பிதாவின் ராஜ்யத்தைத் தேடுவது, நமது பரலோக ஆஸ்தியை உறுதிப்படுத்தி, அற்ப விஷயங்களை விட்டுவிட உதவுகிறது!

g17

13-02-25
இன்றைய நாளுக்கான கிருபை!

பிதாவின் ராஜ்யத்தைத் தேடுவது, நமது பரலோக ஆஸ்தியை உறுதிப்படுத்தி, அற்ப விஷயங்களை விட்டுவிட உதவுகிறது!

32. பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்.
33. உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள், பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்து வையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை.
34. உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். லூக்கா 12:32-34 (NKJV)

“உங்களிடம் இருப்பதை விற்பது” என்பதன் நடைமுறை பயன்பாட்டை பரிசுத்த ஆவியின் குறிப்பிட்ட வழிகாட்டுதலுக்கு ஒப்புகொடுப்பது ஆகும். அதன் பின்னணியில் உள்ள கொள்கை அனைவருக்கும் பொருந்தும்.

விற்பது என்றால் விட்டுக்கொடுப்பது என்று பொருள்படும்– அதாவது நீங்கள் உறுதியாக பிடித்து வைத்திருக்கும் காரியத்தை விட்டுகொடுப்பது. நாம் நமது சிறிய கரத்தில் இருப்பதை விட்டுக்கொடுக்கும்போது, தேவனின் எல்லையற்ற பெரிய கரத்திலிருந்து பெறுவதற்கு இடமளிக்கிறோம். நாம் அடிக்கடி நுண்ணிய அளவில் செயல்படுகிறோம், ஆனால் எப்போதும் தேவன் பெருந்தன்மையுடன் செயல்படுகிறார்.
நம்முடையதை விட்டுகொடுத்து தேவனிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கொள்கை வல்லமை வாய்ந்தது. ஆபிரகாம் தனது நாட்டையும், குடும்பத்தையும்,தந்தையின் வீட்டையும் விட்டு வெளியேற அழைக்கப்பட்டார். விட்டுக் கொடுக்கும் இந்த மனப்பான்மை, பாலும் தேனும் பாயும் தேசத்தைப் பெறுவதற்கு அவரை நிலைநிறுத்தியது – இது அவருடைய சந்ததியினருக்கும் நீட்டிக்கப்பட்டது. இன்றுவரை, அந்த நாடு இஸ்ரவேலாகவே உள்ளது, என்றும் நிலைத்திருக்கும்.

பிரியமானவர்களே, இதை நினைவில் கொள்ளுங்கள்: தேவன் மனிதனுக்குக் கடனாளி அல்ல, நாம் ஒருபோதும் அவருக்கு ஈடாக கொடுக்க முடியாது. அவருடைய கை நம்மை விட பெரியதாகவும், தாராளமாகவும் இருக்கிறது. நீங்கள் விட்டுகொடுக்க கற்றுக் கொள்ளும்போது, அவருடைய தெய்வீக வழியில் நீங்கள் அடியெடுத்து வைப்பீர்கள் – அது ஏராளமாக, நிரம்பி வழியும் ஆசீர்வாதம் மற்றும் அது நம் கற்பனைக்கு எட்டாததாய் இருக்கும். ஆமென்!

பிதாவின் ராஜ்யத்தைத் தேடுவது, நமது பரலோக ஆஸ்தியை உறுதிப்படுத்தி, அற்ப விஷயங்களை விட்டுவிட உதவுகிறது.

நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனுடைய நீதி!

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *