17-10-24
இன்றைய நாளுக்கான கிருபை!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய அமைதியின் திறவுகோலைப் பெற்று என்றென்றும் ஆட்சி செய்யுங்கள்!
17. தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.ரோமர் 14:17
6. நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
7. அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.(பிலிப்பியர் 4:6,7)
கர்த்தராகிய இயேசு சொன்னார், “”சமாதானத்தை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்,மற்றும் என் சமாதானத்தை உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுப்பது போல் அல்ல நான் உங்களுக்கு கொடுக்கும் சமாதானம் நிலைத்திருக்கும். உங்கள் இதயம் கலங்க வேண்டாம், பயப்பட வேண்டாம். (யோவான் 14:27). உலகமும் அமைதியை வழங்குகிறது,ஆனால் அது ஒருபோதும் நிலைக்காது, ஏனெனில் அது உங்கள் ஆத்தும ரீதியில் தற்காலிகமாக செயல்படுகிறது. உண்மையான சமாதானம் பரிசுத்த ஆவியானவரால் வழங்கப்படுகிறது (ரோமர் 14:17- நற்செய்தி மொழிபெயர்ப்பு).
உங்கள் எல்லா போராட்டங்களிலும் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவுகிறார் (ரோமர் 8:26). அவர் இருண்ட நேரத்தில் உங்களுக்கு ஆறுதல் கூறும் தாயைப் போன்றவர். உங்கள் பலம் மற்றும் பலவீனங்களை அவர் அறிவார். உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் அவர் உங்களை அழகாக வழிநடத்துவார். அவர், உங்கள் ஜெபங்களுக்குப் பதில் கிடைக்க இயேசுவின் நீதியைப் பிரயோகித்து, உங்கள் மனதையும் உங்கள் இருதயத்தையும் காத்துக்கொண்டு எல்லாப் புத்திக்கு மேலான தேவசமாதனத்தை உங்களுக்கு அருளுவார்.
பரிசுத்த ஆவியானவர் உங்கள் சிறந்த நண்பர்!அவர் உங்களை உற்சாகப்படுத்தி அமைதிக்குள் உங்களை நடத்துவார்! ஆமென் 🙏
நீங்கள் கிறிஸ்து இயேசுவில் தேவனுடைய நீதி என்று உங்கள் விசுவாசத்தோடு அறிக்கை செய்து கொண்டே இருங்கள்!
மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,அவருடைய அமைதியின் திறவுகோலைப் பெற்று என்றென்றும் ஆட்சி செய்யுங்கள்.
நம்முடையநீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!
கிருபை( பு) நற்செய்தி பேராலயம்!!