23-05-25
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் பிதாவை அறிவது, குமாரத்துவ ஆவியின் மூலம் அவருடைய விடுதலையை அனுபவிக்க உங்களை அனுமதிக்கிறது!
“நீங்கள் குமாரர்களாக இருப்பதால், தேவன் தம்முடைய குமாரனின் ஆவியை உங்கள் இருதயங்களுக்குள் அனுப்பி, அப்பா, பிதாவே என்று கூப்பிடுகிறார். ஆகையால், நீங்கள் இனி அடிமையல்ல, குமாரன்; குமாரனாக இருந்தால், கிறிஸ்துவின் மூலம் தேவனுடைய வாரிசு.”— கலாத்தியர் 4:6–7 (NKJV)
பிரியமானவர்களே, தேவன் உங்களை ஒரு வேலைக்காரனாக அல்ல, மாறாக அவருடைய அன்புக்குரிய மகனாகவோ அல்லது மகளாகவோ பார்க்கிறார். இந்த மிகுந்த அன்பின் காரணமாக, பாவம், சாபம் மற்றும் மரணத்திலிருந்து நம்மை மீட்க அவர் தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அனுப்பினார். இது அவருடைய முதல் மகிமையான அன்பின் செயல்.
ஆனால் தேவன் அதோடு நிற்கவில்லை. அவர் தம்முடைய குமாரனின் ஆவியையும் நம் இருதயங்களுக்குள் அனுப்பினார், அதனால் நாம் அவரை நோக்கி, “அப்பா, பிதாவே” என்று கூப்பிடலாம் – அப்பா பிதாவே! இது அவருடைய இரண்டாவது நெருக்கமான அன்பின் வெளிப்பாடாக பார்க்கிறோம்.
ஆண்டவராகிய இயேசு பூமிக்கு வந்ததின் நோக்கம் பாவத்திலிருந்தும் மரணத்தின் சட்டத்திலிருந்தும் நம்மை விடுவிப்பது மட்டுமல்ல. அவரில் வசித்த அதே குமாரத்துவ ஆவியை நாம் பெறுவதற்காகவே அவர் வந்தார். நாம் வாரிசுகளாக மாறுவதே தேவனின் இறுதி நோக்கம் – அவருடைய வீட்டில் வேலை செய்பவர்களாக அல்ல, மாறாக அவருடைய சுதந்தரத்தில் பங்கு கொள்ளும் மகன்களும் மகள்களுமாக மாற வேண்டும்.
ஒரு அடிமை வீட்டில் சேவை செய்யலாம், ஆனால் ஒரு மகன் மட்டுமே அந்த வீட்டிற்கு உரிமையானவன். தந்தையிடம் உள்ள அனைத்தையும் மகன் தான் சுதந்தரித்துக் கொள்கிறான் – அவன் முயற்சியால் அல்ல, பிறப்பால் – இயற்கையான வம்சாவளியால் அல்ல, மாறாக தேவனிடமிருந்து பிறந்ததன் மூலமே அது சாத்தியமாகிறது.
நீங்கள் தேவனிடமிருந்து பிறந்திருந்தால்,தேவன் உங்கள் பிதா. உங்கள் ஆவியிலிருந்து வரும் ஒவ்வொரு ஜெபமும் இயல்பாகவே அவரை “அப்பா, பிதாவே!” என்று அழைக்கிறது – அத்தகைய ஜெபங்களுக்கு நிச்சயம் பதில் கிடைக்கும்.
அன்பானவர்களே, எல்லாம் உங்களுடையது.நீங்கள் உங்கள் பிதாவுக்கு சொந்தமாய் இருக்கிறீர்கள். நீங்கள் அவருடைய வாரிசு. அபரிவிதமான ஆரோக்கியம் மற்றும் செல்வத்தை உள்ளடக்கிய அவருடைய பரம்பரைக்கு முழு வாரிசாக இருக்கிறீர்கள்! ஆமென்!🙏
நமது உயிர்த்தெழுந்த இயேசுவைத் துதிப்போமாக!
கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!