பிதாவின் ராஜ்யத்தைத் தேடுங்கள் அப்பொழுது ஆச்சரியமான அற்புதங்களைப் பெறுவீரகள்!

img_96

10-02-25
இன்றைய நாளுக்கான கிருபை!

பிதாவின் ராஜ்யத்தைத் தேடுங்கள் அப்பொழுது ஆச்சரியமான அற்புதங்களைப் பெறுவீரகள்!

31. தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
32. பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்.லூக்கா 12:31-32 (NKJV)

நம்முடைய பரலோகப் பிதா நம்மை அபரிமிதமாக ஆசீர்வதிக்க விரும்புகிறார்,ஆனாலும் நாம் அடிக்கடி கவலைகளில் மூழ்கிக் கிடக்கிறோம்—நமது அன்றாடத் தேவைகள், நம் குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் இந்த போட்டியான உலகத்தில் எப்படி நாம் வெற்றி பெறுவது என்பதாக. நாம் தற்காலிக கவலைகளில் அதிக கவனம் செலுத்துகிற வேளையில் நித்திய முன்னுரிமைகளை புறக்கணிக்கின்றோம் (ETERNAL PRIORITIES).

இருப்பினும், பரலோகப் பிதா நமக்குத் தேவையான அனைத்தையும் ஏற்கனவே அறிந்திருக்கிறார் (லூக்கா 12:30). அவருடைய ராஜ்யத்தை நமக்கு வழங்குவதே அவருடைய மிகப்பெரிய மகிழ்ச்சி, இது நாம் கற்பனை செய்யக்கூடிய எதையும் மிஞ்சும். நாம் அவருடைய ராஜ்யத்தையும் நீதியையும் முதன்மைப்படுத்தும்போது, ​​அவர் மற்ற அனைத்தையும் கவனித்துக்கொள்கிறார்.

பிரியமானவர்களே, நீங்கள் இந்தப் புதிய வாரத்தில் அடியெடுத்து வைக்கும்போது, ​​அவருடைய பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு முன்பாகச் சென்று, ஒவ்வொரு கோணலான பாதையையும் நேராக்குகிறார் என்று நம்புங்கள். நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் தயவு உங்களை ஒரு கேடயம் போல சூழ்ந்துள்ளது, உங்களுக்கு எந்த நன்மையும் குறைவுபடாது. அவருடைய ஆசீர்வாதங்கள் உங்களைதேடிக் கண்டுபிடிக்கும், மேலும் அவருடைய மிகுதி மற்றும் சுதந்திரத்தின் முழுமையில் நீங்கள் இயேசுவின் நாமத்தில் நடப்பீர்கள். ஆமென் 🙏!

பிதாவின் ராஜ்யத்தைத் தேடுங்கள் அப்பொழுது ஆச்சரியமான அற்புதங்களைப் பெறுவீரகள்!

நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனுடைய நீதி!

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *