இன்று உங்களுக்குக்கான கிருபை!
7 செப்டம்பர் 2026
நான் ஒரு குமாரன் — இதுவே எனது ஆழமான அடையாளம்!
வேதவசனம்
“பயத்தை உண்டாக்கும் அடிமைத்தனத்தின் ஆவியையல்ல, அப்பா பிதாவே என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியையே பெற்றீர்கள்.”ரோமர் 8:15
கர்த்தராகிய இயேசுவின் அன்புக்குரியவர்களே,
பயத்திலிருந்து நம்மை விடுவிக்கும் மிகப்பெரிய வெளிப்பாடு ‘புத்திரத்துவம்‘ (குமாரனாக இருத்தல்) குறித்த வெளிப்பாடாகும்.
அடிமைத்தனத்தின் ஆவி பயத்தை உண்டாக்கி பலவீனப்படுத்துகிறது; ஆனால் புத்திரத்துவத்தின் ஆவி நமக்கு நம்பிக்கையை அளித்து பலத்தை பெருக்குகிறது.
மிகவும் முக்கியமான கேள்வி இதுதான்: “நான் யார்?”
நீதிமானாக்கப்படுதல் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கிறது: “தேவனுக்கு முன்பாக என் நிலை என்ன?”
புத்திரத்துவம் இன்னும் ஆழமான கேள்விக்கு பதிலளிக்கிறது:”தேவனுக்கு நான் யார்?”
நீங்கள் சிறப்பாக செயல்படுவதால் குமாரனாக மாறுவதில்லை. நீங்கள் குமாரனாகிய கிறிஸ்துவுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறீர்கள்; நீங்கள் உங்கள் தகப்பனாகிய தேவனின் வித்தாக இருக்கிறீர்கள், அந்த உறவிலிருந்தே உங்கள் நீதி பிறக்கிறது.
ஆகவே, உங்கள் தோல்விகள்,உணர்வுகள், சூழ்நிலைகள் அல்லது செயல்பாடுகள் உங்கள் அடையாளத்தை வரையறுக்க அனுமதிக்காதீர்கள்.
நான் தேவனுடைய குமாரன்.
நான் கிறிஸ்துவுக்குள் இருப்பதால், அவருக்குள் நான் தேவனுடைய நீதியாக இருக்கிறேன்.
இன்று, உங்கள் பயத்தின் அடிப்படையில் அல்ல, மாறாக உங்கள் அடையாளத்தின் அடிப்படையில் வாழுங்கள்.
ஜெபம்
அப்பா பிதாவே, எனக்குப் புத்திரத்துவத்தின் ஆவியைக் கொடுத்ததற்காக உமக்கு நன்றி. அடிமைத்தனம், பயம் மற்றும் பாதுகாப்பற்ற உணர்வு ஆகியவற்றின் மனப்பான்மையிலிருந்து என்னை விடுவியுங்கள். நான் உம்முடைய குமாரன் என்ற வெளிப்பாடு என் இருதயத்தில் ஆழமாக நிலைபெறட்டும். இயேசுவின் நாமத்தில், ஆமென் 🙏
விசுவாச அறிக்கை
நான் பயத்தை உண்டாக்கும் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறவில்லை! நான் புத்திரத்துவத்தின் ஆவியைப் பெற்றுள்ளேன்.தேவன் என் அப்பா பிதாவாக இருக்கிறார்.நான் அவருடைய குமாரன்; இன்று நான் நம்பிக்கையுடனும், பலத்துடனும், விடுதலையுடனும் வாழ்கிறேன்! ஆமென் 🙏
கிறிஸ்து இயேசுவுக்குள் நான் தேவனுடைய நீதியாக இருக்கிறேன்.
உயிர்த்தெழுந்த இயேசுவைப் போற்றுங்கள்!
⸻
கிருபை நற்செய்தி பேராலயம்!
