இயேசுவை நோக்கிப் பார்ப்பது நீங்கள் இழந்த ஆளுமையை மீட்டெடுக்கிறது!

10-07-23
இன்றைய  நாளுக்கான  கிருபை !

இயேசுவை நோக்கிப் பார்ப்பது நீங்கள் இழந்த ஆளுமையை மீட்டெடுக்கிறது!

2. அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும்போது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக ; லூக்கா 11:2 ‭NKJV.

பூமியில் உள்ள அனைத்துப் பொருட்களின் மீதும் தேவன் கொடுத்த ஆதிக்கத்தை மனிதன் பிசாசுக்கு இழந்த காலத்திலிருந்து, மனிதன் பிசாசின் தீய கட்டளைகளுக்கு ஆளானான். இதன் விளைவாக நோய்கள், கோளாறுகள், சீரழிவு, அழிவு, விரக்தி மற்றும் மரணதிற்கு உட்பட்டான்.

” உமது ராஜ்யம் வருவதாக,உமது சித்தம் நிறைவேறுவதாக ”என்பது ,ஆண்டவர் இயேசு போதித்தபடி, மனிதன்
இழந்த தனது ஆளுமையை மீட்டெடுக்க, நமது முதன்மையான ஜெப விண்ணப்பமாக இருக்க வேண்டும்.
ஆம் என் அன்பானவர்களே , நீங்கள் சூழ்நிலைக்கு பலியாவதை தேவன் விரும்பவில்லை. மாறாக, பிசாசின் தீய சூழ்ச்சிகளால் உங்களைப் பயமுறுத்த முயற்சிக்கும் எல்லாவற்றிலும் நீங்கள் வெற்றியாளராக இருக்க வேண்டும் என்றே அவர் விரும்புகிறார்.

பூமியில் அவருடைய ராஜ்ஜியத்தின் ஆட்சியும், உங்கள் வாழ்க்கையில் அவர் அருளிய மகிழ்ச்சியும், பிரதான எதிரிகளான பாவம் மற்றும் மரணத்திலிருந்து உங்களை மீட்க இரட்சகராகிய இயேசுவை இந்த உலகத்திற்குக் கொண்டுவந்தது.
இந்த வாரம், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் கடவுளின் ஆதிக்கம் மேலோங்கும், மேலும் இயேசுவின் பெயரில் கடவுளின் மிக உயர்ந்த தயவையும்,கனத்தையும் நீங்கள் பெறுவீர்கள் ..ஆமென் 🙏!

இயேசுவை நோக்கிப் பார்ப்பது நீங்கள் இழந்த ஆளுமையை மீட்டெடுக்கிறது!

கிருபை நற்செய்தி தேவாலயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  −  1  =  1