மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,தேவனோடு என்றென்றும் சமாதானமாக இருங்கள்!

skky

18-10-24
இன்றைய நாளுக்கான கிருபை!

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,தேவனோடு என்றென்றும் சமாதானமாக இருங்கள்!

1. இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். ரோமர் 5:1 YLT98

தேவனுடைய சமாதானம் தேவனுடைய நீதியிலிருந்து வேறுபட்டதல்ல. உண்மை என்னவென்றால், நம்முடைய பாவங்களுக்காக இயேசு தண்டிக்கப்பட்டார் என்றும்,பிதாவாகிய தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்றும் நாம் நம்பும்போது, நீதிமான் என்று அறிவிக்கப்படுகிறோம். அதன் விளைவுதான் சமாதானம்.
கடந்தகால பாவங்களையும், நிகழ்கால பாவங்களையும் தேவன் மன்னித்துவிட்டார் என்றும், நாம் கிறிஸ்துவில் தேவ நீதி என்றும், அதனால் நாம் தேவனுடன் சமாதானமாக உள்ளோம் என்றும் நம்புவது நமது வரையறுக்கப்பட்ட புரிதலுக்கு கடினமானது இல்லை.
ஆனால், நம் எதிர்கால பாவங்கள் உட்பட நம் எல்லா பாவங்களையும் தேவன் முழுமையாக மன்னித்துவிட்டார் என்பதை புரிந்து கொள்ளும்போது ஒரு விசுவாசியின் மனதில் சிலநேரங்களில் சந்கேங்கள் எழுகிறது. நமது எதிர்கால பாவங்களை கூட தேவன் எப்படி மன்னிப்பார் என்பது கேள்வி?

25. அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார். ரோமர் 4:25.

நாம் எப்படி என்றென்றும் நீதிமான்களாக்கப்பட்டோம் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது: நம்முடைய பாவங்களினால் இயேசு மரித்தார். தேவன் இயேசுவை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பினார், அவர் நம்மை (மனிதகுலத்தை) முற்றிலும் நீதிமான்களாக ஆக்கினார் அல்லது நீதிமான் என்று அறிவித்தார். இதை எளிதாக கூறுவதானால்- ஒரு பாவமும் விட்டுவிடாமல், இயேசுவின் உடலில் எல்லாம் தண்டிக்கப்பட்டது, அப்படி இல்லையென்றால் தேவன் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பியிருக்க மாட்டார். அல்லேலூயா! இது உண்மையிலேயே அருமை!!

தேவன் மனிதகுலத்தின் கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால பாவங்கள் அனைத்தையும் எடுத்து இயேசுவின் உடலில் வைத்து, நம்முடைய பாவங்களுக்காக அவரை முழுமையாக தண்டித்தார். எனவே, நான் என்றென்றும் நீதிமானாக அறிவிக்கப்படுகிறேன், நான் தேவனுடன் என்றென்றும் சமாதானமாக இருக்கிறேன் என்று நான் நம்பினால் மட்டுமே என் நீதியை இழக்க முடியாது. இது விசுவாசத்தினால் வரும் தேவ நீதி. ஆமென்!

என் அன்பானவர்களே! மெய்யாகவே நீங்கள் என்றென்றும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவனுடைய நீதியாக இருக்கிறீர்கள்.இதை மாற்ற யாருக்கும் அதிகாரம் இல்லை! ஆமென் 🙏

மகிமையின் ராஜாவாகிய இயேசுவை சந்தித்து,தேவனோடு என்றென்றும் சமாதானமாக இருங்கள்.

நம்முடையநீதியான இயேசு கிறிஸ்துவைப் போற்றுவோமாக!

கிருபை (பு) நற்செய்தி பேராலயம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3  ×  1  =