்கு நித்திய வாழ்க்கையை (சாவாமையை) கொடுத்தார்..ஆமென் 🙏

இயேசுவை நோக்கிப் பார்ப்பது,அவருடைய நித்திய வாழ்க்கையை அனுபவிக்கச்செய்கிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம் .

nature

இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய அதீத அன்பை அனுபவியுங்கள்!

19-09-23
இன்றைய நாளுக்கான  கிருபை!

இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய அதீத அன்பை அனுபவியுங்கள்!

18.மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். (வெளிப்படுத்துதல் 1:18)

இயேசுவே தேவன் ! அவர் சதாகாலமும் வாழ்பவர்.அவரில் ஜீவன் இருக்கிறது (யோவான் 1:3). அவரே ஜீவன் (யோவான் 14:6).
மனிதர்களால் புரிந்துகொள்ள கடினமான காரணம் என்னவெனில், சதாகாலமும் வாழ்பவர்,அவரில் ஜீவன்
இருக்கிறது ,அவரே ஜீவனாகவும் இருகிறார்,அப்படி இருக்க அவர் எப்படி இறக்க முடியும்?

கோடிக்கணக்கான ஆண்டுகளாக ஒளி அளிக்கும் சூரியன் இருளாக மாற முடியுமா? அல்லது இருளால் ஒளியை விழுங்க முடியுமா? மாறாக, இருள் என்பது ஒளி இல்லாததை குறிக்கின்றது.அதுபோலவே, மரணம் என்பது வாழ்வின்மயை குறிக்கின்றது.

என் பிரியமானவர்களே,மனித குலத்தின் மேலான நன்மைக்காக எதுவாக இருந்தாலும் தேவன் அதை செய்ய முடியும். ஆகவே மரிக்க முடியாதவர் மனித குலத்திற்காக மரணத்தை சுவைத்தார் (எபிரேயர் 2:9) தம் மரணத்தின் மூலம் மரணத்தின் மீது வல்லமையுள்ள பிசாசை அழித்து,மரணத்திலிருந்தும் வாழ்நாளெல்லாம் மரண பயத்தின் அடிமைத்தனத்திலிருந்தும் நம்மை விடுவித்தார் (எபிரேயர் 2:14, 15)

பாவமே அறியாத இயேசு,ஒருபோதும் பாவம் செய்யாதவர் நமக்காக பாவம் ஆனார், இதனால் நாம் கிறிஸ்துவுக்குள் தேவனுடைய நீதியாக ஆக முடியும். தேவன் தனது சித்தம் மற்றும் முன்னறிவிப்பின்படி மனிதனை மீட்டெடுப்பதற்காக,மனிதனின் அதி மேன்மையான நன்மைக்காக எதையும் செய்ய முடியும் மற்றும் எதுவாகவும் மாற முடியும் அது தான் அவர் அன்பு !.ஆமென் 🙏

ஆண்டவரே! ஒன்றுமில்லாத மனிதன் மீது நீங்கள் கண்ணோக்கமாக இருக்க அவன் எம்மாத்திரம்?!

இயேசுவை நோக்கிப் பார்த்து,அவருடைய அதீத அன்பை அனுபவியுங்கள்!

கிருபை நற்செய்தி தேவாலயம் .