மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,இந்த வாழ்க்கையில் ராஜாக்களாக ஆட்சி செய்யுங்கள்!

img_200

20-12-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,இந்த வாழ்க்கையில் ராஜாக்களாக ஆட்சி செய்யுங்கள்!

உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.சங்கீதம் 91:1 NKJV

கர்த்தராகிய இயேசுவுக்குள் அன்பானவர்களே, இந்த வார இறுதிக்கு வரும்வேளையில்,சேனைகளின் கர்த்தரே போர்களின் ஆண்டவர்,அவர் நம் போர்களை நமக்காக எதிர்த்து போராடி,சேற்றிலிருந்து நம்மை உயர்த்தி, உயரமான, உன்னததில் மாட்சிமையுடன் சிம்மாசனத்தில் அமர்த்துகிறார். வானங்களிலும், பூமியிலும், பூமியின் கீழும் உள்ள அனைத்து சக்திகள் மேலும் ஆளுகை செய்ய வைக்கிறார்.
மகிமையின் ராஜா ஆட்சி செய்வதால் நாம் நிலைநிறுத்தப்பட்டுள்ளோம்.மகிமையின் ராஜா யார்? சேனைகளின் கர்த்தரே அந்த மகிமையின் ராஜா.சேனைகளின் கர்த்தர் யார்?கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே சேனைகளின் கர்த்தராக இருக்கிறார்,ஏனென்றால் தேவன் அவரை உயர்த்தி,எல்லா நாமத்திற்கும் மேலாக அவருக்கு ஒரு நாமத்தை கொடுத்தார்.இயேசுவின் நாமத்தில் வானத்திலும், பூமியிலும், பூமியின் கீழும் உள்ள அனைத்து சக்திகளும் பணிந்து, பிதாவாகிய தேவனின் மகிமைக்காக இயேசு கிறிஸ்துவே ஆண்டவர் என்று ஒப்புக்கொள்கிறார்கள்.

எனவே,நீங்களும் நானும் அடைக்கலம் புகும் இரகசிய இடம் இயேசுவே.அவர் நம் ஆத்துமாவின் நங்கூரம், அவர் நம்மை உறுதியாகவும், அசையாமலும்,திடனாகவும்,என்றென்றும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கிறார். ஒவ்வொரு சக்தியும், அது எந்தப் பெயராக இருந்தாலும்,அது உங்கள் பாதபடி.

மகிமையின் ராஜாவை சேவித்து,நீங்கள் ராஜாவாகுங்கள்ஆனால், இவ்வுலகின் அரசர்களுக்குச் சேவை செய்தால், ஒருவன் அடிமையாகவே இருப்பான்!

அவருடைய நீதி உங்களை ராஜாவாக்கும்!
நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனுடைய நீதி!ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,இந்த வாழ்க்கையில் ராஜாக்களாக ஆட்சி செய்யுங்கள்.

கிருபை நற்செய்தி பேராலயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *